16

முதலாவது

சூரியன் பூசனைச்சருக்கம்

231 ஓசைகொளித்தலத்துலகியாவையும்

வீசியகனையிருள்விழுங்குகின்றவான்

றேசுடைத்தினகரன்சிவலிங்கந்தனைப்

பூசனைபுரிந்ததுபுகலுவாமரோ

232 பன்னருமாதவர்படிவமாகியே

மன்னியசவுநகமகிழ்ந்துகேண்மியா

வென்னலுமன்னவனியம்பருந்தவந்

துன்னுநற்சூதனைத்துதித்தன்மேயினான்

233 உன்றனக்கிணையிலையுலகமூன்றினு

முன்றனக்கிணையிலையுரைக்குங்காலையி

லுன்றனக்கிணையுனையுரைக்குமாதலா

லுன்றனக்கொன்றுளதுரைசெய்வாமரோ

234 அங்கண்வானகத்திருளகற்றுமாரழற்

பொங்குவெங்கதிரவன்பூசையாற்றவே

சங்கரன்விரும்பியேதானிலிங்கமா

வங்கவணடைந்தவாறருளுநீர்மையால்

235 ஒன்றியகலையெலாமோதியேயுணர்

வென்றிமேவியபுகழ்வியாதன்றன்னரு

டுன்றியவருந்தவச்சூதமாதவ

வின்றெமக்குரையெனவியம்பினானரோ

வேறு

236 கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்

கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்

மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்

துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்

237 அந்தநல்வனத்தினாதிகாலத்திலரியயன்முதற்கடவுளர்கள்

வந்துபோற்றிசைக்குமாண்பினதாகிமலைமகள்வளர்க்கும்வான்றருவாய்ப்

புந்திகொள்பாரிசாதமென்றொருபேர்புனைந்துநீங்காதுபொங்கொளியா

யிந்திராதியார்சேரெண்டிசாமுகத்துமெங்கர்ம்பரந்துமிக்கிலகும்

238 கெழுதருநன்னீர்க்கிருதமாலையெனுங் கேழ்கிளர்வைகையங்கரைமேன்

மொழியுமத்தருவின் மூலத்தினோங்கி முளைத்தெழுசிவலிங்கவடிவாய்

வழிபடுமடியார்மனங்கொளநினைந்தவரந்தனைநினைந்தருள் புரிந்து

விழைவினெஞ்ஞான்றும் வீற்றினிதிருப்பன்விண்ணவன்கண்ர்தற்பெருமான்

239 செங்கண்மால்விடையூர்சிவபிரான்றனக்குத்தெக்கிணதிக்கதிற்றிகழந்து

மங்கலவிளைவான்மறைமுறைவழாதுமன்னியவத்தலந்தன்னி

லங்கண்மாஞாலமெங்கர்ம்புகழுமழகியமின்னனையாகி

யெங்கணாயகிதானிருந்தவம்புரிந்தே யியைந்திடுமியல்பினெஞ்ஞான்றும்

240 அன்னதொல்சிறப்பி னருந்தவமிழைக்குமந்தநற்பொற்கொடியான

கன்னிதன்முன்னேகருங்கடற்றோன் றுங்கதிர்க்குலம்பரப்புமாதவன்றான்

பன்னுமான்மாக்கள்பாவத்தை யொறுப்பான்பண்புறத்திருமணிகன்னி

யென்னுநற்றீர்த்தமேழுலகேத்த வெழில் பெறத் தொட்ட தொன்றுண்டால்

241 இந்தநற்றீர்த்தந்தன்னையோரொருகாலிசைப்பவருறுபவமொழிவர்

வந்ததிற்படிந்தமாத்திரையதனின்வருபிறப்பனைத்தையுமாற்றிச்

சந்ததம்பொருந்துசச்சிதாநந்தத்தடங்கடற்றடத்தினிற்படிந்தே

