"

2. பொருட்பால்

2.1 அரசியல்

2.1.1 இறைமாட்சி

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு. 381
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. 382
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனான் பவர்க்கு. 383
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமானம் உடைய தரசு. 384
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தவகுத்தலும் வல்ல தரசு. 385
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம் 386
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு. 387
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும். 388
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி. 390

2.1.2 கல்வி

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. 391
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர். 393
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில். 394
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர். 395
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு. 396
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு. 397
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து. 398
தாமின் புறுவது உலகின் புறக் கண்டுகாமுறுவர் கற்றறிந் தார். 399
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை. 400

2.1.3 கல்லாமை

 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல். 401
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின். 403
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார். 404
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும். 405
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர். 406
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. 407
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட் ட திரு. 408
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு. 409
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர். 410

2.1.4 கேள்வி

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை. 411
செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும். 412
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும். 416
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர். 417
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி. 418
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராதல் அரிது. 419
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்? 420

2.1.5 அறிவுடைமை

 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண். 421
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு. 422
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு. 424
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு. 425
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு. 426
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர். 427
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில். 428
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய். 429
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர். 430

2.1.6 குற்றங்கடிதல்

 

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. 431
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு. 432
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார். 433
குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை. 434
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும். 435
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு? 436
செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும். 437
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று. 438
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை. 439
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல். 440

2.1.7 பெரியாரைத் துணைக்கோடல்

 

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். 441
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். 442
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல். 443
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை. 444
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். 445
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில். 446
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர். 447
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும். 448
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை. 449
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல். 450

2.1.8 சிற்றினஞ்சேராமை

 

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். 451
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு. 452
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். 453
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு. 454
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும். 455
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை. 456
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும். 457
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து. 458
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து. 459
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். 460

2.1.9 தெரிந்துசெயல்வகை

 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். 461
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதொன்றும் இல் 462
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார். 463
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர். 464
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு. 465
செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும். 466
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. 467
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும். 468
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை. 469
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு. 470

2.1.10 வலியறிதல்

 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். 471
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல். 472
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். 473
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும். 474
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின். 475
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும். 476
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி. 477
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை. 478
அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும். 479
உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும். 480

2.1.11 காலமறிதல்

 

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு. 482
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அற஧ந்து செயின். 483
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின். 484
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர். 485
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து. 486
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487
செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. 488
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல். 489
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து. 490

2.1.12 இடனறிதல்

 

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது. 491
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும். 492
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின். 493
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். 494
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற. 495
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து. 496
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின். 497
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும். 498
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு. 500

2.1.13 தெரிந்துதெளிதல்

 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும். 501
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு. 502
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. 503
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். 504
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். 505
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. 506
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். 507
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும். 508
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள். 509
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும். 510

2.1.14 தெரிந்துவினையாடல்

 

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். 511
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை. 512
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. 513
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். 514
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். 516
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல். 517
வினைக் குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல். 518
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு. 519
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு. 520

2.1.15 சுற்றந்தழால்

 

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. 521
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும். 522
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று. 523
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்பெற்றத்தால் பெற்ற பயன். 524
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். 525
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல். 526
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள. 527
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர். 528
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும். 529
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத் திருந்து எண்ணிக் கொளல். 530

2.1.16 பொச்சாவாமை

 

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு. 531
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக் கொன் றாங்கு. 532
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு. 534
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும். 535
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல். 536
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின். 537
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின். 540

2.1.17 செங்கோன்மை

 

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. 541
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல் நோக்கி வாழுங் குடி. 542
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். 543
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. 544
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. 545
வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின். 546
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். 547
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். 548
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில். 549
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். 550

2.1.18 கொடுங்கோன்மை

 

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து. 551
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. 552
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும். 553
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு. 554
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை 555
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி. 556
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு. 557
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். 558
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல். 559
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின். 560

2.1.19 வெருவந்தசெய்யாமை

 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர். 562
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும். 564
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. 565
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும். 566
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம். 567
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகும் திரு. 568
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். 569
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுஇல்லை நிலக்குப் பொறை. 570

2.1.20 கண்ணோட் டம்

 

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு. 571
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை. 572
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்கண்ணோட்டம் இல்லாத கண். 573
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். 574
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்புண்ணென்று உணரப் படும் 575
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர். 576
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல். 577
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்திவ் வுலகு. 578
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை. 579
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர். 580

2.1.21 ஒற்றாடல்

 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண். 581
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். 582
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்தது இல். 583
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று. 584
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று. 585
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துஎன்செயினும் சோர்விலது ஒற்று. 586
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. 587
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும். 589
சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. 590

<!–StartFragment–>

2.1.22 ஊக்கமுடைமை

 

2.1.23 மடியின்மை

 

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்உடையது உடையரோ மற்று. 591
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும். 592
க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார். 593
க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை. 594
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு. 595
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு. 597
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு. 598
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை஦வ்ருஉம் புலிதாக் குறின். 599
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு. 600
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும். 601
மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர். 602
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து. 603
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு. 604
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன். 605
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது. 606
இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர். 607
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும். 608
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும். 609
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

2.1.24 ஆள்வினையுடைமை

 

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும். 611
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு. 613
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். 614
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண். 615
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும். 616
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள். 617
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி. 618
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். 619
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர். 620

2.1.25 இடுக்கணழியாமை

 

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில். 621
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும். 622
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். 623
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624
அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும். 625
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர். 626
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல். 627
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன். 628
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். 629
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 630

License

Icon for the Public Domain license

This work (திருவள்ளுவர் அருளிய திருக்குறள் by திருவள்ளுவர்) is free of known copyright restrictions.

Share This Book