10
(நாடகம்)
காட்சி – 1
இடம் : மேடை
பாத்திரம் : காந்தாரி. அமைப்பு (காந்தாரி ஆடிப்பாடுகிறாள்.
சான்றோரே வாருங்களேன்
சபை நிறைய கூடுங்களேன்
சிவப்பு சம்பா கலைக்கூடம்
நடிக்கும் கதையைப் பாருங்களேன்
விவசாயத் தோழர்களே
விரைந்து வாருங்கள்
இயற்கை விவசாயம்
செய்து பாருங்கள்
முன்னோர்கள் செய்து வந்த
தொழில்நுட்பம் தொலைத்திடாமல்
பாதுகாத்து வாழ வழி தேடுங்கள் – நம்
சந்ததிக்கு நலவாழ்வைத் தாருங்கள்– நம்
சந்ததிக்கு நல்ல உணவைத் தாருங்கள்
நாம நல்லா இருக்கோணும் – இந்த
நாடு முன்னேற – இந்த நாட்டிலுள்ள இயற்கை வளம்
நாமும் கொண்டாட
விவசாயத் தோழர்களே
விரைந்து வாருங்கள் இயற்கை விவசாயம் செய்வோம் வாருங்கள்
.
–திரை–
காட்சி – 2
இடம் :வீடு
பாத்திரம் : கிறுக்கு சண்முகம், செம்பருத்தி, குந்தவை
அமைப்பு (செம்பருத்தி, புருஷனை எதிர்பார்த்து.)
செம்பருத்தி : சேசே எங்க இந்த மனுசன இன்னும் காணோம்.
பித்தள தோண்டிய கொடுத்துத் தண்ணி அடிச்சிட்டு வாய்யான்னு சொன்னேன். காத்தால போச மனுசன்
இன்னும் வர்றாரு எப்பப் பாரு குடிகுடின்னு குடிச்சிப்புட்டு
மண்ணுல விழுந்து கெடக்குறதுதான் வேல. ஏம்பா தம்பிகளா ஏ புருஷன் கிறுக்கு சண்முகத்த எங்கயாவது: பார்த்தீங்களா? வரட்டும் இன்னிக்கு இந்த மனுசன்.
(உள்ளே போகிறாள்)
கிறுக்கு சண்முகம் : (வந்து) ஹை ஹாய்.
செம் : யாரு வூட்டுக்குள்ள மாடு ஒட்றது.
கிறு : ஆங், உன் புருஷன் கிறுக்கு சண்முகம்.
செம் : வாங்க! வாங்க! காத்தால போன மனுச நீங்க? இப்பதா
வர்றிங்க! எங்கபித்தளதோண்டி? இது என்னடி கேள்வி? இன்னிக்கு நமக்குக் கல்யாணநாளு. நாமசந்தோஷமா இருக்கணுமேன்னு கோட்ரு வாங்ககாசு கேட்டேன். நீ என்னசெஞ்சதோண்டியகொடுத்து இதவச்சி தண்ணி அடிச்சிட்டு வாங்கன்னு சொன்ன, சொன்னியா இல்லியா?
செம்: ஆமா. சொன்னேன் அதுக்கென்ன இப்போ?
கிறு : நீ சொன்னது மாதிரிதான் செஞ்சேன். நேரா போயி
கருவகாட்ல சாராயம் விக்கிற கரடிக்கு நேரா தோண்டிய
வச்ச அவன் தோண்டிய பாத்துட்டு சரக்க ஊத்திக் கொடுத்தான். ஒரு ரவுண்டு, ரெண்டு ரவுண்டுன்னு மாறி மாறிக் குடிச்சு நேரமாச்சு.
செம் : அடப்பாவி மனுசா! பித்தள தோண்டிய கொடுத்து கோயி லாண்ட இருக்குற அடி பைப்புல வச்சி தண்ணி அடிச்சிட்டு வாய்யான்னு சொன்னேன். இந்த மாதிரி பண்ணிட்டு வந்து நிக்கிறீங்களே இது நல்லாயிருக்கா?
கிறு : ஏய் இப்பச் சொன்னது மாதிரி வார்த்தைகள ஒழுங்கா சொல்லி இருக்கணும். அரைகுறையா சொன்னா இப்படித் தான்!
(தள்ளாடிச் சாய்கிறான்.)
குந்தவை : (வருகிறாள்) அடியே செம்பருத்தி நாளைக்கு இயற்கை விவசாய உழவர் இயக்கக் கூட்டம் நடக்கு தாம். உன் புருஷனையும் அழைச்சிக்கிட்டு வந்துடு.
செம் : ஏக்கா அங்க போனா எதுனா கெடைக்குமா?
குந்: ஆங்கெடைக்குமுடி போக்கத்தவளே! நல்ல விஷயத்தைக் கேக்க நாமதா முன்ன நிக்கணும். எங்கப் போனாலும் இலவசம் கிடைக்குமான்னு பாக்குறதுலே நில்லுங்கடி. நாடும் உருப்படும் நாமளும் உருப்படலாம்.
(போகிறாள்)
காட்சி – 3
இடம் ; கூட்ட அரங்கம்.
பாத்திரம் : கிறுக்கு சண்முகம், செம்பருத்தி.
அமைப்பு : (வேலுமணி மேடையில் பேசிக் கொண்டிருக்க, கிறுக்கு சண்முகம் மேடைக்கு வர செம்பருத்தி அவனை இழுத்துப் பிடிக்க.)
வேலுமணி : மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த காலமும் உண்டு. சோழ நாடு சோறுடைத்து என்று பெருமை பெற்ற வரலாறும் உண்டு! இன்றோ இந்த மண்ணில் விவசாயிகள் கண்ணிர் விடும் நிலை இதற்கெல்லாம் காரணம்.
கிறு (எழுந்து) வறட்சி நிவாரணம் கொடுக்கல. வெள்ள நிவாரணம் கொடுக்கல. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யல. அதா கண்ணிர் விடுறோம்.
(செம்பருத்தி வந்து அவனை இழுத்துச் செல்ல).
வேலு : உண்மைநிலை அறியாமல் நிவாரணத்தை நினைத்துப் பாரம்பரிய விவசாயத்தை மறந்தோம் பசுமைப் புரட்சி என்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் நமது பாரம்பரிய நெல் ரகங்களை மறைத்து மரபணு விதைகளைக் கொடுத்து நமது இயற்கைச் சூழலைக் கெடுத்து உரம் என்ற பெயரால் வெடிமருந்தை நம்மிடம் விற்று கொள்ளையடித்த தோடு நமது விவசாயத்தை நாசமாக்கிவிட்டனர்.
செம்: இதிலிருந்து நாம் மீண்டு வர வழி?
வேலு : இருக்கிறது. அதுதான் இயற்கை விவசாயம் கெமிக்கல் உரத்தைத் தவிர்த்து, செலவைக் குறைத்து, இயற்கை உரத்தைப் போட்டு நஞ்சில்லா உணவைப் பெறுவது! பாடல் : உரமெல்லாம் வேண்டாம்
கெமிக்கல் உரமெல்லாம் வேண்டாம் விவசாயம் பண்ணி இனிமேல் கடன்பட வேண்டாம்.
கிறு : ஆங்! நீங்க சொல்லிட்டுப் பூடுவீங்க. உரம் போடாம
எப்படிப் பயிர் வளருமாம்?
வேலு : பாடல்
மரங்கள் வளருதே பழங்கள் தருகுதே – எந்த உரத்தைப் போட்டு அந்த மரத்தை வளர்க்கிறோம்.
செம் : ஏங்க சார் சொல்றது சரிதான். காடுகரையில தானா வளருதே செடி, கொடி, மரம் அதுக்கெல்லாம் யாரு உரம் போட்டா?
கிறு : நீ என்ன பேசுற பயிருக்கு ஊட்டச்சத்து வேண்டாமா?
வேலு : காற்றும் நீரும்தான் பயிருக்கு ஊட்டச்சத்து. மண்ணில் இருக்குற மண்புழுதான் பயிருக்குத் தேவையான உரத்தை இயற்கையா கொடுக்குது. செம்: நீங்க சொல்றது சரியா புரியலியே t
வேலு : தாய்ப்பால் தானா சுரக்குது குழந்தை அத இயல்பா குடிக்குது அது மாதிரிதான் மண். மண்ணுதான் நமக்குத் தாய். அந்த மண் கொடுக்குற கொடையை நாம புண்படுத்தி எடுப்பது சரியாபாடல் : தாய்ப்பால் பெருகுதே இயல்பாய் பருகுதே மண்ணுல மட்டும் கலப்பை போட்டு தோண்டி எடுக்குறோம்.
உரமெல்லாம் வேண்டாம் கெமிக்கல் உரமெல்லாம் வேண்டாம் விவசாயம் பண்ணி இனிமேல் கடன்பட வேண்டாம்
(எல்லாரும் கைத்தட்டுதல்)
செம்: சரிகெமிக்கல் உரம் வேண்டாம்பூச்சிக்கொல்லி மருந்தும் வேண்டாம்! இயற்கை விவசாயத்துல பயிருக்குப் பாதுகாப்புதான் என்ன?
வேலு : மதிய உணவுக்குப் பிறகு மறுபடுயம் கூட்டம் உண்டு. அப்ப இன்னும் விவரமெல்லாம் தெரிஞ்சிக்குவோம்.
குரல் : பூச்சிக்கொல்லி கெமிக்கல் உரம் போட்டஉணவு சாப்பிட்டதால் விஷமாகிப் போனதடி கண்ணம்மா உடம்பு இனிமேலே தாங்கிடுமா சொல்லம்மா
போலியோ சொட்டு மருந்து பொறுப்போடு கொடுத்த பின்னே
கெமிக்கல் உணன்வக் கொடுக்குறியே கண்ணம்மா
பிள்ளைக்கு விஷத்தை நீயே ஊட்டுறது ஞாயமா!
(திரை)
காட்சி – 4
இடம் : மதகடி,
பாத்திரம் : கிறுக்கு சண்முகம், கொடுக்காப்புளி,
அமைப்பு : மதகடியில் கொடுக்காப்புளி ஆடிப்பாடுதல்.)
கொடுக்காப்புளி உம்பளச் சேரி மாடு கட்டி
உள்ளூரு ஏரு பூட்டி வயக்காட்டை உழுதுபோடு கண்ணம்மா இயற்கை விவசாயம் பண்ணப் போறேன் பொன்னம்மா நானும் இயற்கை விவசாயம் பண்ணப் பாறேன் பொன்னம்மா
கிறு.சண். குரல் : மாப்ளே!
கொடு: ஏ மாமோவ்.
கிறு : (வந்து) இன்னா மாப்னே மதகடியில ஆடிப் பாடிக் கிட்டு
சந்தோஷமா இருக்கிய
கொடு : நகர வாழ்க்கை நரகமா ஆயிடுச்சாம். நாம வசிக்கிற கிராமப்புறந்தாநல்லதுன்னு பேப்பர்லபடிச்சமாமோவ்,
கிறு : ஆமா கிராமத்திலயுந்தான் என்னா வாழுது. பாட்டபூட்டங்
காலத்துல எப்படியோ இருந்துட்டு பூட்டாக,
கொடு : ஏ. மாமு மணப்பாற மாடு உயரம் இருக்கு. உம்பளச் சேரி மாடு சின்னதாஇருக்க நம்ம ஊருலு இந்த உம்பளச்சேரி மாட்டைக் கட்டி ஏர் உழுறாங்களே ஏன்?
