பஜாஜ் ஆலியன்ஸ் இன்ஸ்சுரன்ஸ் கம்பெனிக்கு உழைத்த பணத்தையெல்லாம் கட்டி. அக்கம்பெனிபோடும் நாமத்தைப்பெற்று கவலையின்றி வாழ்வீர்என்று பணம் கட்டி ஏமாந்த அன்பர்களுக்கு பஜாஜ் அலியன்ஸ் நிறுவனம் கூறும் அறிவுரை.
எனக்கு தெரிந்த ஒருவரு, அவரு, அவருக்குதெரிந்தஒருவரின் மூலம் பாஜாஜ் ஆலியன்ஸ்முகவர் மூலம் அந்த முகவர் சொன்னதில் ஆசை கொண்டு.
வருடத்திற்குபணிரெண்டாயிரம் வீதம் எட்டு வருடத்திற்கு கட்டினால் முதிர்வு தொகைஒருலட்சத்து அய்ம்பது ஆயிரம் கிடைக்கும் என்றார்.
எனக்கு தெரிந்தவரும் உழச்சு என்னத்த கண்டோம்இதையாவது சேமிப்போம்.
ஆசையில் அடித்துசெல்லப்பட்டு, கஷ்டத்தோடு மூன்றுவருட்ம்தொடர்ச்சியாக பாலிசி
பணத்தை கட்டிட்டு வந்திருக்காரு.
இடையில் விலைவாசி ஏற்றம் ,வருமானம் குறைவு போன்ற காரணங்களால் இரண்டு வருடம் பாலிசி தொகையை கட்டாமல் விட்டுட்டாரு, குடும்பத்தில் செலவும் வறுமையும் அதிகரித்த
படியால். கட்டியவரையில் உள்ள பணத்தை வச்சு சமாளிக்கலாம் என்ற திட்டத்துடன் பஜாஜ் அலியன்ஸ் நிறுவனத்தை அனுகி இருக்கிறார். பாலிசி எடுத்த பாண்டு பத்தரத்தை சரண்டர் செய்தார். காசோலை வீட்டிற்கு வரும் என்று சொல்லியதைக்கேட்டு காசோலையை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஒரு நாள் காசோலையும் வந்தது. மகிழ்ச்சிடன் வாங்கிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.பண்ணிரெண்
டாயிரம் வீதம் மூனறு வருடத்திற்கு கட்டிய தொகைமுப்பத்தியாறாயிரம். காசோலையில் வந்ததோ.பத்தாயிரம். அதிர்ந்து போயி,நிறுவனத்தில் கேட்டபோது தொடர்ச்சியாக கட்டாததாலும். உங்க சேமிப்பு பணம் சேர் மார்கெட்டில் டவுணாகி விட்டபடியாலும். அதெல்லாம் போக மீதியை அனுப்பி யிருக்காங்க என்றார்கள் இவரும் விடாமல் சேர்மார்கெட்டப்பத்தி
புரிந்து கொண்டதால் பஜாஜ்ஆலியன்ஸ் தமக்கு நாமம் போட்டதை புரிந்து கொண்டார்
பாலிசியில் சேரும் பணம் சேர்மார்கெட்டில் இறக்கி விடப்படும்போது வீழ்ச்சியடைந்தால் நிறுவனம் பொருப்பேற்காது என்றும் அந்த விதிமுறையை ஏற்றுக்கொண்டு கையெழுத்தும் போட்டுள்ளதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டார்.
நாமம் பெற்ற விபரத்தை என்னிடம் கூறி எதுவும் செய்யமுடியாத என்று கேட்டார்.
போலீஸ் நிலையத்தில் அடித்து உதைத்து பெற்ற வாக்குமூலமே செல்லாது என்று நீதீ மன்ற சட்த்தில் இருந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை சட்டமே இப்படிபட்ட கம்பெனிகளுக்கதான் இருக்கிறது என்றும் அரசு துறையான எல்.அய்.சி கொள்ளைக்காரன் என்றால் தனியார் துறைகள் பகல் கொள்ளைக்காரர்கள் என்று எடுத்துரைத்தேன்.
தாராளமயமும், தனியார்மயமும் எப்படியெல்லாம் ஏழை, எளிய,நடுத்தர மக்களை ஆசை வலையில்சிக்க வைத்து ஏமாற்றி கொள்ளையடிக்கின்றன.
நாமும் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும் ஏமாறாமல் இருக்க முடியாது.. ஒரு தடவை
ஏமாந்து அனுபவப்பட்டவுடன் சுதாரிக்கமுடியும் நீங்கள் மட்டும் ஏமாறவில்லை.பலர் ஏமாந்திருக்
கிறார்கள். அதைக்கண்டு ஆறுதல் அடையலாம் என் சொந்த பிரச்சினைகளில் நான் ஏமாந்த
விபரத்தை கூறினேன்.
முகவரரை தேடி விசாரித்தபோது முதலில் சேர் மார்கெட் பற்றி எனக்கு எதுவும். தெரியாது
பின்னர்தான் தெரிந்து கொண்டேன் என்றார் நான் எதுவும் பாலிசி போட்டு ஏமாந்திருக்கனா
என்று கேட்டார்.
நான் பிறந்ததலிருந்து என் வாழ்க்கையே போராட்டம் தான். நாளைய வாழ்க்கையை எண்ணி என்னால் சேமிக்க முடியுமா? என் பிரச்சனையெல்லாம் உங்களுக்கு தெரியுமே! எப்படிடா சமாளிக்கிற என்று எத்தனை தடவை என்னை கேட்டு இருப்பீங்க என்றேன்.
அவர் எதிர் கேள்வி எதுவும் கேட்காமல் தன் நெற்றியை
பலமாக துடைத்துக்கொண்டார்….