26

பதினோராவது

உமாதேவி திருவவதாரச்சருக்கம்

859 உற்றதிருமாலுடனியைந்ததையுரைத்தாய்

தற்பரமசத்தியவதாரமுரையென்னாக்

கற்றுணர்வுறுஞ்சவுனகன்கழறலோடும்

பொற்புறுபுராணமுநிபுங்கவனுரைத்தான்

860 மன்னுமகவான்முநிவர்வானவர்வழுத்த

வுன்னரியசத்தியவுலோகமதின்மேனாட்

சென்னியொருநான்குடையசெல்வனையிறைஞ்சித்

தன்னிகரிலாதவருட்டக்கனிதுரைத்தான்

861 ஒக்கவுயிர்கட்குயிரதாயுறைகுவோனாய்த்

தொக்கவறிவாகியுயர்தொல்லமரர்போற்று

மிக்கவொருவன்றனைவிளம்பியருளென்னாத்

தக்கமலர்வட்டவணையிற்கடவுள்சாற்றும்

862 முன்னொருதினந்தனின்முகுந்தனுமியானும்

பன்னரியபன்றியதுவாய்ப்படியிடந்து

மன்னமதுவாகிவிண்ணடைந்ததுபறந்து

மின்னுமறியாதசிவனேயிறைவனென்றான்

863 இறைவனவனென்னை யுலகீன்றருளிமாய்க்கு

முறைமைதருமுத்தொழிலுமூவர்கடனன்றோ

வறையினமரர்க்குளவனாதியெனுநாமம்

பெறுவதெவனெனவருள்பிதாமகனுரைப்பான்

864 சீலமுடனென்னைமிகுசெங்கணெடுமாலை

ஞாலமதுதன்னைமுனநல்கியதிகாரம்

பாலுறவெமக்கதுபடைத்தருளநல்கி

மேலவனழித்தருள்வன்மீட்டும்வினைதன்னால்

865 பங்கமறவேயதுபடைத்தருளவெங்கட்

கங்குமகிழ்வோடுபினுமப்பரிசளிப்பன்

சங்கரனவன்செயலதன்றியொருதன்ன

மெங்கள் செயலாற்புரியவெண்ணிடவுமுண்டோ

866 பேதமறயாவையினையும்பிரமமென்றே

வேதமவையோதுவதென்னென்னின்மிகுமிந்த

வாதரவுபூண்டவருமந்தவெழின்மைந்த

வேதமறவேமுகமனாலவையியம்பும்

867 இத்தகைமைநாடியினியெங்கள்பெருமானைப்

பத்தியுடனீயும்வழிபாடதுபுரிந்தே

யத்தனைநினைந்துநலருந்தவமுழந்தான்

முத்தியவனிற்கருள்வனென்றயன்மொழிந்தான்

868 என்றுரைசெய்தந்தையடியின்கர்டன்வீழந்து

நன்றெனமிகிழ்ந்துவிடைநல்கியருளென்ன

மன்றல்கமழ்மானதநல்வாவியிடைமைந்த

சென்றரியநற்றபசுசெய்கெனவிடுத்தான்

வேறு

869 சார்ந்துடனந்தத்தடந்தனில்வளங்கொடாமரைக்கண்களால்வாரி

யார்ந்துநற்றவத்தினருந்துறைபோயவருந்தவர்போன்றயனன்பு

கூர்ந்தருளுபதேசந்தனையுள்ளங்கொண்டருளுடன்வழிக்குறுகிச்

சேர்ந்திடுமூலவங்கியையெழுப்பிச்சிரத்தினிற்சொலித்திடச்செலுத்தி

870 நம்பிரான்றனக்குநற்புரூரத்தினடுவருமமுதநீராட்டி

யைம்புலஞானமாலிகைசூட்டியமர்மனப்பூசனையாற்றி

வெம்பனிமாரிவெயில்வளியிவற்றான்மேவியமெய்நனிவருந்தி

யும்பர்தம்பிரான்வந்துவப்புறவருடமொராயிரமருந்தவமுழந்தான்

871 தக்கவாயிரமாமாண்டுநற்றவஞ்செய்தக்கனுக்கருளுவான்விரும்பித்

தொக்கபொற்பிதிரிற்சுணங்கினையணிந்துசுமந்தகச்சினையிறுத்தோங்கி.

