18

407 நற்கதிபெறுந்திரணாசனன்கதை

யற்புதங்கேட்டுநெஞ்சமைதிகொண்டிலன்

சொற்றகுமாதவச்சூதயான்புகல்

கிற்பனாலின்னமுங்கேட்குமாசையால்

408 ஓதருமுலகிலாருயிர்கள் செய்திடு

பாதகமனைத்தையும் பாறல்செய்யுமக்

கோதறுமாமணிகுண்டமேன்மையை

யேதுவினோடெடுத்தியம்பல்வேண்டுமால்

409 உற்றமன்பதைக்குபகாரியாவது

மற்றுநீயல்லதிவ்வையத்தில்லையாற்

சொற்றிடென்வாய்மொழிதுணிந்துநாடியே

யிற்றெனவேவிரித்தினிதினாலரோ

410 என்றிவைசவுனகனியம்பக்கேட்டரு

டுன்றியதுகளறுசூதன்சொல்லுவான்

கன்றிடுமறுபகைகடிந்துநாடொறும்

வென்றிகொளந்தணர் வேந்தர் வேந்தனே

411 அத்தலப்பெருமையையாயிரம்பெரும்

பைத்தலையனந்தனும் பங்கயத்தனுஞ்

சித்திரமலர்த்திருமாலுந்தேவரு

மித்திறமெனவுணர்ந்தியம்பலாகுமோ

412 ஆயினெம்மாலிமூதறையப்பாலதோ

தாயினுமுயிர்க்கருள்சவுனகாதிப

தூயவாசான்றனாற் சொல்லுமந்தண

நேயமோடதிற்சிலநிகழ்த்துவாமரோ

413 அண்டமோர்விராட்புருடன்றனங்கமாம்

புண்டரீகத்திருப்பொருந்தும்பூவணங்

கொண்டபேரெழில்குடிகொண்டவன்முக

மண்டலமாகவேமறைந்துவைகுமால்

414 பண்டைநாளமுதகும்பத்திலாரமு

தெண்டகுமணிமயமாகியிப்புனல்

விண்டலநினற்துவீழ்தலான்மணி

குண்டமென்றொருபெயர்கொண்டிலங்குமால்

415 துன்னுதற்கரியவத்தூயதீர்த்தமா

மன்னதினாடினோரமுதருந்தியே

பன்னுபத்தயன்றன்கற்பம்பரிந்துதாம்

பொன்னுலகத்தினிற்பொருந்திவாழ்குவார்

416 அரியயனுருந்திரனமரர்கோன்கடற்

றரைபுகழ்நாரதன்சனகனாதியர்

கருடர்கந்தருவர்நற்கபிலரேனையர்

திருமணிகன்னிகைத்தீர்த்தம்வாழ்வரால்

417 கோலமன்னுதீர்த்தமாடுகுலவுபூர்வமுகமதாய்

வாலுகந்தனான்மிகுந்தவானிலங்குவெய்யவன்

சீலமோடுசெய்யிலிங்கதெரிசனஞ்செய்வோர்கொடுங்

காலன்மேனிதானிரண்டுகண்கள் கொண்டுகண்டிடார்

418 அந்தலிங்கதரிசனத்தினானன்முத்தியடையுமால்

வந்துநாளுநாளுமேவணங்கினோர்கள்யாவரும்

புந்தியாற்செய்பாவமும்புண்ணியம்மதாகுமா

லிந்தநீர்மையுண்மையுண்மையென்பதையமில்லையே

419 எண்ணிறைந்தநன்மணிகனிகையினெய்தியாடுதல்

கண்ணினண்ர்பூவணக்காசிலிங்கதரிசனம்

புண்ணியம்புரிந்துளோர்தமக்குநேர்பொருந்திடும்

பண்ர்பாதகர்க்கொர்காலமும்பலித்திடாதரோ

420 இருடுரந்தருள்சுருக்குமிம்மணிகன்னிகைநதி

யருடவத்தினானதானமதனினாலுமன்புகூர்

கெரிசனத்தினாலுமிக்கசீர்தயங்குகங்கையின்

பரிசனத்தினாலும் வெய்யபாதகங்களழியுமால்

421 தெரியினரியபிரமகத்திதீர்க்குமுரியதரிசனம்

பரவுமமுதநாளுமுண்ணல்பண்ர்மேவுபரிசன

மரியபலமெலாமளிக்குமத்திருத்தநானமே

விரவுமமுதமணிமயங்கொண்மணிகனிகையின்மான்மியம்

422 தந்தைதாய்தமக்கிழைத்ததணிவில்பாதகங்களும்

பந்தமாற்றுகின்றதோர்பராபரன்றுரோகமுஞ்

சுந்தரங்கொள்வேறொர்மாதர்தோளணைந்ததோடமும்

முந்தையோரைநிந்தைசெய்தமுடிவிலாதபாவமும்

423 வேதியர்க்குவெகுளிசெய்தன்மிசைதலல்லமிசைதல்வெம்

