"

6

நெல் ரகங்கள்

அறுபதாம் குறுவை, அம்பாசமுத்திரம், அரும்போச சம்பா, அன்னமழகி, ஆர்க்காடு கிச்சலி, இராவணன் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, ஈர்க்குச் சம்பா, உத்தமபாளையம் (செம்பாளை), உவர்முண்டான், ஒட்டுக்கிச்சடி, ஒட்டடையான், கட்டை சம்பா, களர்பாளை, கட்டமோசனம், கப்பகார், கப்பச்சம்பா, கருடன் சம்பா, கருப்பு சீரகச் சம்பா, கவுணி, களர் சம்பா, கர்நாடக சீரகச் சம்பா, கல்லி மடையான், கல்லுண்டைச் சம்பா, கருங்குறவை, காடைச் சம்பா, கார்நெல், காளான் சம்பா, கார்த்திகைச் சம்பா, காடைக்கழுத்தான், காட்டுயர்னம், கிச்சலி சம்பா, குள்ள கார், குடவாழை, குண்டுச்சம்பா, குறுஞ்சம்பா, குன்றிமணிச்சம்பா, குழியடிச்சான் குட்டவாழை, குதிரைவால் சிறுமணி, கைவரைச்சம்பா, கோடைச்சம்பா, கோரைச்சம்பா, சடார், சம்பாமோசனம், சம்பா, சடைச்சம்பா, சிவப்பு சீரகச்சம்பா, சிவப்புப் பொன்னி, சிவப்புக் குடவாழை, சீரகச்சம்பா, சீதா போகம், சீரகமல்லி, செஞ்சம்பா, செம்பாளை, செங்கார், செங்கல்பட்டு சிறுமணி, சொர்ணவாரி, சூப்பர் பொன்னி, சூரக்குறுவை, திருத்துறைப்பூண்டி கார், தூயமல்லி, தோட்டச்சம்பா, பிச்சவாரி, பிசினி, பெங்களூர் கார், பெருங்கார், பெரிய சம்பா, பெருநெல், புழுதிக்கார், புனுகுச் சம்பா, புழுகுச் சம்பா, பூங்கார், பூம்பாளை, பூஞ்சம்பா, பொன்மணி, மணல்வாரி, மலைநெல், மல்லிகைப்பூச்சம்பா, மலைக் கிச்சலி, மடுமுழுங்கி மண்கத்தை, மணிச்சம்பா, மஞ்சப்பொன்னி, மாப்பிள்ளைச் சம்பா, மிளகுச் சம்பா, முத்துவெள்ளை, முட்டக்கார், மொட்டக்கூர்

மோசனம், மைச்சம்பா, நரிக்குறுவை நீலச்சம்பா, நெய்கிச்சலி, ராமக்குறிக்கார், ரோஸ்கார், வளைத்தடிச் சம்பா, வாடன் சம்பா, வாலான் சம்பா, வைகுண்டா, வெள்ளைக் கட்டை, வெள்ளை சொர்ணவாரி, வெள்ளைச் சீரகச்சம்பா.

இன்னும் பற்பல ரகங்கள் நமது கவனத்திற்கு வராமல் உள்ளன. ஏக்கருக்கு 12 மூட்டைகள், 15 மூட்டைகள், 18 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். இது குறைந்த மகசூலாகத் தோன்றும்.

ஆனால் நமது முன்னோர் கடை சரக்கே இல்லாமல், காசு கொடுத்து எதையும் வாங்காமல் வீட்டில் வளர்த்த கால்நடைக்

கழிவுகள், தோட்டத்தில் கிடைக்கும் இலை, தழைகள், மக்கும் :

குப்பைகள் இவற்றை மட்டும் வயலில் சேர்த்து, கலப்பை

கொண்டு உழவு செய்து, உழைப்பை மூலதனமாக்கி

விதைப்போம் அறுப்போம் என்ற அளவில் இயற்கையோ இணைந்து விவசாயம் செய்து வெற்றி கண்டுள்ளனர். … .”பண்டமாற்று முறையில் கூலியாட்களுக்கும் நெல்லைக் கூலியாகக் கொடுத்துள்ளர். பணம் என்பது பொருளாதார ரீதியில் விவசாயிகளைப் பயமுறுத்தாத காலம் அது.