மிக்கவான்வட்டமுகட்டினைமுட்டிவெளியினையடைத்திடுகொங்கை

மைக்கருங்கண்மாமயிலொடுமெம்மான்மழவிடைமேற்கொடுவந்தான்

872 அண்ணல்வந்தனனாலென்றுடனெழுந்தேயானந்தபரவசனாகி

விண்ணின்மேற்பொருவல்விடைக்கொடியுயர்த்தவிமலனல்லிமைத்தலின்மூன்று

கண்ர்மான்மழுவுங்கரசரணமுமெய்க்கவினுமேதன்கணேபுகுத

மண்ணிடையேவீழ்ந்தெழுந்தனன்றக்கன்வழுத்தினனான்மறைதன்னால்

873 ஆயகாலையிலங்கணனருள்புரிவானருந்தவங்கண்டகமகிழ்ந்தே

நேயமோடெம்மைநினைந்து செய்தவத்தைநிகழ்த்துதிதக்கநீயெனலு

மேயதோர்சென்னியிற்றிடவயன்முனெழுதியதலைவிதிவசத்தாற்

றூயநற்பசுந்தேன்சுரும்புர்ங்கமலத்துணைப்பதந்தொழுதிவைசொல்வான்

874 நினைவரிதாகிநினைந்துயிர்க்குயிராநின்மலநினைவணங்கிடுவா

ரனைவருமெனைவந்தடியில்வீழ்ந்தறைஞ்சியருந்துதி செய்திடல்வேண்டுந்

தனைநிகர்தேவர்தானவரென்றுஞ்சாற்றுமென்பணிகளாற்றிடவு

முனையலதொருவர்தனைவணங்காதவுரிமையுமுதவுதல்வேண்டும்

875 படந்தருமுரகஞ்சுமந்திடக்கிடந்தபௌவநீருடுத்தபாரகமு

மிடைந்தசீரடைந்தவிண்ணவர்பதமும்வேதமாலாதியர்பதமு

மடர்ந்தமர்வினைக்குமசுரர்தம்பதமுமனைத்துமெந்நாளுமென்னாணை

கடந்திடாவண்ணந்திடம்படவேந்தாய்க்கருதிநீயருளவும்வேண்டும்

876 பொருவரும்புதல்வர்புதல்வியர்தந்துபொன்றிடாதிருத்தலும்வேண்டு

முரியவண்டங்களுதவிடுமுமையெற்கொருமகவாகவும்வேண்டு

மருமறையவன்போலன்பிலேன்பால்வந்தருமணமுடிக்கவும்வேண்டுங்

கருதரிதாயகடவுணீயென்னாக்கருணைவாரிதியுரைசெய்வான்

877 தவலரிதாயதவமிகமுயலுந்தக்கநற்றலைமைநீபெறவே

யிவையுன்களித்தாமித்திருநீங்காதிம்முறைநடத்தியாலென்னாக்

குவளைசேர்தடங்கட்கோமளவல்லிகொண்டகூறுடைக்குழகன்செம்

பவளவார்சடையிற்பகீரதிமிலைச்சும்பராபரன்கயிலையிற்படர்ந்தான்

வேறு

878 எந்தைமறைந்தபினேத்தியிறைஞ்சி

நந்தினையேந்தியநாரணனற்பூ

வுந்தியுகித்தவனுத்தமமைந்தன்

சிந்தைமகிழ்ந்துதிளைத்தனனம்மா

879 நாமகண்மேவியநான்முகனைத்தன்

பூமருவுந்திதழ்புந்திநினைந்தா

னேமுறுநல்வரமீந்ததையெங்கோன்

மாமலரோனுமனத்தின்மதித்தான்

880 பன்னரிதாயபரன்றனைநோக்கி

மன்னியமாதவமைந்தனுழந்து

மின்னலின்மூழ்குறவிவ்வரமுற்றா

னன்னலமன்றிதுநாடிடினன்றே

881 என்னுரையொன்றையுமெண்ணலனாகி

முன்னவன்வந்துநன்முத்தியையெண்ணான்

பின்னினியென்னதுபேசுவனென்னாத்

தன்னதுநெஞ்சுதரிக்கலனாகி

882 இருந்தினபன்னியெனென்றரிதாய

மருந்தனமைந்தனைவல்விரைந்தேத்திப்

பொருந்தினனாசிபுகன்றனன்மிக்க

பெருந்தகைமேயபிதாமகன்மாதோ

883 அல்லிமலர்த்திகழையநலன்பா

லொல்லையினீநகரொன்றுசெயென்னா

மல்லல்கொடக்கநன்மாபுரமென்றே

தொல்லழகாபுரிதோற்கவிதித்தான்

884 அந்தமில்சீர்புனையப்புரிநோக்கா

விந்தநகர்க்கிணையின்றெனவேதன்

றந்தருள்கோயிலிற்சார்ந்தனன்கூடம்

வந்துபுகுந்திடுமாகளிறேபோல்

885 தண்ணளிசேர்மதிசார்கவிகைக்கீழ்

வண்மையினோங்குகைமன்னியசெங்கோ