யந்தமாதியிலாவருளுடன்கலந்தேயார்வமாமுத்தியைச்சேர்வார்

242 சித்திரவலங்காரத்துடனுயர்வான்சேருமக்கற்பகமூலத்

துத்தமதவங்கட்குறுதவப்பலங்க ளுதவுமெம்பிரானுவந்திருந்தே

யத்தருமலரா லருச்சனைபுரியுமன்பருக்காயிடையருளால்

வித்தகமிகுநல்வேண்டுருக்கொண்டுவேண்டினார்வேண்டியதளிப்பான்

243 அன்னதொல்புட்பவனத்ததுநாப்ப ணதிமனோகரமிகவுடைத்தா

யுன்னதமொருநான்கரையதாய்ச்சுற்றும்பாதயோசனையதையுடைத்தாய்ப்

பன்னுமூவுலகும்பாரிசாதமெனப்பகர்வதாய்ப்பணைபலவுடைத்தாய்

மன்னியபறவைவிலங்குகடம்முள்வருபகையொழிந்திடவைகும்

244 அத்தருநிழற்கீழமரிலிங்கத்தினருளினாலாயிரங்கதிரோ

னித்தமாய்த்தனாதுபதம்பெறுகிற்பா னினைந்துநெஞ்சகங்கொண்டே

சித்திரைத்திங்கட்சித்திரைத்தினத்திற்றேசுறப்பூசனை புரிவான்

சுத்தநீராடித் தூயநீறணிந்து துலங்குகண்டிகைமணிபூண்டு

245 பொஞ்குலகேத்தும் பூர்வலிங்கத்திற் பொருந்தவாலுகங்கொடுதிரட்டி

யங்கையினொன்றினமைத்ததினிகழ்த்துமாறு போலங்கணன்றன்னைக்

கங்கைதங்கியசெஞ்சடிலசேகரமுங்கதிர்த்திரணிலவு நான்றொளிருந்

திங்களங்கொழுந்துஞ்செங்கண்வாளரவுந்திருமுகமண்டலமைந்தும்

246 கண்கண்மூவந்துங் கரங்களீரைந்துங் கவின்றிகழ்படைக்கலங்களுநஞ்

சுண்டிருள்பரந்தகண்டமும்பகுவாயுற்ற நற்பன்னகாபரணங்

கொண்டதிண்டோளுங்கோலமார்பகமுங்குலவுசங்கக்குழைக்காதும்

புண்டரிகத்தினுரிபுனையரையும்பொருந்திய பொற்பதாம்புயமும்

247 சுத்தமாமிதயகமலத்தினின்றுஞ்சுழுமுனாமார்க்கத்தினாலே

சித்தநேர்நிறுவித்துவாதசாந்தத்திற்சேர்ந்துறுசிறந்தமந்திரத்தா

லத்தகுபிராணவாயுவால்வாங்கியலர்தருகரத்தினிலமைத்துச்

சத்தியோடுரியசதாசிவமூர்த்திதன்னையே நன்குறநிசித்து

248 வண்ணமேவியநன்மதுமலர்தன்னைவண்கரங்கொண்டுபின்கூப்பி

யுண்ணிகழ்சமனையுன்மனைக்கப்பாலோங்கியே நிட்களமாகித்

தண்ணிலாவெறிக்குஞ்சந்திரரநேகர்தந்தநூறாயிரவொளிசே

ரெண்ணருஞானவுருவமாஞ்சிவனையிலிங்கமத்தியத்தினிலிருத்தி

249 தாபனஞ்செய்தபின்றகுசந்நிதானஞ்சந் நிரோதனந்தந்து

மாபரன்னறக்குச்சுவாகதார்க்கியமும்வழங்கியே காளகன்னிகையுஞ்

சோபனவிலிங்கமுத்திரையுடனேதுலங்குகைகூப்புமுத்திரையுந்

தூபமுமலிங்குதீபமுங்கொடுத்துச்சுகந்தநன்மஞ்சனமாட்டி

250 திலந்தருதயிலந்தேனுவைந்துவந்து சிந்தைகொள்கின்ற வைந்தமுத

நலந்தருமான்பானண்ணிடுந்ததிநெய்நன்மதுகன்னலின்சாறு

பலங்குளிர்தெங்குசந்தனக்குழம்புபத்தியினாட்டி நீராட்டித்

