5
அரிசி! நமது உணவுகளின் அரசி நெல்லை உரலில் இட்டுக் குத்தி உமி போக்கி எடுப்பதே அரிசி. இது பச்சரிசி என்று சொல்லப்படுகிறது. – .
நெல்லைச் சிறிது வேக வைத்து உலர்த்தி, உரலில் இட்டு, குத்தி உமி போக்கி எடுத்தால் அது புழுங்கல்ரிசி.
நெல் சாதாரணமாக இந்தியா, பர்மா (இன்றைய மியான்மர்), சயாம் (இன்றைய இந்தோனேசியா) முதலிய நாடுகளில் சிறப்பாகப் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் பயிராகும் நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியானது ஒரேவிதமாக இராது. நிறத்திலும் உருவத் திலும் கனத்திலும் குணத்திலும் மாறுபாடு காணப்படும். இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வோர் அரிசிக்கும் (நெல் ரகங்களுக்கும்) தனித்தனிப் பெயர்கள் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய உணவு அரிசி, அரிசியை அன்னமாகச் சமைத்தும் குருணையைக் (இதை நொய் என்றும் சொல்வர்.) கஞ்சியாக வடித்தும், மாவாக்கி இட்டலி, தோசை, அப்பம், இடியாப்பம், கொழுக்கட்டை, பொரியுருண்டை, பொரியரிசி,
களி, அரிசிப்பொங்கல், பாயாசம் இன்னும் பலவிதமான சுவைமிக்க பண்டங்களாகச் செய்தும் சாப்பிடுவது வழக்கம்.
இத்தகைய அரிசியின் பெயர்களையும் குணங் களையும் எனக்குத் தெரிந்த வரையில் இத்தொகுப்பின் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்திய அளவில் சுமார் நான்கு இலட்சம் நெல் ரகங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. விவசாயம் முழுக்க முழுக்க வியாபாரமாக்கப்பட்ட நிலையில் கோட்டை கட்டி பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்ட நமது பாரம்பரிய நெல் ரகங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது மறைக்கப்பட்டன.
மறைந்துபோன காலக்கதியால் நாம் மறந்து போன நமது பாரம்பரிய நெல் ரகங்களை நெல் விதைகளைத் தேடிப் பிடித்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இயற்கை ஆர்வலர் பலர். .
பொதுவாக ஒவ்வொரு பதினைந்து கிலோ மீட்டருக் கும் மண்வாகு மாறிவரும். இயற்கைச் சூழல் வேறுபடும் இதைப் புரிந்துகொண்ட நம் முன்னோர்கள் தங்கள் பகுதிக்கு ஏற்ற நெல் ரகங்களை இனங்கண்டு பயரிட்டுள்ளனர்.
சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு பதினைந்து கிலோ மீட்டர் பகுதிக்கும் வெவ்வேறு வகையான நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
ஒவ்வொரு நெல் ரகத்திற்கும் வெவ்வேறு குணம் சன்ன ரகம், மோட்டா ரகம், நீண்ட காலப் பயிர் குறுகிய காலப் பயிர் என நான் அறிந்தது, பார்த்தது, படித்தது, கேட்டுத் தெரிந்தது என எல்லாவற்றையும் இதன்மூலம் பதிவு செய்வது என் கடமையாகும்.
தற்போது தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் புழக்கத்தில் இருப்பதாக அறியப் பட்டுள்ளது.