4
நம் நாட்டின் முதன்மைத் தொழில்; முக்கியத் தொழில் விவசாயம். ஆனால், அந்த விவசாயம் இயற்கை முறையி லிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டது.
இதன் விளைவு? மனிதன் உண்ணும் உணவில் சத்து இன்மையும், பயிருக்குப் போடப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விஷத்தன்மை பயிராகும் உணவுப்பொருளிலும் கலந்து, நம்மை நிரந்தர நோயாளிகளாக மாற்றிவிட்டன! . . .
மிக நீண்ட உறக்கத்திற்குப்பிறகு, இப்பொழுதுதான் இயற்கைவழி வேளாண்மையின் பக்கம் மக்கள் கவனம் திரும்ப ஆரம்பித்துள்ளது.
வரவேற்கத்தக்க மாற்றம் இது.நாடகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர் நண்பர் நாட்க நாடி திருத்துறைப்பூண்டி ச. கரிகாலன் அவர்கள்.
இவர் தற்போது இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபாடு கொண்டுள்ளார். இயற்கைவழி வேளாண்மையில் மக்கள்
கவனம் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூலை எழுதி யுள்ளார். இதனை வெளியிட அனுமதித்த அவருக்கு மிக்க நன்றி!
விவசாயத்தில் நாம் ஏமாந்ததுபோல், மொழியிலும் நாம் ஏமாளிகளாகவே இருந்துள்ளோம். நமக்கே உரித்தான தமிழ் எண்களை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதனைத் தெரியவைக்க நாம் என்ன செய்தோம் ?
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த நிலையில், ‘எங்கள் பதிப்பகத்திலிருந்து வெளிவரும் அனைத்து நூல்களுக்கும்
பக்க எண்களாக, இனி தமிழ் எண்கள்தான் தரப்படவேண்டும்? என்று முடிவெடுத்தோம். தமிழ் எண்கள் ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது என்பதால், அடைப்புக்குறிக்குள் அரபு எண்களையும் கொடுத்துள்ளோம்.
வாசகப் பெருமக்கள் இதனை ஏற்று தமிழ் எண்களையும் தெரிந்துகொண்டு, வழக்கத்தில் பயன்படுத்த வேண்டுகிறோம். நமது அடையாளத்தைப் பாதுகாக்கும் பணியில் உங்களுடன் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம்.
– பதிப்பகத்தார்