துலங்கியவைகைத்துறையினீர்சுமந்தசுரிமுகச்சங்கநீராட்டி

251 மகிழ்தருதிருவொற்றாடையுஞ் சாத்திமருவுசெம்பட்டுடன் மன்னு

மகமகிழ்கலவையாரமேலணிந்தேயரவகங்கணங்கரத்தமைத்துப்

பகர்நவமணிகள்படர்வெயிற்கிரணம்பரப்புமாபரணமுமணிந்து

திகழ்மணிமகுடஞ்செங்கதிரெறிப்பத்திருமுடியிலங்குறச் சேர்த்தி

252 பரவிடுநைவேத்தியம்பலவளித்துப் பாத்தியாசமனமுங்கொடுத்துத்

திருமிகுதூபதீபமுங்காட்டித்திருவெழுத்தஞ்சையுஞ்செபித்தாங்

குரியநற்பூசைப்பலனரற்குதவியோரிருகாலமுஞ்செய்து

குருமலர்கொண்டுபணிந்தெதிர்முக்காற்கும்பிட்டுத்தட்டமுமிட்டு

253 நிருத்தனுண்மகிழநிருத்தமுஞ் செய்து நீடுநற்கனவதிலின்னுந்

திருத்தகுமயன்மாறேடியுங்காணாச்சிவலிங்கதரிசனங்கார்உ

வருத்தியாற்கண்களருவிநீர்பொழியவாநந்தபரவசனாகித்

தரித்திடுஞ் சென்னிக்கரத்தினனாகிச்சதுர்மறைத்துதிபடித்தனனால்

வேறு

254 சுகரன்புடையானேதுதிசொல்வார்புடையானே

யிகல்சார்படையானேகுறளெழுசூழ்படையானே

திகழ்கண்படையானேயுறுசெனனம்படையானே

புகழ்மன்றுடையானேபொருபுலித்தோலுடையானே

255 அண்டங்கரியானேயரியயர்கட்கரியானே

விண்டங்கொளியானேசதுர்வேதத்தொளியானே

பண்டங்கிசையானேயுறுபவமொன்றிசையானே

கண்டங்கரியானேநுதற்கண்டங்கரியானே

256 மேவும் பொருவில்லாய்மகமேருப்பொருவில்லாய்

சேவின்றுவசத்தாயருடினமொன்றுவசத்தா

யோவில்லுயிர்க்குயிராய்திருவுருவம்பரமுயிராய்

தாவில்சிவபதத்தாய்திகழ்தருதாமரைப்பதத்தாய்

257 கதிநல்குசங்கரனேயுலகவைநீக்குசங்கரனே

விதிநல்குகங்கையனேசடைமிசைதாங்குகங்கையனே

கதநல்குமங்கணனேயுமிழ்கடுநாககங்கணணே

திதனானவங்கியனேதிகழ்திருமேனியங்கியனே

258 மனமொன்றுமெம்மானேமழுமானேந்துமெம்மானே

புனல்சேர்சடையானேபுவிபுகழ்மாசடையானே

சினமால்விடையானேயடிசேராவிடையானே

கனலேந்தினகரனேயெனத்துதித்தான்றினகரனே

வேறு

259 அன்னதோர்காலைதன்னிலவ்விலிங்கத்துநாப்பண்

கன்னியாயுலகமீன்றகௌரிமெய்கலந்துதோன்றச்

சென்னியிற்றிகழ்ந்தகற்றைச் செஞ்சடாமகுடவேணி

மன்னியமதிக்கொழுந்தும்வாளராவிலங்குமார்பும்

260 அங்கண்மாஞாலங்காக்குமபயமும்வரதமுஞ்சேர்

பொங்கொளிதிசைவிளங்கும்போர்மழுப்படையுமானும்

வங்கவாரிதியினஞ்சமருவுகந்தரமுமேனி

தங்குவெண்ணீறுமிக்குத் தயங்குகண்டிகைநற்றாரும்

261 கோடிசூரியருங்கோடிகுளிர்மதித்திரளுமொன்றாய்

நீடியவொளியும் வேங்கைநிகழ்பொறியதளுந்தோன்ற

மாடுறுமயன்மால்விண்ணோர்மாதவர்முநிவர்போற்றத்

தேடரும்பொருளையந்தத்தினகரன்றெரியக்கண்டான்

