"

8

தேங்கி நிற்கும் நாட்கள்

 

உன்னை எண்ணியே எழுதும் எழுத்துக்கள் கவிதைகளாய் ஓடிவிட …

உன்னை நினைத்தே  வாழும் நாட்கள் கவலைகளாய்  தேங்கி நிற்கிறதே ….


 

காத்திருப்பேன்!

 

சொல்லிய காதல் சில நேரம் வருங்காலமாக மாறலாம் …

சொல்லிய காதல் சில நேரம் இறந்தகாலமாக மாறலாம் ….

சொல்லாத காதல் என்றும் நிகழ்காலமே …

காத்திருக்கும் எந்த காலத்திலும் !!!


 

 

அவளுக்கு பிடித்ததும் பிடிக்காததும்

 

சூரியன் பிடிக்குமாம் ஒளி பிடிக்காதாம் !

மயில் பிடிக்குமாம் தோகையை பிடிக்காதாம் !

விண்மீன்கள் பிடிக்குமாம் மின்னுவது பிடிக்காதாம் !

மலர்கள் பிடிக்குமாம் தேன் பிடிக்காதாம் !

இயற்கை பிடிக்குமாம் வியக்க பிடிக்காதாம் !

மழை பிடிக்குமாம் மேகம் பிடிக்காதாம் !

வண்ணங்கள் பிடிக்குமாம் வானவில் பிடிக்காதாம் !

கவிதை பிடிக்குமாம் ரசிக்க பிடிக்காதாம் !

என் பேச்சுக்கள் பிடிக்குமாம் கேட்க பிடிக்காதாம் !

என் பார்வை பிடிக்குமாம் பார்க்க பிடிக்காதாம் !

என்னை பிடிக்குமாம் என் காதலை  பிடிக்காதாம் !