13

 

பூட்டிக் கிடக்கும் ஆணாதிக்கக் கதவை

உடைத்துவிடு பெண்ணே!

எழுவகைப் பருவத்தில் எப்பருவமும் பெண்ணுக்குப்

பாதுகாப்பில்லை!

மூடிக் காத்துவிடு உன் மானத்தை!

யாருக்கும் அச்சமின்றி வாழ்ந்துவிடு!

கல்லாமை இருட்டை விரட்டிவிடு!

பூட்டிய ஊழல் கதவுகள் திறக்க வயதில்லையடி!

பூட்டிய கதவுகள் திறக்க கல்விச்சாலை செல்ல

என்னடி தயக்கம்!

கணினி தமிழ்க்கல்வி வளர பாடிடுவாய்!

ஆங்கிலமும் தேவை என்றே

உணர்ந்து நீயும் வாழ்ந்திடுவாய்!

அகிலத்தை நீ தாங்க தாய்மொழி தமிழ்க்கல்வி

உயர்ந்திடவே பாப்பா!

பாடிவிடு! நீ உயர்ந்துவிடு!

சுமங்கலி மலடி விதவை என்றே பெயரிடுவார்!

சாக்கடைக் கலவை வீணர் கூட்டம்!

புவி ஆளும் பெண்ணிற்கு

புரியாத பட்டங்கள் தேவையில்லையடி!

பெண்ணடிமை கொள்ளவே சுனாமியாய்

பெருங்கூட்ட சமுதாயம் மதத்தின் பெயரால்

சடங்கு எமன் காலைச் சுற்றுது!

கழற்றி நீயும் எறிந்திடுவாய்!

பெண் சிங்கமென சீறி புறப்படுவாய்!

பெண்கல்வி வேண்டி இங்கு பிழைப்பதனால்

உணர்நதிங்கு நீயும் கற்றிடுவாய்!

தன்னம்பிக்கை வித்தாய் எழுவாயடி!

மாதா என்ற சொல்லுக்காக

முழுபிறப்பும் ஆமைஓடுவீட்டினில்

அடைபடமுடியுமோ!

உன்னுள் உறங்கும் திறமையினை

உலகெங்கும் பறைசாற்ற கற்றிடுவாய் பெண்ணே!

நிரம்பக் கற்றிடுவாய்!

கற்க கற்க கல்வி இனிக்கும் கல்வியளித்த காமராசர்

புகழ்பாடி கலாம்வழி வாழ புறப்படுவாய்!

உடையில் எளிமை உள்ளத்து உறுதி

அவையஞ்சா தூய பேச்சு ஊர் போற்றும் கற்புத்திறன்

தெளிவான சிந்தனை நாவினில் அடக்கம்

இல்லறப்பெருமை முதியோர் நலம் காக்க

அதிகப்படிப்பு அகந்தையின்றி

வெல்ல புறப்படுவாய்!

அகிலம் ஆள வென்றிடுவாய்!

கட்டிய கைகளுக்குள் உலகம்

உனதாகட்டும் என்றே முழங்கி

விவேகானந்தர் சிந்தைனையுடன்

வாழ்ந்திடுவாய்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சோலை வனம் - கவிதைகள் Copyright © 2015 by இரா. பாரதி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book