1.3 துறவறவியல்
1.3.1 அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள. | 241 |
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை. | 242 |
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். | 243 |
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்பதன்னுயிர் அஞ்சும் வினை. | 244 |
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி. | 245 |
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார். | 246 |
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. | 247 |
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது. | 248 |
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். | 249 |
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்மெலியார்மேல் செல்லு மிடத்து. | 250 |
1.3.2. புலான்மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்? | 251 |
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. | 252 |
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம். | 253 |
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்பொருளல்லது அவ்வூன் தினல். | 254 |
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. | 255 |
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். | 256 |
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின். | 257 |
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். | 258 |
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. | 259 |
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். | 260 |
1.3.3 தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு. | 261 |
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வது. | 262 |
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். | 263 |
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். | 264 |
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும். | 265 |
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. | 266 |
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. | 267 |
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும். | 268 |
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். | 269 |
இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். | 270 |
1.3.4. கூடாவொழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். | 271 |
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின். | 272 |
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. | 273 |
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. | 274 |
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுஏதம் பலவுந் தரும். | 275 |
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். | 276 |
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து. | 277 |
மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். | 278 |
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னவினைபடு பாலால் கொளல். | 279 |
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின். | 280 |
1.3.5. கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு. | 281 |
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வேம் எனல். | 282 |
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும். | 283 |
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும். | 284 |
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். | 285 |
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர். | 286 |
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல். | 287 |
அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு. | 288 |
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர். | 289 |
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்தள்ளாது புத்தே ளுளகு. | 290 |
1.3.6. வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். | 291 |
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின். | 292 |
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். | 293 |
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன். | 294 |
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை. | 295 |
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும். | 296 |
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. | 297 |
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும். | 298 |
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. | 299 |
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற. | 300 |
1.3.7 வெகுளாமை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என்? | 301 |
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. | 302 |
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும். | 303 |
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற. | 304 |
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். | 305 |
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும். | 306 |
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று. | 307 |
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று. | 308 |
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின். | 309 |
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. | 310 |
1.3.8 இன்னாசெய்யாமை
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னாசெய்யாமை மாசற்றார் கோள். | 311 |
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள். | 312 |
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும். | 313 |
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல். | 314 |
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை. | 315 |
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல். | 316 |
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை. | 317 |
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல். | 318 |
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும். | 319 |
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர். | 320 |
1.3.9 கொல்லாமை
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். | 321 |
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. | 322 |
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று. | 323 |
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி. | 324 |
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை. | 325 |
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று. | 326 |
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை. | 327 |
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்கொன்றாகும் ஆக்கங் கடை. | 328 |
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து. | 329 |
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர். | 330 |
1.3.10 நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. | 331 |
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. | 332 |
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல். | 333 |
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்வாளது உணர்வார்ப் பெறின். | 334 |
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும் | 335 |
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. | 336 |
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. | 337 |
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. | 338 |
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. | 339 |
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு. | 340 |
1.3.11 துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன். | 341 |
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல. | 342 |
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு. | 343 |
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து. | 344 |
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை. | 345 |
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும். | 346 |
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர் க்கு. | 347 |
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர். | 348 |
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும். | 349 |
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு. | 350 |
1.3.12 மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. | 351 |
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. | 352 |
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து. | 353 |
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. | 354 |
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. | 355 |
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி. | 356 |
ஓர்த்துள்ளம் உள்ளது உணரன் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. | 357 |
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்பது அறிவு. | 358 |
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். | 359 |
காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்நாமம் கெடக்கெடும் நோய். | 360 |
1.3.13 அவாவறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. | 361 |
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும். | 362 |
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்பது இல். | 363 |
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும். | 364 |
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர். | 365 |
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா. | 366 |
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். | 367 |
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். | 368 |
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். | 369 |
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். | 370 |
1.4 ஊழியல்
1.4.1. ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி. | 371 |
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை. | 372 |
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும். | 373 |
இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு. | 374 |
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு. | 375 |
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. | 376 |
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. | 377 |
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின். | 378 |
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்? | 379 |
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும். | 380 |