2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.1 இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு. | 381 |
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. | 382 |
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு. | 383 |
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமானம் உடைய தரசு. | 384 |
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு. | 385 |
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம் | 386 |
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு. | 387 |
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும். | 388 |
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. | 389 |
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி. | 390 |
2.1.2 கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. | 391 |
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு. | 392 |
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர். | 393 |
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில். | 394 |
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர். | 395 |
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. | 396 |
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு. | 397 |
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து. | 398 |
தாமின் புறுவது உலகின் புறக் கண்டுகாமுறுவர் கற்றறிந் தார். | 399 |
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை. | 400 |
2.1.3 கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல். | 401 |
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. | 402 |
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின். | 403 |
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார். | 404 |
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும். | 405 |
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர். | 406 |
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. | 407 |
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட் ட திரு. | 408 |
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு. | 409 |
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர். | 410 |
2.1.4 கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை. | 411 |
செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும். | 412 |
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து. | 413 |
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. | 414 |
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல். | 415 |
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும். | 416 |
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர். | 417 |
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி. | 418 |
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராதல் அரிது. | 419 |
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்? | 420 |
2.1.5 அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண். | 421 |
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு. | 422 |
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. | 423 |
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு. | 424 |
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு. | 425 |
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு. | 426 |
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர். | 427 |
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில். | 428 |
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய். | 429 |
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர். | 430 |
2.1.6 குற்றங்கடிதல்
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. | 431 |
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு. | 432 |
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார். | 433 |
குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை. | 434 |
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும். | 435 |
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு? | 436 |
செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும். | 437 |
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று. | 438 |
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை. | 439 |
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல். | 440 |
2.1.7 பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். | 441 |
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். | 442 |
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். | 443 |
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை. | 444 |
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். | 445 |
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில். | 446 |
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர். | 447 |
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும். | 448 |
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை. | 449 |
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். | 450 |
2.1.8 சிற்றினஞ்சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். | 451 |
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு. | 452 |
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். | 453 |
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு. | 454 |
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும். | 455 |
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை. | 456 |
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும். | 457 |
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து. | 458 |
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து. | 459 |
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். | 460 |
2.1.9 தெரிந்துசெயல்வகை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். | 461 |
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல் | 462 |
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார். | 463 |
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர். | 464 |
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு. | 465 |
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும். | 466 |
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. | 467 |
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும். | 468 |
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை. | 469 |
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு. | 470 |
2.1.10 வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். | 471 |
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல். | 472 |
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். | 473 |
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும். | 474 |
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின். | 475 |
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும். | 476 |
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி. | 477 |
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை. | 478 |
அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும். | 479 |
உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும். | 480 |
2.1.11 காலமறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. | 481 |
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு. | 482 |
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறந்து செயின். | 483 |
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின். | 484 |
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர். | 485 |
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து. | 486 |
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர். | 487 |
செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. | 488 |
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல். | 489 |
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து. | 490 |
2.1.12 இடனறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது. | 491 |
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும். | 492 |
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின். | 493 |
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். | 494 |
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற. | 495 |
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து. | 496 |
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின். | 497 |
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும். | 498 |
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. | 499 |
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு. | 500 |
2.1.13 தெரிந்துதெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும். | 501 |
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு. | 502 |
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. | 503 |
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். | 504 |
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். | 505 |
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. | 506 |
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். | 507 |
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும். | 508 |
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள். | 509 |
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும். | 510 |
2.1.14 தெரிந்துவினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். | 511 |
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை. | 512 |
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. | 513 |
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். | 514 |
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. | 515 |
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். | 516 |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல். | 517 |
வினைக் குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல். | 518 |
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு. | 519 |
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு. | 520 |
2.1.15 சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. | 521 |
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும். | 522 |
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று. | 523 |
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்பெற்றத்தால் பெற்ற பயன். | 524 |
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். | 525 |
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல். | 526 |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள. | 527 |
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர். | 528 |
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும். | 529 |
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத் திருந்து எண்ணிக் கொளல். | 530 |
2.1.16 பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு. | 531 |
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக் கொன் றாங்கு. | 532 |
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு. | 533 |
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு. | 534 |
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும். | 535 |
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல். | 536 |
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின். | 537 |
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். | 538 |
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. | 539 |
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின். | 540 |
2.1.17 செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. | 541 |
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல் நோக்கி வாழுங் குடி. | 542 |
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். | 543 |
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. | 544 |
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. | 545 |
வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின். | 546 |
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். | 547 |
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். | 548 |
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில். | 549 |
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். | 550 |
2.1.18 கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து. | 551 |
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. | 552 |
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும். | 553 |
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு. | 554 |
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை | 555 |
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி. | 556 |
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு. | 557 |
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். | 558 |
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். | 559 |
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின். | 560 |
2.1.19 வெருவந்தசெய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. | 561 |
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர். | 562 |
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும். | 563 |
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும். | 564 |
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. | 565 |
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும். | 566 |
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். | 567 |
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகும் திரு. | 568 |
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். | 569 |
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை. | 570 |
2.1.20 கண்ணோட் டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு. | 571 |
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை. | 572 |
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்கண்ணோட்டம் இல்லாத கண். | 573 |
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். | 574 |
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்புண்ணென்று உணரப் படும் | 575 |
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர். | 576 |
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல். | 577 |
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்திவ் வுலகு. | 578 |
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை. | 579 |
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர். | 580 |
2.1.21 ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண். | 581 |
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். | 582 |
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்தது இல். | 583 |
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. | 584 |
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று. | 585 |
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துஎன்செயினும் சோர்விலது ஒற்று. | 586 |
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. | 587 |
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல். | 588 |
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும். | 589 |
சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. | 590 |
<!–StartFragment–>
2.1.22 ஊக்கமுடைமை
2.1.23 மடியின்மை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்உடையது உடையரோ மற்று. | 591 |
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும். | 592 |
க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார். | 593 |
க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை. | 594 |
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு. | 595 |
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து. | 596 |
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு. | 597 |
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு. | 598 |
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைவ்ருஉம் புலிதாக் குறின். | 599 |
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு. | 600 |
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும். | 601 |
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர். | 602 |
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து. | 603 |
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு. | 604 |
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன். | 605 |
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது. | 606 |
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர். | 607 |
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும். | 608 |
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும். | 609 |
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு. | 610 |
2.1.24 ஆள்வினையுடைமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும். | 611 |
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. | 612 |
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு. | 613 |
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். | 614 |
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண். | 615 |
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும். | 616 |
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள். | 617 |
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி. | 618 |
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். | 619 |
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர். | 620 |
2.1.25 இடுக்கணழியாமை
இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில். | 621 |
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும். | 622 |
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். | 623 |
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. | 624 |
அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும். | 625 |
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர். | 626 |
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல். | 627 |
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன். | 628 |
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். | 629 |
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு. | 630 |