23
(சமூக வலைதளங்களில் எழுதிக் கொண்டிருக்கும் திறமைசாலிகளை அடையாளங்காட்டும் பகுதி.)
SK செந்தில்நாதன் | ட்விட்டர் | @skclusive
-
தயக்கமே முதல் படி
-
விரதம் பழக்கமாகாது
-
திறமைகளுக்கு ஏற்ப பிரச்சனைகள்
-
அறிவுரை என்பது தற்பெருமை
-
உணரப்படாமலே இருப்பது தானே சுதந்திரம்
-
சகித்துக் கொள்தல் என்பது நம்பிக்கை தூரோகம்
-
உளறப்படாத உண்மையே ரகசியம்
-
விருந்தோம்பலில் Wi-Fi password சேர்க்கப்பட வேண்டும்
-
கவனிக்கப்படாத போதும் தொடரப்படுவதே அக்கறை
-
சொர்க்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்
-
காறி முழுங்குவதே சகிப்புத்தன்மை
-
பிரிவோம் சிந்திப்போம்
-
புகழ்ந்து தள்ளி விட்டுவிடுகிறார்கள்
-
என்னுடன் பேசிக்கொள்ளும் சுவாரஸ்ய தருணங்கள் மௌனம் என்றறியப்படுகிறது
-
முட்டாள்கள் நேர்மையானவர்கள்
-
நட்பு பாராட்டுவதிலில்லை
-
உறங்கவிட்டு வேடிக்கை காட்டுகிறது கனவு.
-
”உங்கள எப்படி பாராட்டுறதுனே தெரியல” இப்படித்தான் பாராட்ட வேண்டியிருக்கு.
-
கலைஞனை அதீதப்படுத்துதலைவிட அசிங்கப்படுத்துதல் ஏதுமில்லை
-
சகித்துக் கொள்ளப்படுமளவிற்கு திறமையை வளர்த்துக் கொண்டால் போதுமானது
***