2.3 அரணியல்
2.3.1 நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு. | 731 |
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. | 732 |
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு. | 733 |
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு. | 734 |
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. | 735 |
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை. | 736 |
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. | 737 |
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து. | 738 |
நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு. | 739 |
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு. | 740 |
2.3.2 அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். | 741 |
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண். | 742 |
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல். | 743 |
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண். | 744 |
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீரது அரண். | 745 |
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண். | 746 |
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண். | 747 |
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வது அரண். | 748 |
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண். | 749 |
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். | 750 |
2.3.3 பொருள்செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள். | 751 |
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. | 752 |
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. | 752 |
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள். | 754 |
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல். | 755 |
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். | 756 |
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு. | 757 |
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை. | 758 |
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில். | 759 |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. | 760 |
2.3.4 படைமாட்சி
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. | 761 |
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது. | 762 |
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். | 763 |
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை. | 764 |
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. | 765 |
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு. | 766 |
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. | 767 |
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும். | 768 |
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை. | 769 |
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல். | 770 |
2.3.5 படைச்செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர். | 771 |
கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. | 772 |
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு. | 773 |
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும். | 774 |
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. | 775 |
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. | 776 |
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து. | 777 |
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். | 778 |
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர். | 779 |
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து. | 780 |
2,3.6 நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு. | 7811 |
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. | 782 |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு. | 783 |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்செனறு இடித்தற் பொருட்டு. | 784 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும். | 785 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. | 786 |
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு. | 787 |
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு. | 788 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. | 789 |
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு. | 790 |
2.3.7 நட்பாராய்தல்
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு. | 791 |
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். | 792 |
குணமும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு. | 793 |
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. | 794 |
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியவல்லார்நடபு ஆய்ந்து கொளல். | 795 |
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல். | 796 |
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல். | 797 |
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. | 798 |
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும். | 799 |
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு. | 800 |
2.3.8 பழைமை
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. | 801 |
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குஉப்பாதல் சான்றோர் கடன். | 802 |
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை. | 803 |
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின். | 804 |
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின். | 805 |
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. | 806 |
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர். | 807 |
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின். | 808 |
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு. | 809 |
விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார். | 810 |
2.3.9 தீ நட்பு
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது. | 811 |
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்? | 812 |
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர். | 813 |
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை. | 814 |
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று. | 815 |
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும். | 816 |
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும். | 817 |
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல். | 818 |
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு. | 819 |
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு. | 820 |
2.3.10 கூடாநட்பு
சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடைநேரா நிரந்தவர் நட்பு. | 821 |
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும். | 822 |
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது. | 823 |
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும். | 824 |
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற்று அன்று. | 825 |
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும். | 826 |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான். | 827 |
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. | 828 |
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துநட்பினுள் சாப்புல்லற் பாற்று. | 829 |
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல். | 830 |
2.3.11 பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல். | 831 |
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல். | 832 |
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில் | 833 |
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்பேதையின் பேதையார் இல். | 834 |
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு. | 835 |
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின். | 836 |
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை. | 837 |
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கையொன்று உடைமை பெறின். | 838 |
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில். | 839 |
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல். | 840 |
2.3.12 புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு. | 841 |
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம். | 842 |
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது. | 843 |
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு. | 844 |
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும். | 845 |
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. | 846 |
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. | 847 |
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய். | 848 |
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. | 849 |
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். | 850 |
2.3.13 இகல்
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரக்கும் நோய். | 851 |
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை. | 852 |
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும். | 853 |
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். | 854 |
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிக்லூக்கும் தன்மை யவர். | 855 |
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து. | 856 |
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர். | 857 |
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. | 858 |
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு. | 859 |
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு. | 860 |
2.3.14 பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. | 861 |
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. | 862 |
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. | 863 |
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. | 864 |
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க்கு இனிது. | 865 |
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும். | 866 |
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை. | 867 |
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்குஇனனிலனாம் ஏமாப் புடைத்து. | 868 |
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். | 869 |
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி. | 870 |
2.3.15 பகைத்திறந்தெரிதல்
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. | 871 |
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை. | 872 |
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன். | 873 |
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. | 874 |
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. | 875 |
தேறனும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல். | 876 |
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து. | 877 |
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு. | 878 |
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து. | 879 |
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார். | 880 |
2.3.16 உட்பகை
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின். | 881 |
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. | 882 |
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும். | 883 |
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும். | 884 |
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும். | 885 |
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது. | 886 |
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி. | 887 |
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி. | 888 |
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு. | 889 |
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று. | 890 |
2.3.17 பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. | 891 |
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்பேரா இடும்பை தரும். | 892 |
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு. | 893 |
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குஆற்றாதார் இன்னா செயல். | 894 |
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர். | 895 |
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார். | 896 |
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின். | 897 |
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து. | 898 |
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும். | 899 |
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின். | 900 |
2.3.18 பெண்வழிச்சேறல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்வேண்டாப் பொருளும் அது. | 901 |
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும். | 902 |
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். | 903 |
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று. | 904 |
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல். | 905 |
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர். | 906 |
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து. | 907 |
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட் டாங்கு ஒழுகு பவர். | 908 |
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ஏவல் செய்வார்கண் இல். | 909 |
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல். | 910 |
2.3.19 வரைவின்மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். | 911 |
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல். | 912 |
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதல் பிணந்தழீஇ அற்று. | 913 |
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். | 914 |
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். | 915 |
தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள். | 916 |
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள். | 917 |
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்பமாய மகளிர் முயக்கு. | 918 |
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு. | 919 |
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு. | 920 |
2.3.20 கள்ளுண்ணாமை
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார். | 921 |
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். | 922 |
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. | 923 |
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. | 924 |
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல். | 925 |
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர். | 926 |
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்3 | 927 |
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துஒளித்ததூஉம் ஆங்கே மிகும். | 928 |
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று. | 929 |
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. | 930 |
2.3.21 சூது
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. | 931 |
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. | 932 |
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும். | 933 |
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல். | 934 |
கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார். | 935 |
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார். | 936 |
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின். | 937 |
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது. | 938 |
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின். | 939 |
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர். | 940 |
2.3.22 மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. | 941 |
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின். | 942 |
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. | 943 |
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து. | 944 |
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு. | 945 |
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய். | 946 |
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும். | 947 |
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல். | 948 |
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல். | 949 |
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற் கூற்றே மருந்து. | 950 |