29

பதினாலாவது

உமைவருசருக்கம்

1154 பூங்குழலுமைபின் பூவணந்தன்னிற்பொருந்தி நற்றவஞ்செயுமாறு

மோங்கியகாதலுவந்திடத்தானமுத்தமர்க்குதவிடுமாறுந்

தாங்கரும்வெகுளித்ணந்திடுஞானச்சவுனககேளெனவருளிற்

றூங்கியேமிகுவெந்தீங்கெறிந்தோங்குஞ்சூதமாமுனிவரன்சொல்வான்

1155 இம்முறைமகிழ்கூர்ந்திமமயமால்வரையினின்பநற்கடிமணம்புணர்ந்து

செம்மையினோங்குந்திருக்கயிலாயச்சிலம்பினிற்சேர்ந்தபினோர்நாட்

கொம்மைசேர்வெம்மைக்கோங்கரும்பெனவேகுவிந்தபொற்குங்குமக்கொங்கை

வெம்முனைமிளிர்வேல்விளங்கியநயனமெல்லியற்கெம்பிரான்விளம்பும்

1156 தழுவுதற்கெட்டாத்தபனியவரைசேர்சந்தனக்குங்குமக்கொங்கைக்

குழைகிழித்தோடிக்கொடுஞ்சமர்விளைக்குங்கூரிலைவேனெடுங்கண்ணாய்

விழையுநீயாமுன்விளம்புரைமறுத்துமிக்கதக்கன்வயிற்சென்ற

பிழைதனையொழிவான்வழிமதியென்னாப்பேசினன்பிறையணிபெருமான்

1157 பார்தனின்மேலாம்பரதகண்டத்திற்பாண்டி நன்னாட்டினிற்பரந்த

வார்புனைச்சங்கூர்வைகைசூழ்கிடந்தமாடநீண்மதுரைமூதூர்சேர்

பூர்வதிக்கதன்கட்புகலும்யோசனையிற்பொங்கர்சூழ்கற்பகவனத்தி

லோர்தருவளர்த்தேயுறுதவமுஞற்றிலோர்சிவலிங்கமங்குண்டாம்

1158 அத்ததருநீழலமர்ந்தலிங்கத்தினழகுடன்பழமறைவிதியிற்

பத்திமிக்குயர்ந்தபூசனைபயிற்றிற் பண்டைநாளண்டர்கண்டறியாச்

சுத்தமாமந்தத்தொல்லிலிங்கத்திற்றோன்றியாநினக்கருள்புரிதுஞ்

சித்திரபடம்போற்றிகழ்புறவடிமேற்செஞ்சிலம்பரற்றுசீறடியாய்

1159 என்றருள்புரிந்தேயேகெனவடியேற்கிப்பரிசிருந்தவாறென்னாக்

கொன்றையஞ்சடிலக்குழகனாணையையுட்கொண்டுதாழ்ந்துடன்விடைகொண்டு

துன்றியபாரிசாதமாவனத்திற்றோன்றுபல்லுலகெலாமீன்றுந்

தன்றனித்துணையாநின்றமெய்ஞ்ஞானசங்கரியடைந்தனளன்றே

1160 தேவதேவன்றனருளினாலோர்நற்றேவதாரத்தினைப்பதித்து

மூவுலகேத்தமுறைமையின்வளர்ப்பாண்முண்டகச்சூடகக்கரத்தாற்

கூவலின்வடிவங்கொண்டிடத்தேவிகுண்டமென்றொருபெருந்தீர்த்த

மேவொரைந்தெனுந்தூரத்தினிற்கண்டாளீசனுக்குத்தரதிசைப்பால்

1161 கூறிடுந்தேவிகுண்டதீரத்தின்குணதிசைகுறித்திடுமெல்லை

யாறுவெம்பகையுமறவெறித்துதறியரும்பன்னசாலைசெய்ததன்கட்

சீறுகாலருந்திச்சிலபகலதுவுஞ்சிறிதருந்தாதுதேவாண்டி

னூறுமன்புடனோராயிரவருடமொண்டொடியுறுதவமுழந்தாள்

1162 அப்பரிசந்தவருந்தவமுழந்தேயாயிரமாண்டுமாண்டதற்பி

னொப்பரிதாயவுமையவள்வளர்த்தவோங்குமந்தாரமூலத்திற்

பைப்பெரும்பாந்தட்பாதலத்துதித்துப்படியினைக்கீண்டுமேன்முளைத்துத்

திப்பியமாகத்திருவருளுருவாய்ச்சேர்ந்ததோர்திகழ்சிவலிங்கம்

1163 வாலுகமயமாய்வானுறநிமிர்ந்து மன்னியசோதியாய்மேலா

யோலிடுமறைகளுரைத்திடுமிலிங்கவுற்பவந்தனதுகற்பகத்தின்

மூலநேர்வந்துமுளைத்தலுங்கண்டுமுழங்கழன்மெழுகெனவுருக

ஞாலமேல்விழுந்துபணிந்தெழுந்தயர்ந்துஞானநாயகியிதுநவில்வாள்

1164 ஆயிரந்தேவாயனந்தனிலடியேனருவினைப்பயத்தினாலறியாச்

சேயதாளெனதுசென்னிமேற்பதித்துன்றிருவருள்புரிந்திடநினைத்தோ

மாயிருஞாலந்தன்னினீமுளைத்துவந்தெழுந்தருளினையென்னா

நீயருள்கெனக்கண்ணீர்முலைமுன்றினிறைந்திடநிமலனுக்குரைத்தே