இதுபோன்று நம் முன்னோர்கள் கையாண்ட விவசாய

முறையில் செலவு குறைவு என்பது கவனத்தில் கொள்ள

வேண்டிய செய்தியாகும்.

குறிப்பாகச் சொல்லப்போனால் அந்தக் காலகட்டத்

தில் நான்கு நெல்மூட்டைகளை விற்று ஒரு பவுன்தங்கம் வாங்கி

மீண்டும் அதுபோல் ஒரு காலகட்டம் வரவேண்டும் அதற்கு

நமது நெல் ரகங்களைப் பயிர் செய்து பலன்பெற வேண்டும்.

இன்றுள்ள முக்காமுழ நெல் ரகங்களை வீரிய ஒட்டு

ரகங்களை விட்டொழிக்க வேண்டும்.

மூன்றடி உயரம் வளரும் அறுபதாம் குறுவை, நான்கடி

உயரம் வளரும் பூங்கார், ஐந்தடி உயரம் வளரும் மஞ்சள்

பொன்னி, ஆறடி உயரம் வளரும் ரோஸ்கார், ஏழடி உயரம் வளரும் சிவப்புக் குடைவாழை, எட்டடி வளரும் காட்டு யானம், மாப்பிள்ளைச் சம்பா என நமது பாரம்பரிய நெல் ரகங்களை நாம் பாதுகர்க்க வேண்டும்.

அப்போதுதான் விதை நமது பிடியில் வரும் விதைகள் நமது ஆயுதமாக மாறும் வைக்கோல் பஞ்சமின்றிக் கிடைக்கும். கால்நடைகள் பெருகும் நஞ்சில்லா அரிசி கிடைக்கும்.

வெள்ளிச் சந்தை, வியாழச் சந்தை, திங்கள் சந்தை எனக் கிராமந்தோறும் சந்தைகள் பெருகும். நம்மை நாசமாக்கும் நரக வாழ்க்கை, நகர வாழ்க்கை மறையும்.

இனி சில நெல் ரகங்களின் குணநலன்களைப் பார்ப்போம்

அறுபதாம் குறுவை

எல்லா நிலத்திற்கும் ஏற்ற நெல் ரகம். மூன்றடி உயரம்

வளரும். அறுபது நாட்களில் அறுவடைக்கு வரும். நீண்டகாலப் பயிரான ஒற்றடையான் நெல்லுடன், அறுபதாம் குறுவை கலந்து, ஊடுபயிராக விதைத்தால் ஒரே விதைப்பு, இருமுறை அறுவடை என ஒரே செலவில் இரண்டு மகசூல் பெறலாம்.

அன்னமழகி

அன்னமழகி அரிசி சுவையுள்ளது. சகலவிதக் காய்ச்சல் களையும், பித்த வெப்பத்தையும் போக்கவல்லது. உடல் ஆரோக்கியம் கூடும்.

இலுப்பைப்பூச்சம்பா

பித்த ஆரோக்கியத்தினால் விளைகின்ற சிற்சில ரோகம், சிரஸ்தாபம் உபசர்க்க தாகம், உஷ்ணம் இவற்றைச் செய்யும்.

ஈர்க்குச்சம்பா

தேவ பூஜைக்கு உரியது. நாவிற்குச் சுவையானது. பர்க்கில் இச்சையும் தரும். இதில் கொஞ்சம் பித்தம் உண்டு.

உவர் முண்டான்

உப்பு நிலத்திலும் ஓங்கி வளரும் அற்புதமான நெல் ரகம்.

இயற்கை, மண்ணுக்கு அளித்த கொடை. இதை மனிதன் மறக்கலாகாது. ஒட்டடையான்

நெடுநெடுஎன்று வளர்ந்து நிற்கும் நீண்டகாலப் பயிர். 180 நாட்கள் வயதுடைய இந்த நெல்லுடன் 60 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய அறுபதாம் குறுவையைக் கலந்து விதைத்தால், ஒரே செலவில் இரண்டு முறை அறுவடை செய்து பலன் பெறலாம். . .

