33

பதினெட்டாவது

நளன்கலிமோசனச்சருக்கம்

1290 அரியவிரதம்பூண்டவந்தணராவையத்தோரங்கமாக

வுரைதருநல்லோருயிராயுறைகின்றசவுனகனையுற்றுநோக்கிப்

பரிவினுடன்பௌராணிகோத்தமனாம்பன்னுதவப்படிவச்சூத

னரபதியாநளன்கலிமோசனமானகாதைதனைநவில்வதானான்

1291 அருளுடனெண்டிசாமுகஞ்சூழங்கர்லகெங்கர்ஞ்சென்றளப்பச்சொங்கோன்

மருவியமண்டலங்கொண்டமாகீர்த்திபுனைந்துமறைவரம்பினின்றோன்

விரவுமறம்பொருளின்பம்வீடடைவானருச்சனைசெய்விருப்பின்மேலோன்

கருதரியபரராசர்கனகமணிமுடியிடறுங்கமலத்தாளான்

1292 முழுதுலகந்தனிலேட்டினெழுதரியசதுர்வேதமுற்றுநாவோ

னழிவிலரனரியதிருவஞ்செழுத்தையுபதேசமருளாசானைப்

பொழிதருநன்மதுவாசப்புதுமலரிட்டருச்சித்துப்போற்றிநாளுங்

குழைவுறுமன்புடனகத்துக்குடியிருத்துங்கோதிறவக்குணக்குன்றன்னான்

1293 அடன்மிகுவெம்படைகாத்தலமைச்சரணட்புடனூக்கமறிவஞ்சாமை

தொடைபெறுநல்லியற்கல்விதூங்காமைதூய்மைதுணிவுடைமைவாய்மை

யுடனுரியகுடிபுறங்காத்தோம்பல்பகையொடுக்கலிவையுடைமைபூண்ட

கொடைமடம்பட்டிடுகோதில்குவலயங்கொள்குங்குமப்பொற்குலவுத்ஙதோளான்

1294 முழங்குதிரைக்கடலுலகமுழுதுமொருமதிக்கவிகைமுறையிற்காத்து

வழங்குகலிவலிதொலைத்துமருவலர்தம்மாருயிரைவாங்கிமாந்திக்

கொழுங்கனற்செங்குருதிதனைக்குடித்துமிகக்குமட்டியெதிர்கொப்பளிக்குந்

தழங்கிலைவேனெடுந்தடக்கைதாங்குநளனென்றுரைக்குமோங்குபேரான்

1295 ஆளுமறைக்குலத்தினன்பினவதரித்தவருங்குலத்தினரசர்கோமா

னீளுமருளுடனோர்நாணித்தநியமக்கடன்கணிரப்பிச்செம்பொன்

வாளுறைசேர்நீள்சுரிகைமன்னீளக்கச்சையுடைமருங்குசேர்த்தித்

தாளதனிற்றொடுதோலுந்தகவீக்கிச்சட்டகமேற்கவசந்தொட்டு

வேறு

1296 கோட்டியசிலைக்கைதாங்கிக்கோதையங்குலியிற்சேர்த்தி

மூட்டியபேராவந்தான்முதுகுறப்பிணித்தியங்க

ளீட்டமெங்கர்ந்துவைப்பவெண்ணருங்கருவிபம்ப

வேட்டையின்விரும்பிவேட்டுவேந்தர்களோடும்போந்தான்

1297 முடங்குவாலுளைமடங்கன்முருக்கியபுகர்முகஞ்சூழ்

கடங்களுங்கொடிகள்பின்னுங்கண்டகவனமுஞ்செந்தீப்

படர்ந்தெரிவதிற்செங்கஞ்சம்பலமலர்கின்றநற்பூந்

தடந்தருமிடங்களெங்குந்தகுவலைக்கண்ணிசேர்த்து

1298 பூண்டநாண்டொடர்ச்சிநீங்கிப்பொங்குகானெங்குந்தாண்டி

நீண்டவாலினைக்கொழித்துநேர்கடுங்காலினோடிக்

காண்டகுசெவிசிலிர்த்துக்கடுங்குரன்ஞமலிசூழத்

தூண்டியேதொகுவிலங்கின்றொகையெலாந்தொலைவுசெய்தே

1299 பச்சைவாம்பரியேழ்பூண்டபாழியோராழித்தேரோ

னுச்சியினேறும்வேலையுறுகதிர்தெறுதலாலே

நச்சிலையயில்வேலங்கைநளனனிவேட்டையாடி

யச்சிலைவேடரோடுமரும்பசியால்வருந்தி

வேறு

1300 நேடிப்பசுந்தேனிறைமலரினீடுஞ்சுரும்புபண்பாடு

மோடைப்புனலினாடியுவந்துச்சிக்கடன்றீர்த்துயர்தருக்கீ

ழாடற்பரியூரரசர்பிரானங்ஙன்பொதிசோறருந்தியுடன்

வேடப்படைகள்சூழ்தரவேவிரவோர்கன்னல்விழிதுயின்றான்

வேறு

1301 மாயிருஞாலத்தின்னல்வந்தடைந்திடவுமாக

