"

கேத்தரின் கிலோன்

தமிழில்: வின்சென்ட் காபோ

ஒளிரும் புத்தகப்பை
தயாரித்தவர்: அனுஷீலா சகா

சவால்

தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் பள்ளிக்குப் பிறகான படிப்பு மாணவர்களுக்கு எளிதானதாக இல்லை.

பயணம்

டெல்லியைச் சேர்ந்த அனுஷீலா சகா தன்வீட்டில் பணிப்பெண்ணுடன் நடத்திய உரையாடலின்போது, அங்கு ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சிந்தனை அவரின் மூளையில் உதித்தது. சீல் இந்தியா நிறுவனத்தின் புதுமை உருவாக்கத்திறன் தலைவரான அனுஷீலா,

‘’ டெல்லியிலுள்ள பெரும்பாலான குடிசைப்பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் அங்குள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகுவர்த்தி அல்லது மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் படிக்கிறார்கள். அசைந்து எரிந்து நின்றுவிடுவது போல் எரியும் சுடரின் ஒளியில் படிப்பது மிக கடினமான காரியம் என்பதோடு, படிப்பின் மீதான ஆர்வமும் வடிந்துபோய், பள்ளியை விட்டு நிற்கிற நிலைவரை செல்கின்றதும் உண்டு ‘’ என்று விரிவாக பேசுகிறார் அனுஷீலா.

சிறந்த விளக்குகளைக் கொண்ட ஒரு பையை உருவாக்க வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது. சூரிய சக்தியை சேமிக்கும் தகடுகளை பையின் முன்பகுதியில் அமைத்து எல்இடி விளக்குகளை அதன் எதிர்புறமாக அமைத்திருக்கிறார். இதன் மூலம் பகலில் சாதாரணமான பை போல இருக்கும் இது, இரவில் விளக்குகளைக்கொண்ட மேஜை விளக்கு போல செயல்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது பள்ளியில் இருக்கும்போதும், சூரிய சக்தி தொடர்ந்து சேமிக்கப்படுவதில் எவ்வித தடையும் ஏற்படுவதில்லை. திறந்தபள்ளிகளுக்கு செல்லுகிற குழந்தைகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன.

நீரினால் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளின் எடை 620 கி. ஆகும். எளிமையாக பயன்படுத்த முடியும் இந்தப்பை மாணவர்களுக்கு தன் ஒளிமூலம் வழிகாட்டுகிறது.

தாக்கம்

இந்த ஒளிதரும் பைகளை உருவாக்க பை ஒன்றுக்கு ரூ. 1500 செலவாகிறது. சீல் இந்தியா தனது நிதியின் மூலம் உருவாக்கித்தரும் இப்பைகளை தி பாலக் டிரஸ்ட் எனும் அமைப்பு திறந்தபள்ளிகளுக்கு செல்லும் குடிசைவாசி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.

 

பசுமைப்பயணம்

தயாரித்தவர்: சிவராஜ் முத்துராமன்

சவால்

தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் விலையும், நகரத்தில் அதிகமாகும் மாசுபடுத்தலுமே ஆகும்.

பயணம்

‘’மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை மாற்றி அமைப்பது என்பது எனக்கு மிகப்பிடித்தமானது. எரிபொருளின் விலை அதிகரித்துகுக்கொண்டே செல்வது சூழலில் சூரிய சக்தியில் இயங்கும் வாகனம் ஒன்றை மாற்றாக உருவாக்கினால் என்ன என்று தோன்றியது ’’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த விற்பனை நிபுணரான சிவராஜ். ஒரு சைக்கிள் ரிக்சா ஒன்றினை 9000 ரூபாய்க்கு வாங்கி, அதனை சேலம் கொண்டுசென்று வெல்டர்கள் மூலம் பல மாறுதல்களைச் செய்து தன் முதல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை தயாரித்தார் சிவராஜ். பின் பல மாறுதல் பணிகளை செய்து, அதன் எடையை குறைத்திருக்கிறார். அதில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தினார் என்று கேட்டபோது,’’ மூன்று இருக்கைகள் கொண்ட சிறிய நானோ கார் போல இருக்கும். சாவியைத் திருகினால் எந்த சத்தமும், மாசுபடுத்தலும் இல்லாமல் பயணிக்க முடியும். சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் இந்த வாகனம் 45 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. மழைநாட்களிலும் எந்த பழுதும் இல்லாமல் இயங்கும் இவ்வாகனம் மின்சாரம், சூரிய சக்தி, காலால் அழுத்தும் பெடல் என மூன்று வித முறைகளின் மூலம் உருவாகும் சக்தி பின்னால் உள்ள லித்தியம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

