"

காலை எட்டு மணிமுதல்
மாலை அய்ந்து மணிவரை
உண்ணாவிரதம்………………….

செமியாக் கோளாறை
தீர்த்ததுமாச்சு……………
மக்களுக்காக…………….
போராடியதுமாச்சு

உண்ணாவிரதத்தில்
முடிவில் அண்ணன்
தமிழகத்து கேப்டன்

மக்கள் கேட்டுக்
கொண்டதால்
பத்திரிக்கைகள்
எழுதியதால் கூட்டணி
வைத்தோம்………….
சொந்த ப(ண)லத்தினால்
வெற்றி பெற்றோம்.

உள்ளாட்சியில் எப்படி
வெற்றி பெற்றார்கள்
அம்மையார்க்கு தெரியும்
காவல்துரைக்கு புரியும்
தேர்தலில் பணம் கொடுத்து
தொடங்கி வைத்ததே
அம்மையார்தான் அதன்
வழியில் கருனாநிதியும்.

இலவசம் வேண்டாம்
மாறிமாறி ஆட்சி செய்த
இரண்டு கட்சிகளும்
மக்களின் இரத்தததை
உறிஞ்சும் மூட்டைபுாச்சிகள்
இதை அழித்தால்தான் தமிழகம்
முன்னேறும்

ம்மதா போல தைகிரியம்
உண்டா? ஜெயலலிதாவுக்கு
மக்கள் பிரச்சினையில்
தேமுதிக போராடும்
அதற்காக சிறை செல்ல
வும் தயங்க மாட்டேன்

அண்ணே! கேப்புடண்னே!
வருங்கால முதல்வரண்ணணே!
அடுத்த முதல்வர் நீங்க
தாண்ணே! பாழாய் போன
தமிழகம் உங்கத் தகிரியத்தால்
தாண்ணே முன்னேறனும்.

இதை என் ஊத்தவாயால
சொல்லலேண்ணே!
மக்களென்ன அம்புட்டு
அறிவாளிகளாண்ணே!

எத்தனை வாய் சவாடல்கள
கேட்டு, மதி தெளிந்தா……
போச்சு..அவ்வள சீக்கிரத்துல
தெளியத்தான் விட்டூடுவீங்களா?

தெளியாதுண்ணே! அந்த
தகிரியத்தில் தான் உங்க
தண்ணியடித்த வாயால
இம்புட்டு புர்ட்சி வசனம்
பேசிபுட்டீங்க.. அடுத்த
முதல்வர் நீங்கதாண்னே!

சீ னிமாகாரன்(காரி)களும்
தான் ஆளனும்னு விதின்ணே!
வாழ்க! கேப்பு டவுனு
வளர்க! சுற்றமும் நட்பும்
வீழ்க! மதி தெளியா மக்கள்கள்