மீயுயர்தருவினின்றுமேதனினிவீழ்வதாயுங்

காய்சினத்தரவந்தீண்டிக்காளிமங்கஞலத்தன்மெய்

தோயவுங்கனவுகாணூஉத்துண்ணெனத்துயிலுணர்ந்தான்

1302 துண்ணெனத்துயிலெழாமுன்சூழ்ந்திடுமமைச்சர்பாவ

புண்ணியம்புகலுமேனைப்புரோகிதர்விரவிப்போர்வே

லண்ணலிங்குற்றதென்கொலருளுதியென்னமன்னன்

கண்ர்றக்கண்டதீயகனாநிலைகட்டுரைத்தான்

1303 ஆங்கதுகேட்டோர்யாருமரசர்கோன்றன்மேற்பார்வை

தாங்கியோர்சரதமாற்றஞ்சாற்றுவார்தலைவவிந்தத்

தீங்குறுகனவுகண்டதீமைநீங்கிடநற்சாந்தி

பாங்கினாற்புரிதிபின்றேற்பலித்திடும்பகற்கனாவே

1304 ஆதலாலரும்பகற்கணரசர்கண்டுயிறலாகா

வோதிடடின்வாதபித்தமுறுகனவந்திய்ரமத்

தேதமாம்வெந்நோய்சிந்தையெண்ணியதிடையினெய்துங்

காதல்கூரிராக்கடைக்கண்கண்டதுகருதினுண்டாம்

1305 கனைகடன்முகட்டின்வெய்யோன்கடும்பரித்தேரூர்காலை

நினைவுறுங்கனவோர்திங்கணிகழ்த்திடும்பகற்கணேருந்

தனைநிகர்தருமசேதாதனைவிடுகின்றவேலை

யினிவருகனவியம்பிலீரைந்துதினந்திற்சேரும்

1306 கழிதருகனவின்செய்திகாண்டியீதரசரேறே

வழுவறவியன்றதானம்வழங்கிடல்வேண்டுமின்றே

லழிதராதருளல்வேண்டுமறிகவெம்மரசென்றன்னோர்

மொழிதருசாந்திமன்னன்முடித்திலன்முந்தையூழால்

1307 சில்பகல்கழிந்தபின்னர்த்திகழ்மணிப்பூணினானுந்

தொல்பெருந்தானிகோட்டிச்சூதாடியாவுந்தோற்றே

யல்லலுற்றருஞ்சிறாரோடாந்தமையந்தியென்னும்

வல்லிமான்றனையுநீத்துமல்லல்சேர்வனம்புகுந்தான்

1308 புகுந்துகானகத்துநாப்பட்புந்தியையொருப்படுத்துத்

தகுந்திறன்மன்னன்றன்னந்தனியுடன்சாரும்வேலைப்

பகுந்தவாய்ப்பாம்பதாகிப்பகைகொடுநகுடனென்பான்

றிகழ்ந்தமெய்ப்புகழ்மான்றன்னைச்சீறியேதீண்டினானே

1309 சீறியேதீண்டலோடுந்தீவருமரம்போற்செந்தீ

வீறுயிர்நளன்றனக்குவெவ்வராவிடத்தைவீட்டிக்

கூறரிதாகியோங்கிக்கொழுந்துவிட்டெழுந்துமண்டி

மாறுசெய்நகுடன்றானும்வனந்தனின்மறைந்துபோனான்

1310 திவ்வியவழகின்மேலோன்றேசெலாமழுங்கிமாசாய்

வெவ்வராத்தீண்டியங்கம்விகிர்தமிக்குறவேமேவு

மவ்வினைதுஞ்சப்பின்னரறம்பிடித்துந்தலாலே

யெவ்வமுற்றிருதுபன்னனிடத்தவன்றொண்டினேய்ந்தான்

1311 அன்னவன்சின்னாளேகவருந்ததிகற்பினென்னத்

தன்னிகரெழிலினோங்குந்தமயந்திசொயம்வரத்துக்

கின்னருட்டலைவனாகியின்னறீர்ந்திருதுபன்ன

மன்னவன்றன்னோடேகிமாதினைவல்லைசேர்ந்தான்

1312 ஆங்கவன்பின்னுஞ்சூதங்காடிமுன்னவனைவென்ற

பாங்குடன்றனதுதொல்சீர்ப்படியெலாமடைவிற்கொண்டு

தீங்குறுங்கனவுவந்தித்தீமையைப்புரிந்ததென்னாத்

தாங்கியபூந்தார்மார்பன்றன்னுளங்கொண்டுமன்னோ

1313 தங்குதீர்த்தங்கடோய்வான்றமயந்தியென்னுமாது

மங்கலந்தருநன்மைந்தர்மந்திரித்தலைவர்சூழ

வெங்கர்ம்பரவுஞ்செம்பொனினமணித்தேரினேற்றிப்

பொங்குவெம்படையினோடும்புரவலன்கொண்டுபோந்தான்

வேறு

1314 கேதாரமவிமுத்தங்கிளத்துகயைபிரயாகைகிளர்வானோங்கும்

போதார்ந்தவடகானம்பொங்கியெழுங்காளிந்திபுகலவந்தி

