9

26 பொன்னலந்திகழ்ந்தோங்கிய பூவணக்காதை

தன்னை நான்மறைச்சவுநகாதியமுநிகணங்க

டுன்னுமாதவச் சூதனை வினவிய சூழ

னன்னிலம் புகழ்நைமிசவணிசில நவில்வாம்

27 காரின்மல்கியகந்தரந்தந்த காட்சியினாற்

சீரிணங்கிய சென்னியிற் றிங்கண் மேவுதலா

லேரிணங்கிய மாதவர்க்கின் பமீகையினா

னாரிபாகனை நிகர்ப்பது நைமிசாரணியம்

28 சீரிணங்குறச் சேணிவந்தோங்கலாற் செய்ய

வாரிணங்குநன்மலர்க் கொடிமருவு கண்ர்றலா

லேரிணங்கிய வெண்ணரும்புட் கணண்ர்தலா

னாரணன்றனை யொத்ததுநைமிசாரணியம்

29 நான்முகங்களுநான்மறைநவிற்றுதலானு

நான்முகந்தருநாயகி நண்ர்தலானு

நான்முகங்களுநன்குறப்படைத்திடலானு

நான்முகன்றனை யொத்தது நைமிசாரணியம்

30 பன்னுநான்மறைபயில்பவர் பன்னசாலைகளு

மன்னுகின்ற வட்டாங்கயோகத்தர்வாழிடமு

மின்னருட்கர்ற்றிரண்டற நிற்பவரிடமு

நன்னலம்பெற நிறைந்தது நைமிசாரணியம்

31 வண்ணமேவியபூந்தவிசேந்தியவள்ள

லெண்ணிலாதவர்பிறப்புடனிறப்பெலாந்தங்கள்

கண்ணினாற்கண்டுகழிந்தபல்காலங்கள் கடந்தோர்

நண்ணிமாதவம்பயில்வது நைமிசாரணியம்

32 காலனாணையுங்காமனதாணையுங்கஞ்ச

மேலயன்றிருவாணையுமேகவண்ணஞ்சேர்

கோலமாயவன் குலவிய வாணையுமாக

நாலுநண்ணரிதாயது நைமிசாரணியம்

33 பிரமசர்யம் வானப்பிரத்தம் மெழில் பிறங்கு

மரியநான்மறையறைந்திடுமதிவணாச்சிரமம்

பரவுகின்றனயாவையும் பற்றாத்துறந்த

லுரியவாச்சிரமங்கணான் குடையதவ்வனமே

34 புகழ்வினீடுவெண்பூதிசாதனம் புனைமெய்யர்

திகழ்செழுங்கதிரெறித்திடு செஞ்சடாமகுடர்

மகிழ்சிறந்தநல்வற்கலையுடையினர்மாறா

திகழ்தலின்றியே நாடொறுமிருந்தவமிழைப்போர்

35 எண்ணருந்திறலோர் புகழிருபிறப்பாளர்

நண்ர்முப்பொழுதருச்சனைபுரியுநான்மறையோ

ரண்ணலுண்மகிழைவகைவேள்விகளமைப்போர்

கண்ர்தற்கருமங்கமாறுங்கரைகண்டோர்

36 ஒருமைசேர்ந்த மெய்யுணர்வினரிருவினையொழிந்தோ

ரருமைமும்மலர்நாற்கரணந்தனையயர்த்தோர்

வெருவுமைம்புலப்பகைஞரை வென்றருள்வீரர்

கருதுறாதவெண்ணெண்பெருங்கலைக்கடல்கடந்தோர்

37 சூழ்ந்தவல்வினைத்தொடர்படுகின்ற தொல்பவத்தைப்

போழ்ந்தஞானவாட்படையினர் புரிமுந்நூன்மார்பர்

தாழ்ந்தநல்லுறிதாங்குகுண்டிகைத் தடக்கையர்

வாழ்ந்தவைதிகசைவர்வாழ்நைமிசவனமே

38 பகைகடீர்ந்திடும் பன்னகவயிரியும்பாம்பு

மகிழ்வினோங்கிடும் வாலுளையரியொடுமதமா

மிகுவிலங்கினம் விரும்பியோர் துறையுணீரருந்தி

யிகலதின்றியேயின்புறமருவுமெஞ்ஞான்றும்

வேறு

39 காமாதிகள் விட்டேற்குநர் தண்டோரொருசாரார்

பூமாலை களாற் பூசனை புரிவோரொருசாரா

ரோமாதிகளுக்காவனகொணர்வோரொருசாரார்

பாமாண்புறவே பாடுநராடுநரொருசாரார்

40 யாகாதிகடருமங்களிழைப்போரொரு சாரார்

யோகாதிகள் கருமங்களுழப் போரொரு சாரார்

சாகாமூலபலந்தருகிற்பவரொருசாரார்

மாகாமந்தனை மாற்றிமகிழ்ந்தோரொரு சாரார்

41 வேதாகமநூன்மேதகவோதுநரொருசாரா

ராதாரத்தினடுக்கையறிந்தோரொருசாரார்

நாதாந்தந்தனை நாடிநவிற்றுநரொருசாரா

ரோதாவுண்மைப் பொருளையுணர்ந்தோரொருசாரார்

வேறு

42 உந்தியாரழன்மூளநற்சுழுமுனைதிறந்ததினூடுபோய்

விந்துவாரமுதம்பொழிந்து மெய்விழிசெழுந்துளிவீசவே

யந்தமாதியிலாத செந்தழலண்ட கோளகை மண்டவே

நந்தஞான சுதோதயந்தனை நண்ர்கின்றனர் சிலரரோ

43 தீதினற்றிரி புண்டரத்தொடு செய்ய கண்டிகை மெய்யினர்

காதல்கூர் தருகா மனம் பதுகனவினுந் தெறல் காண்கிலா

ரோதுநற்சுகதுக்கம் வெம்பகையுறவு நன்றொடு தீதிலா

ராதியந்தமிலாதவன்றனையன் பினான் மிக நம்பினோர்

44 நாக்கினான் மறைபோற்று வோரிவர் நண்ர்சாலை கண்முன்னரே

மூக்கினாற் பிணி முகமெடுத்தென முள்ளெயிற்றரவள்ளவே

யாக்குநற்பகுவாய்கள் கக்கிடு மலகில் செம்மணியிலகறான்

றூக்கு சோதி விளக்கினுக்கிணை சொல்லலாமலதில்லையே

45 நித்தமாதவரைத்தினந்தொறு நீங்கிடாதருளோங்கநற்

பத்தியான்மிகு பன்னகத் தொடு பல்பொறிப்புலி சேர்தறான்

சித்திமுத்திகள் சேரநல்குறுதில்லையம்பலவெல்லைசார்ந்

தத்தனாடலருட்கணாடிடவிருதபோதனரமர்தல் போன்ம்

46 தூய மாதவமே பயின்றிடு சுத்தர் நித்தர் சுகோதயர்

நேயநீடநு போகமல்லது நெஞ்சின் வேறு நினைக்கிலார்

மேயநைமிசகானகந்தனின் மேன்மையாவர்விளம்புவா

ராயிரம் பகுவாயனந்தனுநாவிசைத்திடலாவதோ

நைமிசாரணியச் சருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 46

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book