"

வலிகளை போக்குபவனுக்கு
வலி ஒரு சான் வயிற்றுக்குள்
இவ்வளவுகொடூரம் வலியினை
உணர்ந்ததால் துடிக்கிறேன்.

இந்த வலியினை எனக்கு
உணர்த்தியது எது?
சத்தியமாக ஏழாவது
அறிவு இல்லை!
அப்படியென்றால்
ஆறாவது அறிவா
கத்தான் இருக்குமோ?

ஆறாவது,ஏழாவது
எண்க்கும் அறிவுக்கும்
என்ன தொடர்பு என்பது
எனக்கு தெரியாது.

ஆதாரத்தைக் கொண்டு
அறிவதுதான் பகுத்தறிவு
என்பது உங்களுக்கு
தெரியுமா? பராவாயில்லை
அறிந்து கொள்ளுங்கள்

மூடநம்பிக்கை என்பது என்ன?
ஆராயாமல் ஏற்றுக்கொள்வது
ஆராய்ந்து ஆதாரத்தை ஏற்றுக்
கொள்வது பகுத்தறிவுதானே!!

பகுத்தறிவு பெற்ற ஒரே
உயிரினம் மனிதான்.
பகுத்தறிவு பெற்ற மனித
மிருகங்கள் செய்யும்
அடாவடித்தனங்களை

சொல்லாலும் சொல்லி மாளாது
ஏட்டில் எழுதினாலும் தீராது

மனிதர்களில் ஒரு பிரிவினரை
தீண்டாமையில் ஒதுக்கி வைத்தாரே!

உடலில் தோன்றும் வலிகளும்
தீண்டாமை உடலென்று ஒதுங்கி
தான் போவதுயில்லையே…………

அழியும் உடல் நிலையற்றது
நிலைக்கும் ஆன்மா என்பாரே!1

வலி எப்படியிருக்கும் தெரிந்த
உடம்புக்கு தெரிந்தது.தெரியாத
ஆன்மா எப்பிடி இருக்கும்
பகுத்தறிந்து சொல்வீரா,,,,,,,,,,,,???