262 நித்தமாயருள்சுரக்குநிருமாலன்றன்னைக்கார்உ

வத்திரமின்றியானேயதிபதியாகவேண்டுஞ்

சுத்தமாமென துமிக்கதொல்லிரும்பதத்திற்கென்னாப்

பத்தியாற்சததளச்செம்பங்கயபதத்தில்வீழ்ந்தான்

263 பதந்தனில்வீழ்ந்திறைஞ்சும்பரிதிவானவனைநோக்கிக்

கதங்கொடுகாமற்காய்ந்தகண்ர்தல்யாருங்கேட்ப

விதங்கொளீரேழ்பொழிற்குமிக்கிறையாயிலங்கி

வதிந்துநீவாழ்நாள்காறும்வாழ்கெனவரங்கொடுத்து

264 திக்கிலகொளிப்பரப்புந்தினகரகேளெமக்கிங்

கக்கினிகோணந்தன்னிலரும்பெருந்தீர்த்தமொன்ற

மிக்கபூமுகையவிழ்ந்து வெறிகமழ்தரவிளங்குந்

தக்கநின்னாமந்தன்னாற்சதுரமதாகத்தந்து

265 மலர்தலையுலகம் போற்றமணிகன்னியென்னுநாம

நிலையுறநிறுவிநாளுநீடொளியிலங்கக்காண்டி

குலவிடுநின்னாற்பூசைகொண்டுநல்லருளால்யாமு

மிலகினமித்தலத்திலென்று மிவ்விலிங்கந்தன்னில்

266 வீசியவிருள்கால்சீக்கும் வெஞ்சுடர்ப்பரிதிநின்றன்

பூசனைபுரிந்தமேலாம்புண்ணியபரிபாகத்தா

லாசைகூர்ந்தருளாலிந்தவணிகிளர்பாரிசாதத்

தேசுறுதிருநிழற்கீழ்ச்சேர்ந்துடன் றிகழாநின்றோம்

267 இச்சையாலுருவங்கொண்டேயிருக்கும் நம்மிலிங்கத்திற்குப்

பச்சிமதிக்கினோங்கும் பாரிசாதத்தின்மூல

நிச்சயமுறயாமென்று நிகழ்ந்தினிதிருத்தலாலே

யச்சுரதருமுன்செய்தவருந்தவம்யாதோவென்றான்

268 கருணைகூர்கனலிதெய்வகம்மியன்றனையழைத்து

விரிகடலுலகுக்கெல்லாமேதகுவிழைவுடைத்தாய்த்

திருமிகுகின்றசெம்பொற்சிகரநீள்கோயிலாக்கித்

தரைபுகழ்தீர்த்தமொன்று தன்னிகராகக்காண்டி

269 காண்டிநீயிருந்ததான கண்ணகன்ஞாலந்தன்னில்

வேண்டுபுமிகவுமேலாய்விளங்கிடவென்தஞான்று

நீண்டகலிருவிசும்பினிறையணிகுறைபாடின்றிப்

பூண்டநின்பதத்திற்பின்னர்ப்போதியாலென்புகன்று

270 பன்னரும்புவியின் மேலாம்பான்மைசேர்தானந்தன்னி

லுன்னருந்தவத்தினபேற்றாலுத்தமோத்தமமித்தான

மன்னுமித்தலத்தின் யாவர்மருவியேமகிழ்வின்வாழ்வ

ரன்னவர்க்குண்டாமுத்தியென்பதற்கையமின்றால்

271 சந்ததம்விளங்கியாமித்தலந்தனிலிருத்தலாலே

வந்திவெண்வைகுவோர்க்குமருவுநம்மருளினாலே

யந்தமொன்றின்றிநாளுமறம்பொருளின்பம்வீடென்

றிந்தநால்வகையுமுண்டாமென்றனனெவர்க்கமேலோன்

272 பூதலத்திருள்விலங்கிப்பொங்குவெங்கதிர்பரப்பு

மாதவன்றனக்குநாதனருளுருவாகத்தோன்றி

மேதகுமந்திரத்துண்மிக்கமந்திரமாயுற்ற

வோதருமஞ்செழுத்தைவிதிப்படியுபதேசித்தான்

273 அவ்வுபதேசந்தன்னையங்கணனருளக்கேட்டுக் கவ்வையொன்றின்றிமிக்ககருத்தினையொருக்கிநேராய்ச்

