"

2.3 அரணியல்

2.3.1 நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு. 731
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. 732
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு. 733
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு. 734
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. 735
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை. 736
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 737
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து. 738
நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு. 739
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு. 740

2.3.2 அரண்

 

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். 741
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண். 742
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல். 743
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண். 744
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீரது அரண். 745
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண். 746
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண். 747
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வது அரண். 748
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண். 749
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். 750

2.3.3 பொருள்செயல்வகை

 

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள். 751
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. 752
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. 752
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள். 754
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல். 755
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். 756
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு. 757
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை. 758
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில். 759
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. 760

2.3.4 படைமாட்சி

 

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. 761
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது. 762
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். 763
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை. 764
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. 765
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு. 766
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. 767
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும். 768
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை. 769
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல். 770

2.3.5 படைச்செருக்கு

 

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர். 771
கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு. 773
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும். 774
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 775
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. 776
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். 778
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர். 779
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து. 780

2,3.6 நட்பு

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு. 7811
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. 782
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு. 783
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்செனறு இடித்தற் பொருட்டு. 784
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும். 785
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. 786
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு. 787
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு. 788
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு. 790

2.3.7 நட்பாராய்தல்

 

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு. 791
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். 792
குணமும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு. 793
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. 794
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியவல்லார்நடபு ஆய்ந்து கொளல். 795
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல். 796
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல். 797
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. 798
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும். 799
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800

2.3.8 பழைமை

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குஉப்பாதல் சான்றோர் கடன். 802
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை. 803
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின். 804
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின். 805
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர். 807
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின். 808
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு. 809
விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார். 810

2.3.9 தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது. 811
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்? 812
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர். 813
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை. 814
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று. 815
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும். 816
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும். 817
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல். 818
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு. 819
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றில் பழிப்பார் தொடர்பு. 820

2.3.10 கூடாநட்பு

சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடைநேரா நிரந்தவர் நட்பு. 821
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும். 822
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது. 823
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும். 824
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற்று அன்று. 825
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும். 826
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான். 827
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. 828
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துநட்பினுள் சாப்புல்லற் பாற்று. 829
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல். 830

2.3.11 பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல். 831
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல். 832
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில் 833
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்பேதையின் பேதையார் இல். 834
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு. 835
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின். 836
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை. 837
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கையொன்று உடைமை பெறின். 838
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில். 839
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல். 840

2.3.12 புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு. 841
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம். 842
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது. 843
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு. 844
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும். 845
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. 846
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. 847
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய். 848
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. 849
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். 850

2.3.13 இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பார஧க்கும் நோய். 851
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை. 852
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும். 853
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். 854
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிக்லூக்கும் தன்மை யவர். 855
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து. 856
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர். 857
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. 858
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு. 859
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு. 860

2.3.14 பகைமாட்சி

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. 861
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. 862
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. 863
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. 864
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க்கு இனிது. 865
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும். 866
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை. 867
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்குஇனனிலனாம் ஏமாப் புடைத்து. 868
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். 869
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி. 870

2.3.15 பகைத்திறந்தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 871
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை. 872
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன். 873
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875
தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல். 876
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து. 877
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு. 878
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து. 879
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார். 880

2.3.16 உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின். 881
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு. 882
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும். 883
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும். 884
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும். 885
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது. 886
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி. 887
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி. 888
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு. 889
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று. 890

2.3.17 பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. 891
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்பேரா இடும்பை தரும். 892
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு. 893
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குஆற்றாதார் இன்னா செயல். 894
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர். 895
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின். 897
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து. 898
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும். 899
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின். 900

2.3.18 பெண்வழிச்சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்வேண்டாப் பொருளும் அது. 901
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும். 902
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். 903
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று. 904
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல். 905
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர். 906
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து. 907
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட் டாங்கு ஒழுகு பவர். 908
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ஏவல் செய்வார்கண் இல். 909
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 910

2.3.19 வரைவின்மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். 911
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல். 912
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏத஧ல் பிணந்தழீஇ அற்று. 913
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். 914
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். 915
தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள். 916
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள். 917
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்பமாய மகளிர் முயக்கு. 918
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு. 919
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920

2.3.20 கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார். 921
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். 922
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. 923
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல். 925
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 926
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்3 927
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 928
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று. 929
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930

2.3.21 சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. 931
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 932
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும். 933
சிறுமை பலசெய்து சீரழ஧க்கும் சூதின்வறுமை தருவதொன்று இல். 934
கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார். 935
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார். 936
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின். 937
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது. 938
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின். 939
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர். 940

2.3.22 மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. 941
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின். 942
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து. 944
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய். 946
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும். 947
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல். 948
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல். 949
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற் கூற்றே மருந்து. 950

License

Icon for the Public Domain license

This work (திருவள்ளுவர் அருளிய திருக்குறள் by திருவள்ளுவர்) is free of known copyright restrictions.

Share This Book