1165 மருவலங்காரவல்லிசொல்லருஞ்சீர்மன்னியமாதவந்தன்னாற்

பரவுமாசாரம்படைத்தபண்பதனாற்பர்த்தலங்கனத்துறுதோடம்

பொருவருபூசைமறைமுறைபுரிந்துபோற்றிசெய்தன்பினான்மாற்றி

யருளுடன்முன்போலானந்தகானத்தரன்றொழில்புரிந்தமர்ந்திருந்தாள்

1166 வன்னமாமளிகண்மதுவுர்ம்வட்டமட்டறாதுயர்ந்தநன்முட்டாட்

பொன்னிதழ்க்கமலப்பொகுட்டில்வீற்றிருக்கும்பொறிநிறப்புயல்வணமூர்த்தி

யன்னவாகனனேயாதிவானவர்களருந்தவராயிரங்கதிரோன்

பின்னுமவ்விலிங்கந்தன்னின்மெய்யன்பின்பெருக்கெழவேயருச்சித்தார்

1167 இந்தநல்லிலிங்கத்தியல்பினைநாடியெண்ணருமாதவர்நண்ணி

யந்தநற்பாரிசாதமூலத்தினணைந்திடுமுகந்தொறுமாங்காங்

கெந்தைதாண்மலரையிதயநாண்மலரிலிருத்தியேவேறுவேறாகத்

தந்தருளிலிங்கந்தாபனஞ்செய்துசந்ததம்வழிபடலுற்றார்

வேறு

1168 எத்தலமும்புகழித்தலமேவியவியல்பாலே

பத்திகொள்பாரிசாதநிழற்கட்பரமேசன்

சித்திரமேவியசேவடிகண்டுதினந்தோறு

முத்தியடைந்திடமோனமடைந்தனரொருசாரார்

1169 வெங்கனலாகுதிவேள்விவிரும்பினரொருசாரார்

தங்கியயோகசமாதியடைந்தனரொருசாரார்

பொங்குதவம்புரிபொற்பின்விளங்கினரொருசாரா

ரங்கணரன்றனருச்சனைசெய்குநரொருசாரார்

1170 பரிசனர்பமூறொழில்பரிவுகொடடைகுநரொருசாரார்

குருவினைவழிபடவகமகிழ்கூருநரொருசாரா

(இப்பாடல்வரிகளையடுத்து இரண்டுபக்கங்களில் உள்ள பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை )

1185 …. …. புரிகுழலுமையொடுபொருமடல்விடைவருமநகன்மேல்

வருபவமறும்வகையருளினனொருதனிவரமன்னோ

1186 அடகதுதனைநன்குடன்மிசைதருமந்தணனுக்கு

முடலுயிர்விடுபொழுதும்பரினுயர்கயிலாயத்தின்

விடநுகர்தருவெள்விடைதருகொடியவன்மெய்யன்பாற்

றிடமுறவேதிகழ்மறைமுடிதனையுபதேசித்தான்

1187 கோடுதிகழ்ந்தகுழந்தைமதிச்சடைகொண்டென்று

மாடுமரன்றிகழ்பூவணநகரமதன்பாலே

பீடுறுதானமளிப்பவரங்கதுபெற்றோர்க

ணீடுமரும்பலநாடிநிறத்திடினிகராகும்

1188 அன்னியதானமதன்கணளிக்குமருந்தான

மன்னுபலங்கள்வழங்குநர்கட்கவைவந்தெய்து

மின்னருளாலமூதேற்குநர்க்கென்றுமிரும்பாவந்

தன்னிகர்சவுனகசத்தியமாமிதுசாற்றங்கால்

1189 மெய்ப்படுதானமளித்திடுமந்தநன்மேலோர்கட்

கொப்பறுநற்பலனுண்டெனவோதுதலேற்றோர்கள்

செப்பருதீநரகத்திடைசேர்குவரென்னுஞ்சொ

லிப்பதியின்கணதில்லையிரண்டுமிணையாமால்

1190 இத்தலமெங்கர்மித்தலநேர்சொலவின்றாகு

மித்தலநல்குமையுந்தவமுற்றவிருந்தான

மித்தலமேயெனிலித்தலமன்னுமுயிர்க்கெல்லா

மித்தலநன்கெனவுரைசெயவேண்டுவதின்றாமால்

1191 புரிகுழலுமைதிகழ்பூவணம்வந்துபொருந்துஞ்சீ

ருரைதருபிரமகைவர்த்தபுராணத்தொன்றூன

மருவியவெண்பமூதாகவழுத்துநலத்தியாய

மருளுறுசவுனகமுனிவவருந்தவவறவீர்காள்

வேறு

1192 சிமயமாலிமயாசலமேவியசிவமனோன்மனிசேர்கவுமாரிதேர்

சமயநாயகிசௌரிசகோதரிசகலகாரணநாரணியாயிதழ்க்

கமலலோசனிகாதையையோதுநர்கருதியேசெவிவாய்வழியோர்குவோ

ரமலநாயகனார்பதமாகியவரியதாமரைநீழலில்வாழ்வரே

உமைவருசருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 1192

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book