செவ்விதினுணர்ந்து மேலாந்திருவருள்கண்ணாக்கார்

மிவ்விறையிருந்தவாறிங்கிப்பரிசெனத்​தெளிந்து

274 வானந்தத்தருவின்மூலமருவிவெம்பரிதிவானோன்

ஞானந்தானமூதென்றோதுநற்றிருவஞ்செழுத்தான்

மோனந்தானாகியன்பின்மோகித்துமுடியாவின்ப

வானந்தத்தழுந்தியொன்றாயற்புதமடைந்திருந்தான்

275 அருளுடன்கூடியொன்றாயானந்தத்தேனருந்தும்

பரிதிவானவனையெங்கோன்பங்கயச்செங்கைதன்னாற்

கருணையிற்பரிசித்தந்தக்கதிரவன்கண்டாக்காமுன்

றிருவருள்பிரகாசிக்குஞ்சிவலிங்கந்தனின் மறைந்தான்

276 தீதறப்பரிசிக்கின்றசிவகரவிசேடந்தன்னா

லாதரத்துற்ற நேயமதினின்றும்விழித்துப்பாரா

வோதுபுத்தேளிர்தம்மாலொருவராலறியவொண்ணா

நாதனைநேடிக்காணனற்றியானத்தினுற்றான்

277 நீடுமத்தியானநீங்கிநேரில்பஞ்சாக்கரத்தைப்

பீடுறவுபதேசங்கொள்பெருகொளிப்பரிதிப்புத்தேள்

வாடுநுண்ணிடைசேர்கின்றமங்கைபங்கொழித்த வெங்கோன்

கூடுமன்பினிலெடுத்துக் கூறியதகத்துக் கொண்டான்

வேறு

278 அந்தவாறருளினாலமைப்பனென வண்ணறன்றிருமுனண்ர்சீர்

சுந்தரம்பெறநிறைந் திலங்குகதிர்துன்றுதன்றனது செங்கையாற்

கந்தநீர்மருவவுந்துகாதலொடுகல்வியுற்பலசுகந்தநேர்

சந்தமேவுமரவீந்தமாகமிகுசதுரநன்கொடுசமைத்தரோ

279 நானமேவுநர்தமக்குநன்குமிக நண்ணநெஞ்சகமதெண்ணியே

யூனமில்கருணைஞானதேசிகனுரைத்தமந்திரமதுற்றசீர்

மோனஞானமுடன்மூழ்கியத்துவிதமாகியின்புடன்முயங்கியே

வானளாவிவருகங்கையாதிதிருமன்னுதீர்த்தமவையுன்னியே

280 தற்பரம்பொருளினாணையாலுரியதாபனஞ்செய்துதருக்கினான்

மற்றுமோரிணையிலாதவேதநெறிமந்திரந்தனைமொழிந்துசங்

கற்பபூருவமதாகநெஞ்சினிடைகருணைகூர்ந்துவகைகருதிநன்

குற்றதீர்த்தமடுமூழ்கினானுலகினோங்குபேரொளியினும்பரான்

281 மாதிரம்பரவுமாதிபுட்பவனவைபவத்தினதுசெய்தியாற்

சோதிகட்குமிகுசோதியாயிலகுதுங்கமேவுதிரளங்கமா

யோதுயிர்க்குமுதலோனுமாகியுயருத்தமத்துறுவரத்தையேய்ந்

தாதபக்கடவுணாதனுற்றவுலகாதிபத்தியமடைந்தனன்

282 மன்னுநல்விசுவகன்மனைக்கருதிவம்மினென்றுகொடுவல்லைகூய்ப்

