"
  1. காப்பு

 

எளிமைக்கு மூலம் எனஇகழ நிற்பேன்
வலிமைக்கு மார்க்கம் வரைய-எளிமைக்கு
மூலம் என இரந்து மூவுலகும் காத்தரசாய்க்
காலமிடம் நீத்துநிற்பான் காப்பு.

ஒழுக்கம்
ஒழுக்கத்தாற் சீர்சால் புயர்வெல்லாம் எய்தும்;
ஒழுக்கத்தால் மெய்ப்பொருளின் ஓர்வும்-பழுக்கும்
”ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”.

அறம்
”சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்
காக்கம் எவனோ உயிர்க்”கே-”அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.”

பொருள்
“பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை
தன்னின் ஆகும் தரணி; தரணியின்
பின்னை யாகும் பெரும்பொருள்; அப்பொருள்
துன்னும் காலைத் துன்னாதன இல்லையே.”

முயற்சி
“நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும்,-நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.”
——-

License

Icon for the Public Domain license

This work (வலிமைக்கு மார்க்கம் by வ.உ.சி) is free of known copyright restrictions.

Share This Book