லெண்ணரிதாமுலகெங்குமளப்பத்

திண்ணியவாணைதிசாமுகஞ்செல்ல

886 பூவினின்மேவியபுங்கவனாதி

தேவர்கடானவர்சித்தரியக்கர்

மூவுலகும்புகழ்முச்சுடரேனை

யாவருமேத்தவிருந்தரசுற்றான்

வேறு

887 பின்னொருநான்குசென்னிப்பிதாமகன்பதத்தில்வந்த

மன்னுசீர்வடமீன்கற்பின்மறைக்கொடிதனைமணஞ்செய்

துன்னருமுலகநல்கவொராயிரமைந்தர்த்தந்தாங்

கின்னருளீசற்போற்றியிருந்தவஞ்செயவிடுத்தான்

888 அந்தமானதவாவிக்கணருந்தவஞ்செய்யமைந்தர்

நந்திசைமகதிவீணைநாரதனங்கணெய்தி

யிந்தமாதவம்புரிந்ததென்னெனவிறையைநோக்கித்

தந்திடவுலகம்யாவுந்தவம்புரிகின்றோமென்றார்

889 என்றலுநன்றுநன்றென்றிருகரந்தாக்கிநக்கு

மின்றிகழ்வாழ்வுதன்னைமெய்ம்மையின்விரும்பினீரா

லென்றுநன்கழியாவின்பத்திருந்தரசியற்றுமென்னா

வன்றவர்க்குபதேசஞ்செய்தந்தரத்தேகினானே

890 ஆரருளுபதேசஞ்செய்தம்முனிசெல்லமைந்தர்

பேரருளோடுங்கூடிப்பேரின்பவாரிமூழ்கி

நாரணன்கமலக்கோயினான்முகனண்ணவொண்ணாப்

பூரணமோனஞானப்பூங்கழனீழல்சேர்ந்தார்

வேறு

891 ஆனகாலையினருந்தவம்புரியுநன்மைந்தர்

பான்மைநாடுதுமென்றவட்படர்ந்தபின்றக்கன்

றானும்வந்தருண்மைந்தர்க்குச்சத்தியமோன

ஞானநாரதனவின்றதைநாடினன்வெகுண்டான்

892 தக்கனாயிடைத்தக்கநம்மைந்தர்கள்யாரு

மிக்கமுத்தியின்மேவினர்விதியிதுவென்னாத்

துக்கமுற்றுமெய்துண்ணெனநடுங்கியசூழல்

புக்கனன்பினுமாயிரம்புதல்வரைத்தந்தான்

893 தந்தமைந்தரோராயிரவோரையுந்தக்கன்

மைந்தவம்மினீர்மானதமடுவினிலேகி

யிந்தமானிலம்படைத்திடவெந்தையைநோக்கிச்

சிந்தைகூர்தவஞ்செயுமெனச்செப்பினன்விடுத்தான்

894 விடுத்தவாயிரமைந்தருமேவிமானதமா

மடுத்தலத்திடைவைகியேமாதவம்புரிய

வடுத்தனன்முனமகன்றநாரதனருள்வீடு

கொடுத்திடும்படிகோதிலாக்குமரர்கடம்முன்

895 நீதிமாதவம்புரிந்திடுநீவீர்கள்யாவிர்

யாதுகாரணமித்தவமிழைக்குவதென்னத்

தாதையாந்தக்கன்றன்பணியாற்படைத்திடுவா

னாதன்றன்னிடைநற்றவமுஞற்றுதுமென்றார்

896 என்னலோடுமங்கியைந்திடுநாரதனிரங்கி

மின்னுமொக்குளுமென்னவேவிளிந்திடும்யாக்கை

தன்னினீர்நிலையென்னவேதந்திடுந்தொழிற்கா

மன்னுமாதவமிழைக்குதிர்மம்மரினம்மா

897 ஈதினாற்பிறப்பிறப்புறுநரகிடையெய்தும்

பேதையோர்தொழிற்பிடித்தனிர்பிறப்பிறப்பில்லா

வாதிநாயகனழிவிலாவருட்பதநீழல்

காதலாலினியடைவதேகருமமென்றுரைத்தான்

898 உரைத்தநாரதன்றனைப்பணிந்துற்றநன்மைந்த

ரருத்தியாலெமக்கருளெனவம்முனிதன்றாள்

சிரத்தினன்குறவிருத்தியேசெப்பினன்வாக்குத்

திருத்தமாந்திருவஞ்செழுத்தருளுபதேசம்

899 திகழந்தமெய்த்திருவஞ்செழுத்தருணிலைசெப்பி

மகிழ்ந்துபின்றிரிமலத்தினைமாற்றிவெம்பிறவி

யகழ்ந்தருந்திடவரியஞானமுதமருளிப்

புகழ்ந்திடுந்தவநாரதன்விண்ணிடைப்போந்தான்

900 நடையின்மேதகுநல்லெழின்மைந்தர்கண்ஞானப்

படைகொடைம்புலப்பகைஞரைவென்றுதம்பரிவா

விடைவிடாதுநல்லிறைசிவயோகினிலிருந்தே

