"

9

நாட்டு மாட்டுச் சாணம்

மண்ணில் மண்புழு வளரவும் நுண்ணுயிர்கள் பெருகவும் சாணம் பயன்படுகிறது.

நாட்டுமாட்டுச் சாணம் என்றால் மண்புழுவுக்குக் கொண்டாட்டம். சாணத்தோடு நாட்டு சர்க்கரை சேர்ந்தால் இரட்டிப்புச் சந்தோஷம்.

சாணம், சர்க்கரை, கோமியம் கலந்து ஒருநாள் ஊறல் போட்டு வயலில் தெளித்தால் நுண்ணுயிர்கள் பெருகும். இந்தக் கரைசல்தான் அமுதக் கரைசல்.

மூடாக்கு

காய்ந்த மண்ணில் மண்புழு வசிக்க முடியாது. ஈரப்பதம் நிறைந்த மண்ணில் மண்புழு வசிக்கும். நிலத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மூடாக்குப் போடுதல் ஒரு வழி.

அறுவடை செய்த நிலத்தை இலைதழைகளைப் போட்டும் வைக்கோலைக் கொண்டும் மூடாக்கு போட வேண்டும். இப்படி நிலத்தைச் சூரிய ஒளிபடாமல் மூடி வைப்பதால் நிலத்தின் ஈரப்பதம் காப்பாற்றப்படும்.

ஈரப்பதம் இருக்கும் நிலையில் மண்புழு மேலும் கீழும் பக்க வாட்டிலும் நிலத்தைத் துளைபோட்டுக் கொண்டே இருக்கும்.

இதனால் மண்ணில் காற்றோட்டம் கிடைக்கும் மழைநீர் வழிந்தோடாமல் மண்ணில் சேகரிக்கப்படும்.

அதோடு மூடாக்கு போடும் இலை தழை, வைக்கோல் மக்கி நுண்கிருமிகளுக்கும் மண்புழுவிற்கும் உணவாகிவிடும்.

பயிர் வளர, உயிர் வளர வேண்டும் என்று சொன்னதன் பொருள்புரிகிறதா?

காய்ந்த கட்டைகளைக் கரையான்கள் அரித்துக் கொடுக்கும் மக்கிய கழிவுகள் மண்புழு உணவாக உட்கொண்டு மண்புழு உரமாக வெளிப்படும்.

இப்படி இயற்கையோடு நமக்கு உறுதுணையாக இருக்கும்போது நாம ஏன் சிரமப்படவேண்டும்.

இயற்கை உழவு

நிலத்தில் மண்புழுக்கள் பல்கிப் பெருகிவிட்டால், நிலத்தை இயற்கையாக உழுது கொடுக்கும்! மண்புழுக்களில் மேல் மட்டப்புழு இடைமட்டப் புழுஅடிமட்டப்புழு எனப் பலவகை உண்டு.

அவை தொடர் ஓட்டம்போல் மண்ணில் சுரங்கங்களை அமைத்து ஒன்றை ஒன்று இணைத்துக் கொண்டு நிலத்தின் மேல்வரும் மழைநீர் இருபதடி ஆழம் வரை ஊடுவிச் செல்ல வழிவகை செய்யப்படுகிறது.

இதன்மூலம் நிலம் இயற்கையாக உழவு செய்யப்படுகிறது. இதனால்தான் மண்புழுவை உழவனின் நண்பன் என்று சொன்னார்கள்.

இயற்கைக்கு மாறாக நாம் செயல்படும்போது தழை உரமாகச் சொல்லப்படும் யூரியா மண்ணில் கரைந்து, நிலத்தடி நீரையும் கெடுக்கிறது. அது வெடியம் உப்பு மூலம் தயாரிக்கப் படுவதால் மண்புழு மற்றும் நுண்ணுயிர்களை அழித்துவிடுகிறது. யூரியா போட்டவுடன் அதிக நீர்ப் பாய்ச்சாவிட்டால் பயிர் கருகிவிடும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பழம் நழுவி பாலில் விழுந்தது

விவசாயத்தில் செலவைக் குறைக்க நாம் முயன்றாலே போதும் வரவு தானாக வரும்!