தாக்கம்

ஒரு லட்சரூபாய் செலவாகிறது இந்த வாகனத்தை முழுமையாக உருவாக்க. சென்னை மெரினா கடற்கரையில் பொது மக்கள் பயன்பாட்டிற்கென விலையில்லாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனமானது, தற்போது சதக் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான காரணங்களுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

 

பெண்களின் கௌரவத்திற்கான கழிவறை

கண்டுபிடித்தவர்: பிராமிதாசென் குப்தா

சவால்

தூய்மை செய்யக்கூடிய எளிதில் எடுத்துச்செல்லும் வகையிலான கூடாரம் இரண்டு நிமிடங்களில் கட்டமைக்க இயலும் இந்த உபகரணத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தினை பெண்களுக்கு அளிக்க இயலும்.

பயணம்

குர்கானைச் சேர்ந்த முன்னாள் வங்கியாளரான பிராமிதா சென்குப்தா சுகாதாரத்திற்கான இவ்வுபகரணத்தினை உருவாக்கியது பற்றிக்கூறுகிறார் ‘’பல்வேறு பயணங்களின்போது பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தவேண்டிய அவசியமும், கட்டாயமும் இருந்தது. அக்கழிவறைகளின் மோசமான பராமரிப்பின் காரணமாக தண்ணீரைக் குறைவாகக் குடித்து சிறுநீர் வராமல் பார்த்துக்கொள்ளும் நிலைக்கு, அக்கழிவறைகளுக்கு செல்லும் நிலையைத் தவிர்க்க நினைத்தேன்’’. இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பிராமிதா அதோடு நிற்கவில்லை. ‘’ எளிதில் கையாளக்கூடிய ஒரு வடிவமைப்பை என்சர்க்கிள் சி(15கி) எடையில் உருவாக்கி, கார்களில் வைத்துக்கொண்டு பயணங்களில் பயன்படுத்தும்படியான கழிவறையினை உருவாக்கினோம். இதனை சாலைகளில் எளிமையாக பயன்படுத்த முடியும் என்கிற பிராமிதா இதன் பின்னர் அடித்தட்டு மக்களுக்கான பிரச்சனைகளை அறிந்து அதனைத் தீர்க்க முயற்சித்தார். ‘’பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகையினால் ஒரு பேரிடர் நேரும்போது, ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க மிகவும் கடினமாக உள்ளது. வயிற்றுப்போக்கு, கருச்சிதைவு, பெருகியுள்ள பள்ளி இடைநிற்றல் இன்னும் பல பிரச்சனைகளும் உள்ளன. இவையே பிராமிதாவின் உத்வேகத்திற்கு காரணமாக அமைய அவரது ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் குழுவானது அதிக எண்ணிக்கையிலான இது போன்ற என் சர்க்கிள் ஆர் கழிவறைகளை உருவாக்கி வருகின்றனர்.

தாக்கம்

இன்றைய தேதி வரை என்சர்க்கிள் ஆர் மேம்படுத்தப்பட்டு பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் வௌ¢ள நிவாரணத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையின்போது அறையாக மாற்றியமைத்து பயன்படுத்தப்பட்டது.

 

புத்தகப்பையும் மேஜையும் ஒன்றேதான்

கண்டுபிடித்தவர்: ஷோபா மூர்த்தி

சவால்
இந்தியாவிலுள்ள பல கிராமத்து பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான மேஜைகள் இல்லை. மாணவர்களுக்கு புத்தகைப்பையும் கிடைப்பதில்லை.

