2.2. அங்கவியல்
2.2.1 அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு. | 631 |
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு. | 632 |
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு. | 633 |
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு. | 634 |
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை. | 635 |
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாவுள முன்நிற் பவை. | 636 |
செயற்கை அறந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல். | 637 |
அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன். | 638 |
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும். | 639 |
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர். | 640 |
2.2.2 சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. | 641 |
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. | 642 |
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல். | 643 |
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங்கு இல். | 644 |
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. | 645 |
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள். | 646 |
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது. | 647 |
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின். | 648 |
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர். | 649 |
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார். | 650 |
2.2.3 வினைத்தூய்மை
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும். | 651 |
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை. | 652 |
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைஆஅதும் என்னு மவர். | 653 |
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர். | 654 |
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று. | 655 |
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் கசான்றோர் பழிக்கும் வினை. | 656 |
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை. | 657 |
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும். | 658 |
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. | 659 |
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. | 660 |
2.2.4 வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற. | 661 |
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். | 662 |
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும். | 663 |
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல். | 664 |
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும். | 665 |
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். | 666 |
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து. | 667 |
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல். | 668 |
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை. | 669 |
எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு. | 670 |
2.2.5 வினைசெயல்வகை
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. | 671 |
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை. | 672 |
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல். | 673 |
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும். | 674 |
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்இருள்தீர எண்ணிச் செயல். | 675 |
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். | 676 |
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல். | 677 |
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. | 678 |
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல். | 679 |
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து. | 680 |
2.2.6 தூது
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. | 681 |
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று. | 682 |
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு. | 683 |
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு. | 684 |
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது. | 685 |
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்கது அறிவதாம் தூது. | 686 |
கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை. | 687 |
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு. | 688 |
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சேரா வன்க ணவன். | 689 |
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் குஉறுதி பயப்பதாம் தூது. | 690 |
2.2.7 மன்னரைச் சேர்ந்தொழுதல்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். | 691 |
மன்னர் விழைப விழையாமை மன்னரால்மன்னிய ஆக்கந் தரும். | 692 |
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது. | 693 |
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து. | 694 |
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை. | 695 |
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல். | 696 |
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல். | 697 |
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோடு ஒழுகப் படும். | 698 |
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர். | 699 |
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும். | 700 |
2.2.8 குறிப்பறிதல்
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி. | 701 |
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல். | 702 |
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல். | 703 |
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு. | 704 |
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்? | 705 |
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம். | 706 |
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும். | 707 |
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின். | 708 |
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். | 709 |
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்லது இல்லை பிற. | 710 |
2.2.9 அவையறிதல்
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். | 711 |
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர். | 712 |
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல். | 713 |
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல். | 714 |
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு. | 715 |
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. | 716 |
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. | 717 |
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று. | 718 |
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசலச் சொல்லு வார். | 719 |
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்அல்லார்முன் கோட்டி கொளல். | 720 |
2.2.10 அவையஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். | 721 |
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார். | 722 |
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர். | 723 |
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல். | 724 |
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு. | 725 |
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு. | 726 |
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல். | 727 |
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார். | 728 |
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார். | 729 |
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார். | 730 |