இன்று இயற்கையை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் * உழவரைப் பார்க்க முடியவில்லை.

இன்சூரன்சை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. வயலில் கால் வைப்பதறகு முன்பே வங்கியில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது.

விவசாயி செய்யும் முதல் செலவே இன்சூரன்ஸ்தான். விதைப்பதற்கு முன்பே நிவாரண கணக்கை நினைவில் பதிய வைக்கிறான்.

தேவைக்கதிகமாக விதைத்துவிட்டு நாற்று பறிக்க கூலி கொடுப்பதற்குள் விழிபிதுங்கி விடுகிறது. நடவு ஆள் வருவதற்குள் நாற்றுக்கு வயதாகிவிடுகிறது.

நட்டபயிர் சற்று இளைப்பாருவதற்குள் இரசாயன மூட்டை வயலுக்கு வந்து விடுகிறது.

வேருக்குக் காற்றோட்டம் கிடைக்காதபடி நீர் தேக்கப் படுகிறது.

செயற்கை உரம் போட்டதும் பயிரில் பச்சையம் கூடுகிறது. பச்சையம் பூச்சிகளுக்கு வரவேற்பு கொடுக்கும் பச்சையத்தைச் சுரண்டித்தின்னும் சைவ பூச்சிகள் விருந்துண்ண வந்து விடுகின்றன. பூச்சியைக் கண்டதும், உழவன் பூச்சிக்கொல்லியைத் தேடி ஒடுகிறான்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததும் பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகள் இறந்து இயற்கையின் நமநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சைவப்பூச்சிகள் பல்கிப் பெருகி விடுகின்றன. மீண்டும் பூச்சிக்கொல்லி இராசாயன உரம் என்று உழவன்

தேவையில்லாமல் செலவு செய்து கடனாளியாகி விடுகிறான்.

இயற்கையின் இரகசியம்

பொதுவாகப் பயிர்கள் வெயிலைப் பயன்படுத்தித் தேவை யான சக்தியை எடுக்கும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளது.

செடிகள் மண்ணில் இருந்து எடுக்கும் சத்து 6% மட்டுமே. ஒரு பயிரின் ஈரப்பதம் 70% காற்றி அளவு. 24% ஆக 70+24=94%. காற்றும் நீரும் பயிருக்குப் பலன் தருகிறது மண்ணில் இருந்து எடுக்கும் தாது 6% எனும்போது நாம் தேவைக்கதிகமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறோம். r *

இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமானால் பயிர் பச்சையாக இருக்கும்போது 70% நீர்ச்சத்து இருக்கிறது. பயிர் முற்றிக் காய்ந்தவுடன் நீர் ஆவியாகி விடுகிறது. 24% காற்றோடு கூடிய வைக்கோல் (சருகு) மிஞ்சுகிறது. அப்போது காற்று அதில் இருக்கிறது. வைக்கோலை (சருகை)ப் போட்டுக் கொளுத்தி விட்டால் கடைசியில் மிஞ்சுவது சிறிது சாம்பல். பொளுத்திய வுடன் காற்று வெளியேறிவிடுகிறது. மண்ணில் இருந்து பயிர் எடுக் கும் 6% சத்து மட்டும் சாம்பலாக மண்ணிலே சேர்ந்து விடுகிறது. இந்த இயற்கையின் சூட்சுமத்தை நாம் புரிந்து கொண்டால் போதும். தேவையற்ற செயவைக் குறைத்து விடலாம்.