முடிவிலாதபேரின்பமாமுத்தியையடைந்தார்

901 அன்னமைந்தர்களாயிரவோருநன்முத்தி

தன்னையெய்தலுஞ்சதுர்முகப்பிரான்றிருமைந்த

னின்னும்வந்திலாரெம்மகாரென்கொலோவென்னா

மன்னுமானதவாவியின்வந்தனன்மன்னோ

902 வந்துமானதவாவியின்மைந்தரைக்காணா

னிந்தவாறிதுவென்னெனவேங்கியேவிரங்கா

முந்தைநாளினம்மைந்தரைமுத்தியினேற்று

மந்தநாரதன்புணர்ப்பிதுவாமெனவறிந்தான்

903 அருளினீர்மையாலப்பரிசுணர்தலுமுள்ள

மருள்கலந்ததுமன்னுயிர்பதைத்ததுவையம்

வெருவுகின்றதாய்வீங்கியவுயிர்ப்பின்வெங்கோப

விருள்பரந்துசென்​றேறியதெண்டிசாமுகத்தும்

904 பாந்தளின்றலைபரிந்தபாரடங்கலும்படைப்ப

நாந்தருந்திறன்மைந்தர்க்குநன்கதியளிப்ப

வாய்ந்தடைந்தனனன்றவராருயிருண்பான்

போந்தகூற்றிவனென்றுதன்னெஞ்சகம்புழுங்கி

905 நொந்துபங்கயன்மைந்தன்பின்னுவலுவான்மகதி

நந்துவீணைசேர்நாரதன்செயலிதுவானாற்

றந்துநேரிடையாரலாற்றனயரைப்பெறுவான்

சிந்தைசெய்கிலனென்றுதன்றிருநகர்சென்றான்

906 மிக்ககாதலின்மேவினன்மெல்லியற்சேர்ந்து

திக்கெலாம்புகழ்சென்றிடச்சென்னிமூன்றிட்ட

தொக்கவெண்டருமிருபதுதுடியிடையாரைத்

தக்கன்மீண்டுநற்பரிவொடுதந்தனன்மன்னோ

907 தருமனுக்குயர்கிரியைநல்வபுவைகீர்த்திசாந்தை

சுரசைபுத்திநற்சுபுத்தியேதுட்டையோடிலச்சை

திருதிகத்திமென்சிரத்தைமேதாவெனுந்திருப்பே

ரருளினாகுமிப்பத்தின்மேன்மூவரையளித்தான்

908 பிருகுமாமுனிமரீசியேபெரும்புகழ்மன்னும்

பொருவிலாவருட்புலத்தியனங்கிராபுலகன்

றிருவலந்திகழ்வசிட்டனத்திரிவளர்செந்தீக்

கிரதுநற்பிதராவெனக்கிளத்திடுமிவர்பால்

909 புகல்கியாதிசம்பூதிநாரிசந்நதிமிருதி

துகளரித்திடுபிருதியூற்சையனசூயை

நிகழ்சுவாகமைசுவதையாம்பதின்மரைநிரலே

மகிழ்வினின்பநன்மணம்புணர்வித்தனன்மன்னோ

910 பின்னர்நான்முகப்பிதாமகப்பிரானருள்பிள்ளை

மின்னுகின்றநற்றாரகைக்கணங்களின்மேலா

முன்னரும்புகழோங்குமூவொன்பதுமடவார்

தன்னைநேர்பெறவுவியேதண்மதிக்களித்தான்

வேறு

911 இன்னநன்மருகற்கன்பாலின்பநன்மணம்புணர்த்திப்

பன்னிடும்மன்னோன்மேவும்பதியிடைவிடுத்தபின்ன

ரன்னமன்னவர்கண்மைந்தரவர்தருமைந்தரானோர்

மன்னியகேளிர்துன்னமகிழ்ந்தரசியற்றுநாளின்

912 படுமணிச்சோதியண்டபகிரண்டம்படர்ந்துசெல்லும்

வடுவறுசிறப்பின்மிக்கவட்டவான்முகடுமுட்டிக்

கொடுமுடியிடறும்வெள்ளிக்குன்றின்மேற்குழகனோர்நாள்

விடுசுடர்க்கிரணந்தாக்கவீற்றிருந்தருளினானே

913 அந்தநல்லமையந்தன்னினம்பிகைவணங்கியெந்தாய்

சந்ததமுயிர்கட்கெல்லாஞ்சஞ்சலப்படுத்துகின்ற

வெந்துயர்ப்பிறப்பிறப்பைவீட்டிவீடருளுந்தன்மை

யிந்தவாறடியனேற்கிங்கியம்பிடவேண்டுமென்றாள்

914 என்றுமையியம்பநன்றென்றினவரிவண்டுகிண்டு

கொன்றையந்தேன்றுளிக்குங்கோடீரப்பாரத்தெந்தை

பொன்றிகழ்சுணங்கணிந்துபொற்படாம்போர்த்தகொங்கை

மின்றயங்கிடைவைவேற்கண்மெல்லியற்குரைப்பதானான்

