7
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
எல்லாருக்கும் எல்லாமும் தரும் சக்தி படைத்ததுதான் இயற்கை!
ஒரு பசு, கன்று ஈனுவதற்கு முன்பே அந்தக் கன்றுக்குத் தேவையான பாலை, மாட்டினால் கொடுக்க வழிவகுத்து உள்ளது இயற்கை!
இடம்விட்டு இடம் நகரும் உயிரினங்களுக்கு எல்லாம் கொடை கொடுக்கும் இயற்கை, இடம்விட்டு நகரும் சக்தியற்ற செடி, கொடி, பயிர்களுக்குத் தேவையானதைக் கொடுக்காதா என்ன?
“மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்ற வாசகம் சரியான விளக்கம்தானே!
மனிதர்களாகிய நாம் இயற்கை தரும் அளவிற்கு மட்டுமே. பலனை அனுபவிக்க தயாராகிவிட்டால்.
ஜப்பானைச் சேர்ந்த மாசானோபு புகோகா சொன்ன Do-nothing Farming என்ற தத்துவம் சாத்தியமாகிவிடும்.
அதாவது எதுவும் செய்யத் தேவையற்ற விவசாயம்! சுயசார்பு இலாபமிக்க பழுதற்ற வோளண்மை!
நாம் எதுவும் செய்யாமல் இயற்கையிடம் வேளாண்மையை விட்டு விடுவது!
பலனை மட்டும் நாம் அனுபவித்துக் கொள்வது!
ஆடுமாடு மற்ற ஜீவராசிகள் விவசாயத்தைப் பற்றிக் கவலைப்படுகிறதா?
மனிதனுக்கு மட்டும் என்ன வந்தது ? இனியாவது இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்வோம்.
பூனைக்கு மணி கட்டுவது யார்?
வேளாண்மை என்பது ஆரோக்கியம் தொடர்பானது!
அதைப் பொருளாதார ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ பார்க்கக் கூடாது!
ஏனெனில்.
Anything in the world is next to Healty.
இன்று நாம் தவறான பாதையில் நெடுந்தொலைவு வந்து
விட்டோம். சரியான பாதைக்குத் திரும்புவது சற்றுக்கடினம்தான்!
எதிர்காலத்தை நினைத்து அழுவதா?
கடந்த காலத்தை நினைத்துச் சிரிப்பதா?
தொடக்கத்தில், ‘பசுமைப் புரட்சி“என்ற பெயரால் கொண்டு வரப்பட்ட இரசாயன உரங்களை நம் விவசாயிகள் ஏற்க மறுத்தனர் என்பதே உண்மை!
ஆனால், பின்விளைவுகளை எண்ணிப் பார்க்கத் தவறிய அரசும், அரசு அதிகாரிகளும் அதைக் கொண்டு வர முனைந்து செயல்பட்டனர். a .
விளைவு.? நம் முன்னோர்களின் மூளை மழுங்கடிக் கப்பட்டு விவசாயம் திசை திருப்பிவிட்டது.
புரட்சியின்போது, வேளாண்மை கொஞ்ச நாள் மட்டும் பலன் தந்தது.
பிறகு நம்மைக் கெடுத்தது. இன்னும் கெடுத்துக் கொண்டிருக்கிறது. தற்காலிகமாகக் கிடைத்த சொற்ப இலாபங்களுக்காக இரசாயனத்தைக் கொட்டி நிலத்தை மலடாக்கி விட்டோம்.
ஆம்! நுண்கிருமிகள் அழிக்கப்பட்டன. மண்புழு மறைந்து போனது. மண்ணின் தன்மை மரத்துப் போனது. விதைக்கும் விதைக்கு, வீரியம் கிடைக்காது விவசாயம் நட்டக்கணக்கைக் காட்டியது!
இது மட்டுமா? . இரசாயனத்தைக் கொட்டியதும் பயிரில் பச்சையம் கூடியது பச்சையம் பூச்சிகளுக்கு வரவேற்பு கொடுத்தது. பூச்சிகளைக் கண்ட விவசாயி பூச்சிக் கொல்லியைத் தேடினான்.