கல்லுண்டைச் சம்பா

பாலனைய மிருதுவாகிய பெண்ணே! கல்லுண்டைச் சம்பா அரிசியை உண்பவர்க்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க அஞ்சும் புய பலமுமும், மிகுவார்த்தையும் உண்டாம் என்க.

கருங்குறவை

இரண குஷ்டத்தையும் சிற்சில விஷத்தையும் நீக்கும். போக சக்தியையும் தரும் என்க.! கருங்குறவை நெல் கறுப்பு நிறமாக இருக்கிறது. இது இந்தியன் வயாகராஎன்று அழைக்கப்படுகிறது. இந்தத் தகவலைச் சொன்னவர் பெங்களூர் கிருஷ்ணபிரசாத் அவர்கள்.

காடைச் சம்பா

பிறமேக சுரமும் சில அற்ப நோய்களும் நீங்கும். சுக்கிலத் தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

கார் நெல்

140 நாட்கள் வயதுடைய நெல் ரகம். மந்த குணமுள்ளகார் அரிசி சரீர் புஷ்டியையும் தனிவாத உபரியையும் பலத்தையும் தரும். இது கரப்பான் பண்டமென்பர்.

காளான் சம்பா

சரீரத்திற்கு மலை போன்ற உறுதியையும், ஆரோக் கியத்தையும் தரும். சிற்சில வாத ரோகங்களையும் நீக்கும்.

காட்டுயானம்

180 நாட்கள் வயதுடைய நீண்டகாலப் பயிர். ஏழடி உயரம் வளர்ந்து நின்று இயற்கைச் சீற்றத்தைத் தாங்கி நிற்கும். களை எடுக்கத் தேவையில்லை. பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் அறவே இல்லை. விதைத்தபின் அறுவடைக்குப் போனால் போதும். இதன் அரிசி சிவப்பாக இருக்கும். வடித்த கஞ்சி முதல் பழைய சாதம் வரை சுவையாக இருக்கும். இட்டலி, தோசை, இடியாப்பம் என எல்லாச் சிற்றுண்டி வகைகளுக்கும் ஏற்றது. சாப்பாட்டிற்கு அற்புதமாக இருக்கும். அவல் பாயாசம் இதன் சிறப்பு அம்சமாகும். இது எனது அனுபவப் பாடம்.

கிச்சலிச் சம்பா

130 நாட்கள் வயதுடையது. நேரடி விதைப்பு. நடவு இரண்டுக்கும் ஏற்ற ரகம். அதிகபட்சம் ஏக்கருக்கு 18மூட்டைகள் வரை மகசூலாகும். சன்னரகம் சாப்பாட்டிற்கு ஏற்றது. பிரியாணிக்கும் பயன்படும். பலம், உடல் செழுமை, பொலிவு முதலியவை உண்டாகும்.

குள்ளக்கார்

ஆண்டு முழுவதும் பயிரிடலாம். 110 நாட்கள் வயதுடையது. அதிகபட்சம் ஏக்கருக்கு 14 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். இட்டலி, தோன்சக்கு நன்றாக இருக்கும்.

குடவாழை

இந்நெல், குடலை வாழ வைப்பதால் குடவாழை எனப் பெயர் பெற்றது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் என்பர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, விழுந்த மாவடி போன்ற கடற்கரைப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

குண்டுச் சம்பா

அக்கினி மாந்தமும் பலமிகுந்த கரப்பான் ரோகமும் உண்டாம். தாகரோகம் தீரும் என்பர். குறுஞ்சம்பா

பித்தம், கரப்பான் சுக்கிலத் தாது இவற்றை விருத்தி செய்யும். உடம்பில் குத்துகின்ற வாத நோய்களை நீக்கும். குன்றிமணிச் சம்பா

அற்பவாத ரோகம் முதலிய சிற்சில நோய்கள் நீங்கும். சரீர பலமும் சுக்கில தாதுவும் விருத்தியாம்

குழியடிச்சான்

வறட்சியில் தழைக்கும் பொன்நிற நெல் ரகம் இது. ஒரு மழை போதுமானது. உப்பு நிலங்களில்கூட நன்றாக விளைகிறது. பூச்சித் தொல்லை, நோய்த் தாக்குதல் இருப்பதில்லை. களை யெடுக்கும் வேலை இல்லை. இதன் வயது 90 நாட்கள். அதிகபட்ச மகசூல் ஏக்கருக்கு 15 மூட்டைகள். மோட்டாரகம் கேரள மக்கள் விரும்பும் நெல் பலகாரத்திற்கு ஏற்றது.