பொன்னினோங்குவளர்புரிசையைந்தினொடுபொற்பினீடுமுயர்கோபுரந்

துன்னுகின்றசிகரங்களோடிலகுசோதிமாமணிகொளாலயம்

பன்னுமாடமிகுமண்டபங்கள் சிலபண்டுபோற்பரிதிகண்டனன்

283 பொற்பினீடியசதாசிவத்தின்மகிழ் பூவணத்துறைபுராதனர்க்

குற்சவந்தனைநடாத்தவெண்ணிமன்னுவகைபூத்தெழுசுவேச்சையால்

வெற்றியானைமுகனாதிவிக்கிரகம்வேறுவேறுமறைவிதியனா

லற்பின்மேதகையசெம்பொனாலுருவமைத்துநன்மணியழுத்தியே

284 கதிரவன்றனதுபெயரினானிலகுகாந்திநாயகனெனும்பெயர்

மதிவயங்கவணிமகுடசேகரநல்வானவன்றனையுமன்றினிற்

சதியினிற்றன்மிகுதாண்டவஞ்செயருடம்பிரான்றனையளித்துநூல்

விதிபதிட்டை செய்துவேதபூசையும்விழாவும் மேத்திடவிளக்கினான்

285 வையகத்தின்மலமாயைகன்மமறமாற்றியேவதியுமந்தணீர்

பொய்யிலன்புகொடுபொங்கிலிங்கமதுபோற்றிசெய்துபுரிபூசையாற்

றெய்விகந்தருவிமானமீதுகொடுசெஞ்சுடர்ப்பரிதிவானவன்

வெய்யமாமணியின்மிக்கிலங்கணிவிளங்குதன்னுலகின்மேயினான்

286 பொருவில்புட்பவனவை பவத்தணிபுகழ்ந்திடும்புவனமெங்கர்

மரியவப்பதியின்மேன்மையீதெனவளந்துரைக்கவெளிதாகுமோ

பரவுமப்பதியின்வைகுநர்க்குரியபரபதம்பகர்தல்சரதமாந்

தருணமிக்கபுகழருண்மனத்திடைதருக்கிவாழ்மிகுதவத்தனீர்

287 யாதொர்புட்பவனவத்தலத்தினரனஞ் செழுத்தையருள்செய்தனன்

யாதொர்செங்கதிர்தனக்குமந்திரவெழுத்தினிற்பலமேய்ந்திடும்

யாதொர்நற்றலமதென்பதொன்னறுதற்குநேர்புகலலாவதோ

யாதொர்நற்றலமதுண்டெனப்புகறலாவதோர் தலமுமில்லையே

288 ஞானமீதிலருண்மேனிகொண்டுவருஞானதேசிகனதருளினா

லாலநீழலறநால்வருக்கருளுமண்ணறன்றிருமுனண்ணியே

சீலமோடுதிருவஞ்செழுத்தையெருகால் விதிப்படி செபித்துளோர்க்

கேலுமுத்தியிமூதையமென்பதிலையிருபிறப்பின்வருமிருடிகாள்

289 மண்ர்கின்றமணிகன்னிகைப்புனலில்வந்துமூழ்கியருணந்துசீர்த்

தொன்மரத்தினுறுநன்னிழற்கண்மகிழ்துன்னுசோதிதிருமுன்னரே

பன்னுமன்னதுபதேசம்யாவர்சிலர்பண்ணினோரதுபரித்துளோ

ரின்னபான்மைநிகழிருவரும்பொருவிலீசனல்லுருவிசைகுவார்

290 இந்தநற்பதியிடத்தினீறணியுமெண்ணிலாருயிர்களுக்கெலா