கிறு : மாப்ளே நம்ம மண்ணு சேறு சகதியுமா இருக்கும். திடகாத்திரமா கனமா இருக்குற மணப்பாற மாட்ட ஏருல பூட்டி நம்ம வயல்ல எறக்குனா பாரந்தாங்காம சேத்துக்குள்ள அமுங்கி போயிடும் மாப்ளே,
கொடு ; அடேங்கப்பா மாடு கட்டி சேரடிக்கிறதுலே இப்படி
எல்லாம் சூட்சமம் இருக்கா? கிறு : நம்ம முன்னோர்கள் எல்லாம் சரியாதா செஞ்சி இருக் காங்க மாப்ளே
கொடு: சரி அத வுடு மாமு இந்தப் பொட்ட வெயில்ல எங்க
பூட்டு வர்றிய.
கிறு : என்னமோ இயற்கை விவசாயமா அதுக்கு ஒரு கூட்டம் போட்டு, கூப்புட்டாகளேன்னு போனா, ஒரு டீதண்ணிக்குக் கூட வழியில்ல மாப்ளே. அதா வேண்டா வெறுப்பா வந்துட்டேன்.
கொடு : அட் என்ன மாமு! இயற்கை விவசாயம்னா நல்ல
விஷயந்தான். அத கேக்காம. கிறு நீ என்ன மாப்ளே பேசுறே, விவசாயம்னா நமக்குத் தெரியாத
கொடு : ஏ மாமு, வெதைக்கப் போற அறுக்கப் போற இதுல
என்ன கஷ்டமிருக்கு?
கிறு : அட என்னடா இவன்? வெவரங் கெட்டத்தனமா இருக் கான். சாகுபடின்னாசும்மாவா மனுசன அப்படியே சாகடிச் சிடாது. கடன உடன வாங்கி டிராக்டர வச்சி கோட உழவு உழனும்,
கொடு : எதுக்கு டிராக்டரு வீட்ல பழைய கலப்பை சும்மா கெடக்கு, ஓமாமன் வீட்ல உழவு மாடு இருக்கு ஆளும் பேருமாபுடிச்சா உழுது போடலாமுல்ல. ‘கிறு உழுது போடலாம்தான். நவீன சாகுபடி வந்தபிறகு உடம்பு
வளைய மாட்டேங்குதே மாப்ளே.
கொடு : வளைக்கணும் மாமு அப்பதா பொழைக்க முடியும் வயக்காட்ல வேலபார்த்தா கருவ காட்டுக்கு வருவியா நீயிர்
கிறு : நீ சொல்றதெல்லாம் சரிதான் மாப்ளே. வேல இல்லாம வெட்டித்தனமான இருக்குறதுனாலதா ஊரு சுத்த தோணுது. ஏகப்பட்ட செலவும் ஆகுது. கடனும் அதிகமாயிடுது.
கொடு : மாமு நமக்குத் தெரிஞ்சது விவசாயந்தான். அத
செலவில்லாம செய்ய கத்துக்கணும்.
கிறு செஞ்சி பாத்தா தெரியும் மாப்ளே. சேரடிச்சு விதைக்கனும் விதை நெல்லு வாங்க காசு வேணும்
கொடு : ஏ போன அறுப்புல வெத நெல்லு எடுக்காம என்ன பண்ணின?
கிறு : இப்ப உள்ள நெல்லு. விதைக்கலாம் அறுக்கலாம். ஆனா
அதுல வெதை எடுக்க முடியாது.
கொடு என்ன மாமு சொல்றே!
கிறு : ஆமா மாப்ளே மரபணு மாற்று விதையாம் கடையிலதான் வாங்கியாகணும். அப்படி வாங்கி வெதைக்கிற விதைக்கு அடி உரம் கொடுக்கணும். ஆத்துல தண்ணி வந்தாலும் பங்கு தலமாட்டு வாய்க்காலுக்குத் தண்ணி பாயாது. கொஞ்ச நஞ்சம் வர்ற தண்ணியும் முன்னாடி வயக்காரன் தேக்கி வச்சிடுவான். அதுக்கு ராப்பகலா கண்ணு முழிச்சி தண்ணி வைக்கணும்.
கொடு : வெட்டுகுத்து கொல கேசு கோர்ட்டு போலிசுன்னு ஏகப்பட்ட ரகளை. தண்ணி பிரச்சனையில வருது. அத தடுக்க முடியாத?
கிறு: தடுக்கலாம். கெமிக்கல் உரம் போடாம இருந்தார்
கொடு : அது எப்படி? கிறு கெமிக்கல் உரம் போட்டாதான் மாப்ளே தண்ணி ஏழு
மடங்கு அதிகமா செலவாகுது.
கொடு: அப்பற ஏ மாமு அத போட்றிய ? கிறு அத போடலன்னா பயிர் பச்ச குடுக்காது மாப்ளே. பழகி பூட்டுல்ல.
கொடு : கெமிக்கல் உரம் போட்டா பூச்சி புடிக்குமே?
கிறு : ஆமா பூச்சி புடிக்கதான் செய்து அதுக்கு உடனே பூச்சிக் கொல்லி மருந்து வாங்கித் தெளிக்கணும்.
கொடு : இதல்லாம் நெனச்சா பழைய பாட்டுதான் ஞாபத்துக்கு
வருது. கிறு : என்ன பாட்டு மாப்ளே?
கொடு : என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
கிறு : ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்
உயரும் உன்நிலையோ அயல்நாட்டில் , விவசாயி விவசாயி.
கொடு : எல்லா வளமும் இந்த மண்ணுல கெடைக்குது. ஆனா நாம என்ன பண்றோம்? வெதை நெல்லுக்குக் கூட பன்னாட்டு நிறுவனங்கள நம்பி இருக்குறோம். இதுக்கெல் லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்னா.
கிறு : நெலத்தைத் தரிசா போடணும்.
கொடு : இல்ல மாமு. இயற்கை விவசாயம் பண்ண்ணும். ஏ மாமு இயற்கை விவசாயம் நல்லதுன்னு உனக்குத் தெரியுது அப்புறம் ஏஅத செய்ய மாட்டேங்குற
கிறு : மாப்ளே! எனக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே தெரியும். செயற்கை உரம் பூச்சிக்கொல்லி மருந்துனால உணவு நஞ்சா ஆயிடுதுன்னு.
கொடு : பிறகு ஏன் மறுபடியும் அதையே செய்றாங்க.
கிறு : யாருக்குமே தன்னம்பிக்கை இல்லை மாப்ளே சரி அந்தக் கதை எல்லாம் எதுக்கு மாப்ளே! விவரங்கெட்டத்தனமா இயற்கை விவசாயக் கூட்டத்துக்குப் போயி நொந்து வந்திருக்கேன். சரக்கு இருந்தா கொஞ்சம் ஊத்தச் சொல்லு. கொடு சரக்கு இருக்கு மாமு ஆனா உனக்குக் கிடையாது.
கிறு : என்ன மாப்ளே! இப்படிப் பொசுக்குன்னு சொல்லிப் பூட்டிய இந்த வேகாத வெயில்ல ஊரைவிட்டு ஒதுக்குப் புறமா வந்தேன்னா எதுக்கு…
கொடு : கடன் கேப்ப.
கிறு:அடகுடுத்தா என்ன மாப்ளோமாமா கொடுக்க மாட்டனா? கொடு ஏற்கெனவே கணக்கு எகிறிப்போச்சு மாமு. நானூத்தி அறுபத்தஞ்சு ரூபா நிக்கிது.
கிறு : இன்னிக்கு ஊத்துற சரக்க அதோட சேத்துக்க ரவுண்டா வையி ஐந்நூறு ஆயிடுமில்ல.
கொடு : மாமு நீயும் நானும் சொந்தந்தே ஆனா வாயும் வயிறும்
வேற பாரு.
கிறு : யாரு இல்லேன்னாக. நா கொடுக்கலேன்னா சொல்ற.
கொடு : மாமு மொறையான வெள்ளாம இல்லாமதா நானே வேண்டா வெறுப்பா இந்த ஈனங்கெட்ட தொழிலே பண்றே.
கிறு : தெரியாமலா மாப்ள இருக்கு. எல்லாருமே சூழ்நிலைக் கைதியா ஆயிட்டோம். அப்பிடி இப்பிடி அனுசரிச்சிதே போக வேண்டியிருக்கு.
கொடு : எல்லாரையும் அனுசரிச்சா ஏ குடும்பம் எப்படி மாமு ஒடும். நீயோ நெலத்தைத் தரிசா போட்டுட்டே கூலி வேலைக்கும் சரியா போகமாட்டே. இப்படி வருமானமே இல்லாம எப்படி வாங்குன கடனைக் குடுப்ப?
கிறு :அடபோ மாப்ளே மகளிர் சுய உதவிக் குழு எதுக்கு இருக்கு?
கொடு : மகளிர் சுய உதவிக்குழு மகளிர் மேம்பாட்டுக்காக இருக்கு. கிறு : மகளிர் மேம்பாடுன்னா எங்க போயிடப் போவுது. நம்ம
கிட்டதான வரப்போகுது மாப்ளே. வரவு செலவு. கொடு : என்ன மாமு சொல்றே. கிறு : ஒரு கிளாச ஊத்து மாப்ளே ஏத்திகிட்டே பேசலாம். ஏ பொண்டாட்டி மகளிர் சுய உதவிக்குழுவுல சேர்ந்து மூனு தவணையாய்ப் பணம் கட்டிருக்கா மாப்ளே.
கொடு : பணம் கட்னா?
கிறு : அதா மாப்ளே. மகளிர் சுய உதவிக் குழுவுல உள்கடன்
கொடுக்குறாங்களே அதக் கேக்கச் சொல்லிருக்கேன்ல.
கொடு : ஏ மாமு மூனு தவணை பணம் கட்னா எப்படி உள்கடன்
கொடுப்பாங்க!
கிறு ; அதல்லாம் ஏ மாப்ளே பேசற. உங்க அக்காள உள் கடன் வாங்கச் சொல்லி இருக்கேன். அவளும் இன்னிக்குக் குழுக் கூட்டத்துல கேட்டுடுவா. கொடு கெடைக்குமுல்ல!
கிறு : அட சமயத்துக்கு ஆகாத குழு எதுக்கு?
கொடு : ஏதோ குழுவுல கலகம் பண்ண அக்காள அனுப்பிட்ட போ. போ. முனியாண்டி இருக்கா டேய் முனியா, மாமு வருது. ஆங் ஆங்!
கிறு : முனியாண்டி நல்ல பயமாப்ளே அவனை வுட்றாதிய.
கொடு : ஆமா பெரிய பேக்ட்ரில மேனேஜர் உத்தியோகம் கொடுத் திருக்க. போலிச கண்டா மூலக்கி ஒருத்தரா ஒடணும்!
கிறு இல்ல வல்லடி வழக்கு பண்ணமாட்டா. அதாஞ்
சொன்னேன். (போகிறான்.)
கொடு: ஏண்டா மகளிர் மேம்பாட்டுக்காக மகளிர் சுய உதவிக்குழு அமைச்சா அதுல வர்ற கடனை நம்பி ஏந் தொழில விருத்திப் பண்ரீங்களே ஏண்டா
கிறு : (திரும்பி வந்து) மாப்ளே என்ன பேசறிங்க?
கொடு : ஒன்னுமில்ல மாமு சூரிய நமஸ்காரம் பண்றேன்.