கைவரைச் சம்பா

தமிழகமெங்கும் பரவலாக அறிந்த நெல்ரகம், பள்ளத்திலும் பழுதில்லாமல் விளையும். இதன் மருத்துவக் குணம், உடலுக்கு மலை போன்ற வன்மையும் சுக்கிலஸ்தம்பனமும் சுகமும் உண்டாகும். இதில் சிறிது பித்தம் அதிகரிக்கும் என்பர்.

கோடைச் சம்பா

முத்தோஷத்தால் பிறந்த வாத வலியும் சரீரத்திலுள்ள சிற்சில நோய்களும் விலகும் என்பர். .

கோரைச் சம்பா

பித்தம் உடல்சூடு பிரமேகம் நமைச்சல் இவற்றை நீக்கும். ஆரோக்கியம் தரும். குளிர்ச்சி என்பர்.

சடார்

65 நாட்கள் வயதுடையது. இரண்டரை அடி வளரும், சன்னி ரகம், குறுகிய காலப்பயிரில் முதன்மையர்ன நெல், நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தாணிக்கோட்டகம் பகுதியில் பயிரிடுவதாகச் சொல்லப்படுகிறத

சம்பா மோசனம்

பூம்பாலை என்றும் சொல்லப்படுகிறது. 160 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு 20 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். நேரடி விதைப்பிற்கு ஏற்றரகம். மோட்டா ரகம் அவல் இடிப்பதற்கு ஏற்றது. – சிவப்பு குடவாழை

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அற்புத மருத்துவ குணம் கொண்டது. சிவப்பு அரிசி இட்டலி, தோசை, சாப்பாடு என எல்லாவற்றிற்கும் ஏற்றது. வடித்த கஞ்சியும் பழைய நீராகாரமும் சுவையானது. 150 நாட்கள் வயதுடையது. இயற்கைச் சீற்றத்தைத் தாங்கி தலைக்கு மேல் உயர்ந்து வளரும். ஏக்கருக்கு 20 மூட்டைக் குக் குறையாமல் மகசூல் கொடுக்கும். இது அனுபவத் தகவல்,

சீதா போகம்

தேக பலம், உடல்பொலிவு, தாதுபலம் உண்டாகும். அஜீரணத்தை ஒழிக்கும் என்க!

சீரகச்சம்பா

140 நாட்கள் வயதுடையது. ஐந்தடி உயரம் வளரும், மிக மிகச் சன்னரகம். மதுரமுள்ள சீரக சம்பா அரிசியைச் சமைத்து உண்டவுடன் மீளவும் உண்பதற்கான தீபமுண்டாகும். அற்பவாத ரோகங்கள் போகும் என்க!

சீரக மல்லி

பயிர்க்காலம் 130 நாட்கள். ஏக்கருக்குச் சுமார் 20 மூட்டை மகசூலாகும். சன்ன ரகம் சாப்பாட்டிற்கு ஏற்றது.

 

செஞ்சம்பா

சொறியும் மிகுபசியும் உண்டாகும் என்பர். திருத்துறைப்பூண்டிக் கார்

இப்படி ஒரு நெல் ரகம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்ததாகப் பெரியோர்கள் சொல்லக் கேட்டு, செங்கல் பட்டு பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் ஒரு பத்திரிகையில் சொல்லி இருந்தார். நூலக பத்திரிகையில் படித்த செய்தியைக் கொண்டு இப்படி ஒரு நெல் ரகம் கிடைக்குமா என்று இன்று வரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கிளைக்கின்ற அற்பக் கிராந்தியும் அதிவிரணமும் யானைச்

தூய மல்லி

பயிர்க்காலம் 130 நாட்கள். சன்ன ரகம். சாப்பாட் டிற்கு ஏற்றது. ஏக்கருக்கு 15 மூட்டை மகசூலாகக் கிடைக்கும்.