915 தன்னிகராகிநின்றசகளநிட்களமெமக்கு

மன்னியவுருவமாகும்வகுத்திடுஞ்சகளமான

வுன்னருளதனையாமேயுபாதானமாகியென்று

நின்னொடுமன்பர்போற்றச்சதாசிவமாகிநிற்போம்

916 நிட்களவுருவந்தன்னைநிகழ்த்திடினுலகுக்கெல்லா

முட்பொருளாகியெண்ணிலுயிர்க்குயிராகிமன்னோ

வெட்டருதயிலமென்னவெங்கர்நிறைந்தெஞ்ஞான்றுந்

தெட்பமதாகியார்க்குந்தெரிவரிதாகுமன்றே

917 உருவொருநான்கதாகியுற்றிடுமருவநான்கா

யருவுருவொன்றேயாகியையைந்துபேதமாகி

மருவியதிருமால்கஞ்சமலரயன்வாசவன்சீர்

பொருவருமுனிவர்விண்ணோர்போற்றிடவீற்றிருப்போம்

918 அந்திகழ்பரசிவன்றான்பராசத்திதன்னையன்பாய்த்

தந்திடுமதனிலாதிசத்தியாமதனிலிச்சை

வந்திடுமதனின்ஞானமாமதிற்கிரியைமன்னு

மந்தமிலிவற்றினொவ்வொன்றாயிரத்தொன்றதாகும்

919 அந்தமிலாதவிந்தவைந்துநஞ்சத்திதன்னாற்

றந்தனமயன்மாலீசன்மகேசனற்சதாசிவந்தாம்

வந்திடக்கருதியன்னோர்மருவுமைந்தொழிலியற்ற

நந்திருவருளினாலேநாடொறுநடாத்துவாமே

920 தாவில்பல்லுயிர்க்கெஞ்ஞான்றுந்தருமிருவினையறிந்து

நாவெடுத்தியம்பலாற்றாநரகொடுசுவர்க்கமீதும்

பூவின்மேலயன்மால்காணாப்பொருவருஞானநிட்டை

மேவினோர்தமக்குநந்தாவீடருள்புரிதுமன்றே

921 ஆதலாலைந்தொழிற்கொளப்பிரமாண்டமெல்லா

மோதிடினின்கூறாமென்றுரைக்கருமொருவன்கூற

வீதெலாமெனதுகூறென்றெண்ணியேயெம்பிரான்முன்

காதலிற்றனைமதித்துக்கழறினள்காமக்கோட்டி

922 மங்கைநீயெம்முனின்னைமதித்தனையுலகெலாமங்

கங்குயிர்க்குயிராய்நின்றேயருள்புரிந்திலமேற்செய்ய

பங்கயனாதியாயபண்ணவர்பணிகடம்மா

லிங்கொருசெயலதுண்டோவென்றனனெவர்க்குமேலோன்

923 கண்டினுங்கனிந்ததீஞ்சொற்கலங்கிடந்தொளிருங்கொங்கை

யொண்டொடிநின்னாலுண்டோவோர்செயலதுநீகாண்டி

யெண்டகுகாதலாலென்றெடுத்திசைத்தருளியெங்கோன்

பண்டுபோற்பரயோகத்திற்பரிவுடனிருந்தானன்றே

924 இறைசிவயோகமெய்தவெழுதுசித்தரமதென்ன

நிறையுயிரண்டமியாவுநிகழ்ந்திடநெஞ்சமஞ்சிக்

சிறிதுநின்செயலென்னாதுதீயனேன்றனைமதித்திங்

கறிவிலாதுரைத்ததோடமதுபொறுத்தருள்செயென்றே

925 சீருறுகமலச்செங்கைகூப்பியேதிருமுனின்றிங்

கோர்வரிதாயவண்டத்துற்றிடுகின்றவெண்ணி

லாருயிர்த்தொகையைமுன்போலளித்திடவேண்டுமென்றாள்

பேருறுமண்டமெல்லாம்பெற்றெடுத்தருளும்பேதை

926 அன்னமன்னவள்வருந்தவாருயிர்த்தொகையளிப்பான்

றன்னிகருருத்திரேசர்தங்களையுன்னலோடு

மன்னவர்யாருமீண்டியருச்சுனவட்டத்தேகி

மன்னியசிவநிசிக்கண்வள்ளலையருச்சித்தார்கள்

927 அருச்சனைபுரிந்தபின்றையன்னவர்முன்னமுன்னோன்

பொருக்கெனவந்துதோன்றிப்பொன்றுயிரனைத்துநல்க

விருப்புறுமயன்மாலேனோர்மெய்த்துயிலுணர்ந்தோரென்ன

மரித்தனரெழுந்தார்மூடும்வல்லிருணீங்கிற்றன்றே

928 ஆலகாலம்பழுத்தவந்தநற்கந்தரத்தோன்

சீலமாஞ்சிவயோகத்திற்சேர்ந்தினிதிருந்தகாலை

மாலயன்முதலோர்செய்கைமாண்டனரென்றால்யார்க்கு