பாதகங்கண்மாடபத்தியங்களாதிபாதக

மோதுகோள்களாதிபாவமொழியுமோவிப்பூவணந்

தீதிலன்பினோடுவந்துதெரிசனஞ்செயளவினில்

424 இத்தலத்தில்வைகியேயிடும்பையில்குடும்பியா

யுத்தமகுலத்தனாகியொற்கமிக்குடையனாய்

முத்திகாமனானசீவன்முத்தனங்கையிற்றில

மத்தனைச்செழும்பொனல்கினோர்பலத்தையறைகுவாம்

425 தூயவுலகினேமருவுசுகமெலாமடைந்தவ

ணேயபுத்திரர்புத்திரர்களோடுநீடுவாழ்ந்

தேயநற்சிவவுத்தினேறியின்பமுற்றதின்

மேயநாளிருந்துமேதினிக்குவேந்தராவரால்

426 ஊனநீங்குமையர்கையிலுள்ளொருமையோடுகோ

தானநல்கினோர்கணீடுதரையிலின்பமருவியே

தீனமின்றிவாழ்ந்துபின்றிருந்தருந்தவத்தினா

லானகாமதேனுவின்றனமுகநன்கருந்துவார்

427 பின்னர்நற்றவந்தனிற்பெருங்குலத்துதித்துநேர்

பன்னுபுத்திரர்பவுத்திரர்களோடுபரிவினான்

மன்னுசெல்வமுடன்மகிழ்ந்துவாழ்ந்துமீண்டுமாசிலாச்

சின்மயன்றினம்பொருந்துசிவபுரத்தையடைகுவார்

428 ஓதுமுத்தராயணத்தினோடுதக்கிணாயன

மீதினுற்றகதிர்கடம்மைவெவ்வராவிழுங்குநாண்

மாதவுற்பவத்தினமதிவிரிந்தொடுங்குநா

ளாதிவாரம்பமூதொர்பக்கமவ்வெதிபாதத்தினம்

429 ஏலுமாறுதலையிலிட்டவெண்பமூதுசேர்ந்தநற்

காலமோடுசங்கிராந்திகாலமட்டமீதனின்

வாலசங்குதங்கிநன்குவளருமணிகன்னகையினின்

மாலகந்தைகொன்றசூலவயிரவன்றனருளினால்

வேறு

430 இலகொளிபரப்புமெல்லோனெதிர்முகந்தரவிருந்து

மலருடன்றூர்வைமிக்கவண்கனிதண்டுலங்கொண்

டலகிலாப்பவங்கணாயேற்காடுமித்தீர்த்தந்தன்னாற்

றொலைவுசெய்தருளவேண்டுஞ்சோதியேயெனப்பணிந்து

431 சூரியவிலிங்கந்தன்னைச் சொல்லுமந்திரத்தினாலே

சீர்பெறச்செபித்துத்தேவதேவனைப்பிரார்த்தித்தன்பாற்

பேர்பெறுதீர்த்தமூழ்கிப்பிதிர்களோடிருடிகட்காங்

கேர்பெறுதர்ப்பணங்களிரவிமந்திரத்தினாலே

432 யாவனிம்முறையிற்செய்வானவன்கடலுடுத்தபார்மேற்

றேவர்கண்முனிவர்மிக்கதென்புலத்தவர்கடன்செய்

மேவியபிரமசாரியெனின்விருப்பறுத்தேயொல்லை

மூவுலகங்கள்போற்றமுத்தியையடைவனன்றே

433 அருமணமுடித்தோன்பின்றையைவகைவேள்வியாற்றிக்

கிரியைநூற்கிடக்கையானேகேடில்பூசனையமைத்தே

திருமகள்சுவர்க்கஞ்சேயாற்சேர்வனீதொருவினாலும்

பெருகுமத்தீர்த்தமூழ்கிற்பிதிர்கடன்றரும்பேறுண்டாம்

434 தீதிலாவேள்விசெய்தோன்றேவனாந்தன்மைபோல

வோதுமத்தீரத்தம்பொனுகவுவோனும்பனாவா

னாதலாலத்தலம்போலரும்பிதிர்கடன்கடம்மைப்

போதல்செய்தலங்களிந்தப்பூதலத்தில்லைமாதோ

435 இத்தலமன்றிவேறோரிருங்கதியளிக்குந்தான

மித்தலமதனிலின்றாமியம்பிடினாகையாலே

யித்தலமதிகமாமாயிரங்கோடிநற்றானத்து

ளித்தலங்கண்டாலிம்பரிருங்கதியிரண்டுமுண்டால்

436 கற்றுணர்வுடையோர்கண்டகண்ணிமைகைநொடித்தல்

பெற்றிடலமையுமேலும்பிறங்கிடுஞானந்தன்னா

லுற்றவஞ்ஞானந்தன்னாலோதுபூவணத்தில்வாழ்வோர்

நெற்றியிற்றிகழந்த வொற்றைநேத்திரராவரன்றே

437 நல்லதோர்தளிர்தானாதனவிலொருகனிதானாதல்

