"

1

திருவாரூர் மாவட்டம்

3/41, சி. பிரதான சாலை,

கட்டிமேடு-614716

அலைபேசி :9443320954

இரா. ஜெயராமன்

மாநில ஒருங்கிணைப்பாளர்

நமது நெல்லைக் காப்போம்

வாழ்த்துரை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வாழ்வோடு இணைந்துவிட்டது. நெல் நமது முக்கிய உணவு மட்டுமல்ல; நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய விளைபொருள். பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு பயணித்துக் கொண்டிருப்பது! கிராமத்தின் செல்வச் செழிப்புக்கு நஞ்சை நிலங்களே அளவுகோல்களாக இருந்தன. அதிக அளவு நஞ்சை நிலத்தைப் பெற்றிருந்தவர்களே செல்வந்தர்களாக மதிக்கப்பட்டிருந்தனர்.

நெல், உற்பத்தி முதல் விற்பனை வரை பல கோடி மக்களுக்கு வாழ்வளித்து வந்தது. நமது வாழ்வாதாரமாக இருந்துவந்த நெல் இப்பொழுது நம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறது மூன்று நேரம் அரிசி உணவை உண்ணும் நாம், உற்பத்தி முதல் விற்பனை வரை நெல் சந்தித்து வரும் பிரச்சனைகளை அறிய கொஞ்சமும் ஆர்வம் கொள்ளவில்லை! நிலம் படும் பாடு

பிற விளைபொருட்களோடு ஒப்பிடும்பொழுது இன்றைய காலகட்டத்தில் நெல் ஓர் இலாபகரமான பயிர் இல்லை. இடு பொருட்களின் விலை, கூலி உயர்வு மற்றும் ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது.

நெல் !

அதனால் மாற்றுப் பயிருக்கு மாற்ற வேண்டிய கட்டாயம்

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கும் வீட்டு

மனைகளுக்கும் நஞ்சை நிலங்களே தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன.

1950இல் தமிழகத்தில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 76 இலட்சம் ஏக்கராக இருந்ததாகவும், அது இப்பொழுது 54இலட்ச மாகக் குறைந்துவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் நெல் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து வருவது நிதர்சனமான உண்மை. இந்நிலை தொடர் வதால் அரிசியை இறக்குமதி செய்ய அரசு யோசித்து வருவதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

பசுமைப் புரட்சியின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம். உயர் விளைச்சல் என்ற மாயைதான். மாயையில் வீழ்ந்தோர் இரசாயன உரத்திற்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் அடிமையானர்கள்.

இரசாயன உபயோகம் நிலங்களை உயிரற்றதாக்கி விட்டது. சுற்றுச்சூழல் மாசுபட்டுப்போனது இரசாயனத் தாக்கம் இல்லாத அரிசியோ பருப்பு வகைகளோ பழங்களோ காய்கறிகளோ இல்லை என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாற்பது வயதைக் கடக்கும் முன்பே மருத்துவச் செலவுக் கென்று பெரும்தொகை செலவிடவேண்டியநிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தெருவுக்கு நான்கு மருத்துவமனைகளுக்கு அவசியம் வந்துவிட்டது.

சூழ்நிலைப் பயிர்

உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப பலவித நெல் ரகங்கள் இருந்தன. உவர் நிலத்திற்கென ஒரு ரகம் காற்றை எதிர்த்து நிற்க ஒரு ரகம்! வறட்சியைத் தாங்கிக் கொள்ள ஒரு ரகம் ! பனிப்பொழிவைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு ரகம் எத்தனை நாட்கள் வெள்ளம் தேங்கி இருந்தாலும் பாதிக்கப்படாத ரகங்கள் மருத்துவக் குணம் கொண்ட ரகங்கள் ஒவ்வோர் உணவு பதார்த்தத்திற்கும் ஒவ்வொரு ரகம்! இவ்வாறு ஆயிரக்கணக்கான நெல் ரகங்கள் தமிழகத்தில் இருந்தன. இந்தியா முழுமைக்கும் இலட்சத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்ததாகத் தெரிகிறது.

அவை அனைத்தையும் பசுமைப் புரட்சிக்குப் பலிகொடுத்து விட்டோம். ஆங்காங்கே ஒரு சில ரகங்கள் மட்டுமே எஞ்சி

யுள்ளன. இன்றைய நவீன விஞ்ஞானத்தில் ஒரு புதிய நெல் ரகத்தை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டு 10 முதல் பதினைந்து வருடங்களாகி விடுகின்றன நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான ரகங்களுக்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் தவிர சத்து நிறைந்த ரகங்களை உருவாக்குவ்தில் இன்றைய விஞ்ஞானிகள் ஏனோ பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

உறவும் உரிமையும்

கிராமங்கள் தோறும் எண்ணற்ற ரகங்கள் இருந்தன. ஆனால் எந்த ஒரு நெல் ரகத்திற்கும் யாரும் உரிமை கொண்டாடியதில்லை. சீரகச் சம்பா எனக்குச் சொந்தம், மாப்பிள்ளைச் சம்பா அவருக்குச் சொந்தம் என்று உரிமை பாராட்டியதில்லை. விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய நெல் விதைகளைத் தாங்களே சேமித்து, வைத்துக் கொள்வதும் தங்களுக்குள்ளே பரிமாற்றம் செய்து கொள்வதும் நமது கிராமங்களின் நடைமுறை.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்று முறையில் விதைகளை உற்பத்தி செய்து உரிமை கொண்டாடி மார்க்கெட்டில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. அந்த விதைகளை அவர்களின் நிபந்தனைகளை மீறும் விவசாயிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

அந்நிய விதைகள் நமது இறையாண்மைக்கும் சுற்றுச் சூழலுக்கும் உடல்நலத்திற்கும் எதிரானது.”