மந்தமிக்கதிருவஞ்செழுத்தினுபதேசமெய்தலரிதரிதரோ

விந்தநற்கலியுகத்தினிந்தவுபதேசமானதுபலிக்கிலிங்

கிந்திரப்பதவியின்பமுற்றுமிகவுடையவன்கதியடைவரால்

291 வெந்தழற்பொடியையொக்குமித்தலம் விளம்பிலென்றவையுளங்கொளா

வந்துபொற்பின்மணிகன்னிகைக்கமலவாவிமூழ்குபலமேவலா

லந்தமற்றதிருவஞசெழுத்தைவிதியடைவினிற் கொடுசெபித்தருட்

செந்தமிழ்ப்பொதியமுநிவனங்கை கொடுசிந்துவைப்பருகினானரோ

292 பன்னுகின்றவறுபதமுரன்றிசைகொள்பங்கயத்திருமடந்தைசேர்

பொன்னினீடுமுயர்புரிசைசூழ்ந்திலகுபூவணப்பதியின்மேவியே

மன்னுகங்கைமுதலாதிதீர்த்த மனமகிழ்வின்வைகுபுகழ்மாமணி

கன்னிகைப்புனலின் மூழ்குமன்னவர்கள்கயிலைவெற்பினிடைபயில்வரால்

293 மங்கலங்கொடனுமாகநற்றலை வழங்குகின்றதொருதிங்களிற்

பங்கயத்தினொடுபானல்செங்குவளைபன்மலர்கொண்மணிகன்னிகைப்

பொங்குநற்புனிததீர்த்தமாடுதல்பொருந்துமாறுகொடுபோதறான்

றங்கியங்கடையகிற்பரேலவர்கள்சங்கான்றனுருவங்கொள்வர்

294 சிவபிரான்றனதுதிருமுன்மேவுநதி தீர்த்தமன்னுமொருசார்பினி

னிவறல்சேர்தருமொரெய்யும்வெங்கணையெழுந்துசென்றுவிழுமெல்லைவாய்ப்

பவமெனும்பரலையெரிகொளுத்துமிகுபாவநாசமதெனும்பெயர்

நவையிறீர்த்தமதினாடினர்க்குலகநாடுமுத்தியதுகூடுமால்

295 சித்திரைகொள்சித்திரைமெய்திங்கள்கலைசேர்நாள்

வைத்தபுகழாதபனன்மந்திரநவிற்றி

யுய்த்தமணியோடையினினுச்சிதனின்மூழ்கி

நித்தனை வணங்குநர்கணீடுகதிசேர்வார்

296 இந்தநலிரும்பதியிருந்தகையியம்பின்

முந்தையொருநான்மறைமுடிந்தபொருடானாய்

நந்துசிவஞானமதுநன்குறுவதாகி

நிந்தையறுநின்மலமதாய்நிகழ்வதாகி

297 ஏதமிலதோர்பிரணவச்சொருபமேயாய்ப்

பாதகமறுத்திலகுபஞ்சவனமாகி

யாதிநடுவந்தமறியாதபரமாகி

யோதரியவாதிசைவசித்தாந்தவுருவாய்

298 பொருந்தியிடுமின்பமிகுபூவணமதன்கட்

டிருந்துணர்வின்யாவர்சிலர்சென்றுதரிசிக்கி

னருந்தவமிழைத்தருளினங்கிருடிகாளே

யருக்கதியவர்க்கடையுமையமிலையம்மா

299 கிட்டுபெயர்மன்னியகிரேதநலுகத்திற்

சிட்டர்தினமும்பரவுதேவிபுரமென்று

மிட்டமுறுகாமியமியாவுமருள்செய்யும்

