எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான சில நிகழ்வுகள் என் வாழ்க்கையில் இருப்பதனால்தான். அவற்றை பதிவுகளாக பதிவுட்டுள்ளேன். என்னுடைய படிப்பு, வளர்ப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவை பாராட்டும் படியாகவோ, வெறுத்து ஒதுக்கும்படியாக எதுவுமில்லை.
நான் என்னுடைய 50வது வயதில்தான் இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற பிளாக்கர் வலைப்பதிவை 23.3.2011 ல் தொடங்கினேன். ஜனவரியில்தான் பிஎஸ்என்எல் இணைய இணைப்பும் பெற்றேன்.29.3.2011ல் தமிழ்மணத்தில் இணைத்து நானும் ஒரு தமிழ் பதிவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றேன்
அதுமுதல் எனது வலிகளையும் சமூகத்தின் வலிகளையும் எனது கண்ணோட்டத்தில் பதிவிடத் தொடங்கினேன.
மேலும் என்னைப்பற்றி தெரிய அறிய விரும்பினால் என் வலைதள்த்தில் அனுபவம் குறிச்சொல்லில் உள்ள பதிவில் படித்துக் கொள்ளலாம்.
FreeTamilEbooks குழுவினருக்கு என் நன்றியை யும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!!!