14
எங்கும் நீ
என்னையே பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று சொல்கிறாயே !
எங்கும் நீயாகவே தெரிகிறாய் இதை நான் எங்கு போய் சொல்வது ??
நீ… நான்
விண்ணாக நான் மழையாக நீ !
கோபுரம் நான் சிலையாய் நீ !
கரும்பாக நான் தேனாக நீ !
கடலாக நான் அலைகளாய் நீ !
பள்ளமாக நான் மேடாக நீ !
உடலாக நான் உயிராக நீ !
நீயின்றி நானில்லை … நான் இருந்தாலும் மதிப்பில்லை !!!
காதல் கணிதம்
உன் விழி வட்ட பாதையில் என் காலத்தை கழித்து கொண்டிருக்க..
நீ என் காலத்தை பெருக்கிக்கொண்டே போனால் என்ன அர்த்தம் ??
முடியாதவை
உன் அழகு …
நீரின் சுவை …
இவ்வுலகில் யாராலும் விவரிக்க முடியாதவை !!