(ஒலகத்த சுத்தி பார்க்க புறப்பட்ட காக்கா!!!..)………..
சிங்காரம் என்ற காக்கைக்கு சிங்காரி என்ற காக்கை பொண்டாடியாக இருந்தது. இருந்தாலும் சிங்கார காக்கைக்கு சபல புத்தி அதிகமாக இருந்த்தினால் பிங்காரி என்ற காக்கையை வைப்பாட்டியாக வைத்துக்கொண்டது.
சிங்கார காக்காவுக்கு இருக்கிறத விட்டுட்டு இல்லாத்திலே ஆசை அதிகம். அந்த ஆசையினாலே,சிங்காரி காக்காவை சரிவர கவனிப்பதில்லை. பிங்காரி உடனே அதிக நேரத்தை கழித்தது..
ஒருநாள் பிங்காரி காக்காவுக்கு ஒரு ஆசை ஏற்ப்பட்டது. தன் ஆசையை
சிங்காரகாக்காவிடம்சொல்லியது.“மாமா,மாமா,ஒங்களுடைய ஆசையெல்லாம் நான் நிறைவேத்துறமாதிரி ”என் ஆசையை நீங்க நிறைவேத்தனும் மாமான்னு கொஞ்சி குலாவியது. பிங்காரிமேல் மோகம் தீராத சிங்காரம் அந்த ஆசை என்னவென்று சொல்லு.அதை உடனே நிறைவேத்துறேன் என்றது.
இந்த ஒலகத்த ஒரு தடவ சுத்தி பார்க்கனும் மாமா, அதுதான் என்
ஆசை மாமான்னு சொல்லுச்சு,…
சிங்காரமும் பிங்காரியும் ஒலகத்த சுத்தி பாக்க போற விசயம் சிங்காரத்தின் பொண்டாட்டி சிங்காரி காக்காவுக்கு தெரிஞ்சது. .உடனே, சிங்காரி, சிங்காரத்திடமும், பிங்காரியிடம், என்னையும் சேத்து கூட்டிட்டு போங்க ஒலகத்த சுத்தி பாத்ததிலாவுது நான் கால்த்த ஓட்டிடுறேன் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொண்டது. சிங்காரம் பிங்காரிய பார்க்க, பிங்காரி வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டது.
நல்ல நாளில். சிங்காரம்காக்கா, சிங்காரியை முதுகிலும் பிங்காரியை வாயிலும் கவ்விய படி ஒலகத்த சுத்திப்பாக்க கிளம்பியது. ஒலகத்த சுத்திக் கொண்டு மகாசமுத்திரத்தின் மேல் பறந்து கொண்டு வந்தபொழுது.
சிங்காரி காக்கா, நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன் என்று முன்பு இருந்ததை சிங்காரத்திடம் சொல்லியது. சிங்காரம் காக்காவோ.. சிங்காரியை வாயில் வைத்திருந்ததால் பதில் எதுவும் சொல்லாமல் வெறுமனமே ம்ம்ம…………… ம்ம்ம்……………. ம்ம்ம்…….என்றே சொல்லி வந்தது.இதைப் பொறுக்காத பிங்காரி காக்கா“ஆமான்னு தான் சொல்லு மாமா”ன்னு சொல்லியது. பிங்காரியின்னு சொல்லுக்கு மறு பேச்சு சொல்லாத சிங்காரம் காக்கா , வாய தெறந்து “ஆமான்னு ”சொன்னுதான் தாமதம்… சிங்காரத்தின் வாயிலிருந்து நழுவி மகா சமுத்திரத்தில் விழுந்தது பிங்காரிகாக்கா ..
வைப்பாட்டிய இழந்த சிங்கார காக்கா சிங்காரியிடமே மீதி வாழ்நாளை கழித்து வந்தது.
இந்த கதை பட்சி களுக்கு மட்டுமே உரித்தானது. மனிதர்களுக்கு அல்ல.
நீதி–பட்சி சாதி நீங்க. எங்க பகுத்தறியாவதவர்களை பார்க்காதீங்க……..