1.1 கடவுள் வாழ்த்து
1.1.1 கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
|
1 |
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
|
2 |
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
|
3 |
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
|
4 |
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
|
5 |
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
|
6 |
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
|
7 |
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
|
8 |
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
|
9 |
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
|
10 |
1.1.2 வான்சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | 11 |
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. | 12 |
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. | 13 |
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால். | 14 |
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை. | 15 |
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது. | 16 |
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின். | 17 |
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | 18 |
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின். | 19 |
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. | 20 |
1.1.3. நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. | 21 |
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | 22 |
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு. | 23 |
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | 24 |
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி. | 25 |
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார். | 26 |
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. | 27 |
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும். | 28 |
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது. | 29 |
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்செந்தண்மை பூண்டொழுக லான். | 30 |
1.1.4. அறன்வலியுறுத்தல்
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. | 31 |
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு. | 32 |
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல். | 33 |
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்ஆகுல நீர பிற. | 34 |
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். | 35 |
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. | 36 |
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. | 37 |
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல். | 38 |
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்புறத்த புகழும் இல. | 39 |
செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி. | 40 |