மேலவன்சிவனேயென்றுவிரித்திடவேண்டலின்றே

929 அருள்வரமமலற்கேளாவவ்வுருத்திரர்கண்மாகத்

திருசுடர்சேர்நாணென்னலெல்லியினான்கியாமம்

பரமநிற்பூசைசெய்வோர்பரகதிபெறுதல்வேண்டும்

வரமருளென்னச்செய்யமலர்த்திருவாய்மலர்ந்து

930 சங்கரன்பின்னரேகாதசவுருத்திரர்கட்கெல்லாம்

பங்கமில்வரமீந்தன்னோர்பதியிடைப்படரவேவிச்

செங்கமலத்தோனாதிதேவர்கள்யாரும்போற்ற

வங்கண்வானவன்மிக்கோங்குமகலிருவிசும்பிற்போந்தான்

931 செம்பதுமத்தோனாதிதேவர்பின்கயிலைமேவி

யெம்பணியிழந்துவாளாவெண்ணமொன்றின்றிப்பன்னாள்

வெம்பலமடைந்தியாமேமெய்யுணர்விகந்தோமெங்க

டம்பிரானருளினீராற்சாற்றுதிமாற்றமென்றார்

932 அன்னவர்பன்னியிவ்வாறறைதலுமமலன்கேளா

மன்னியவுணர்வுமாண்டுவரன்முறைவழுவுகின்ற

தின்னவையிறைவிக்காகுமிற்றைநாட்கைப்பிடித்துந்

தொன்மறைமுறைநீராற்றுமென்றனன்றொழுதுபோந்தார்

933 அரிதிகழ்மதர்வேற்கண்ணியமலனையடிவணங்கிக்

கருதருமுயிர்களாற்றுங்கருங்கொடும்பவங்களென்பான்

மருவிடுமென்றதென்னைவாய்மலர்ந்தருளுகென்ன

வொருதிருநுதற்கர்ம்பர்தம்பிரானுரைப்பதானான்

934 நின்னைநீமதித்துநம்முனிகழ்த்தினையாதலாலே

மன்னுயிர்த்தொகையுஞ்செய்கைமாற்றினமானீவேண்டப்

பின்னுமுண்மகிழ்ந்துமுன்னர்ப்பெற்றியிற்றந்தேம்யாமீ

துன்னிடினுன்னால்வந்ததுன்னிடத்தாகுமன்றே

935 ஈங்கிதுவன்றியின்னுமிசைத்திடினுலகமெல்லாம்

பாங்கினாலீன்றநிற்குப்பலித்திடும்பவங்களியாவுந்

தாங்கிடுந்தன்மைத்தாகுமென்றனன்றார்வாகி

யோங்குலகங்கட்கெல்லாமுயிர்க்குயிராகிநின்றான்

936 நித்திலக்கொத்துமாலைநெருங்கினமுலையாளஞ்சிக்

கைத்தலங்குவித்தியானேகருத்தினின்மதித்துரைத்த

வித்துயர்வீடுமாறொன்றியம்புதியெந்தையென்னாப்

பைந்தலைமணியொதுக்கும்பன்னகாபரணன்சொல்வான்

937 காளிமங்கஞலுநன்னீர்க்காளிந்திநதியினெய்தித்

தாளதாமரையின்மேவித்தன்னிகரின்றிமன்னு

நீளிருவிசும்பினோங்குநிலவுகான்றொளிருங்கோல

வாள்வலம்புரியாயங்கண்மாதவம்புரிந்துவாழ்தி

938 மிக்கவந்நதியிற்பின்னோர்விழைவுறுகுழவியாவை

தக்கனாங்கெய்திநின்னைத்தன்றியருப்புதல்வியென்று

பக்கமோடக்கணந்தன்பதியிடைக்கொண்டுசெல்லத்

திக்குலகேத்தவன்னான்சேயெனவளர்திமாதோ

939 வளம்பெறவையாண்டேகமன்னியேயெம்மையுன்னி

யுளங்களிதூங்கநீயுமொண்டவம்புரிதியாமே

விளங்கிழைநின்பான்மேவிமிக்கநன்மணம்புணர்ந்து

களங்கமில்கணங்களோடுங்கயிலையில்வருதுங்காண்டி

940 என்றிவையிறைவன்கூறவெண்ணரும்புவனமீன்ற

மன்றலங்கூந்தற்செவ்வாய்மாதுமைவணங்கியேத்தி

மின்றிகழிடைநுடங்கவிடைகொடுவிளங்கும்வெள்ளிக்

குன்றினையொருவிமிக்ககுவலயத்திழிந்துபோந்தாள்

941 மூளுமன்பதனால்வேதமுளைத்தெழுமூலமன்ன

காளமார்கலியைவெல்லுங்காளிந்திநதியிற்சங்காய்

வாளுலாவியதடங்கண்மங்கைபங்கனைநினைந்து

தாளதாமரையிருந்துதவம்பலநாளுழந்தாள்

942 சந்தநான்மறைதேர்வண்மைச்சவுநகமுனிவகேண்மோ