செடிக்கு மண் ஒரு பிடிமானம்தான். மண்ணே செடிக்கு ஆதாரமல்ல. மாடி வீடுகளில் சிமெண்ட் காரைகளுக்கு இடையே செடி கொடி மரம் வளர்கிறதே, அதற்கு யார் உரம் போட்டது? யார் தண்ணீர் ஊற்றுகிறார்? காற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு அந்தச் செடிகொடிகள் வளர்கின்றன. ஒற்றை நாட்டு வித்தை

பழம் நழுவி பாலில் விழுந்தாற்பேல் இன்று ஒற்றை நாட்டு நடவு முறை வந்துவிட்டது. –

நெருக்கி நட்டுப் நெல்லைப்பார். கலக்க நட்டு கதிரைப்பார்.

இந்தப் பழமொழி மூலம் நாம் அறிவது என்ன?

நெருக்கி நட்டால் நெல்லை மட்டும்தான் பார்க்கலாம். கலக்க நட்டால்தான். மகசூலைப் பார்க்கமுடியும்.

இன்று ஒரு விதை நெல் அதிகபட்சம் 120 தூர் வெடிக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

120 தூர்களில் கால் கிலோ நெல்மணிகள் கிடைக்கும். கால் கிலோ விதை நெல்லைக் கொண்டு 2 அடிக்கு ஒரு நாற்றுவீதம் நட்டு ஒரு ஏக்கருக்கு நடவு செய்யலாம் என் கண்டறிந்துள்ளார்கள்.

ஆக ஒரு ஏக்கருக்கு கால் கிலோ விதை நெல் போதுமானது. ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளிவிட்டு ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு நடும்போது, 1 கிலோ 600 கிராம் விதைநெல் போதுமனாது. .

இந்த நிலையை நாம் ஏற்றுக்கொள்வதற்குத் தன்னம்பிக்கை வேண்டும்.

விதை அளவு குறைவதால் மகசூல் குறையாது. ஒரு விதை நெல்லில் 120 தூர்கள் வெடிப்பது எப்படிச் சாத்தியமாகிறது.

குட்டி போடும் நாற்று

அதாவது ஒரு தாய் நாற்று, பத்தாவது நாள் ஒரு குட்டி போடுகிறது. அடுத்து அந்தத் தாய் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குட்டி போடுகிறது. அதேபோல் அந்தக் குட்டி நாற்று தனது பத்தாவது நாளில் ஒரு குட்டி போடுகிறது. அதன்பிறகு அந்தக் குட்டி நாற்றும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குட்டி போடுகிறது. இப்படியே கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு மண்டை காய்ந்து விடும். இஃது இயற்கையின் அதிசயம்.

இப்படிக் கிளைக்கும் தூர்களின் எண்ணிக்கை 120 வரை வந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். என்அனுபவத்தில் குறைந்தது ஐந்துதூர்கள் அதிகபட்சம் எழுபதுதூர்கள் வரை பார்த்துவிட்டேன். அதேபோல் கதிருக்கு 300 நெல்மணிகள் இருந்தால் முழு விளைச்சல் என்று சொல்வார்கள்.

நான் எனது வயலில் குறுவையில் 110 நெல்மணி களை எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

நீண்டகாலப் பயிரில் குறைந்தது 150 நெல்மணிகள் அதிக பட்சமாக 240 நெல்மணிகள் வரை எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

ஆக ஒரு ஏக்கர் நடவு செய்ய 1.600 விதைநெல் போதும் என்ற நிலையில், நாம் 40 கிலோ விதைநெல் செலவு செய்கிறோம்.

காய்ச்சலும் பாய்ச்சலும்

விதைநெல் அளவைக் குறைப்பதால் நமக்கு 38 கிலோ விதைநெல் செலவு குறைந்துவிடுகிறது. – அடுத்து நாற்று பறிக்க ஆகும் கூலி மிச்சப்படுகிறது. ஒற்றை நாற்று நடவு முறையில் பெண்களே நாற்றைப் பறித்துக் கொள்வார்கள்.

மேலும் 40 கிலோ விதை நெல்லில் கிடைக்கும் ம்கசூலைவிட 1.6 கிலோ விதைநெல் மூலம் கிடைக்கும் மகசூல் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. .

