"

17

 என் பெயர் …

நான் மொழி வெறியன் அல்ல …

மொழியின் சுவைக்கு அடிமையானவன் !

 

நான் மதத்திற்கு எதிரானவன் அல்ல…

சமரசத்தை என்றும் விரும்புபவன் !

 

நான் பிற கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகாதவன் அல்ல …

இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவன் !

 

நான் செயற்கையை வரவேற்காதவன் அல்ல …

இயற்கையை அணு அணுவாய் ரசிப்பவன் !

 

நான் வெற்றிக்கு உழைக்காதவன் அல்ல …

சிறு உணர்ச்சிக்கும் வீழ்பவன் !

 

கடவுளை அடுத்து நான் மட்டுமே

“வேறு உலகில் அதிக நேரம் வாழ்பவன் ”

கற்பனைக்கு அப்பாற்பட்டவன் …

 

என் பெயர் கவிஞன் !!

-தொடரும்