புட்பவனமென்றுமுலகம்புகழுமாதோ

300 தேற்றமுறவேதிகழ்திரேதநலுகத்திற்

சாற்றிடுமிலக்குமிதனாதுபுரமென்றே

தோற்றமுறுமன்னியதுவாபரயுகத்தி

னாற்றலைப்பிரானகரமென்றுபெயர்நண்ர்ம்

301 ஈந்றின்வருகின்றதொரிருங்கலியுகத்தி

னாற்றிசைகள் போற்றிசெயுநன்குறுதவத்தோர்

மேற்றிகிழும்வெஞ்சுடரின்மேதகையபேராற்

பாற்கரபுரப்பெயர்படைத்ததுபடிப்பால்

302 பூரணமெய்ஞ்ஞானமதுபுந்திகொடுவஞ்சம்

வேரறவகழ்ந்திடுநல்வேதியர்கண்மன்னோ

வேருறுமானந்தவனமென்றுமெணவொண்ணா

வாருயிர்கண்முத்திபெறுமாச்சிரமமென்றும்

303 திக்குலகெலாம்புகழ்சிதம்பரமதென்றும்

பக்கமுறுதக்கிணகாசிப்பதியதென்றுந்

தக்கசதுர்வேதபுரமென்றுமதுசார்பேர்

மிக்கபிதிர்முத்திபுரமென்றுநனிமேவும்

304 இத்தலநரர்க்குறவிருந்திருவளிக்கு

மித்தலமிரும்பவமியாவையுமொழிக்கு

மித்தலமிலங்குசிவஞானமதுநல்கு

மதிதலமநாதியுளதாயியையுமன்றே

305 தொக்கவுயிர்கட்கிலகுதொன்னகரிதன்னுட்

டக்கவரமிக்குதவுதந்திமுவெந்தை

யிக்குலவுநற்பதியிரும்பெருமையாலே

முக்கணிமலன்றனையருச்சனைமுடித்தான்

306 வென்றிதருமித்தலநன்மேன்மையுறலாலே

யென்றனதுவாய்மையினிசைக்கவெனதன்றே

மன்றவொருநூறுவருடந்தனினுமாதோ

துன்றுகதைவல்லபடிசொல்லமுடியாதே

307 நிகழ்மறையுணர்ந்தசவுநகமுநிவநீடு

புகழுலகெலாம்பரவுபூவணமிகுஞ்சீர்

மகிழ்பிரமகைவர்த்தமாகியபுராணந்

திகழெழுபதென்னுமத்தியாயமிதுசொல்வார்

308 இந்தவகைகந்தனருணந்திபெறவின்பா

லந்தமில்பெருங்கயிலையின்கணருள்செய்தா

னந்துமறையீர்களெனநைமிசவனத்திற்

சுந்தரமிகுந்ததவசூதனுரைசெய்தான்

வேறு

309 இந்தனத்திடைசெந்தழல்வந்தபோலிந்தநற்பதிமுந்தவியந்ததோ

ரந்தநற்சிவலிங்கம்விளங்கவேயந்தரத்தவர்செங்கதிர்கண்டசீர்

தந்தவிக்கதைகண்டுபுகன்றுளோர்தங்குநற்செவிகொண்டுபுகழ்ந்துளோர்

புந்தியிற்கொடுவந்துபுகழ்ந்துளோர்பொங்குமுத்தியின்வந்து பொருந்துவார்

சூரியன் பூசனைச்சருக்கமுற்றியது

ஆகச் செய்யுள் 309

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book