11
உண்மை
உண்மையில் நான் ஹரிச்சந்திரன் இல்லை !
உன் அழகைப் பற்றி வர்ணிக்கும் போது மட்டும் தவிர !!
சுத்தம்
கங்கை அசுத்தமாகிவிட்டதாம் !
ஒருமுறை நீ அதில் குளித்துவிட்டு போ …. சுத்தமாகிவிடும் !!
கவிதை நோட்டு
உன் பெயரை என் நோட்டில் எழுதி சென்றாய் !
அன்று முதல் இன்று வரை அதுவே என் முதல் கவிதை நோட்டு !!
பெயர்
நீயோ உன் பெயர் வேறேதோ சொல்கின்றாய் !
எல்லோரும் உயிர் பறிப்பதெல்லாம் எமன் என்கிறார்கள் !!
காலம்
காலம் பொன் போன்றதாம் !
எனவே அதை உனக்கு அலங்கரித்தே ரசிக்கிறேன் !!