2.4 ஒழிபியல்
2.4.1 குடிமை
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு. | 951 |
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார். | 952 |
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு. | 953 |
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர். | 954 |
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பில் தலைப்பிரிதல் இன்று. | 955 |
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்தும் என் பார். | 956 |
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதக்கண் மறுப்போல் உயர்ந்து. | 957 |
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும். | 958 |
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். | 959 |
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு. | 960 |
2.4.2 மானம்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல். | 961 |
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர். | 962 |
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு. | 963 |
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை. | 964 |
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின். | 965 |
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை. | 966 |
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று. | 967 |
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து. | 968 |
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின். | 969 |
இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு. | 970 |
2.4.3 பெருமை
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதிறந்து வாழ்தும் எனல். | 971 |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். | 972 |
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர். | 973 |
ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. | 974 |
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல். | 975 |
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. | 976 |
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்சீரல் லவர்கண் படின். | 977 |
பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து. | 978 |
பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல். | 979 |
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும். | 980 |
2.4.4 சான்றாண்மை
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. | 981 |
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று. | 982 |
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால் ஊன்றிய தூண். | 983 |
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு. | 984 |
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை. | 985 |
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல். | 986 |
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு. | 987 |
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்திண்மை உண் டாகப் பெறின். | 988 |
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார். | 989 |
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை. | 990 |
2.4.5 பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு. | 991 |
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்பண்புடைமை என்னும் வழக்கு. | 992 |
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. | 993 |
யனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புபா ராட்டும் உலகு. | 994 |
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டு. | 995 |
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன். | 996 |
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர். | 997 |
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை. | 998 |
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள். | 999 |
ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று. | 1000 |
2.4.6 நன்றியில்செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். | 1001 |
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்மருளானாம் மாணாப் பிறப்பு | 1002 |
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை. | 1003 |
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன். | 1004 |
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல். | 1005 |
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுஈதல் இயல்பிலா தான். | 1006 |
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று. | 1007 |
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று. | 1008 |
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர். | 1009 |
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரவறங்கூர்ந் தனையது உடைத்து. | 1010 |
2.4.7 நாணுடைமை
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்நல்லவர் நாணுப் பிற. | 1011 |
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு. | 1012 |
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு. | 1013 |
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்பிணிஅன்றோ பீடு நடை. | 1014 |
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு. | 1015 |
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர். | 1016 |
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர். | 1017 |
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்அறம்நாணத் தக்கது உடைத்து. | 1018 |
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை. | 1019 |
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று. | 1020 |
2.4.8 குடிசெயல்வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல். | 1021 |
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி. | 1022 |
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும். | 1023 |
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு. | 1024 |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு. | 1025 |
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல். | 1026 |
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை. | 1027 |
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும். | 1028 |
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு. | 1029 |
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி. | 1030 |
2.4.9 உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. | 1031 |
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து. | 1032 |
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். | 1033 |
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர். | 1034 |
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர். | 1035 |
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கும் நிலை. | 1036 |
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும். | 1037 |
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு. | 1038 |
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும். | 1039 |
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும். | 1040 |
2.4.10 நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது. | 1041 |
இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும். | 1042 |
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை. | 1043 |
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும். | 1044 |
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும். | 1045 |
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும். | 1046 |
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும். | 1047 |
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு. | 1048 |
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பாடு அரிது. | 1049 |
துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று. | 1050 |
2.4.11 இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று. | 1051 |
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின். | 1052 |
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்றுஇரப்புமோ ரேஎர் உடைத்து. | 1053 |
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு. | 1054 |
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்றுஇரப்பவர் மேற்கொள் வது. | 1055 |
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பைஎல்லாம் ஒருங்கு கெடும். | 1056 |
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்பது உடைத்து. | 1057 |
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று. | 1058 |
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை. | 1059 |
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி. | 1060 |
2.4.12 இரவச்சம்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். | 1061 |
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான். | 1062 |
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில். | 1063 |
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு. | 1064 |
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்கினிய தில். | 1065 |
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்த தில். | 1066 |
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. | 1067 |
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும். | 1068 |
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும். | 1069 |
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர். | 1070 |
2.4.13 கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில். | 1071 |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத்து அவலம் இலர். | 1072 |
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான். | 1073 |
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். | 1074 |
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிது. | 1075 |
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். | 1076 |
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்கூன்கையர் அல்லா தவர்க்கு. | 1077 |
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ். | 1078 |
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ். | 1079 |
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து. | 1080 |
<!–EndFragment–>