சிங்கமுகக் கிணறு இக்கோவிலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்தில் உடையார்பாளையம் நிலக்கிழாரால் கட்டப்பட்ட இந்த சிங்கமுகக் கிணறு இன்றும் பயன்பாட்டிலுள்ளது.
இராஜேந்திரசோழன் தனது கங்கை பெருவெற்றியின் நினைவாகத்தான் “கங்கைகொண்டசோழபுரத்தை”கட்டி இக்கோவிலிலுள்ள பிரம்மாண்ட லிங்கத்திற்குகங்கை நதியிலுள்ள நீரை 1000 பொற்குடங்களில் யானையின் மீது கொண்டுவந்துஅபிஷேகம் செய்தான். பிரம்மாண்ட லிங்கத்திற்க்கு அபிஷேகம் செய்த கங்கை நீரைஇந்தக்கிணற்றிலும்,தான் வெட்டிய மாபெரும் ஏரியான “சோழகங்கம்” என்ற ஏரியிலும் ஊற்றினான்.