புதிதாய் வேலைக்கு சென்ற
இடத்தில் தவறாய் செய்த
வேலையால் எனக்கு
கூலி கொடுக்கும் முதலாளி
அறிவு இருக்கா என்றார்.
அறிவு இருப்பதும் இல்லாததும்
அவருக்கே தெரியாத போது
எனக்கு எப்படித் தெரியும்
அறிவு பெருக என்ன
வழி என்று வழியில்
வந்த அகவை முதியவர்
ஒருவரிடம் வினவ.அவரோ
அரசமர காற்றை சுவாசி
அறிவு பெருகும். புத்தர்
அரச மர அடியிலிந்துதான்
அறிவு பெற்றார் என்றார.