பயணம்

மும்பையைச் சேர்ந்த ஷோபா மூர்த்தி தன்னுடைய ஆரம்ப் அமைப்பு மூலம் மகராஷ்டிரா மாநில சதாரா மாவட்ட வாய் தாலூக்காவில் பணி செய்து வருகிறார். ஃஜில்லாபரிஷத் பள்ளி மாணவர்கள் கடும் வறுமையான சூழலில் புத்தகப்பை கூட இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அதுவும் கிடைக்காதவர்கள் கைகளில் புத்தகத்தை சுமந்து பள்ளி செல்வதை உற்றுக் கவனித்தார். இதுபோன்ற பல பள்ளிகளிலும் மேஜைகள் இல்லாமல் குழந்தைகள் பலமணி நேரம் குனிந்துகொண்டே படிக்கவேண்டிய நிலை இருந்ததைக் கண்டறிந்தார். தன் குழுவோடு இணைந்து பயன்படுத்திய காகிதப்பெட்டிகளை புத்தகப்பை மற்றும் மேஜை போல் செய்தார்கள். ‘’முத்ரா விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த சனூரி கோம்ஸ் மற்றும் அவர்களின் குழுவினர் எங்களோடு இணைந்து இதுபோன்ற மேஜைகளைத் தயாரிப்பவர்களைக் கண்டறிந்து அவற்றைத் தயாரித்தோம்’’ என்கிறார் ஷோபா. எங்களுடைய குறிக்கோள் செய்தி ஒன்றுதான். ஒரு பிரச்சனைக்கான தீர்வை நம்முள்ளிருந்தே பெறமுடியும். எளிமையாகவும், சிக்கனமாகவும் தேடிப்பெற முடியும்’’ என்கிறார்.

தாக்கம்

ஒவ்வொரு புத்தகப்பையும் 15 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 10 ஃஜில்லாபரிஷத் பள்ளிகளுக்கு இவை எவ்வித விலையில்லாமல் மகராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

 

நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்து தடுக்கும் நுட்பம்

கண்டுபிடித்தவர்கள்: பிரசித்தி பண்டாரி, ஸ்வாதி ஸ்ரீதரன்
சவால்

வயிற்றுப்போக்கை உருவாக்கும் ரோட்டாவைரசினால் இந்தியாவில் 80000 குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.

பயணம்

பிரசித்தி பண்டாரி மற்றும் ஸ்வாதி ஸ்ரீதரன் ஆகியோர் வைரஸைக் கண்டறிய திரவச்சில்லு ஒன்றினைப் பயன்படுத்துகிறார்கள். ரோட்டாவைரஸை கண்டறிய எதிர் நுண்ணுயிரிகள் செலுத்தப்பட்ட பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. மலத்தில் கலந்துள்ள வைரஸ் பரவத்தொடங்கும் போது நூலில் உள்ள எதிர் நுண்ணுயிரிகள் அதைக் கண்டறிந்து அதன் வேதிப்பொருட்களினால் நிறம் மாறும்’’ என விளக்குகிறார் பெங்களூர் அச்சிதா ஆய்வகத்தைச் சேர்ந்த மரு. தனஞ்ஜெய் தெந்துகுரி.
‘’இச்சோதனை மூலம் வயிற்றுப்போக்கிற்கு காரணம் வைரஸா, அல்லது பாக்டீரியாவா எனக்கண்டறிந்து தேவையில்லாத எதிர் நுண்ணுயிரிகளை விலக்க முடியும். வயிற்றுப்போக்கிற்கு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள், போடப்படாத குழந்தைகள் என்பதையும் கண்டறிய முடியும். இந்திய அறிவியல் கழகத்தின் உயிரி வேதியியல் துறையைச் சேர்ந்த மரு. சி. துர்க்கா ராவ் அவர்களோடு இணைந்து பணிபுரிகிறோம்’’ என்கிறார் தனஞ்ஜெய்.

நாங்கள் இதுபோன்ற சோதனைகளை இரண்டாம், மூன்றாம் வரிசை நகரங்களைச்சேர்ந்த மக்களும் பெற வேண்டுமென சோதனைகளை 30 லிருந்து 40 ரூபாயில் செய்கிறோம். இச்சோதனைகளை மேம்படுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக உழைத்துவருகிறோம்’’ என்கிறார் மரு. மோகன்ராவ்.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

தெருவிளக்கு Copyright © 2014 by jayend16 and வின்சென்ட் காபோ, ஜோ ஃபாக்ஸ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book