விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூரை சேர்ந்த ஆண்டாள்என்ற பெண்மணி வழக்கமாக தன்னை தேடிவரும் பக்தகேடிகளு க்கு வேண்டும் வரங்களை அருள்பாவிக்கும்வேலைகளை முடித்தவிட்டு இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கதவை தாழ்போட்டுவிட்டு தூங்க சென்றாள்.இந்த ஆண்டாள் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில்…கதவை திறக்கும் பெரும்ஓசையில் தூக்கம் கலைந்து விழித்து “யாரது இன்னநேரத்துல” எனன கேட்டபோது,
ஆண்டாளின் மொய்காப்பாளர் தக்காரும், எஜமான, எஜமானி மற்றும் அவுகஅல்லக்கைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்
காவலர்களும் மெட்டல் டிடெகடர் கருவியுடன். ஆண்டாளின்பெட்ரூம்,ஆண்டாளின் பாத்ரூம் போன்ற இடங்களிலும்அடுத்த அறையில் தங்கியிருந்த பெத்த பெருமாள்,சக்கரத்தாழ்வர்களின் அறைகளிலும் தீவிர
சோதனை செயதார்கள்.

தூங்குதா,முழிச்சிருக்கா என்று தெரியாத ஆண்டாளிம் ஓன்னுமில்லேங்கம்மா, உங்க வீட்டுக்கு வெடிகுண்டு வச்சுயிருக்கிறதாக? சென்னையிலுள்ள காவல் தலைமை அலுவலகத்துக்கு ஈஈஈஈ-மெயில் வந்துச்சும்மா, அதான் உங்க பாதுகாப்புக்காக சோதனை செய்தோம்மா, வெடிகுண்டு இல்லேம்மா, நீங்க தூங்குங்கம்மா என்றனர்.இதேப்போல,மதுரைமாவட்டத்திலுள்ள மீனாட்சிஅம்மா வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் சிக்காததாலும் ஏற்பாடு செய்ய முடியாததாலும் மீனாட்சிஅம்மாவின் வீட்டுக்கு வருகிறவர்களின் பைகளில் ஏதாவது கிடைக்கமா? என்று சோதனை செய்தனர்.

தொடர்ந்தார்போல் தமிழகத்து தலைநகராமாம் சென்னை போயசு தோட்டத்திலும் கொலு விற்றியிருக்கும் ரங்கநாயகி
யின் பங்களாவிலும், கக்கூஸ், பாத்ரூம், பெட்ரூம், என அனைத்து இடங்களிலும் துருவித் துருவி சோதனை இட்டனர்

ஒரே நேரத்தில் இந்த மூவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நள்ளிரவிலிருந்து சோதனை மேற்ககொண்டதாக இண்டர்டர்போல் ரேஞ்சு தமிழக போலீசார் தெரிவித்தனர்.
ஆண்டாளும்,மீனாட்சியும் எதுக்கு வம்புன்னு பதினெட்டு முழம் சேலையால் உடல் அங்கங்கள் வெளிய தெரியாமல் இருக்க உடல்முழுக்க போர்ததி ,மூச்சு விடாமல் எதையும் கண்டு கொள்ளாமல்நேராக வெறித்த வண்ணம் இருந்தனர்.
.