கையிலிருந்த டீயை ஒரு மொடக்கு, குடித்துவிட்டு சொன்னார்.
சுடுகாட்டிலேயும், கண்மாயுலேயும் வீடுகள கட்டி அவனவன் ஜெகஜோதியாய் இருக்குறானுக………… இப்போ. விண்வெளியில பிளாட் போடுவதற்கு ரெடியா இருக்கானுங்க…….. நீங்க என்னாடான்னா…………… எங்க அப்பாவே முனி அடிச்சிருச்சுன்னு ……… உளரிகிட்டு இருக்கிங்க……..
சார் அம்பது வருசத்துக்கு முன்னாடி நடந்ததுசார்……. நா…. சின்ன பயலா இருந்தபோது இந்த டீக்கடையெல்லாம் வெளிக்கு போற இடம் சார்…………..
அப்ப……இப்ப..எப்ப……… இருந்தாலும் என்னப்பா……………… முனியாவது பேயாவது………… உளராதிங்கப்பா……………..
“ சாமி இருக்குல்ல சார்………………….
“ சாமி. இருக்கு, ஆனா முனி,பேயி,பிசாசு.. அதெல்லாம் இல்ல”………
நாங்க, மூவரும் பேசிக்கிட்டு இருந்ததை கவனிச்சுகிட்டு இருந்த டீ… கடைக்காரரு……. அதெப்படி பேய்.பிசாசு இல்லேங்குறிங்க…. கேள்வி…… கேட்டுவிட்டு……… பேயையும்.முனியையும் பார்த்ததையும் அதனிட
மிருந்து தப்பித்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.
நண்பருக்கு அவர்களுடைய கோதாவில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்காததால், என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தார்.
மறுநாள் காலையில், நண்பர் பேப்பருடன் வந்தார். காதில் கிசு கிசுத்தார். காதில் விழவில்லை முழித்தபோது, பேப்பரை காட்டினார்.
“வாய் பேச்சு முற்றி…டீக் கடை அடித்து நொறுக்கபட்டதில் இரண்டு பேர் காயம், நாண்கு பேர் கைது!..”….……….
..