கிறு : உச்சி வெயில் மண்டைய பொளக்குது. இப்பப் போயி சூரிய நமஸ்காரம் பண்றிங்களே நீங்க இன்னும் கொழந்தை யாவே இருக்கிங்க மாப்ளே! (போகிறார்கள்.)
(திரை)
காட்சி – 5
இடம் : மகளிர் சுயஉதவிக் குழுக் கட்டிடம்.
பாத்திரம் : பரிமளகந்தி, செம்பருத்தி, காந்தாரி, குந்தவை.
அமைப்பு : (எல்லாரும் கலந்துரையாடல்)
பரிமளகந்தி: இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு. காந்தாரி இந்தா பாரு செம்பருத்திக் குழுவோட விதிமுறை. எல்லாருக்கும் பொது!
குந்தவை: இததான் பலமுறை படிச்சி படிச்சி சொல்லியிருக்காங்
களே! தெரியாதா? . .
செம்பருத்தி : தெரியும் குந்தவை.
குந் தெரிஞ்சிக்கிட்டே கேட்டா என்ன அர்த்தம்? செம் : இல்ல ஏதோ அவசர செலவுன்னு என் புருஷந்தா கேக்க
சொன்னாக! பரி : ஆமா பொல்லாத புருஷன். தோண்டிய வச்சி தண்ணி
அடிக்கிற புருஷன்.
(எல்லாரும் சிரிக்க.)
காந் : ஏண்டி சிரிக்கிறீங்க பெரும்பாலும் எல்லா வீட்லயும்
இதாண்டி நடக்குது.
குந்: ஆமா. ஆமா. நாம அங்க இங்க பாடுபட்டு கூட்டமைப்பா ஒரு சேமிப்பகொண்டு வந்தா அத நம்பி ஏகப்பட்ட எடத்துல தைரியமா கடன் வாங்குறாங்க.
பரி: குழுவுல இவளால எவ்வளவு குழப்பம் பாரு
காந் : அடியே செம்பருத்தி! உன் புருஷன் கேட்க சொன்னா ரேன்னு. நீ இங்க வந்து உள் கடன் கேக்கறதே தப்பு.
குந் : உள்கடன் கொடுக்குறதுக்கும் ஒரு காலகட்டம் இருக்குல்ல! அத குழு உறுப்பினரா இருக்குற நாமல்லாம் கூடிதான் முடிவு செய்ய்ப் போறோம்.
பரி : ஆமா. ஆமா. இதுல எந்த நிர்ப்பந்தத்துக்கும் இடம்
கிடையாது.
செம் : நா கேட்டது தப்பு தா யாரும் என்னைத் தப்பா நென்க்காதீங்க.
பரி சரி சரி அடுத்த விஷயத்துக்குப் போங்க!
குந் : நாற்று நட உரம் போட.
செம்: கதிர் அறுக்க நெல்லடிக்க.
குந்: மூட்டை கட்ட முழுவதுமாய்
செம் : இரும்புக் கரம் நீட்டி இயந்திர டைனோசர்கள்
குந் : கடிக்காமல் குதறாமல் கடுகளவு ரத்தமின்றிக் கொல்லும்
புதிய டைனோசர்கள்.
செம்: நமது வயல்களிலே இறங்கி வரும்…
குந்: அவற்றிற்குப் புரியாது.
செம் : அவை வயல்கள் அல்ல நமது வாழ்க்கை என்று.
காந் : என்னாடி இது புரியாம பேசுறாளுக!
பரி : இயற்கை விவசாய கூட்டத்துல இயந்திரமயமாக்கல பத்தி
ஒரு பள்ளிச் சிறுவன் சொன்ன கவிதை இது. அதான்டி இவங்க பங்கு போட்டு சொல்றாங்க.
காந் : இயற்கை விவசாயக் கூட்டத்துல என்ன பேசுனாங்க?
பரி :அடியே காந்தாரி ஒரு பசு மாடு இருந்தா போதுமாம். எட்டு
ஏக்கர் நிலம் சாகுபடி செய்யலாம்.
காந் : ஒரு பசு மாடு இருந்தா போதுமர்?
குந் : ஆமாடி பயிருக்குத் தேவையான அஞ்சு வகை கரைசல்
சுலபமா செய்யலாம்.
செம் : இந்தக் கெமிக்கல் உரம், பூச்சிக்கொல்லி மருந்து
இதுக்கெல்லாம் இனிமே வேலையே இருக்காதுடி
பரி: கடன வுடனவாங்கி விவசாயம் பண்ணி கஷ்ட படனுங்குற
அவசியமே இல்ல.
காந்: இததான் ஏ புருசபோன வருஷமே தெரிஞ்சுக்கிட்டு நெலத்த
தரிசா போட்டு வச்சிட்டாரே.
செம் : ஏபுருஷனுந்தாதரிசா போட்டாரு.
பரி : நெலத்த தரிசா போட்றது புத்திசாலித்தனமாடி.
காந் :வேற என்ன செய்யுறதாம்.
பரி : இயற்கை விவசாயம் பண்ணனும். அதுல செலவு
கிடையாது.
காந் : அது எப்படிச் செலவு இல்லாம.
குந் : அதுக்குத்தாண்டி அஞ்சு வகை கரைசல். பரி: ஏ அத வெளக்கமா சொல்லுங்கடி
செம் : அடியே காந்தாரி அமிர்த கரைசல் அடி உரமா
கொடுக்கணும்.
காந் : அமிர் கரைசல்னா
குந் : அதாண்டி அப்போதைக்கே போட்ட சாணம், கோமியம் இதோட கைப்பிடி அளவு வீணாப் போன வெல்லத்தையும்
போட்டு ஒருநாள் ஊறல் போட்டா போதும் அதா அமிர்த கரைசல்.
காந் : இத என்ன பண்ணனும்?
குந் : ஒரு லிட்டருக்குப் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து வயலுக்கு
அடி உரமா கொடுக்கணும்.
காந்: ரொம்பச் சுலபமான வழிமுறையா இருக்கே.
செம் : அப்பறம் நடவு நேரத்துல இலை, தழை, மண் புழு உரம்
போட்டா போதும்.
பரி : மண்புழு உரம் தயாரிப்பது எப்படின்னு சொல்லுங்கடி.
செம் : கொல்லையில் சுல்லிக் குச்சிகளைத் தரையில அடுக்கணும்.
குந் : அது மேல காய்ந்த இலை சருகுகளஒரு அடி கணத்துக்குப்
பரப்பி அதுமேல சாணிப்பால் தெளிக்கணும் அதுக்கு மேல பசும் இலைதழைகள அரைஅடி கணத்துக்குப் பரப்பி சாணிப்பால் தெளிக்கணும். இப்படி ஆறு அடுக்கு வைக்கணும். செம் : நடுவுல ஒரு குச்சிய சொருகணும். அது எதுக்குன்னா குச்சிய எடுத்துப் பார்க்கும் போது குச்சி சூடா இருந்தா குப்பை மக்கி இருக்கும். மக்காம போயிட்டா குச்சியில சூடு இருக்காது. குந் : அப்போ அதுல மண்புழுவைப் போட்டு தண்ணி தெளிச்சா போதும் மண்புழு பெருகி மண்புழு உரம் கிடைக்கும். செம் : சாணியும் வெல்லமும் மண்புழு உற்பத்தியை அதிகப் படுத்தும் இருபத்தைந்து நாள்ல மண்புழு உரம் கிடைக்கும். காந் : அடேங்கப்பா உரத்தைத் தேடி கடை கடையா அலைய
வேண்டாம். அப்புறம்.
பரி: நாத்து நட்டு பத்தாம் நாள் பழக்கரைசல் இலைவழி ஊட்டமா
கொடுக்கலாம்.
காந் : அது என்ன பழக் கரைசல். பழமெல்லாம் விக்கிற விலை
யில அத காசு கொடுத்து வாங்க நமக்கு வசதி பத்தாது.
குந் எவடி இவள காசு கொடுத்து வாங்கச் சொன்னா?
காந் : திருடலாங்குறியா? –
செம்: குய்யத்தியா பேசாதடி கடையில போயி இயற்கை எரு தயாரிக்கனும்ன்னு சொன்னா வீணாப்போன வாழ்ப்பழம். வீணாப்போன பரங்கிப் பழம், வீணாப்போன வெல்லம் எல்லாம் கொறஞ்ச விலைக்குக் கொடுப்பாங்க. சில கடையில சும்மாவே அள்ளித் தருவாங்க. அத வாங்கிச் சேகரிச்சு அதுல தண்ணி கலந்து.
குந் : அதுல ரெண்டு முட்டையும் ஒடச்சி ஊத்தணுமடி.
பரி : முட்டை ஓடும் அதுலே போட்றணும்.
காந் : அவிச்ச முட்டை போடலாமா? பரி அவிச்சா உடைச்சி ஊத்த முடியாதுடி,
காந் : ஏ கேட்டன்னா பள்ளிக்கூடத்துல வாரத்துக்கு மூணு
முட்டை போட்றாகள்ல.
செம் : அலுப்ப செறுக்கிடி நீ. கேளுங்கடி எல்லாம் கலந்து
காற்றுப் புகாம மூடி வைக்கணும்.
குந் : பத்து நாள் கழிச்சு தொறந்து பார்த்தா மேல ஆடை மாதிரி படிஞ்சிருக்கும். அத எடுத்துட்டு மறுபடியும் மூடி நாற்பத் தஞ்சு நாள் இப்படி ஊறல் போட்டா ப்ழக் கரைசல் கிடைக்கும்
காந்: சரி பயிர்ல பூச்சி வருமே அதுக்கு என்ன பண்றதாம்?
செம்: அதுக்குத்தான் மூலிகைக் கரைசல் இருக்கே. பூச்சி விரட்டி
வருமுன் காப்பது”
காந் : பூச்சி விரட்றதுக்கும் கரைசல் இருக்கா?
பரி: ஆமாடி கசப்பான இலைகள் ஆடு மாடு திங்காத இலைகள் உடைத்தால் பால்வரும் செடிகொடி இலைகள்.
செம் : குறிப்பா சொல்லணும்னா. நொச்சி இலை, ஆடா தொடை இலை, எருக்கன் இலை இப்படி அஞ்சு வகை இலைகளைச் சம அளவு இடிச்சி கோமியம் கலந்து பத்து நாள் ஊறல் போட்டு. .
பரி: எடுத்து வடிகட்டி பத்து மடங்கு தண்ணீர் கலந்து பயிருக்குத்
தெளிச்சா பூச்சியே வராதாம்.
காந் : இதல்லாம் தெரியாம பூச்சிக்கொல்லி மருந்தைக் காச
கொடுத்து வாங்கி உணவையே விஷமாக்கிட்டோமே!
செம் : குணபாசாலம்ன்னு ஒரு கரைசல் சொன்னாங்க. அதைத் தயார் பண்ணி பயிர்ல தெளிச்சிட்டா எலி ஆடுமாடு கூட கிட்ட வராதாம்.
காந் : அப்போ இயற்கை விவசாயத்துல இயற்கையான
பாதுகாப்பு பயிருக்குக் கெடக்கிதுன்னு சொல்லு.
செம் : அதனாலதாண்டி சொல்ற.
காந் : என்னடி நீட்டி நெளிக்கிற.
செம் : ஏ புருஷன் பக்கத்துல நிக்கிறதா நெனச்சி பாட்டு படிக்க
போறேண்டி.