பசுமைப் புரட்சியால் நமது நெல் ரகங்களை இழந்தோம். மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தால் விதை உரிமைகளையும் இழக்க இருக்கின்றோம்!

மகளிரும் மல்லிகைப் பூ அரிசியும்

அரிசியில் முகம் பார்க்க வேண்டும் குக்கரில் வெந்த சோறு மல்லிகைப் பூப்போல இருக்க வேண்டும் வேகமாக வேக வேண்டும் இவையெல்லாம் அரிசியைத் தேர்ந்தெடுக்க நவீன இல்லத்தரசிகள் முன்வைக்கும் நிபந்தனைகள். அதன் விளைவாக நாற்பது வயதுக்கு மேல் மூட்டுவலி மற்றும் சர்க்கரை நோய் இல்லாதவர்களைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டே இருக்கிறது.

அரிசியில் நமக்குத் தேவையான மாவுப் பொருள் வைட்டமின் புரோட்டின் இரும்பு மக்னீஷியம் போன்ற தாது பொருட்கள் ஏராளம் உள்ளன. ஆனால் நடைமுறையில் அரிசியை நன்றாகத் தீட்டி, இந்தச்சத்துப் பொருட்களை எல்லாம் நீக்கிவிட்டு வெறும் சக்கையைத்தான் உண்டு வருகிறோம்.

உலகில் சத்துணவுக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தையாக இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களில் 60%க்கு மேல் அனிமிக்கால் (இரத்த சோகை நோய்) பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நெல்லிலிருந்து உடல் ஆரோக்கியத்திற்குத் தேவை யான சத்து நிறைந்த அரிசியைத் தயாரிக்க முயலவேண்டும்.

தணல் (Thanal)

இவ்வாறு நெல்லானது உற்பத்தி முதல் நுகர்வு வரை பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. இந்தச் சமயத்தில் கேரள மாநிலம் திருவனந்த புரத்தை மையமாக வைத்துச் செயல்பட்டு வரும் தணல் அமைப்பு நமது நெல்லைக் காப்போம்என்ற முழக்கத்தை முன்வைத்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். – .

உஷாரான ஊஷா ,

அரிசியில் முகம் பார்க்கநினைக்கும் மகளிரின் மடமையைப் போக்க, நமது பாரம்பரியநெல் ரகங்களைப் பாதுகாக்கதன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் நமது நெல்லைக் காப்போம் பிரச்சாரத்தின் தேசியஒருங்கிணைப்பாளர் கேரளாவைச் சேர்ந்ததிருமதி எஸ். உஷா இவரோடு இணைந்து பணியாற்றும் தணல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். பூரீதர் இயற்கை வேளாண் விஞ்ஞானி முனிவர் கோ. நம்மாழ்வார் கிரியேட் அமைப்பின் நிர்வாகஅறங்காவலர் திரு. ஆர். பொன்னம்பலம் போன்றோரெல்லாம் இயற்கை வழி வேளாண்மையின் அவசரஅவசியத்தை நுகர்வோர் மத்தியில் பரப்பி வருகின்றனர۔

கிருஷ்ண பிரசாத்

சகஜ சம்ருதா (Sahaja Samrudha) அமைப்பு, கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நீெல் ரகங்களைப் பாதுகாத்து வருவதோடு இயற்கைவழி வேளாண்மை முறையான விதை நெல் சேகரிப்பு போன்ற பயிற்சிகளை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. கிருஷ்ண பிரசாத் அவர்கள். இவர்கள் வழியில் விதைப்போம் அறுப்போம்என்ற முழக்கத்தோடு சிவப்பு அரிசியின் மகத்துவங்களை மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நாடக நடிகரான திரு.

.கரிகாலன் அவர்கள்.

மனித சக்தி

இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர் கோ. நம்மாழ்வார் சொல்லும் உழாத வேளாண்மை முறையைப் பற்றிக்கொண்டு விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே பயன்படுத்தும் இவர், தனது எழுத்தாற்றலைக் கொண்டு தன் அனுபவத்தில் கண்டதையும், பல பெரியவர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையிலும் பாரம்பரிய நெல் ரகங்களின் அருமை பெருமைகளை இந்த நூலின் மூலம் பறைசாற்றி உள்ளார். இயந்திர மயமாக்கலைத் தவிர்த்து விவசாயத்தில் மனிதசக்தியை நம்பி புதிய பாதையில் பயணித்து வரும் இவர் தொகுத்துள்ள இந்த நூலுக்கு அணிந்துரை வழங்க எமக்கு வாய்ப்பளித்த கங்காராணி பதிப்பகத்தார்க்கு நன்றி சொல்லும் இந்த வேளையில், இந்த நூல் இன்றைய கால கட்டத்திற்கு உழவர் பெருமக்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்ற நம்பிக்கையோடு, ‘நமது நெல்லைக் காப்போம்என்ற முழக்கத்தோடு விதைப்போம் அறுப்போம் வெற்றி பெறுவோம். வாழ்க உழவர் வளர்க இயற்கை வழி வேளாண்மை!

இவண்,

இரா. ஜெயராமன்

பயிற்சி இயக்குநர் கிரியேட்