 

பிச்சவாரி நெல்

மருத்துவ குணம் கொண்டது. இதன் தவிடு, வைக்கோல் மாட்டுக்கு நல்ல உணவாகும். மாடுகளுக்கு ஏற்படும் கழிசல் நோயைக் குணமாக்கும். . . .

பிசினி

பயிர்க்காலம் 130 நாட்கள். நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகம். ஏக்கருக்கு 15 மூட்டைகள் மகசூலாகும் அவல் மற்றும் இட்டலி, தோசைக்கு ஏற்றது.

பெங்களூர் கார்

பயிர்க்காலம் 120 நாட்கள். ஐந்தரைஅடி உயரம் வளரும்,

பெருங்கார்

சத்துள்ள அரிசி. நல்ல நீராகாரத்திற்கு உகந்தது. பலகாரம் செய்யலாம். சாப்பாட்டிற்கு ஏற்றது. இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப்போகாது. பயிர்க்காலம் 130 நாட்கள். ஏக்கருக்கு 18மூட்டை வரை கிடைக்கும். வைக்கோல் கூடுதலாகக் கிடைக்கும். அந்த அளவுக்கு ஓங்கி வளரும். தகவல் : கலசப்பாக்கம் மீனாட்சிசுந்தரம் அவர்கள்கூறியுள்ளார்.

புழுகுச்சம்பா

வனப்பும், காந்தியும் அதீத பாக்கினியும் பலமும் உண்டாகும். தாகம் நீங்கும்.

பூங்கார்

புயல், வெள்ளம், வறட்சியையும் தாங்கி வளரும் 70 நாள் பயிர். ஏக்கருக்கு 21 மூட்டை மகசூலாகும். ஓர் ஆண்டில் 5 முறை பயிரிட்டுப் பலன் பெறலாம். சத்து நிறைந்த இந்த அரிசியில் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுப்பார் களம். தகவலைத் தந்திருப்பவர் நாகை மாவட்டம் தலைஞாயிறு சோமு இளங்கோவன் அவர்கள். வாட்டாகுடியில் தேடிப்பிடித்த விதை நெல்லைப் பயிரிட்டுப் பாதுகாத்தவர் தலைஞாயிறு பழையாற்றங் கரை பெருமாள் அவர்கள். இதைச் செய்தியாகக் கொடுத்தது பசுமை விகடன்.

மடுமுழுங்கி

வெள்ளத்தைத் தாங்கி வளரும் குளம்போல் தேங்கும் நீருக்கு மேலே வளர்ந்து நிற்கும். நல்ல மகசூல் தந்து மானத்தைக் காப்பாற்றும்.

மணக்கத்தை

குஷ்டம் புண் புரையோடும் ரணங்கள் முதலியவை போகும். மணிச்சம்பா

அதிமூத்திரத்தை விலக்கும். அதிசுகுத்தால் உடலையும் விருத்தர் பாலர்களையும் போஷிக்கும் என்பர். மஞ்சள் பொன்னி

பசுமை விகடன் மூலம் எனக்குக் கிடைத்த சொத்து. 100 கிராம் விதையை மேட்டுப் பாத்தியில் தெளித்து, தண்ணீர் விட்டு வளர்த்துப் பத்தாம் நாள் பறித்து இளம் நாற்றாக ஒற்றை நாற்று நடவு முறையில் பத்து சென்ட் நிலத்தில் ஓர் அடிக்கு ஓர் அடி

என்ற இடைவெளியில் நடவு செய்து, வேப்பம் பிண்ணாக்கு அமுத கரைசல் ஒருமுறை கொடுத்தேன். குறைந்தது ஐந்து முதல் : அதிக பட்சம் நாற்பது தூர்கள் வளர்ந்தன. கதிருக்கு சுமார் 100