வில்லிலங்கியபுரூரமின்னிடையன்னைபாகம்

புல்லியபூவணத்தெம்புனிதனுக்கினிதளிப்போர்

சொல்லுருத்திரனாய்ப்பின்னர்ச்சுத்தமாமுத்திசேர்வார்

438 வோறொருதலத்தினின்று மெய்யுயிர்வியோகமெண்ணி

மாறிலாவித்தலத்தின்வைகுறின்மரணகாலை

கூறரிதாயசெம்பொற்கொடியிடைமடவாளோடும்

தேறிடவந்தவன்றன்றெக்கிணகன்னந்தன்னில்

439 பாரிடைப்பிதாமகற்குப்பயப்பயப்பரிதல்போலச்

சீருடைக்கடவுடன்பொற்றிருமேனிசாத்திக்கொண்டு

பூரணமகிழ்ச்சியோடுபுத்திரன்றன்னைத்தேற்றித்

தாரகப்பிரமந்தன்னைத்தானுபதேசஞ்செய்வான்

440 சாற்றுதுமரன்றனாணைசத்தியமீதுசாற்றி

லாற்றல்சான்முனிவகேண்மோவாதலாலரிதினேனு

நாற்றிசையுலகமேத்துநற்றிருப்பூவணத்திற்

போற்றியேயெவரும்வாழ்கபுந்திகொண்டெந்தஞான்றும்

441 மருவியகாசிவாசமக்கண்மிக்குடல்வருந்தும்

பொருவிறென்பூவணந்தான்பொருந்திடாமெய்வருத்த

மரியனபொருளொன்றில்லையாதலாலைந்தவித்தீர்

கருதிலப்பூவணந்தான்காசியிலதிகமாகும்

442 பவமில்பஞ்சாமுதத்தாற்பஞ்சகவ்வியத்தான்மிக்க

சுவைதருநன்னீர்தன்னாற்சோதியையாட்டுவிப்போன்

சிவனதுவடிவமென்றேசெப்பிடுமுலகமெல்லா

மவனதுபெருமைதன்னையறிகுவனமலன்றானே

443 கதிர்விடுமணிகுண்டத்தின்கரையினிற்கடவுண்முன்னர்ப்

பிதிர்மகிழ்சிசராத்தத்தோடும்பிண்டநற்றிலோதகத்தை

விதிமுறைபிதிர்கட்காற்றின்வெஞ்சுடர்ப்பரிதிவானோ

மதிதருவாழ்நாள்காறுமனமிகமகிழ்ச்சியுண்டால்

444 பொங்குவெங்கதிர்பரப்பும்புனிதமாமணிகுண்டத்திற்

றங்குநீரிடைப்பிதிர்க்கடங்களங்கங்கிடந்தா

லங்கவர்மகிழ்ச்சிகூர்ந்தாங்கக்கணந்தன்னின்முக்க

ணெங்கணாயகனாற்பெற்றேயிடபவாகனத்தராவார்

445 ஆதலாாலரியமைந்தரத்தியைப்பத்தியாலே

யோதிடும்பிதிர்கடாம்போயுயர்பதிகதியிற்சேர்வான்

காதலால்வருந்தியேனுங்கடைப்பிடிகருதிமாதோ

கோதிலாமணிகுண்டத்திற்கொண்டிடக்கடவரன்றே

446 முந்தொருகாலந்தன்னின்மொழியினோர்கங்கமங்கந்

தந்திடந்தணனங்கத்தைத்தசையெனநசையிற்கொண்டே

யந்தநற்றீர்த்தத்திட்டாங்ககன்றதக்கணத்தினன்னோ

னிந்தநற்றீர்த்தந்தன்னாலிருங்கதியேறினானால்

447 இந்தநற்றீர்த்தம்வேதத்தியம்பிடுஞ்சாரமாகு

மிந்தநற்பிறப்புக்கீறுசெய்திடுகடவுளாகு

மிந்தநற்கதைச்சுருக்கமியம்பினனீவிருந்தா

மிந்தநன்மாணக்கர்க்கிங்கிசைத்திடுமெந்தஞான்றும்

448 சந்தமாமறைதேர்கின்றசவுனகமுனிவகேண்மோ

வந்தநற்பிரமகைவர்த்தந்தருமத்தியாய

மிந்தவாறடைவிற்றேர்தியெழுபதின்மேலிரண்டாம்

புந்திகொள்புகழ்செறிந்தபூவணக்காதைமாதோ

வேறு

449 சேர்லாவியதிங்கடருங்குடைசேருமாமதன்றன்றணைவென்றதோ

ரேர்லாவியவின்பசுகம்பெறுமேசிலாவருடந்திடுமந்தணீர்

மார்லாவியமண்டலமெண்டகுமாசிலாமணிகுண்டமடைந்தசீர்

பார்லாவியசெஞ்சொல்பகர்ந்தவர்பாகசாதனன்றன்பதிதங்குவார்

மணிகன்னிகைச் சருக்க முற்றியது

ஆகச் செய்யுள் 449

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book