நஞ்சைக் கொட்டி விளைவித்ததால் உணவும் நஞ்சானது. மனிதன் நோயாளியானான். நீர், நிலம், காற்றும் கெட்டுப் போனது. உயிரினங்களையும் சிதைத்துவிட்டோம். இரசாயன உரங்களை நாடியதால் இயற்கை இடுபொருட் களை அலட்சியப்படுத்தினோம். ,
இயற்கை எரு தேவைப்படாதபோது கால்நடைகளும் நமக்குச் சுமையானது.
இயந்திர மயமாக்கலை ஏற்றபோது கால்நடைகளை விவசாய வேலையிலிருந்து வெளியேற்றத் துணிந்தோம்!
செயற்கை விவசாயம் முன்னேற்றம் கண்டதாகப் பெருமிதம் கொண்டோம்.
வேளாண்மை வியாபாரமாக்கப்பட்டது. ஆரோக்கியம் புறக்கணிக்கப்பட்டது. படிப்பு நமது பாதையை மாற்றியது. உள்ளூர் ஓடைக்கும் வடிகால் அறியாதபடி நைல் நதி பற்றிய பாடம் நம் கருத்தைக் கவர்ந்தது.
திசைகளைக் கூடத் திருப்பும் சக்தி படைத்தவர்களாக நம்மை நாம் எண்ணிக்கொண்டோம்.
நாகரிகம் நம் கண்ணை மறைத்தது! மனம் சுயக்கட்டுப்பாட்டை இழந்தது. அறிவியல் நமக்குக் கண்மூடித்தனமானதைரியம் கொடுத்தது. ஆசை நம்மை வழிநடத்தியத்தியதுபணம் ஒன்றே குறிக்கோளானது. இயற்கையைச் சுவைப்பதற்குப்பதில், சிதைக்கமுடிவெடுத்துச் செயல்பட்டோம்.
விஞ்ஞானம் விவசாயத்திற்கு வழிகாட்டுவதாக எண்ணி, விளைநிலங்களை வீணாக்கிவிட்டு விழிபிதுங்கி நிற்கிறோம்.
மெத்தப்படித்த சமூகம் பக்குவப்பட்ட் விவசாயத்தைச் சீரழித்துவிட்டது.
இன்று நாம் கடன் சுமையில் பொருமிக் கொண்டிருக்கிறோம்.
வாரிசுகளை உருவாக்காமல் உருக்குலைந்து போனோம்! மானியத்தை நாடும் மானிடம்
தெய்வத்துக்குச் சமமாகத் தொழப்பட வேண்டியவன் உழவன்!
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”
என்றார் வள்ளுவர்.
தானியத்தைக் குவித்து உலகுக்கு உணவளித்தவன், மானியத்தை நாடும் நிலைமைக்கு ஆளாகிவிட்டான்.
சமுதாயம் விவசாயிகளுக்குக் கொடுத்த கொடையா இது? அல்லது விவசாயி தனக்குத்தானே தோண்டிக் கொண்ட படுகுழியா?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலம் கண்டான் தமிழன் அன்று. இதனை,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உற்று பாலை என்னுமோர் படிவம் கொள்ளும்“என்பதால் அறியலாம்.
மாதம் மும்மாரி பொழிந்த காலங்களில் எல்லாப் பயிர்களும் மானாவாரிப் பயிர்களாக விளைவிக்கப்பட்டன.
அன்று ஒரு கோவிலைக் கட்டினால் அருகில் ஒரு பெரியகுளத்தை வெட்டினர். ۔
இன்று குடிசை வீடு கட்டுவதற்குக் கூட குளத்தை மூடுகின்றனர்.
குளங்கள்தூர்ந்து போனதும் நிலத்தடி நீர்குறைந்து போனது. ஏரிகள் சேரி வீடுகளாகவும், மாடி வீடுகளாகவும் மாறியதால், பாசனக் கால்வாய் சாக்கடைகளாக மாறியது.
கிணறுகள் கேட்பாரற்றுப் போனதால் போர்வெல்“சூடு பிடித்தது.
மோட்டார் சந்தை பிரபலமானது. விஞ்ஞான வளர்ச்சி என்று வேகமாக ஏற்றுக்கொண்டு நிலங்களைப் பாலைவனமாக்கிவிட்டோம்.