நெல்மணிகள் இருந்தன. 100 நாளில் அறுவடைக்கு வந்தது. பத்து சென்ட் நிலத்தில் 100 கிராம் விதையால் ஒரு குவிண்டால் (100 கிலோ) விதை நெல் கிடைத்தது. பூச்சித் தாக்குதல் அறவே இல்லை. ஐந்தடி உயரம் வளர்ந்து அற்புதமாக விளைந்த மஞ்சள்

பொன்னி. சிவப்பரிசி சாப்பாட்டிற்கு அற்புதமாக உள்ளது. இதன்

நீராகாரம் தேவாமிர்தம் போல் சுவைமிகுந்தது. இட்டலி, தோசை எனஎல்லாப் பலகாரத்திற்கும் ஏற்றது. சர்க்கரைப் பொங்கல் இதன் சிறப்பு அம்சமாகும். இது என் அனுபவபகிர்வு.

 

மாப்பிள்ளைச் சம்பா

நீண்டகாலப் பயிர். 180 நாட்கள் வயதுடையது. நேரடி விதைப்பு நடவு இரண்டுக்கும் ஏற்றது. ஏக்கருக்கு 18 மூட்டைகள் கிடைக்கும். ஏழடி வளரும் இளஞ்சிப்பு நிறமோட்டாரகம். சத்துள்ளஇதன் நீராகத்தை ஒரு வாரம் சாப்பிட்டால் இளவட்டக் கல்லைத் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்குவானாம் புதுமாப்பிள்ளை.

மிளகுச் சம்ப

செளக்கியத்தைக் கொடுத்துத் தீபாக்கினியை வளர்க்கும். மகாவாத முதலிய ரோகங்களைப் போக்கும்.

முட்டக்கார்

120 நாட்கள் வயதுடைய மோட்டா ரகம் கார்த்திகைப் பட்டம் சிறந்தது. ஏக்கருக்கு 18 மூட்டை மகசூல் கிடைக்கும். இட்டலி தோசைக்கு ஏற்ற ரகம்.

மைச்சம்பா

அரோசகம் வாத பித்த தந்தம் தனிவாத போகும் என்க. நீலச்சம்பா

மோட்டாரகம் இட்டலி தோசைக்கு ஏற்றது. நடவு செய்தால் ஏக்கருக்கு 22 மூட்டைகள் கிடைக்கும். இதன் வயது. 180 நாட்கள்.

 

ராமகுறிகார்

நான்கடி உயரம் வளரும். 100 நாள் பயிர். உருண்டை வடிவ அரிசி. உன்னதமான ருசி. இட்டலி, தோசை, நீராகாரம் என எல்லாவகை உணவுக்கும் சிறந்தது. ராமம் போன்ற குறி தென் படுவதால் இந்த நெல் ராம குறிகார் எனப் பெயர் பெற்றது போலும் நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதிகளில் மானாவாரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. பாசனத்திற்கும் ஏற்ற பயிர். இது என்அனுபவத் தகவல்.

ரோஸ் கார்

ஓங்கி வளர்ந்து பயிராகும். தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்தாலும், விதை முளைத்துவிடும். தலைஞாயிறு பகுதி யில் விளையும் பயிர் களிமண் பகுதிக்கும் ஏற்ற நெல்.

வளைத்தடிச் சம்பா

வாத பித்த தொந்தரவு, வயிறு அளைதலுடன் உப்பசம்,

கரப்பான் அலச ரோகம் ஆகியவை உண்டாம் என்க.

வாடன் சம்பா

வறட்சி தாங்கி வளரும். மோட்டாரகம் 160 நாட்கள் வயது. இட்டலி, தோசைக்கு உதவும். ஏக்கருக்கு 15 மூட்டைகள் கிடைக்கும். நேரடி விதைப்பு, நட்வு இரண்டுக்கும் ஏற்றது. வாலான் சம்பா

அரோசிகம் மாந்தம் முதலியவை நீங்கும். தேகத்தின் அழகையும் கொழுமையும் உண்டாக்கும்.

வைகுண்டா . .

நேரடி விதைப்பு நடவு இரண்டுக்கும் ஏற்றது. 150 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு 18 மூட்டைகள் வரை கிடைக்கும். பொரி செய்வதற்குப் பயன்படும். . .