மேலும் இடைவெளி விட்டு நடுவதால் பயிருக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. நீர் தேவை பல மடங்கு குறைகிறது. காய்ச்சலும் பாய்ச்சலும் என்ற நிலையில் களை அதிகமாகவிடும் என்ற பயம் உள்ளது. –

ஒரு முறைக்கு இருமுறைகளை எடுப்பதால் பயிர் வளர்ச்சி கூடும். மகசூல் அதிகமாகும். களை எடுக்கும் செலவு அதிக மகசூல் மூலம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

மானாவாரி நிலங்களில் காவாளைப் பூண்டு, உளுந்து போன்ற ஊடுபயிர்கள் மூலம் களையைக் கட்டுப்படுத்த லாம் என்றும் கண்ட்றிந்துள்ளனர். . .

இளம் நாற்றுக்கு அரிசியே உணவு

ஆட்கள் பற்றாக்குறை என்று ஒரு காரணம் சொல்லப்

படுகிறது. அதையும் சமாளிக்க சில வழிமுறைகள் உள்ளன.

இன்றைய நிலையில் 30 நாட்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாற்றைப் பறித்து நடும் முறை வழக்கத்தில் உள்ளது. எனது அனுபவத்தில் விதைவிட்ட பத்தாம் நாள் நாற்றாகவே பறித்து நடவு செய்திருக்கிறேன்.

ஓர் இளம் நாற்றானது எட்டு நாள் வரை அரிசியில் உள்ள தாய்வழி உணவை எடுத்துக்கொண்டு வளர்கிறது. அதன்பிறகே அது மண்ணில் உணவைத் தேடும்.

அந்த நிலையில் அந்த இளம் நாற்றை எடுத்து நடவு செய்யும்போது அது உடனடியாக வளரத் தொடங்கிவிடும்.

நாற்றை ஆழமாக நட வேண்டிய அவசியமும் இல்லை. குறிப்பிட்ட இடைவெளியில் சேற்றில் வைத்தாலே போதும். அது சாய்ந்து கிடந்தால்கூட மறுநாள் நிமிர்ந்து நிற்கும். வேர் மண்ணில் செல்லும்போது பயிர் தானாகவே நிமிர்ந்து விடுகிறது. இயற்கையின் இன்னோர் அதிசயம் இது.

இயற்கையைக் கூர்ந்து கவனித்தால், பல அதிசயங் களை நாம் அறியமுடியும். . . .

வாழைக்கன்றைச் சீவிவிட்டால் பத்து நிமிடத்தில் அதன் குருத்து. துருத்திக்கொண்டு மேலே வந்து விடுகிறது.

உயர்ந்த மரத்திலிருந்து மனிதன் குதித்தால் கால் கை முறியும்.

பூனை குடித்தால் புத்துணர்ச்சியோடு ஒடும். இப்படி எண்ணற்ற காட்சிகள் இயற்கையை ரசித்தால் நமக்குக் கிடைக்கும். -. பள்ளியில் இதுக்குப் போயி படிக்கணுமா?

விவசாயம் இயற்கை விவசாயம் இந்த

விவரம் தெரிஞ்சு உழவு செஞ்சா ஆதாயம்

பலனாகும் நல்ல பலனாகும் இதுக்கு

இயற்கை எரு போடுவது பலனாகும்

பயிர் செய்ய மண்வளமே இருக்குங்க அதுல

பாரம்பரிய விதைகளையே விதைச்சிடுங்க. (விவசாயம்)

செயற்கை உரத்தாலே செயலிழந்த வயலெல்லாம்

இயற்கை உரம்போட்டா ஏரு பூட்ட அழைக்குமே

கட்டுமனையாக்கும் நிலை விட்டிடனும் நிலத்தை

தரிசில்லாமச் சாகுபடி செய்திடனும்

இந்தக்கால,விவசாயி வாரிசையே பழக்கலே

சொந்தமா நிலமிருந்தும் சேற்றில் இறங்கி நடக்கலே

சந்ததிக்குச் சத்தில்லாத உணவு தந்தோம் நமக்கும்

சரஞ்சரமாய் நோய்கள் வரவழி வகுத்தோம் (விவசாயம்)

பள்ளியிலே இதுக்குப்போயி படிக்கணுமா? – இல்லே

பயிர்வளரும் நிலத்தில் இறங்கி நடக்கணுமா?