காதார்ந்தகுழையனரித்துவாரமிகுமாளவமாகதங்கரகோல

மாதாரமாத்திநகர்பஞ்சாப்சரத்தோடாரணைநற்கானம்

1315 பிறங்குகிருட்டினகானஞ்சடாயுதலஞ்சோமேசம்பீமகானஞ்

சிறந்திடுமஞ்சேசுரஞ்சல்லிகாயாவனங்கோகுரரேசந்தீதி

லறங்கரைநால்வேதவியாதாச்சிரமம்வெதிரிகாச்சிரமமாதி

கறங்குதிரைக்காவிரிசூழ்கருதுதிரிசிராக்கியமுங்கண்டுமன்னோ

1316 தெண்டிரைமோதிக்கறங்குந்தீர்த்தமவையாடியவன்மூர்த்திபேணிப்

பண்டருநற்குறுமுனிவன்பன்னுதமிழ்ச்சொன்மணக்கும்பாண்டிநாட்டில்

வண்டலெடுத்தலைபுரட்டும்வைகைநதியுடுத்தமதுராபுரேசன்

கண்டுறுசொற்சயனயனகர்ப்பூரநாயகிதாள்கண்டுபோற்றி

1317 கொடிமாடமதிற்கூடற்குணதிசையோசனையெல்லைகொண்டிலங்கும்

பொடிமூடுதழலெனவேபொருந்தியதென்பூவணத்திற்பொருந்திநாளும்

படிநீடுபுகழ்கொண்டபாதாளநாதனையும்பங்கிற்பச்சை

வடிவோடுமுடனாகிவளர்நாதவதிதனையும்வந்தித்தேத்தி

1318 முழுதுலகும்புகழ்தரமும்முரசுநின்றுமுழங்குமுன்றின்முழுவுத்தோளான்

வழுவில்பதிமகிமையையுமனத்துறுநின்மலத்தினையுங்கண்டுமுன்ன

மழிவுறவெஞ்சூதாடியலமரவெங்கலிநலியவகன்றிடாவெம்

பழிகழுவும்படிகுறித்துப்பரிமேதயாகத்தைப்பண்ணலுற்றான்

வேறு

1319 ஆதியந்தமிலாதவரன்றிருக்

கோதிலாதபொற்கோயிற்குடதிசை

யோதுகூவிளியெல்லையினோங்கவே

காதல்கூர்கனகத்தலக்கம்மியர்

1320 மாகநீணவமாமணிகொண்டுவே

தாகமப்படியாயிரந்தூணிறீஇப்

போகமன்னியபொன்னகரென்னவே

யாகமண்டபமேத்தவியற்றினார்

1321 மந்தமாருதமூரும்வசந்தநாட்

கந்துகம்பட்டங்கட்டிவிடுத்திசை

நந்தும்வேதியரோடுமந்நன்னளன்

றந்தவேள்வியஞ்சாலையிலேறினான்

1322 ஓடுவாம்பரியுற்றகுளப்படி

நாடியோமநயந்துபுரிந்துபொன்

னாடையாபரணங்களணிந்தணி

நீடுவேள்வித்தறியைநிறுவியே

1323 ஆண்டுதானென்றறைவபையாதியான்

மாண்டருங்கனல்வேள்வியமைத்தபின்

வேண்டுமாறுசுவையின்மிதவைமெய்

பூண்டவேதியர்பூசைபுரிந்தனன்

1324 ஆசிலவ்வருடாந்தத்தருந்தமிழ்

வாசமாமலயத்துமந்தாநிலம்

வீசுங்காலத்துமின்னனையோடும்வந்

தீசன்விண்ணவரேத்தவங்கெய்தியே

1325 மேவுமந்தமிகுந்திரையாயுக

மோவில்பல்புகழோங்குநளன்றனக்

கியாவுநல்கியிருங்கலிதீர்த்தருள்

பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன்

1326 எந்தஞான்றுமிருந்துவிளைத்திடு

முந்துகாதலரோடுறுவைகையி

னந்தவேந்தனவபிருதப்பெயர்

தந்தநானமுந்தானமுஞ்செய்துபின்

1327 செங்கனற்றனைச்செய்துத்தியாபவனம்

பொங்குபூவணத்தெம்புனிதன்றனக்

கங்கண்மாநிலமெங்கர்மாற்றவே

மங்கலோற்சவமன்னனுண்டாக்கினான்

1328 பிரமகைவர்த்தமாமிப்பெருங்கதை

சரதமூன்றுதலையிட்டவெண்பதா

முரியவத்தியாயந்தனிலோரர்திநீ

நரநளேந்திரநன்கலிமோசனம்

1329 இந்தநளன்கதை

சந்தமுடன்புகல்

சிந்தையுவந்தனர்

வெந்துயர்சிந்துவார்

நளன்கலிமோசனச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 1329

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book