சிந்தையிலுவந்துநாதன்றிருவெழுத்தஞ்சையுன்னி

யிந்தமாதவம்புரிந்தாங்கிறைவிநன்கிருப்பத்தக்கன்

வந்தவடனையெடுத்துவளர்த்திடுவளமைசொல்வாம்

வேறு

943 அற்றமில்சிறப்பினந்தவாழ்புனற்கண்மூழ்குவான்

மற்றுநேரிலாதமாசிமாமகத்தின்வண்மையால்

விற்புரூரவேதவல்லியோடுமந்தவேலையி

லெற்குலாவுமெல்லைதோன்றுமெல்லையங்கணெய்தினான்

944 சார்ந்தவேதவல்லியோடுதண்புனற்கண்மூழ்கியே

கூர்ந்தவன்பினோடுதானைகூடியேகவேகுறாச்

சேர்ந்ததாமரைக்கணந்திகழ்ந்தசங்கிலங்கல்கண்

டார்ந்தவன்பினோடுதக்கனங்கைகொள்ளவள்ளினான்

945 சிவனருட்டிகழ்ந்துவந்தசெல்விதன்னையெண்ணரும்

புவனமீன்றமாதைநம்புதல்வியென்றுகைக்கொளா

வுவமனற்றவேதவல்லியுச்சிமோந்துறத்தழீஇ

யவணலத்தையன்பினாடியகமகிழ்ச்சிபொங்கினாள்

946 பொங்கியேசுணங்கணிந்துபுடைபரந்தெழுந்துபொன்

றங்குநற்கலன்சுமந்துசந்தனந்திமிர்ந்துநேர்

துங்கமேருவென்முலைசுரந்தபாலருந்தியே

மங்குல்வந்துறங்கிடுந்தன்மாளிகைக்கொடேகினாள்

947 உம்பரோடுமுலகமெங்குமுற்றசேனைசுற்றவே

நம்புமாமணிக்கணங்கணண்ர்கோயின்மன்னியே

வம்புலாவுமதுரகீதவண்டுகிண்டிமதுவுர்

மம்புயாசனத்தன்மைந்தனரசுசெய்திருந்தனன்

வேறு

948 வந்துமனைபுகுந்ததற்பின்மறைக்கொடிதன்மார்படங்காச்

சுந்தரப்பொற்றுணைமுலைப்பால்சுரந்தளித்துநாட்குநா

ளுந்துபெருங்காதலினாலுலகீன்றவுத்தமியைச்

சந்திரன்போற்றிருமேனிதான்வளரவளர்த்தனளால்

949 பக்கமுறுமோரன்னப்பார்ப்பென்னப்பங்கயன்சீர்த்

தக்கனருண்மிக்கமகடவழ்ந்துதளர்நடைபயின்று

தொக்கவனமுருந்தெயிறுதோன்றிடவையாண்டகற்றி

மைக்கண்மயிலாறாண்டின்மனத்திமூதுமதித்துரைத்தாள்

950 மொழியொன்றுபுகல்வலிருமுதுகுரவரதுகேண்மின்

செழுமலர்க்கொன்றையினறும்பூந்தேன்றுளிக்குஞ்சடாமௌலி

மழவிடையான்மணஞ்செய்யமாதவஞ்செய்குவனெனவோ

ரழிகயநற்கடிமாடத்தருந்தவஞ்செய்தமர்ந்திருந்தாள்

951 மங்கைகடிமாடத்தின்மன்னுமருந்தவம்புரியத்

துங்கமிகுமறைக்கொடிதான்றொழுகணவன்முகநோக்கித்

திங்கர்தற்பேதைதவஞ்செய்திறநீசெப்புகெனக்

கங்குறவழுங்கூந்தற்காரிகைக்குக்கட்டுரைப்பான்

952 யான்முயன்றுதவஞ்செயுநாளிந்தமடமயிலோடு

மான்மழுவேந்தியவெங்கோன்மழவிடைமேல்வந்தருளித்

தான்வரமிக்களித்தனன்பின்சங்கரிசேயாய்நீயென்

பான்மருகனாகவரும்படியடியேற்சருளென்றேன்

953 அன்னவரந்தந்தனமென்றரனருளவதனாலே

மன்னியவிம்மடக்கொடிநம்மகவாகந்துதித்தாள்

பின்னருநம்மருகோனாய்ப்பிஞ்ஞகனும்வந்தருள்வ

னென்னலுமின்பக்கடலிலேந்திழைவீழ்ந்தழுந்தினளால்

வேறு

954 இன்னணமிறைவிமிக்கவிருந்தவம்புரியும்வேலை

பன்னினரண்டாண்டுநீங்கப்பரஞ்சுடர்பரசுபாணி

தன்னருளதனாலந்தச்சங்கரிதவத்தைக்காண்பான்

மன்னியபிரமசாரியாகவோர்வடிவந்தாங்கி

955 மடன்முறுக்குடைக்குஞ்செந்தேன்மாமலரயனுமாலு

மிடலுடன்றேடிக்காணாமெய்ப்பதங்கொப்பளிப்பப்

படிமிசைநடந்துதக்கன்பதியினிற்போந்துஞானக்