பரி : என்ன பாட்டு பாடப் பேறா இவ.
செம் : சொன்னா நீங்க கேட்டுக்கணும்
சொன்னதைக் காதில் போட்டுக்கணும்
மண்ணோட வளம் கொறஞ்சி போச்சி
மனித வாழ்க்கை மறைஞ்சு போச்சு.
எல்லாத்துக்கும் காரணம் இந்தச் செயற்கை உரம் போட்டதாலே
நெல்லு வயலோட நெலம இப்ப சரியில்ல
அட காலங்காலமா விதைச்ச விதைய
கண்டுபிடிச்சிட வேணுமச்சா
கண்டுபிடிச்சிட வேணுமச்சா!
(எல்லாரும் சிரிக்க செம்பருத்தி வெட்கத்துடன் (நெளிகிறாள்.)
– திரை –
காட்சி – 6
இடம் : சாலை பாத்திரம் : கிறுக்கு சண்முகம், வேலுமணி.
அமைப்பு : கிறுக்கு சண்முகம் பாடியபடி வருதல். எதிரில்
வேலுமணி வர, கிறுக்குக் கூழைக் கும்பிடு போட, வேலுமணியும் கும்பிட்டுப் போக.)
கிறு : சாரு இவ்விட வாரும்! அன்னிக்கு நீங்கதான இயற்கை விவசாயம் பத்தி பேசினீங்க. அது என்னமோ சொன்னிங் களே என்ன கோ. கோ. கோமியம். ஹே. ஹே. ஹே. பாக்யராஜீபடத்த பார்த்துட்டு எங்கள கிண்டல் பண்றீங்க. அப்பறம் சாணம் சக்கரை ஏற்கெனவே பலபேருக்குச் சக்கர இருக்கு. இப்ப நீங்க வேற சக்கரையை அக்கறையா
சொல்றீங்க! போங்க போங்க உங்கள ஊருக்குள்ள விட்டதே தப்பா போச்சு. அது என்னய்யா சாணத்தையும், மாட்டுக் கோமியத்தையும் கைப்பிடி வெல்லம் போட்டு ஊற வச்சிட்டா அமிர்த கரைசலாயிடுமா! யார் காதுல பூ சுத்துறே. பிச்சுபிடுவேன் பிச்சி! என்ன மொறைக்கிற நீ என்ன பெரிய பிஸ்தாவா? என்னை அடிச்சிடுவியா? அடிச்சிப் பாரு!
(வேலுமணி அடிக்க, சண்முகம் கீழே விழுந்து எழுந்து.)
யப்பா இது கையா உலக்கையா?
வேலு:உலகத்தையே ரட்ஷித்து காக்கும் கை. கிறு: ஆமா. ஆமா. கிர்ர்ன்னு உலகமே சுத்துது
வேலு : சொல்லு உலகத்தையே ரட்சித்துக் காக்கும் கை என்ன கை?
கிறு : ‘யப்பா நா வலக்கை பார்த்திருக்கேன். தலையி வழுக்கையைப் பார்த்திருக்கேன். சோத்துல பருக்கை” யைப் பார்த்திருக்கேன். நெல்லு குத்தும் ஒலக்‘கை‘யைப் பார்த்திருக்கேன். உக்கார்ற இருக்கை யைப் பார்த்திருக் கிறேன். இலக்கணத்துல படர்க்கையைப் பார்த்திருக் கிறேன். இசைக் கருவிகள்ல உடுக்கையைப் பார்த்திருக் கிறேன்
அரசியல்வாதிங்க விடுற அறிக்கையைப் படித்திருக்கிறேன். விருந்தாளிகளோட வருகையைப் பார்த் திருக்கிறேன். குழந்தைகளோட அழுகையைப் கேட்டிருக் கிறேன். சினிமாவுல நடி‘கை‘யைப் பார்த்திருக்கிறேன். படத்துல தணிக்“கையைப் பார்த்திருக்கிறேன். வரவுசெலவு கணக்கைப் பார்த்திருக்கிறேன். அடிமை விலங்கை’ப் பார்த் திருக்கிறேன். துணியில அழுக்“கைப் பார்த்திருக்கிறேன். அழகான கல்யாண அரங்கைப் பார்த்திருக்கிறேன். சோம்பேறிகளின் வெறுங்கை‘யைப் பார்த்திருக்கிறேன். காட்டுல விலங்‘கை‘பார்த்திருக்கிறேன். நாட்டுல மனிதக் குரங்கை பார்த்திருக்கிறேன். இப்படி ஒரு கையைப் பார்த்ததில்லையப்பா.
வேலு :டேய் டேய் போதும் நிறுத்துடா எல்லாக் கையும் பார்ர்த்த நீ, இயற்கையைப் பார்த்தியா? அதான்டா ഖரட்சித்துக் காக்கும் கை. டேய் நீ கிறுக்கு சண்முகம்தானே. கிறு: ஆமா. நீ அவந்தானா?
வேலு : ஆமா. கிறு வேலுமணி. வேலு : சண்முகம் (தழுவிக்கொள்ளுதல்) டேய்! எனக்கு
அவசரமா ஓர் அறை வேணும்.
கிறு: ஆகா கொடுத்ததைத் திருப்பிக் கேக்கிறானே!
வேலு : அட அது இல்லடா ஒரு சின்ன வீடு வேணும்.
கிறு : சின்ன வீடா என் தொழிலையே மாத்தறியா நீ.
வேலு :ஐயோ தங்க வீடு வேணுண்டா?
கிறு : ஆமா அவ அவன் ஒலைக்குடிசையே கெடைக்காம
தவிக்கிறா இவருக்குத் தங்கத்துல வீடு வேணுமா?
வேலு: ஏ கிறுக்கு தங்க வீடு இல்லடா தங்கி இருக்க சின்னதா
ஓர் அறை. கிறு வீடா சரி சரி பாக்கலாம்.
திரை
காட்சி – 7
இடம் வீடு
பாத்திரம் : கிறுக்கு சண்முகம், செம்பருத்தி, வேலுமணி.
அமைப்பு : (கிறுக்கு ஆவேசமாக.)
கிறு : ஏண்டி! வாங்கிட்டு வந்த முட்டைய ஆம்லெட் போட்டு குட்றின்னு கேட்டா ரெண்டு முட்டையயம் உடைச்சு. அந்தக் கேன்ல போட்றே வீணா போன வெல்லத்த வாங்கிட்டு வந்தே போனா போகுதுன்னு. கொழுக்கட்டை
சுட்டுக் கேட்டா அதையும் அந்தக் கேன்ல கரைச்சுப்புட்ட அடியே என்னைக் கேனையனா நெனக்கிறியா?
என்று எல்லாவற்றையும் போட்டு உடைத்து ரகளை (செய்கிறான்.)
செம் : அடப்பாவி மனுசா அங்க இங்க கடன வுடன வாங்கிப் புள்ளைக்கு ஒரு வாயி சோறாக்கி வச்சே, அதத்தூக்கி
மண்ணுல கொட்டிட்டியே பாவி மனுசா (போட்டு அடிக்கிறாள்.)
கிறு: ஏய் நிறுத்துடி! குழுக் கூட்டத்துல போயி உள்கடன் கேட்டு
வாங்கிட்டு வாடின்னு சொன்னா சும்மா வெறுங்கையை வீசிக்கிட்டு வந்து நிக்கிற.
செம் : இப்ப உள் கடன் வாங்கி என்னய்யா செய்யப் போற?
கிறு அடமட பொறுக்கி மவளே செலவாடி இல்ல. இத நம்பி
நான் ஐந்நூறு ரூபாய்க்கு மாப்ள கரடிகிட்ட பத்து வலி பண்ணிருக்கேன்டி நாளைக்கி ஏ மாப்ள முகத்துல எப்புட்றி முழிக்கிறது.
செம் : நா என்னய்யா! பண்றது நானும் எவ்வளவோ கேட்டுப்
பார்த்தேன். கூட்டத்துல யாரும் சம்மதிக்கல. –
கிறு :அவுங்க என்னாடி சம்மதிக்கிறது. போடி போயி குழுவுல
கட்ன பணத்தைத் திருப்பி வாங்கி வாடி. குழுவும் வேண்டாம். ஒர் எழவும் வேண்டாம்!
செம் : கட்ன பணம் இப்ப கிடைக்காது.
கிறு :புருஷனையே எதிர்த்துப் பேசுறியா நீயி.
(அவன், அவளை அடிக்க, அவள் திருப்பி அடித்தபடி)
செம்:ஐயோ வள்ளியக்கா செல்வியக்கா பாவி மனுச குடிச்சிட்டு
வந்து அடிக்கிறானே! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லியா?
(அவன் முடியைப் பிடித்துவிட.)
கிறு : ஆ.ஆ. முடிய வுட்றி முடிய வுட்றி.
செம் : நாத்து முடியா இது? தலமுடி இனிமே அடிப்பியா?
கிறு : முடிய விட்டுட்டுப் பேசுடி வக்காளி மவளே! ஆம்பள சிங்கமடி.
(வேலுமணி வந்தபடி)
வேலு : இந்தாம்மா ஏ.. அவன இப்படிப் போட்டு அடிக்கிற?
கிறு : யார்ராவன் கிறுக்கனா இருக்கான் அவளா என்னை
அடிக்கிறா நால்ல அவள வெளுத்து வாங்குற.
வேலு : எல்லாம் தெரியுண்டா கிறுக்கா குடிச்சுபுட்டா இப்படியா
அசிங்கமா நடக்குறது.
செம்: நல்லா கேளுங்க சார்! நல்ல வேலை நீங்க வந்தீங்க இல்ல.
(ஆவேசமா கொண்டை முடிதல்.)
கிறு : என்னடி செய்வே? கிறுக்கு சிறுக்கி மவளே!
வேலு: ஏய் மூட்றா வாய. செம்பருத்தி என்னை அடையாளம்
தெரியலே.
செம் : தெரியலியே
கிறு: ஏண்டி மருதமுத்து பிள்ளை மகன் வேலுமணிய தெரியாது.
செம்: ஆமா சின்ன வயசுல பார்த்தது. அந்த அண்ணனா இவுக.
வேலு : ஆமா பல வருஷங்களுக்கு முன்னால வெள்ளாம சரி இல்லேன்னு நெலத்தை எல்லாம் கெட்டதுக்குப் பாதியா வித்துப்புட்டு ஊரை விட்டுப்போன மருதமுத்து பிள்ளை யோட மகன்தான் நான்.
செம்: உம் நீங்க வித்துட்டு பூட்டிய நாங்க போக்கிடம் தெரியாம
நாளுக்குநாள் சாகுறோம்.
வேலு : இல்ல செம்பருத்தி இனிமே நாமல்லா இங்கேதான்
இருக்கணும்.
செம்: இன்னுமா இந்த வூர்ல கஷ்டப்படனும்.
வேலு : கஷ்டத்த நாமதான் உருவாக்கிப்புட்டோம். ஆமா செம்பருத்தி வீடு வாச நெலத்தை எல்லாம் வித்து
புட்டு, இந்த வூரை விட்டுப் போன பிறகுதான் இயற்கை விவசாயம் பற்றி ஆராய்ச்சி பண்றவங்களோட அறிமுகம் எனக்குக் கெடச்சிது. அப்பதான் நாம எவ்வளவு முட்டாள் தனமாநம்ம விவசாயத்தைக் கெடுத்து வச்சிருக்கோம்ன்னு“தெரிஞ்சுது. தீவிரமான பயிற்சிக்குப் பிறகு நம்ம வூர்ல இத மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்னுதா ஒரு குழுவா இந்த வூருக்கு வந்தோம்.