ஆட்டுஎரு அந்த வருஷம் அறியணுமா? – அட

மாட்டு எரு மறுவருஷம்புரியணுமே. (விவசாயம்)

பெண்ணோட குணத்தாலே குடும்பம் நல்லா நடக்குது

மண்புழுவோட செயலாலே இயற்கை உழவும் சிறக்குது

தக்கப்பூண்டு விதைச்சாலே முளைச்சிடுங்க அத

மடிச்சடிச்சா அடிஉரமா ஆயிடுங்க (விவசாயம்)

காற்றாலும் நீராலும் ஊட்டச்சத்து கிடைக்குது

பசுந்தாள் உரம் போட்டா தழைச்சத்தும் இருக்குது

மணிச்சத்தும் சாம்பல்சத்தும் அதுகூட இருக்குது தம்பி

இயற்கையாக நிலம் இங்கே பயிர் வளர்க்க உதவுது விவசாயி

அந்தஸ்தின் அடையாளம் வைக்கோல் போர்

அடி காட்டுல

நடு மாட்டுல

நுனி வீட்டுல

எல்லாருக்கும் தெரிந்த பழமொழிதான் இது. ஒவ்வொரு விவசாயியும் மூன்று வகையினருக்கு

உணவளிக்க வேண்டிய கடமை உள்ளது. இதைத்தான் இந்தப் பழமொழி சுட்டிக் காட்டுகிறது.

வளர்ந்ததும் அடிக்கட்டை நிலத்தில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு மண்புழு கறையான் போன்றவற்றிற்கு உணவாக விட்டு விடுகிறோம்.

நடுப்பகுதி உழவுக்குக் கைகொடுக்கும் மாடுகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.

நுனியில் உள்ள தானியம் வீடு வந்து நமக்கு உணவாகிறது.

அந்தப் பழமொழி நமக்கு இதைத்தான் உணர்த்துகிறது.

அன்று அந்தஸ்தின் அடையாளமாக வீட்டின்முன்குவிக்கப் பட்ட வைக்கோல் போர் விளங்கிற்று. வைக்கோல் போர் இல்லாத வீட்டிற்குப் பெண் கொடுக்க மறுத்த காலம் அது.

மீண்டும் அந்த வசந்த காலம் வரும். அதற்கு எழுபது சதவிகிதம் வைக்கோல் தரும் நமது பாரம்பரிய நெல் ரகங்கள் நமக்கு வேண்டும்.

இயற்கை எரு

வந்திருக்கும் எல்லாருக்கும்

வணக்கம் சொன்னா நல்லாருக்கும்

வயலும் வாழ்வும் நடத்தப் போறோம்

கேட்க வாங்களேன்

வாழ வச்ச வயலு இங்கே

வாடிப்போயி கிடக்குதுங்க

காரணந்தான் செயற்கை

உரம் போட்டதாலே

டிராக்டர் ஒட்டி உழுது வச்சோம் எஞ்சின் போட்டு நீர் இறைச்சோம் எதுவும் இங்கே பலன் தராம

போனதாலே இத

மாத்தணும் மாத்தனும் மாத்தனுங்க

மாறவே இல்லேன்னா நோய்தானுங்க (மாத்தனும்

 

