"
  1. சில சொற்களின் பொருள்கள்

‘ஆன்மா’ என்பது ‘யான்’ ‘எனது’ எனக் கருதாது உலக நன்மையையே கருதுகின்ற பேரறிவு.
‘ஜீவன்’ என்பது ‘யான்’ ‘எனது’ எனக் கருதித் தனது நன்மையையே கருதுகின்ற சிற்றறிவு.
‘மனிதன்’ என்பவன் சூக்ஷ்ம ஸ்தூல உடம்புகளோடு கூடி நின்று நினைக்கின்ற ஜீவன்.
‘மனம்’ என்பது ஒரு சூக்ஷ்ம அல்லது சூக்ஷ்ம ஸ்தூல உடம்போடு கூடி நிற்கின்ற ஜீவனது நினைப்பு.
‘சூக்ஷ்ம உடம்பு’ என்பது ஸ்தூல உடம்பின் பொறிகள் வழியாகக் காண முடியாத ஓர் உடம்பு.
‘ஸ்தூல உடம்பு’ என்பது அப்பொறிகள் வழியாகக் காணத்தக்க ஓர் உடம்பு.
‘அகம்’ என்பது சூக்ஷ்ம ஸ்தூல உடம்புகளில் மனம் சஞ்சரிக்கின்ற இடம்.
‘புறம்’ என்பது ஸ்தூல உடம்பிற்கு வெளியில் மனம் சஞ்சரிக்கின்ற இடம்.
‘பரோக்ஷஞானம்’ என்பது கேள்வியால் அல்லது கல்வியால் அடையப்பட்ட அறிவு.
‘அபரோக்ஷஞானம்’ என்பது மனத்தால் அல்லது பொறிகளால் காணப்பட்ட அறிவு.
‘துன்பம்’, ‘துக்கம்’ என்பன முறையே ‘பொறிவருத்த’த்தையும் ‘மனவருத்த’த்தையும் குறிக்கும்.
‘இன்பம்’, ‘சுகம்’ என்பன முறையே ‘பொறிக்களிப்பை’யும், ‘மனக்களிப்பை’யும் குறிக்கும்.
‘போட்டி’ என்பது ஒருவரின் மற்றொருவர் மேம்பட வேண்டுமென்று செய்யும் முயற்சி முதலியன.

License

Icon for the Public Domain license

This work (வலிமைக்கு மார்க்கம் by வ.உ.சி) is free of known copyright restrictions.

Share This Book