கொடியிடைதவக்கோட்டத்திற்குழகனல்லழகிற்சென்றான்

956 பொம்மல்சேர்சேடியார்முன்புகன்றவட்புகுந்தலோடு

மிம்மெனவெதிர்சென்றேத்திவெழின்மணித்தவிசினேற்றிச்

செம்மலர்ப்பதத்திற்பூசைசெய்துமுன்வணங்கிநின்றாள்

கொம்மைவெம்முலைக்கருங்கட்கோதின்ஞானப்பூங்கோதை

957 நின்றவடன்னைநோக்கிநெற்றிவெண்ணீறுபூத்தோ

னொன்றியான்விழைந்தீக்குற்றேனொண்டொடியதுநீசெய்யின்

மன்றவேயுரைப்பனென்னாவாய்புதைத்தொதுங்கியஞ்சி

யென்றனக்கியைவதென்னினியம்புதியெந்தையென்னா

958 சதுர்மறைபாடும்வாயான்றானுரைத்தருள்வானின்னைப்

புதுமணஞ்செய்யகிற்பான்போந்தனனீண்டியானே

மதிதருதிருமுகத்தாய்மாற்றமொன்றியம்பலலென்னாக்

கதுமெனக்கன்னமூலங்காந்தளங்கைபுதைத்தாள்

959 நெஞ்சகங்கனன்றுவல்லேநெட்டுயிர்ப்பெறிந்துசோர்ந்து

வஞ்சகவேடந்தாங்கிவந்தனையிதுமதித்தோ

வெஞ்சலிலிறைவன்வேண்டியின்பநன்மணஞ்செய்கிற்பான்

றஞ்சமாமவனைநோக்கித்தவமிகச்சார்ந்தேனென்றாள்

960 நாதனைநாடற்கெட்டாஞானநாயகனைநோக்கி

நீதவமுயல்வதென்னைநின்மலன்வந்துநின்னைக்

காதலின்வதுவைசெய்தல்கருதரிதால்வருந்தல்

பேதையேயென்றானென்றும்பரமசாரியாயபெம்மான்

961 தன்னிகராகிநின்றதம்பிரான்வதுவைசெய்ய

மன்னுமாதவங்களின்னும்வருந்தியான்புரிவனந்த

நின்மலன்றானேவந்துநினைத்ததுமுடித்திடானே

லென்னுயிர்க்கீறுசெய்வேனென்றனளெம்பிராட்டி

962 நீங்குகவென்றுசீறிநீண்மணிமாடந்தன்னிற்

பாங்குறுபரிசனத்தோர்தம்முழைப்படர்தலோடும்

பூங்குழலுமையாள்காணப்பொருவருங்கருணைவள்ள

றீங்குறாத்தனதுபண்டைத்திருவுருத்தரிசிப்பித்தான்

963 அருளுருவதனைக்காணூஉவம்பிகையுள்ளம்வெம்பி

வெருவிமென்முலைமுன்றிற்செவ்வேற்கணீரிறைப்பக்காந்தட்

கரமலர்குவித்துநாயேன்கருதிடாதுரைத்தயாவும்

பொருவிடைப்பாகநீயேபொறுத்தருள்புரிதியென்றாள்

964 இப்பரிசியம்பலோடுமிறைவிமேலன்பிருத்தித்

துப்புறழ்சடிலத்தெந்தைதூய்மறைபாடும்வாயான்

மைப்படிந்திலங்குமொண்கண்மடந்தைநீயஞ்சலென்னாச்

செப்பினன்மிகழ்விற்சூழ்ந்தசிலதியர்செவிநிறைப்ப

965 தேங்கியவார்வமோங்குஞ்சிலதியர்சிலவரோடிப்

பாங்குறுதக்கன்றன்பாற்பான்மொழிபான்மைகூற

நீங்கருங்காதல்கூர்ந்து நின்மலனென்னைநாடி

லாங்கவன்றனக்கென்சேயையருமணமுடிப்பலென்றான்

966 கொலைகெழுகூர்வேலுண்கட்குலவுகோமளங்குரும்பை

முலைமுகஞ்சிறந்தபொற்பூண்மொய்குழன்முறுவற்செவ்வாய்ச்

சிலைகுலாநுதல்சேர்மங்கைசிலதியர்சிலவர்சூழத்

தலைவனைநாடியங்கட்டானினிதிருந்தாளன்றே

வேறு

967 மைக்கருங்கர்மைமாதராண்மட்டறுங்கருணைகூரவே

தக்கபண்புரியின்மேவியேதக்கனன்பின்மகளானசீர்

மிக்கநன்கதையையோதுவோர்மெய்ச்சொலின்பயனைநாடுவோர்

முக்கணெந்தையருளாகியேமுத்திசென்றடைகுவார்களே

உமாதேவிதிருவவதாரச்சருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 967

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book