ஆதிக்கசாதி சாதி வெறிக் கூட்டம் என்ன செய்யும் தனக்கு கீழ் உள்ள சாதிகளை அடக்கி ஒடுக்குவதோடு. தன்சொந்த
சாதியைச்சேர்ந்த வறியவர்களையும் ஆதிக்க சாதிவெறியுடனே அடக்கி ஒடுக்கி ஆண்டுவரும்
அந்த ஆதிக்கசாதிவெறி கூட்டம் மாதிரியே, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் இருக்கும் சாதிவெறி.ஆதிக்க
கூட்டமும் தனக்கு கீழ் உள்ள சாதியையும் தன் சாதியைச் சேர்ந்த வறியவர்களையும் அடக்கி ஒடுக்கி தன்னை
மேலானவாக காட்டிக் கொள்ளும்.ஆனால் இந்தக் கூட்டம் தனக்கு மேல் ஆதிக்கம் செய்யும் கூட்டத்தை மயிரளவுக்குக்
கூட எதிர்த்தது கிடையாது. அவர்களின் காலை நக்கும். நக்குவதற்கு வாய்ப்பு இல்லையென்றால் வலியச் சென்று
பல்ளிலிக்கும் ரெம்ப ஒட்டி உறவாடும். உதாரணமாக சொல்வதென்றால். தருமபுரியில் நடந்த நிகழ்ச்சிக்குப்பின் திருகுமாவளவன் ராமதாசுவிடம் பவ்வியமாக நடந்து
கொளவது மாதிரி……………
திருகுமாவளவன் சாதியைச் சேர்ந்த ஒரு கூட்டம், சிறுசுகளைத்தவிர ஆண்பெண்களைச் சேர்த்து அறுபது பேர் கொண்ட உறவினர்,மற்றும் குடும்ப உறுப்பினர்களை கொண்ட கூட்டம் ஒன்று., எட்டு பேர் கொண்ட ஒருகூட்டு குடும்பத்தை பல தொல்லைகளக்கு ஆளாக்கி தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டு வருகிறது.. ஆனால் இந்த அறுபது பேர் கொண்ட கூட்டம், அதே தெருவில் வசிக்கும் ஒரே ஒருஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைக்கண்டு, வாய்பொத்தி.மெய்பொத்தி எது நடந்தாலும் தெரியாதமாதிரி நடித்துக் கொண்டு கூலைக் கும்பிடு போடுகிறது.
ஒரே தெருவில் ஒரே சாதியாக வசித்து வரும் அந்தக் கூட்டத்தின் ஆட்டம் பாட்டம் அதிகாரம் அந்த தெருவுக்குள்
மட்டும்தான். வெளியில் , வேறு தெருக்களில் மூச்சு விடுவதுக்கூட தெரியாது.
பல குடும்ப உறுப்பினர்களை கொண்ட அறுபது பேர் கொண்ட கூட்டம் அவர்களுக்கு நெருங்கிய உறவு கொண்ட, ஒரு
குடும்பத்துக்கு எண்ணிலடங்கா தொந்தரவு கொடுத்து சின்னபின்னமாக்கியது அந்த ஒரு குடும்பத் தலைவர் மாடு வளர்த்து பால் கறந்து வளர்ந்து வருவதை பிடிக்காமல், அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம், மாட்டு சானம் வீசுது, மாடு வளர்ப்பதால் கொசு கடி தாங்கமுடியவில்லை, மாட்டுத்தண்ணி என் விட்டுக்கு வருது என்று இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி அடிதடி சண்டையிட்டு போலீஸ் ஸ்டேசன் புகாரில் அறுபதுபேரும் கையெழுத்து
போட்டு அவரை தொழில் செய்து வாழ விடாமல் செய்து விட்டார்கள்.
அறுபது பேர்களை எதிர்க்க முடியாத அவர் தன் வீட்டையும் மாட்டையும் உசிலம்பட்டி வகையாறாவைச் சேர்ந்த ஒரு
ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவருக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு செத்துப்ப்போனார்.அதை வாங்கிய ஆதிக்கச்சாதிக்காரோ வித்தவரின் மாட்டுத் தொழுவத்திலே தன் மாட்டையும் கட்டி மாட்டுத் தொளுவமாக்கினார். வித்தவர் மாட்டைவிட வாங்கியவர் மாடு தண்ணீராக கழியும் ஒவ்வொரு வீட்டின் முன்னும் பேளும் மூத்திரம் கழியும். பாதையில் படுத்துக்கொண்டு நகராமல் சண்டித்தனம் செய்யும். இரவு வேளையில் ஒவ்வொரு விட்டுக்குள்ளும் புகும்.
இன்னொரு ஆதிக்க சாதி வாரிசாக காட்டிக் கொள்ளும் அந்த அறுபது பேர் கொண்ட கூட்டம் சிறிய மூச்சுகூட
விடுவது கிடையாது. ஆதிக்கசாதிக்காரரிடம் யாராவது ஒருத்தர் பவ்வியமாக சொன்னால் என்னாங்கடா……….. ன்னுதான கேட்பார் அடுத்து அறுபதுபேர் கூட்டம் ஒன்னுமில்ல ஒன்னுமில்ல என்று மழுப்புவார்கள் பிறகு அதப் பத்தி மூச்சே விடமாட்டார்கள்…….
ஒரு ஞாயத்துக்காககூட அவரை எதிர்த்துப்பேச துப்பில்லாத முதுகெலும்பு இல்லாத அறுபது பேர் கூட்டம் ஒரே சாதியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதிக்கம் செய்து வீரத்தை காட்டிக் கொண்டு இருக்கிறது. எட்டு பேர்கள் கொண்ட குடும்பத்தலைவரோ தெருவைவிட்டு ஓடிப்போகாமல் இடத்தை அடிமாட்டு விலைக்கு விற்காமல் திருகுமாவளவனின் கூட்டம் கொடுக்கும் இம்சைகளுக்கு-இன்னல்களுக்கு வருத்தப்பட்டு சோர்ந்து போகாமல் களத்திலே நின்று அந்தக் கூட்டத்தை எதிர்த்து நேர்மையான வழியிலே போராடிக்கொண்டு வருகிறார்.
ஆதிக்கசாதி வெறியர்கள் தன்சாதி வறியவர்களிடமும் தனக்கு கீழுள்ள சாதிகளிடம் சாதிவெறிகாட்டி தனக்கு மேல் மற்றவர்களை வளரவிடாமல் தடுப்பது மாதிரி, தாழ்த்தப்பட்ட சாதிக்குள்ளும் சாதிவெறி, அடக்கி ஒடுக்கும் வெறித்தனமும் இருப்பதும், மேல் சாதிகளை சேர்ந்தவர் ஒருவர் எவ்வளவுதான் தார்க்குச்சியை. கொண்டு குத்தினாலும்
பெரிசு படுத்தாமல் பொய்யாக மற்றவர்களிடம் தன்வீர பராமக்கித்தை புளுகி தள்ளும் திருகுமாவளவனின் கூட்டத்தை அம்பலப்படுத்த்தான் இந்த“ .திருமலை நாயக்கர் பொண்டாட்டி மேல் கையை போட்டதால் குடல் தள்ளிப் போனதாக உதார்விட்ட சொரக்கட்டை கதை” சொரக்கட்டை என்பது அது ஒரு வகையான தவளை…திருகுமாவளவனின்கட்சிக் கொள்கையைப் போல
தொடரும்.—