பழைய கால விதை எல்லாம்

மறந்திட்டோம் நம்ம

உழைப்பையெல்லாம் வீணாக்கி

இருந்திட்டோம்

வாடன் சம்பா குடவாழை

மாப்பிள்ளைச் சம்பா நெல்விதை

தேடிப் பிடிச்சு நாம இங்கே

விதைக்கனும் அதுல

இயற்கை உரம் போடணும்

எல்லாருக்கும் தெரியனும்

ரசாயன உரத்தை நாம மறக்கணும் இந்த

ரசாயன உரத்த தாம ஒதுக்கனும் (மாத்தனும்

மண்ணுவளத்தை நாம

இங்கே காக்கணும் இதுல

மரபணு விதைகளையே நீக்கனும்

இனிமேல இயற்கை எரு

போடலன்னா எதிர்காலச்

சந்ததியை நோய்கள் வந்து தாக்குமே

இது எல்லாருக்கும் புரியனும்

இயற்கை வழியில் மாற்றணும்

கண்ணுபோல வயலை

நாம காக்கனும் தம்ம

கண்ணுபோல வயலை

நாம காக்கனும் (மாத்தனும்)

மகாத்மாவின் தீர்க்க தரிசனம்

இயந்திரமயமாக்கல் இந்தியாவில் புகுந்தபோது மகாத்மா காந்திக்கு அதில் உடன்பாடில்லை. ஜவுளி ஆலைகள் வந்தபோது நெசவாளர்கள் வாழ்வை அது பாதிக்கும் என்று அவர் நன்றாக உணர்ந்தார்.

அதனால்தான் அவர் கடைசிவரை கைராட்டையைப் பயன்படுத்தின்ார்.

விவசாய வேலைக்கு டிராக்டர் இறக்குமதி செய்யப் பட்டபோது அதை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்த ஒரு தொழிலதிபர் டிராக்டர் வாங்க விருப்பமில்லாத விவசாயிகளை டிராக்டர் வாங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது ஒரு வாசகத்தை உருவாக்கினார் அந்த வாசகம் இதுதான்.

இயந்திர மயமாக்கு இல்லையேல் அழிந்துபோ! இந்த வாசகத்தை மகாத்மா காந்தி தன் வாய்மொழியால் சொல்லிவிட்டால் விவசாயிகள் டிராக்டர் வாங்க முன்வருவார்கள் என்று நம்பினார்.

மகாத்மா காந்தியைச் சந்தித்து இந்த வாசகத்தை நீங்கள் நாட்டு மக்களிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வாசகம் என்ன? அண்ணல் காந்தி கேட்டார்.

இயந்திர மயமாக்கு

இல்லையேல் அழிந்துபோஇதில் ஒரு சின்ன திருத்தம்என்றார் காந்தி. “சொல்லுங்கள்என்றார் தொழிலதிபர். மகாத்மா காந்தியடிகள்

(இயந்திரமயமாக்கி அழிந்துபோ)

என்றாராம்

என்றாராம்.

டிராக்டர் சாணி போடுமா?

நவீன வேளாண்மை மூலம் நமது கலாச்சாரம் சீரழிக்கப் பட்டது மக்கள் தொகை மிகுந்த நாட்டில் கனமான டிராக்டர் களை அறிமுகப்படுத்தி, மக்களை வேலையற்றவர்களாக்கி, புகை கக்கியபடி மண்ணைக் கருணையின்றிப் புரட்டிப் போடுவதை இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறோம்.

கோடிக்கணக்கான கூலித் தொழிலாளர்களை டிராக்டர்களும் கதிரடிக்கும் எந்திரங்களும் நடவு மிஷின்களும் சத்தமின்றிச்

சாகடிப்பத அறிவியல் வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ளும் அதிமேதைகளாகிவிட்டோம் நாம் முதன்முதலாக டிராக்டர்களை நம் நாட்டில் அறிமுகம் செய்தபோது, பத்துமாடுகளின் வேலையை ஒரு டிராக்டர் செய்துவிடும் என்று காந்தியிடம் சொல்லப் பட்டதாம்.

அதற்குக் காந்தி,

பத்து மாடுகளின் வேலையைச் செய்யும் டிராக்டர், பத்து மாடுகளின் சாணியைப் போடுமா?

என்று திருப்பிக் கேட்டாராம். என்ன தீர்க்கதரிசனமான கேள்வி. இது இப்படிக் கேட்ட

 

மகாத்மாவை பிற்போக்காளர் என்று கேலி செய்தார்களாம்.:

மாட்டின் சாணத்திற்குக் கூட மதிப்பு கொடுத்த மகாத்மா எங்கே?

பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் இன்றைய மனிதர்கள் எங்கே?

பஞ்சகவ்யா

மாட்டின் மூலம் பெறும் ஒவ்வொரு பொருளும் பயன்மிக்கது. சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் எனும் ஐந்தின் கலவையான பஞ்சகவ்யம் அல்லவா இன்று பயிர் வளர்ச்சி ஊக்கியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குலத்தொழில் செய்யாதவனுக்குத் தலைக்குமேல் பஞ்சம் என்று சொல்வார்கள்.

கால்நடைகளை இழந்து விவசாயத்தை மறந்து கையடக்க கருவிக்குள் உலகைக் கொண்டு வந்துவிட்டதாக கொட்டமடிக்கும் விஞ்ஞானத்தைப் போற்றும் வரை மனித வாழ்வில் அமைதிக்கு வழியே இல்லை.

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்

உழன்றும் உழவே தலை.”என்ற திருவள்ளுவர் வாக்கு வெல்லும் காலம் விரைவில் மலரும்.

பாட்டி சொன்ன கதை

சொன்னபடி கேட்டா முன்னோர்

சொன்னபடி கேட்டா

விவசாயிங்க நல்ல விளைச்சலை

அள்ளிக் குவிப்பாங்க!

பொன்னான வயலிலே

மண்ணோட வளத்தையே

கண்ணாகக் காக்கனுங்க

இப்போது இயற்கை விவசாயம்

செய்து தாம வாழனும்

நல்ல விளைச்சலை

தத்த விதைகளைத்

தேடிப்பிடிக்கனும் (சொன்னபடி)

பிச்சாரி நெல்லுதான்

கச்சிதமா விளைஞ்சுது

வாழைப்பூ குடவாழையும் இருந்திச்சு

பன்னாட்டு நிறுவனத்தால்

எல்லாம் மறைஞ்சு போச்சுது

இரசாயன உரங்களாலே

உணவும் விஷமாச்சுது

சொன்னபடி கேட்டா முன்னோர்

சொன்னபடி கேட்டா

நோயில்லா வாழ்வு இங்கே

தமக்குக் கிடைக்குமே

கார் தெல்லும் சம்பாவும்

காணாமல் போக்கது

காரணம்

இரசாயன உரங்கள்தான்

இரசாயன உரத்திலே

ரசமில்லாத விதையிலே

விளைஞ்ச பயிரு

எந்தப் பலனும்

நமக்குத் தராது (சொன்னபடி)

பாட்டன் பூட்டங்க காலத்திலே

பாட்டி சொன்ன கதை எல்லாம்

வேட்டு வச்சி நாமதான் அழிச்சிட்டோம்

தொலைக்காட்சிப் பெட்டியினால்

பண்பாட்டை மறந்துட்டோம்

கம்ப்யூட்டர் வந்த பின்னே

கையெழுத்தும் மறக்குறோம் (சொன்னபடி)

 

குரங்கு கையில் கிடைத்த பூமாலை

 

நான் பெற்ற பயிற்சி அதன்மூலம் நான் கண்ட காட்சி படித்தது, பார்த்தது, கேட்டது, நேரடி அனுபவம் எல்லா வற்றையும் இதன்மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி, இந்தத் தொகுப்பு என்னால் எழுதப்படுகிறது. இதில் என் கற்பனை எதையும் நான் புகுத்தவில்லை. எனது எழுத்தாற்றலும் நடிப்பாற்றலும் இயற்கைவழி வேளாண்மை இம்மண்ணில் பரவ பயன்படவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதிவருகிறேன். இனி இயற்கை வழி வேளாண்மை பற்றிய ஒரு சிறிய நாடகக் காட்சிக்குள் சென்று வருவோம்.

padam

இயற்கை உரம் தயாரிக்கும் முறையில் ஒன்று