"

1.3 துறவறவியல்

1.3.1 அருளுடைமை

 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள. 241
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை. 242
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். 243
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்பதன்னுயிர் அஞ்சும் வினை. 244
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி. 245
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார். 246
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது. 248
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். 249
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்மெலியார்மேல் செல்லு மிடத்து. 250

1.3.2. புலான்மறுத்தல்

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்? 251
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம். 253
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்பொருளல்லது அவ்வூன் தினல். 254
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. 255
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். 256
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின். 257
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். 260

1.3.3 தவம்

 

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு. 261
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வது. 262
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். 263
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். 264
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும். 265
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. 266
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும். 268
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். 269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். 270

1.3.4. கூடாவொழுக்கம்

 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். 271
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின். 272
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 273
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுஏதம் பலவுந் தரும். 275
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். 276
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து. 277
மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். 278
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல். 279
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். 280

1.3.5. கள்ளாமை

 

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வேம் எனல். 282
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும். 283
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும். 284
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர். 286
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல். 287
அளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர். 289
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்தள்ளாது புத்தே ளுளகு. 290

1.3.6. வாய்மை

 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். 291
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின். 292
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன். 294
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை. 295
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும். 296
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. 297
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும். 298
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. 299
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற. 300

1.3.7 வெகுளாமை

 

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்? 301
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. 302
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும். 303
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற. 304
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். 305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும். 306
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 307
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று. 308
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின். 309
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. 310

1.3.8 இன்னாசெய்யாமை

 

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னாசெய்யாமை மாசற்றார் கோள். 311
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள். 312
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும். 313
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல். 314
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை. 315
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல். 316
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை. 317
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல். 318
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும். 319
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர். 320

1.3.9 கொல்லாமை

 

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். 321
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று. 323
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி. 324
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை. 325
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை. 327
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்கொன்றாகும் ஆக்கங் கடை. 328
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து. 329
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330

1.3.10 நிலையாமை

 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. 331
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. 332
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல். 333
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்வாளது உணர்வார்ப் பெறின். 334
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும் 335
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. 336
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. 337
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. 338
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. 339
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு. 340

1.3.11 துறவு

 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன். 341
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல. 342
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து. 344
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை. 345
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும். 346
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர் க்கு. 347
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர். 348
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும். 349
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு. 350

1.3.12 மெய்யுணர்தல்

 

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. 351
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. 352
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து. 353
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி. 356
ஓர்த்துள்ளம் உள்ளது உணர஧ன் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்பது அறிவு. 358
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். 359
காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்நாமம் கெடக்கெடும் நோய். 360

1.3.13 அவாவறுத்தல்

 

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. 361
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும். 362
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்பது இல். 363
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும். 364
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர். 365
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா. 366
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். 367
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். 368
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். 369
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். 370

1.4 ஊழியல்

1.4.1. ஊழ்

 

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி. 371
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை. 372
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும். 373
இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு. 374
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு. 375
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. 376
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின். 378
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்? 379
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும். 380

License

Icon for the Public Domain license

This work (திருவள்ளுவர் அருளிய திருக்குறள் by திருவள்ளுவர்) is free of known copyright restrictions.

Share This Book