செம் : நீங்க வந்ததும் நல்லதா போச்சுன்னே!
கிறு : ஏ வேலுமணி இவ போட்ட போடுல சுதி எறங்கிட்டுடா
ஒரு பத்து ரூபா இருந்தா குடேன்.
வேலு : எதுக்கு?
கிறு : கருவ காட்ல போயி கொஞ்சம் சுதி ஏத்திக்கிட்டு
வர்றேண்டா.
வேலு:செம்பருத்தி! நீ உம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு. இந்தக் கிறுக்குப் பயல கால கைய ஒடச்சி ரோட்ல போட்டர்றேன்.
செம் : நா செய்ய நெனச்சத நீங்க செஞ்சா வேண்டான்னா சொல்லப்போறேன். நல்லா ஒடிச்சிப் போடுங்கண்ணே!
கிறு : ஆங்..! (நைசாக நழுவுதல்.)
வேலு : (சண்முகத்தைப் பிடித்து) எங்கடா நழுவுற?
கிறு: அதுவந்து மாப்பிளஅடுத்தவூட்டு சேவக்கோழி கொல்லையில மேயுது. ஈரத்துணிய போட்டு அப்படியே அமுக்கி கொண் டாரதான்.
வேலு : எதுக்கு?
கிறு : மச்சான் வந்திருக்க இல்ல! உனக்கு விருந்து வைக்க
வேண்டாம்?
வேலு : இன்னும் திருட்டுக்கோழி புடிக்கிற புத்தி போகுதா
பாரேன்.
செம் : ஏண்ணா தெருவெல்லாம் பறையோசை காதைப்
பொளக்குது என்ன விஷயம்? வேலு:உனக்குத் தெரியாதா? திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில விடிய விடிய கலை இரவு நடக்கப் போகுது. அதுல
இயற்கை வழி வேளாண்மை பத்தி, நம்ம நாடக நாடி கரிகாலன் ஒரு சிறிய கலை நிகழ்ச்சி நடத்தப் போறாரு.
கிறு : நாடக நாடி விவசாயத்தையும் நாடி வந்துட்டாரா?
கிறு உம். நாடக நாடி கரிகாலன் எழுதுன குந்தியின் செல்வன் கிற நாடக நூலுக்கு அணிந்துரை எழுதிய பாடலாசிரியர் இராம. கண்ணன் என்ன எழுதினார் தெரியுமா?
செம் : என்ன எழுதினார்?
வேலு : கரிகாலன் கதைகளைத் தருவதில் ஒரு ஏகலைவன் –
கருத்துகளை மொழிவதில் கார்முகில் – நாடகக் கழனியில் இவர் ஏர் உழவன்னு எழுதினாரு.
கிறு : உண்மையிலேயே கரிகாலன் ஏர் உழவன் ஆயிட்டாரு.
வேலு : எழுத்தாளன் செர்ல்றது எப்படியோ பலிச்சிடுது.
கிறு: பின்னே இல்லையா? வயலு பக்கமே தல காட்டாம இருந்த
வரு இப்ப எல்லாரும் இயற்கை வழி வேளாண்மைக்கு
வாங்கன்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. வேலு : எல்லாம் அவரோட சுயநலம்தான்.
கிறு : சுயநலமா?
வேலு :ஆமா, அவரு மட்டும் இயற்கை விவசாயம் பண்ணிட்டா அவரு சந்ததிக்கு நஞ்சில்லா உணவு கிடைச்சிடுமா? ஊர் பூரா இயற்கை விவசாயம் நடக்கணும் நாடு பூரா இயற்கை விவசாயம் பரவணும். அப்பதான் அவரோட சந்ததிங்க எந்த வூருக்குப் போனாலும் நஞ்சில்லா உணவைச் சாப்பிட முடியும். r
செம் : அண்ணே அவரோட சுயநலத்துலதான் பொது நலமும்
கலந்திருக்கு கவனிச்சிங்களா?
வேலு : அததாம்மா அம்பது வருஷத்துக்கு முன்னமே நம்ம
திருக்குவளை ஐயா அழகா சொல்லிட்டாரு.
கிறு :அவரு என்ன சொல்லிருக்காரு 2
வேலு : என் சுயநலத்திலேதான் பொதுநலமும் கலந்திருக்குன்னு
வசனம் எழுதி இருக்காரே!
செம் : ஏண்ணா நம்ம சந்ததிக்கு நஞ்சில்லா உணவு
கிடைக்கணும்ன்னா நாம என்ன பண்ணனும்?
வேலு:உடனே நம்ம பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிப் பிடிக் கணும். இயற்கைவழி வேளாண்மைக்கு நாமளும் மாறணும்.
கிறு : இயற்கை வழி வேளாண்மை பத்தி எங்களுக்கு எதுவும்
தெரியாதே! :
வேலு : அது ஒன்னும் பெரிய கம்பசித்திரமல்ல. சாதாரண விஷயம்.
செம் : சாதாரண விஷயமா? அது எப்படி? வேலு : அத பத்தி விவரமா தெரிஞ்சுக்கத்தான்.
செம் : நாடக நாடி கரிகாலன் நடத்துற கலை நிகழ்ச்சியைப்
பார்க்கப் போறோம்.
– திரை –
காட்சி – 8
இடம் விழா மேடை
பாத்திரம் : பாகவதர் – காதர்
அமைப்பு : (காதர் மேடையில் தோன்றி.)
காதர் : வணக்கம் காலம் காலமா நம் முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்து வந்த இயற்கை வளம் இன்று மேல்நாட்டுக் கலாச்சார மோகத்தில் அழிந்து வருகிறது. செயற்கை உரங்களாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண் மலடாக்கப்பட்டு உணவு நஞ்சாக தாய்ப்பாலும் விஷமாக, மனிதன் நோயாளியாக மாறிவிட்டான். இந்தச் சீரழிவி லிருந்து மீளவும் எதிர்கால நம் சந்ததிகளின் வாழ்வு சிறக்க வும். இயற்கைவழி வேளாண்மை இம்மண்ணில் மலர
இந்த மேடை நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கை யோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கலை இலக்கிய இரவில் சங்கமித்து இதோ ஒற்றையடிப் பாதையில் எமது பயணம் தொடர்கிறது. (பாகதவர் பாடிக்கொண்டே வருதல்.) பாகவதர் ; பப்பாளிக்காயைப் போடு – அது
எலிகளை ஒழிக்கும் பாரு
எல்லாருக்கும் நஞ்சில்லாச் சோறு
தருகின்ற இயற்கையைத் தேடு
ஹா. ஹா. ஹா.
காதர் : நிறுத்து நிறுத்து இது என்ன பாட்டு ? பப்பாளிக் காயைப் போடு அது எலிகளை ஒழிக்கும் பாருன்னு பாட்றே?
பாக : அட அதிகப்படி பப்பாளிக்காயைப் பறிச்சி அத துண்டுத் துண்டா வெட்டி பேப்பர்ல பொட்டலமா கட்டி எலிகள் நடமாடும் இடத்த சுத்தி போட்டு வச்சா. அதோட் பால் மணம் எலிக்கு ரொம்பப் பிடிக்கும்! அதனால எலி பப்பாளிக்காயை விரும்பிச் சாப்பிடும் அதசாப்பிட்ட எலி எங்கயாவது போயி துடிதுடிச்சி செத்துப் போயிடும்.
காதர் ; இத எவனாவது காதுல வச்சிக்கிட்டு வருவான் அவ கிட்ட போயி சொல்லு, ஏய்யா பப்பாளிக்காயில என்ன விஷமா இருக்கு? அது சாப்பிட்டா எலி எப்படிச் சாகும்?
பாக : அட மக்கு பப்பாளிக்காயில விஷமில்ல. அதோட பாலு பிசுபிசுப்பா இருக்கும். அந்தப் பாலு சாப்பிட்ட எலியோட சின்னக்குடலை சேர்த்து ஒட்டிடும். அதனால அந்த எலி இறை எடுக்க முடியாம துடிதுடிச்சி செத்துப் போயிடும்.
காதர் :அடேங்கப்பா! ஆரம்பத் தகவலே பயனுள்ளதா இருக்கே!
இயற்கை முறையில எலிகளை ஒழிக்க இப்படி ஒரு வழிமுறை இருக்கா?
பாக ; அதனாலதான் சொல்றேன். இனிமே வீட்டுக்கு வீடு தோட்டத்துல பப்பாளி மரத்த அவசியம் வளர்க்கணும். பப்பாளி மரத்தோட இலைகள் பூச்சி விரட்டியாகவும் பயன்படும்பப்பாளிக்காய்ல பஜ்ஜி சுட்டும் சாப்பிடலாம்.
காதர் சாமி இனிமே நான் வயல் வரப்புலேயும் பப்பாளி மரத்தை
வளர்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
பாக: ரொம்ப நல்ல விஷயம்!
மூட்டைக்கட்டு மூட்டைக்கட்டு!
(கோஷம் போடுதல்)
காதர் : மூட்டைக்கட்டு மூட்டைக்கட்டு
(எதிர்கோஷம் போடுதல்.)
பாக : என்னத்த மூட்ட கட்டணும்?
காதர் : அதான என்னத்த மூட்டை கட்றது? தெரியாம எதுக்கு எசபாட்டு பாட்ற? காதர் : அது பழக்கதோஷம்
பாக : மூட்டைகட்டு மூட்டை கட்டு!
(கோஷம் போடுதல்.)
காதர்: மூட்டை கட்டு மூட்டை கட்டு.
பாக: நெய்வேலி காட்டாமணக்கை மூட்டைக்கட்டு.
காத : ஆங். ஆமா நெய்வேலி காட்டாமணியதான்
அரசாங்கம் காசு கொடுத்து அழிக்குதே! நீங்க மூட்டை கட்டச் சொல்றீங்களே எதுக்கு? பாக : நெய்வேலி காட்டாமணியை துண்டுத் துண்டா வெட்டி பழைய சாக்குல போட்டு சின்ன சின்ன மூட்டையா கட்டி வயல்ல அங்கங்க தண்ணில போட்டு வச்சா அது ஊறி சாறா எறங்கி வயல்பூரா பரவி பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.
காதர் : காசு கொடுத்து அழிக்கிற காட்டாமணக்கு பயிர் வளர்ச்சி
ஊக்கியா பயன்படுதா ஆச்சரியமா இருக்கே! உரச்செடியாதான் இந்தியாவுக்குள்ள கொண்டு வரப் பட்டது. ஆனா பன்னாட்டு நிறுவனங்களோட சதியால அது விஷச் செடியா புறக்கணிக்கப்பட்டது.
காதர் : ஆமா அத ஏன் மூட்டைக்கட்டி போடச் சொல்றீங்க?
பாக: மூட்டைக் கட்டாமசும்மா போட்டா அது வளர்ந்து நிற்கும்.
காதர் : ஓகோ! அது வளராம இருக்கத்தான் மூட்டை கட்டச் சொல்றீங்களா?
பாக:ஆமா.(பாடுகிறார்)
காப்பி ஒன்று எட்டனா
கார்டு சைசு பத்தனா
காண வெகு ஜோராயிருக்கும்
காமிராவைத் தட்டினா!
காதர் : நிறுத்தும் நிறுத்தும் இங்க நீங்க எதுக்கு வந்தீங்க?
