"

3

இராஜேந்திரசோழனின் தாய்,தந்தையர்கள் :

 

உலகப்புகழ் கொண்ட சோழப்பேரரசர்களில் முதன்மையானவராக மாமன்னன் இராஜராஜசோழனே விளங்குகின்றார்.இவரது பட்டத்தரசி உலகமகாதேவியாவாள்.எனினும் மாமன்னன் இராஜேந்திரசோழனைப் பெற்ற பெருமை திரிபுவனமாதேவி என்னும் சேர நாட்டு பெண்ணையே சேரும்.ஆம்,வானவன் மாதேவி (எ) திரிபுவனமாதேவி என்ற பெயரைக்கொண்ட இவள் தான் மாமன்னன் இராஜேந்திரசோழனின்  அன்னையாவாள்.
3-இராஜேந்திரனின் தாய் தந்தையர்க்ள் i10
மாமன்னன் இராஜராஜசோழனுக்கும் சேரநாட்டைசேர்ந்த வானவன் மாதேவிக்கும் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் தான் இராஜேந்திரசோழன்….!
இவனது இயற்பெயர் மதுராந்தகன் என்பதாகும்.இவன் இராஜராஜசோழனால் கி.பி 1012ல் முடிசூட்டபட்ட பின்னர் தனது மதுராந்தகன் என்னும் இயற்பெயரை மாற்றி இராஜேந்திரசோழன் என்னும் புதிய பெயரைசூட்டிக்கொண்டான்.