இந்த நூலிற்கான மொழிபெயர்ப்பினை பல்வேறு சூழ்நிலைகளில் செய்யவேண்டி இருந்தது. அதனால் சில கட்டுரைகளில் அது எங்கிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டது என்ற நாளிதழின் தேதி இல்லாமல் போய்விட்டது. பிழை பொறுத்துக்கொள்ளுங்கள். அடுத்தமுறை சரியாக இருக்க முயற்சிக்கிறோம். இந்த கட்டுரைகளுக்கான விதை 2008ல் வெளிவந்த இந்தியா டுடேவின் மாற்றத்தின் முன்னோடி என்ற இதழிலிருந்துதான் தொடங்குகிறது. அந்த மனிதர்களின் செயல்பாடுகளைப்போல உழைக்கும் பலரையும் அறிமுகப்படுத்த முயலும் எளிய முயற்சிதான் இது.
இதற்கான ஊக்கத்தை தந்த திரு. இரா .முருகானந்தம், எழுத்தாளர் ஸ்ரீராம், அறச்சலூர் ப்ரகாஷ் பொன்னுசாமி, வெள்ளோடு மெய்யருள், மரு. வெ. ஜீவானந்தம், செபியா நந்தகுமார், ஃப்ரீ தமிழ் இபுக்ஸ் இணையதள நண்பர் சீனிவாசன் அவர்களின் தலைமையிலான குழு மற்றும் இதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்த சிவராஜ் அவர்களையும் மறக்க முடியாது.
மனிதன் என்பவன் தீமையும், வன்முறையும் கொண்டவன் என நான் நம்பவில்லை. மாற்றத்திற்கான விஷயங்கள் அவ்வளவு எளிதில் நமது சமூகத்தில் நடைபெற வாய்ப்பில்லை; என்றாலும் அதற்கான எந்த முயற்சிகளும் இன்றுவரை தொய்வடையவில்லை. இதற்கான கட்டுரைகள் எழுதிய செய்தியாளர்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. அவர்களின் பெயர்கள் கட்டுரையில் தக்க மரியாதையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எந்த நாளிதழின் கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டதோ அந்த பத்திரிகைகளின் பெயர்கள் கட்டுரைகளின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நன்றி!
ப்ரியங்களுடன்
அன்பரசு சண்முகம்