பதக : இயற்கைவழி வேளாண்மையைப் பற்றிச் சொல்ல
வந்தேன்!
காதர்: வந்த விஷயத்தைச் சொல்லாம வேற எதையோ பாடுறீங்க! பாக : எதுக்கும் ஒரு முன்னோட்டம் வேண்டாமா?
காதர் : அப்ப பாடுங்க!
பாக நா பாட்டு பாடினா தாளக்காரர் ரொம்பக் கஷ்டப் படுவார்!
காதர் : ஏன்?
பாக : நான் பாடும்போது தாளம் போகும்.
காதர் : தாளம் போனா அவரு இழுத்துப் புடிப்பாரு
பாக : இழுத்துப் புடிக்க இது என்ன உம்பளச்சேரி பொலிக்காளையா ?
காதர் : உம்பளச்சேரி பொலிக்காளை எல்லாம் இப்ப பலிகடாவா மாறிட்டு, மாடுகளை லாரி லாரியா அடிமாடா அனுப் பிட்டோம். இல்லாமதான் நம் நாட்டு விவசாயம் சீர்கெட்டு கெடக்கு. அந்தச் சீர்கெட்ட வேளாண்மையைச் சீர்திருத்தம் பண்ணதான் இயற்கைவழி வேளாண்மைக்கு வழிகாட்ட
வந்திருக்கார் நம்மாழ்வார். அவருக்கு வணக்கம் சொல்லிட்டு விஷயத்துக்குப் போவோம்.
பாடல்: வருக வருக வாழ்க என்போம்
வானமும் பூமியும் வாழ்ந்திடவே
அறிஞர் பெரியவர் நம்மாழ்வார்
ஆயிரம் ஆண்டுகள் வாழ்க என்போம்.
மண்ணில். இயற்கை. வளமும் இருக்கு.
காதர் : மண்ணுல இயற்கை வளம் இருக்குன்னு சொன்னது
யாருங்க? . . .
பாக : இயற்கை வேளாண் முன்னோடி இவரது கருத்துக்கு ஏற்படி உழவர்கள் பழைய வழக்கப்படி செய்திட வேண்டும் சாகுபடி மாட்டை. வளர்ப்போம். கலப்பை எடுப்போம்.
காதர் : மட்டை எடுப்போம் விக்கட்டை அடிப்போம்
பாக : நிறுத்து நிறுத்து என்ன பாட்ற நீ?
காதர் : பின்ன என்னங்க நாட்ல நிறைய பேருக்குப் பித்தப் பைல கல்லு இருக்கு அதனால எங்களுக்கு பித்தப்பை தெரியும் அதிகாரிகள் கையூட்டு வாங்கிச் சாக்குல போட்றதனால சாக்குப் பை தெரியும் பிளாஸ்டிக் கழிவுகள் மல மாதிரி கொட்டி வச்சிருக்குறதால குப்பைய தெரியும் சாப்பாட்டுல போடறதால உப்பைத் தெரியும் நீங்க புதுசா கலப்பைன்னு ஏதோ சொல்றீங்க.
பாக : நா சொல்ற ஏர்க்கலப்பையை நீ எபயாவது பிடிச்சிருந்தா
உனக்கு நோயே கிடையாது. பசுமை தாவர விஞ்ஞானி பாமர உழவனின் வழிகாட்டி பயிர்களை இயற்கையாய் வாழவைக்கும் பதினோராவது அவதாரம். மாட்டின் சாணம். எருவைக் கொடுக்கும்.
காதர் : மாட்டுச் சாணம் மக்க வச்சா எருவாகும் அது பிளாஸ்டிக்
குப்பையோட கலந்தா?
பாக கொசு உற்பத்தியாகும் பன்னாட்டு நிறுவனத்திற்கு அதனால
இலாபம். காற்றும் மழையும் கதிரொளியும்
கணக்காய் தருகின்ற வளமெல்லாம்
கருத்தாய்க் கொண்டு செய்ய வைத்தார்
கழனிகள் தோழன் நம்மாழ்வார்
பஞ்சம்… போக்க பசுவை… வளர்ப்போம்.
காதர் : தண்ணிய பாக்ட்ல அடைச்சு லிட்டர் பதினெட்டு ரூபா
விக்கிறான். வீட்ல வளக்குற மாட்டுப்பால எட்டு ரூபாய்க்கு எடுக்க மறுக்குறான். தண்ணிக்கு உள்ள மதிப்புகூட பாலுக்கு இல்ல! இதுல எங்கய்யா மாட்ட வளர்த்துப் பஞ்சம் போக்குறது.
பாக : மாடு வளக்குறது பாலுக்காக மட்டுமில்ல.
காதர்: ஆமா. ஆமா..! அடிமாட்டுக்காக!
பாக அது பாவம். பெரும்பாவம்,
காதர் : எனக்குத் தெரியும் விஷயத்துக்கு வாங்க.
பாக : நாட்டுப் பசு மாடுகள் நமது உரக்கிடங்கின் நோஞ்சான்
மாடுகளும் வயலுக்கு உரம் கொடுக்கும். ஆகவே மாடுகளை அடிமாடுகளாக விற்றுவிடாதீர்கள்.
செயற்கை உரத்தைத் தினம் போட்டு சிதைந்தது வயல்கள் மண்ணெல்லாம். இழந்ததை மீட்போம் இயற்கையினால் என்றே சொன்னவர் நம்மாழ்வார் அமுத. கரைசல். தெளிப்போம்.வயலில்
காதர் அமுதகரைசலா? அதுக்குத் தேவலோகத்துக்குல்ல போகணும்.
பாக : கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு ஏன் அலையனும்?
காமதேனு கற்பக விருட்சம் நம்ம நாட்டுப்
பசு அதோட சாணமும் மூத்திரமும் தம்மாத்துண்டு வெல்லத் தைப் போட்டு கரைச்சு ஒருநாள் ஊறல் போட்டா அதுதான் அமுதக் கரைசல். அதுதான் பயிர் வளர்ச்சி ஊக்கி. காதர் : அதாவது.
பாக : யூரியா போட்டா பச்சையம் கூடும் பூச்சிக்கு வரவேற்புக் கொடுக்கும்.
காதர் அதனால….
பாக : யூரியாவுக்குப் பதில் யூரின்? யூரின் தெளிச்சா அந்த வாடைக்குப் பூச்சிவராது அதோட பயிருக்குத் தேவையான 4% நைட்ரஜன் யூரின்ல இருக்கு.
காதர் :அடேங்கப்பா செலவே இல்லாத உரமா இருக்கே.
பாக : ஆமா யூரியா மூட்டையில வருது.
யூரின் மாட்டுல வருது
யூரியா உருண்டை வடிவில்
இருக்கு யூரின் திரவ வடிவில் இருக்கு
காதர் : பப்பாளிக்காய் எலியை ஒழிக்குது! நெய்வேலி காட்டாமணி பயிர் வளர்ச்சிக்கு உதவுது மாட்டு மூத்திரம் நைட்ரஜனைக் கொடுக்குது இதெல்லாம் ஒருங்கிணைக்க வழி…?
பர்க: ஒன்றாய்க் கூடணும் விவசாயி.
காதர் : அது முடியாது.
பாக : உண்மையை உணரனும் தினம் பேசி.
காதர் : நாங்க புறம்பேசித்தான் பழக்கம். பயிர்களை நேசிக்கும் விசுவாசி.
காதர் : பயிர்கள நேசிக்கிறதாலதா யூரியாவை மூட்டை மூட்டையா கொட்றோம். களைக்கொல்லி பூச்சிக் கொல்லின்னு லிட்டர் கணக்கா தெளிக்கிறோம்.
பாக : பாருக்குச் சோறிடும் சுகவாசி.
காதர் : யாரு?
பாக : விவசாயி. காதர் : உம். பாடுங்க பாடுங்க.
பாக : ஒன்றாய்க்கூடணும் விவசாயி.
உண்மையை உணரணும் தினம்பேசி
பயிர்களை நேசிக்கும் விசுவாசி
பாருக்குச் சோறிடும் சுகவாசி
பாருக்குச் சோறிடும் விசுவாசி
வருக. வருக. வாழ்க என்போம்
இயற்கை… வழியில்… வெல்வோம்….உலகை
காதர் : இப்ப சொன்னிங்களே இது நிச்சயம் நடக்கும்.
பாக :வாழ்க வளமுடன்
காதர் : புல்லரிக்குது உடம்புல.
பாக : மாடு மேஞ்சிடப் போவுது.
காதர் : இப்ப உள்ள மாடு புல்லு திங்காதே.
பாக : வேற என்ன திங்கும்?
காதர் : ஆரோக்யா மாட்டுத் தீவனந்தான் திங்கும். மேய வுட்டா
குப்பையா கிடக்குறி பிளாஸ்டிக் பேப்பரதான் முழுங்கும்.
பாக : அது மாடு இல்லை மாடு வடிவில் உள்ள பன்றி. சரி
இயற்கையை நாம் சிதைத்தால் அது நம்மை அழிக்கும்.
காதர் : ஆமாம் இயற்கையை நாம் சிதைத்தால் அது நம்மை அழிக்கும். இந்தச் செய்தியை, இந்தச் சபையில் பதிய வைப்போம்.
பாக் சரி சபை வணக்கம் சொல்வோமா?
காதர் : சொல்வோம் வெல்வோம்.
பாக : வந்திருக்கும் எல்லாருக்கும்
வணக்கம் சொன்னா நல்லாருக்கும்
வயலும் வாழ்வும் நடத்தப் போறோம்
கேட்க வாங்களேன்
வாழ வச்ச வயலு இங்கே
வாடிப் போயி கிடக்கு தூங்க
காரணந்தா செயற்கை
உரம் போட்ட தாலே.
டிராக்டர் ஒட்டி உழுது வச்சோம்
யூரியாவைக் கொட்டி வச்சோம்
மண்ணு வளம் கெடுத்துப் புட்டோம் உண்மையாக – இத –
@மாத்தனும் மாத்தணும் மாத்தனுங்க
மாறவே இல்லேன்னா நோய்தானுங்க மண்ணு வளத்தை நாம இங்கே காக்கணும் – இதில் மரபணு விதைகளையே நீக்கணும்
இனிமேலே இயற்கை உரம் போடலன்னா எதிர்காலச்
சந்ததியை நோய்கள் வந்து தாக்குமே – இது எல்லாருக்கும் புரியணும் நல்லாதானே தெரியணும்
கண்ணுபோல வயல்நாம காக்கணும் – நம்ம
கண்ணுபோல வயல நாம காக்கணும்.
காதர் : இத மாத்தணும். மாத்தனும் மாத்தணுங்கற. மாறவே
இலலேனனா நோய்தானுங்க.
பாக : பழைய கால விதை எல்லாம் மறந்துட்டோம்.
காதர் : ஆமா, பழையகால விதை எல்லாம் மறந்துட்டோம்.
பாக : நம்ம உழைப்பை எல்லாம் வீணாக்கி இருந்துட்டோம்
வாடன்சம்பா குடவாழை மாப்பிளைச் சம்பா நெல்விதை தேடிப் பிடிச்சி நாம இங்கே விதைக்கணும்–இதில் இயற்கை உரம் போடணும் எல்லாருக்கும் தெரியணும் இரசாயன உரத்த நாம மறக்கணும்–இந்த இரசாயன உரத்த நாம மறக்கணும் இத மாத்தனும் மாத்தனும் மாத்தனுங்க மாறவே இல்லேன்னா நோய்த்னுங்க
காதர் : ஏமாத்தனும் ஏமாத்தனும் ஏமாத்தனுங்க ஏமாத்தவே இல்லேன்னா பட்னிதானுங்க பாக ஏய் நிறுத்து.
காதர்: ஹி..ஹி..ஹி.. பாக ஏ சிரிக்குற.
காதர் : உங்கள பாத்தா பாவமா இருக்கு ஏன்னா நாட்டுக்கு
நல்லதெல்லாம் சொல்றீங்க.
பாக: நல்லத நான் சொல்லக் கூடாதா?
காதர் : பைத்தியம் சொல்றத யார்னா கேப்பாங்களா?
காதர் : விஞ்ஞானம் வேகமா முன்னேறிக்கிட்டிருக்கு இன்னும் கொஞ்சநாள்ல பொம்பளங்க ஆம்பளதுணை இல்லாம ஊசி போட்டுக்குழந்தை பெக்குற நெலம உருவாகும் போலேருக்கு.
பாக : ஊசி மூலமா கொழந்த பெக்குறது தப்பில்ல ஆனா அஞ்சு வயசுல குழந்தைய பள்ளிக்கூடத்துல சேக்கும்போது அப்பன் பேரு என்னான்னு கேட்டா ஊசின்னா சொல்ல முடியும்?
காதர் : ஆங்.
பாக :வாய பொளக்காத ஈ பூந்துட போகுது. இயற்கையா நடக்க வேண்டிய நடைக்கே வாக்கிங்கின்னு ஒருபேருவச்சிட்டான் மனுசன்.
காதர் : வாக்கிங் போறது ரொம்ப ஜாலியான விஷயம்.
பாக :எப்படி? –
காதர் : அதிகாலையில அழகான பொண்ணுங்க கூட வாக்கிங்
போகுது அது உமக்குத் தெரியாதா?
பாக : உம். அம்மிக் குளவி ஆட்டுக்கல் திருகை உரலு உலக்
கைன்னு. இயற்கை வழியில பெண்கள் பழகி இருந்தா.
காதர் : வீட்டு வாசல்ல சாணத்த தெளிச்சிப்புட்டு கோலத்த போட்டு வச்சிக்கிட்டு அந்தக் காலமாட்டம் தோட்டத்து
வேலைய பாத்துக்கிட்டு இருக்கும்! நல்ல வேல இந்த கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், குக்கர் எல்லாம் வந்ததால அதுகளும் வாக்கிங் வருது. நாங்களும் ஜாலியா சைட் அடிச்சிட்டுக்கிட்டே வாக்கிங் போக முடியுது. காணக் கிடைக்காத காட்சி ஐயா இதெல்லாம். . பாக : அடச்சீ வாயை மூடும்.
காதர் : சரி சரி இரும் இரும். ஆமா இயற்கை விவசாயம் ஏன்
செய்யணும்? எதுக்குச் செய்யணும்?
பாக : பெஸ்ட் கொஸ்டின் நல்ல கேள்வி கேட்டிருக்கே. குட்பாய். இதுக்கு நான்பதில் சொல்லித்தான் ஆகணும். ஆனா அதுக்கு முன்னாடி நாற்பது வருஷமா நாம செய்துகிட்டிருக்குற செயற்கை உர சாகுபடியால நாம கண்ட பலன் என்ன?
காதர் : என்னத்த பலன் கண்டோம்?
பாக : ஏன் இப்படிச் சலிச்சுக்கிறே?
காதர் : காசு பணத்த கொட்டி கடனாளியா ஆனதுதான் கண்ட பலன் – திரைகடலோடியும் திரவியம் தேடுன்னாங்க. என் வயசுக்கு எனக்குப் பிளட்பிரஷர் இருக்கு, எங்க அண்ண னுக்கு இரத்தக் கொதிப்பு, என் தம்பிக்கு பெராலிஸ் அட்டக் பண்ணிருக்கு, என் தங்கைக்குப் பக்கவாதம், எங்க அக்கா புருஷனுக்குச் சுகரு, அவரு தம்பிக்கு சக்கரை நோய், அவரு பேரன் கேட்கவே வேண்டாம். பொறந்ததுலேருந்து ஆஸ்பத்திரியே கதியா கெடக்குறான். எங்க பக்கத்து வீட்டு பொண்ணு சாந்தாஉக்காந்தாகுந்த மாட்டேங்குறா குந்துனா உட்கார மாட்டேங்குறா.
பாக : ஏன்?
காதர் : அவளுக்கு இடுப்பு எலும்பு தேஞ்சிருக்காம்.
பாக : எல்லாத்துக்கும் காரணம். ?
காதர் : இரசாயன உரம் பூச்சிக்கொல்லி மருந்துதான்.
பாக : எல்லாந் தெரிஞ்சிக்கிட்டு அதே தப்பை ஏய்யா திரும்பத்
திரும்ப செய்றிங்க?
காதர்: வேற வழி தெரியல! தெரிஞ்சாலும் பூனைக்கு மணி கட்றது யாருங்கற கதையா இருக்கு. இன்னிக்கு விவசாயியோட மனநிலை, தன்னம்பிக்கை இல்லை. முன்னால போற ஆட்டைப் பின்தொடர்ந்து போற செம்மறி ஆட்டுக்கூட்டம் மாதிரி ஆயிட்டோம். சொந்த புத்தியுமில்ல சொல்புத்தியும் இல்ல. தண்ணி கூட காசு கொடுத்து வாங்குற அளவுக்குச் சூழ்நிலைக் கைதியா மாறிட்டோம். பாக : உம் காந்தி போராடி விடுதலை வாங்கித் தந்தாரு. காலனி ஆதிக்கத்துலேருந்து விடுபட்டோம் – இப்போ காலனி வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறோம். காதர் இதை எல்லாம் மாற்ற வழி.
பாக : இருக்கு, . . .
காதர் : எப்படி?
பாக : இயற்கைவழி வேளாண்மைக்கு மாறணும்.
காதர் : அது சாத்தியமா?
பாக : நிச்சயமா காதர் : அது எப்படி?
பாக : (பாட்டு)
வளமான மண்ணுதான்
வயலெல்லாம் மின்னுதாம்
விவசாயி மனசு வச்சா
விளையுமே பொன்னுதான்
மண்வெட்டி களை கொட்டாலே
மண்ணெல்லாம் கொத்தனும்
களையெல்லாம் ஏரு பூட்டி வேரோட வெட்டணும்
காற்றெல்லாம் மண்ணுக்குள்ளே எளிதாகப் போகனும்
ஒ…..
மண்மேலே வைக்கோல் போட்டு மூடிட்டா போதுமே
மண்புழு அலை அலையாக மண்டிதான் வாழுமே.
(வளமான)
விவசாய செலவுகள் எல்லாம்
வெகுவாகக் குறையுமே
வீணான முறைகள் இல்லா
இயற்கை விவசாயமே விதைப்பதும் அறுப்பதும்தான்
விவசாய வேலைகள்
வீட்டுக்கு ஒரு பசுமாடு
கண்டிப்பாக இருக்கணும்
சாணியும் சாம்பலும் தானே
சத்தான அடியுரம் (வளமான)
(பாடல் முடிந்து)
பாக : எல்லாருக்கும் எல்லாம் தரும் சக்தி படைத்ததுதான் இயற்கை. ஒரு பசு கன்று ஈனுவதற்கு முன்பே அந்தக் கன்றுக்குத் தேவையான பாலை மாட்டினால் கொடுக்க வழிவகுத்துள்ளது இயற்கை இல்லையா?
காதர் :ஆமாம்.
பாக இடம்விட்டு இடம் நகரும் ஜீவராசிகளுக்கெல்லாம் கொடை கொடுக்கும் இயற்கை. இடம்விட்டு இடம் நகரும் சக்தி யற்ற பயிர்களுக்குத்தேவையானதைக் கொடுக்காதா என்ன?
காதர் : கொடுக்கும் கொடுக்கும். அதனாலதான் மரத்த வச்சவன்
தண்ணி ஊத்துவான்னு பழமொழியே சொல்லி இருக்காங்க. இருந்தாலும் இந்த யரியா போடலன்னா.
பாக : இயற்கை உரமே மண்ணுல இருக்கு.
செயற்கை உரம் ஏன் போடணும் அதுக்கு காற்றும் நீரும் இருந்தா போதுமுங்க சத்தாய் கிடைக்குமே – ஊட்டச் சத்தாய்க் கிடைக்குமே
காதர் : காற்றும் நீரும் பயிருக்குப் போதுமா அது எப்படி?
பாக : காற்றாலும் நீராலும் ஊட்டச்சத்துக் கிடைக்குது.
பசுந்தாள் உரம் போட்டா தழைச்சத்தும் இருக்குது
மணிச்சத்தும் சாம்பல் சத்தும் அதுகூட இருக்குது
இயற்கையாக நிலம் இங்கே பயிர் வளர்க்க உதவுது
காதர் : ஆனாலும் பாருங்க மூட்ட மூட்டையா உரத்த கொட்ட
லன்னா கண்டு முதல் குறைஞ்சிடாதா?
பாக : கட்டாந் தரையில புல்பூண்டு முளைக்குதே
அதுக்கு யாரு உரம் போட்டா? தரிசு நெலத்துல செடி கொடி மரம் வளருமே அதுக்கு யாரு உரம் போட்டா? காட்டுல மரம் செடி கொடி வளருதே அதுக்கு யாரு உரம் போட்டா?
மாடி வீட்டுல சிமிண்ட் காரையில மரம் செடி கொடி முளைக்குதே அதுக்கு யாரு உரம் போட்டா? தண்ணி யார் கொடுத்தாங்க.
காதர் : ஆழமா யோசிச்சிப் பார்த்தா, இயற்கையில இவ்வளவு
அதிசயம் இருக்கா?
பாக: இப்ப சொல்லு பயிருக்கு இரசாயன உரம் தேவையா தேவை
இல்லையா?
காதர் : இல்ல. இல்ல. இல்ல. டு நத்திங் பார்மிங்.
விவசாயத்திற்கென்று எதுவும் செய்யத் தேவையில்லை
விதைப்போம் அறுப்போம்.
பாடல் : பழைய விதைகளைப் பட்டியல் போட்டா
பல பேருக்குத் தெரியல கேட்டா
எல்லாருக்கும் புரியும்படியா
எடுத்துச் சொல்லுறோம் – நாங்க
வழியைச் சொல்லுறோம். மடுமுழுங்கி நெல்லுக்குப் பேரு
மண்ணில் போட்டா வெளஞ்சிடும் பாரு
நெடுநெடுன்னு நீருக்கு மேலே
நிமிர்ந்து நிற்குமே நீண்ட கதிரைக் கக்குமே
காதர் ஏங்க நம்ம பாரம்பரிய விதைநெல் இப்ப இருக்கா?
பாக! உம் வயதான பெரியவங்க பொக்கிஷமா போற்றிக் கொஞ்ச நஞ்சம் பாதுகாத்து வச்சிருக்குற விதைகளைத் தேடிப் பிடிச்சி பெருக்கிகிட்டிருக்காங்க அந்த வகையில் கர்நாடகா வுல 72 ரகம் இருக்கு. நம் தமிழ் நாட்டுல தொன்னூறு வகையான நெல் ரகங்கள் புழக்கத்துல வந்துகிட்டிருக்கு. இன்னும் பல நெல் ரகங்களைத் தேடிக்கிட்டிருக்காங்க. காதர் ஆமா நம்ப பாரம்பரிய நெல்லுல என்ன சிறப்பு இருக்கு? பாக : கல்லைத் தூக்க மாப்பிள்ளைச் சம்பா
வறட்சி தாங்க வாடன்சம்பா
வாழ வைக்கும் குடவாழை மச்சானே
கழிசல் நோய் நீக்க பிச்சவாரி கண்டேனே
மாட்டுக்குக் கழிசல்நோய் நீக்க பிச்சாரி கண்டேனே!
காதர் : அடேங்கப்பா.
பாக:ஒட்டடையான் நெல் விதைச்சாஇருமுறை நாம்அறுத்திடலாம்.
செலவு குறையும் பலன் அதிகம் அத்தானே ஒரே கல்லில் இருமாங்காய் கண்டேனே காதர் : அப்படியா? பாக வெள்ளப் பெருக்கைத் தாங்கி வரும்
கார் நெல்லை வெதச்சிப் புட்டா – படகில் போயி அறுத்திடலாம் அத்தானே அங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம் மச்சானே!
காதர் : அப்புறம்.
பாக : உப்பு நிலத்தில் உவர் முண்டான்
பயிராக்கி பார்த்திடலாம் சதுப்பு நிலத்தில் களர் சம்ம்பா மச்சானே அங்கே குழிவெடிச்சான் நெல்லுமுண்டு அத்தானே
காதர் : மேலே சொல்லுங்க. பாக அறுபதாம் குறுவையுண்டு வாழைப்பூச் சம்பா கண்டு மடுமுழுங்கி நெல்லுமுண்டு மச்சான் அது மானத்தைக் காத்து விடும்.மச்சானே
காதர் : ஆமா ஒட்டடையான் நெல் விதைச்சா இருமுறை நாம்
அறுத்திடலாம்ன்னு சொன்னீங்களே அது எப்படி? பாக அறுபதாம் குறுவையுண்டு வாழைப்பூ சம்பா கண்டுன்னு சொன்னல்ல அந்த அறுபதாம் குறுவை அதோட ஒட்டடை யான்நெல் இரண்டையும் கலந்து ஒரே விதைப்பா விதைச் சிட்டா அறுபதாம் குறுவை முன்னாடி அறுவடைக்குத் தயாராயிடும் நீண்டகாலப் பயிர் ஒட்டடையான் பிறகு வளரும்.
காதர் : ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!
பாக: கிராமங்கள்ல அதுக்குமுன்ன இளவட்டக் கல்லுன்னு ஒன்று இருந்திருக்கு. அந்தக் கல்லைத் தலைக்கு மேல தூக்குற இளைஞனுக்குத்தான் பெண் கொடுப்பாங்களாம். அப்படி அந்தக் கல்லைத் தலைக்கு மேல தூக்குற அளவுக்குச் சக்தி யைக் கொடுக்குமாம் மாப்பிள்ளைச் சம்பா அரிசி மூலமா கிடைக்குற நீராகாரம்.
காதர் : வேடிக்கையா இருக்கே!
பாக: வேடிக்கை இல்ல சீர்காழி, புதுக்கோட்டை பக்கமெல்லாம்
இந்த இளவட்டக் கல் இருந்திருக்கு. காதர் : மாட்டுக்குக் கழிசல் நோய் நீக்க பிச்சவாரி நெல்லு. அது சரி வாழ வைக்கும் குடவாழைன்னு சொன்னீங்களே அது எப்படி? . . .
பாக : குடலைச் சுத்தப்படுத்தி நோய் வருமுன் காப்பதால் குடவாழை குடலை வாழ வைப்பதால் குடவாழை!
காதர் : ஆமா உலகிற்கு உணவளிப்பீர், செம்மை நெல் சாகுபடி செய்வீர்ன்னு வேளாண்மைத் துறையில சொல்றாங்களே, அந்தச் செம்மை நெல் எங்க கிடைக்கும். பாக செம்மைங்குறது நெல் ரகத்தோட பேரு இல்ல. திருந்திய நெல் சாகுபடின்னு முன்ன சொன்னாங்க. இப்ப இலக்கிய
ரீதியா செம்மைன்னு சொல்றாங்க. மரபணு மாற்று
விதைகளைக் கொண்டு வந்து பன்னாட்டு நிறவனங்கள் கிட்ட் நம்மள கையேந்தும் சூழ்நிலையை உருவாக்குற திட்டம் அது நமக்கு உதவாது.
காதர் : ஆமா ஒற்றை நாற்றுநடவு முறையில சாகுபடி செய்ய ஏற்ற நெல்ரகம் எது?
பாக : எந்த நெல் ரகமா இருந்தாலும் ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்ய முடியும். .
காதர்: ஒற்றை நாற்று நடவு முறையில் சிறப்புச் செய்தி ஏதாவது? Litræ5 • Slot ஒரு ஏக்கருக்குக் கால் கிலோ விதை போதுமுன்னு
கண்டுபிடிச்சிருக்காங்க. பாக அது எப்படி? காதர் : இரண்டடி இடைவெளி விட்டு ஒரு நாத்து வீதம் நட்டா
ஒரு ஏக்கருக்குக் கால் கிலோ விதை போதும்.
காதர் : இரண்டடி இடைவெளி தேவையா? பாக: இடைவெளி அதிகமாகும்போது அதிக தூர் வெடிக்குதாம். ஒரு நெல்விதை நூற்றி இருபது தூர் வரை கட்டுதாம். அதிலிருந்து கால் கிலோ நெல் விதை கிடைத்திருக்காம்.
காதர் ; இத நீங்க நம்புரீங்களா?
பாக : மண்ணில் மண்புழு இருந்து காற்றோட்டம் வேருக்குக்
கிடைத்தால் இது சாத்தியமே!
காதர் : உங்களுக்கு அனுபவம் இருக்கா.
பாக : ஒற்றை நாற்று நடவு முறையில் ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளியில் நட்ட பயிரில் எழுபது தூர் வரை எண்ணிப் பார்த்திருக்கிறேன்.
காதர் : பாரம்பரிய நெல்லில் அதுபோல் தூர் வெடிக்குமா? இயற்கையின் சமன்பாடு சரியாக இருந்தா எல்லா நெல்
ரகமும்தூர் வெடிக்கும்.
காதர் :தூர் வெடிப்பதைப் பற்றி விளக்கமா சொல்ல முடியுமா?
ச. கரிகாலன் கக (91)
பாக: அதுபற்றியும் சொல்லி இருக்காங்க,
ஒரு தாய் நாற்று பத்தாம் நாள் ஒரு குட்டி போடுமாம். அதன்பிறகு அந்தத் தாய் நாற்று ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குட்டி போடுமாம். அந்தக் குட்டி பத்தாம் நாள் ஒரு குட்டி போடுமாம். பிறகு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அதுவும் குட்டி போட்டுக்கொண்டே இருக்குமாம். இப்படித் தூர் வெடிப்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் மண்டை காய்ந்து விடும்.
காதர் : நெருக்கி நட்டு நெல்லைப் பார்ன்னு புதுசா ஒரு பழமொழி இருக்கே தெரியுமா?
பாக : நெருக்கி நட்டா நெல்லதான் பார்க்கலாம். கலக்க
நட்டாதான் கதிரைப் பார்க்க முடியும்.
பாடல் : விவசாயம் இயற்கை விவசாயம் – இந்த
விவரம் தெரிஞ்சு உழவு செஞ்சா ஆதாயம் பலனாகும் நல்ல பலனாகும் – இதுக்கு இயற்கை உரம் போடுவது பலனாகும் பயிர்செய்ய மண்ணு வளமே இருக்குங்க–அதுக்கு பழுதில்லாத விதைகளையே விதைக்கணுங்க.
(விவசாயம் இந்தக் கால விவசாயி வாரிசையே பழக்கலே சொந்தமா நிலமிருந்தும் சேற்றில் இறங்கி நடக்கல சந்ததிக்குச் சத்தில்லாத உணவு தந்தோம் நமக்கும் சரஞ்சரமாய் நோய்கள் வர வழிவகுத்தோம்.
காதர் : பழக்கமில்லாம நம்ம பிள்ளைகள எப்படி விவசாயத்துல
ஈடுபடுத்துறது?
பாக : பள்ளியில இதுக்குப் போயி படிக்கணுமா?
இல்ல பயிர் வளரும் நிலத்தில் இறங்கி நடக்கணுமா? ஆட்டு எரு அந்த வருஷம் அறியணுமா? – அட மாட்டு எரு மறுவருஷம் புரியணுமா?
கிறு : (மேடையேறி வந்து) சரியா சொன்னிங்க சாமி எங்க தத்தா
அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு.
பாக: என்ன சொல்வாரு
கிறு: பொண்னோட குணத்தாலே
குடும்பம் நல்லா நடக்குது
மண்புழுவோட செயலாலே
இயற்கை உழவும் சிறக்குது
வேலு : அப்படிப் போடு
செம்: எம் புருஷனுக்கு ஞானம் வந்துடுச்சி. கிறு அட போ புள்ள எனக்கு வெக்கமா இருக்கு.
வேலு : இதுல வெக்கப்பட என்ன இருக்கு? உன் மனசுக்குள்ளே
உள்ள விஷயம் வெளிப்பட்டிருக்கு.
செம் : ஆங். அப்பறம் சொல்லு மச்சான்.
கிறு : தக்கப்பூண்டு வெதச்சாலே முளைச்சிடுங்க – அத
மடிச்சடிச்சா அடிஉரமா ஆயிடுங்க. – `
எல்லாரும் : விவசாயம் இயற்கை விவசாயம் – இந்த
விவரம் தெரிஞ்சு உழவு செஞ்சா ஆதாயம்
கிறு : சாமி தொழு உரமே போடாம கடை உரத்தைப் போட்டே சாகுபடி செஞ்சதால நிலம் பூரா இறுகி கட்டாந்தரையா கெடக்கு. இத மாத்த வழி இருக்கா? பாக : முயற்சி செஞ்சா முடியாதது எதுவும் இல்ல. GFib : 6667 mo செய்யணும். பாக :செயற்கை உரத்தாலே
செயல் இழந்த வயலெல்லாம்
இயற்கை உரம் போட்டா
ஏரு பூட்ட அழைக்குமே!
வேலு : செம்பருத்தி…..
காட்டுமனை யாக்கும் நிலைவிட்டிடணும் – நிலத்தைத் தரிசில்லாம சாகுபடி செய்திடணும்
எல்லாரும் : விவசாயம் இயற்கை விவசாயம் – இந்த
விவரம் தெரிஞ்சு உழவு செஞ்சா ஆதாயம்
பாக : காற்றாலும் நீராலும் ஊட்டச்சத்து கிடைக்குது
பசுந்தாள் உரம்போட்டா தழைச் சத்தும் இருக்குது
வேலு : மணிச்சத்தும் சாம்பல் சத்தும்
அதுகூட இருக்குது – தம்பி இயற்கையாக நிலம் இங்கே பயிர் வளர்க்க உதவுது.
எல்லாரும் : விவசாயம் இயற்கை விவசாயம் – இந்த விவரம் தெரிஞ்சு உழவு செஞ்சா ஆதாயம்
பாகவதர் : நன்றி! வணக்கம்.
வாசலில் போடப்பட்ட வண்ணக்கோலமல்ல – இது வயலில் விளைந்த பல ரகங்களின் கதிர்க்கோலம்!