இன்னும் ஒய்ந்தபாடில்லை. தோற்றுக்கொண்டே இருப்பவனுக்குப் புதிய தோல்வி வேதனை தராது. இரப்பர் மரத்திற்கு இரணங்கள் புதிதல்லவே?
தோல்வியே வாழ்க்கை முறை என்று ஆனபின் வெற்றி பற்றிச் சிந்திக்க தெம்பு இல்லை–
இருப்பதை இழந்து, பறப்பதைப் பிடிக்க முயல்கிறான் மனிதன்.
காலடியில் கிடைக்கும் இயற்கை என்னும் புதையலை மறந்து போனான்.
பிள்ளைகளைப் படிக்க வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வதாக கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு, அவர்களை நோயாளியாக மாற்றும் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறோம்.
முட்டாள் தனமான செயலைச் செய்துவிட்டு ஒரு புத்திசாலித் தனமான முடிவை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் gi7untu ul DIT60g:5u? கண்கெட்ட பின்னே சூரிய வணக்கம்
இது எனக்கும் பொருந்தும். இன்று விலைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, தரிசாக்கப்பட்டுள்ளன. சாகுபடி செய்தால் வேலைக்கு ஆட்கள் இல்லை என்ற அரிய கண்டுபிடிப்பு வேறு
இப்படியெல்லாம் மனம்போன போக்கில் இன்னும் போய்க்கொண்டிருந்தால், நம் சந்ததிக்கு யார்தான் நல்ல உணவை நஞ்சில்லா உணவைக் கொடுப்பது?
இதுபற்றி என்றைக்காவது நாம் சிந்தித்திருக்கிறோமா? என்றால் இல்லை என்றே பதில் வரும்.
வளரும் குழந்தை ஊனமாகிவிடக்கூடாது என்று பொறுப் போடு போலியோ சொட்டு மருந்து கொடுக்கிறோம்.
அந்தக் குழந்தை நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும், அதற்கு நஞ்சில்லாத உணவை நாம் தரவேண்டும் என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா?
இனியாவது சிந்திப்போம்! மனமிருந்தால் மார்க்கம் உண்டல்லவா? சந்ததிக்குப் பரிசா
தந்திடனும் பெரிசா நல்ல நல்ல உணவுகளை இயற்கை உணவுகளை சத்துக் குறையாத
சாகுபடிக் கேத்த ஒற்றை நாத்தைப் பயிரிடுங்க!
வேருக்கொரு துராய் துருக்கொரு நூறாய் நெல்லுமணி விளைஞசிடுமே!
மண் வளமும் காத்து மண்புழுவைப் பெருக்கிட இயற்கை உரம் வேணும் இதைச் சொன்னாப்புரிஞ்சிக்கிட்டு செஞ்சா நல்லாயிருக்கும் இயற்கை விவசாயம்தான்
கொத்துக் கொத்து கொத்து கழனியை நல்லாக் கொத்து களை வேர்கள் அழிந்திடக் கொத்து எல்லாக் கலைகளும் சேர்த்து எருக்குழியிலே ஆழமா போட்டு சாணியும் சாம்பலும் கூட்டு மண்ணோட மக்கிதான் இயற்கை உரமாய் மாறும் வயலுக்கு அடியுரமாய் போட்டாலே தரமாகும் இது பயிரை நல்லா வளர்க்கும் இது பரம்பரையாய் வந்த பழக்கம் இந்த முறையைப் புரிஞ்சிக்கிட்டா
முயற்சி எடுத்துக் கிட்டா
இயற்கை விவசாயம்தான்
நிலமோ தரிசாகக் கிடக்கு
நிலத்தடி நீரையும் பெருக்கு
கரைகளைப் பலமா கட்டு
ஏரைப்பூட்டி உழுது
இயற்கை தொழுவுரம் கொடுத்து
விதைக்கணும் பருவம் பார்த்து
முன்னோர்கள் சொன்னதெல்லாம்
முறையான விவசாயம்
சந்ததிக்கும் பழைய முறை
பழக்கிவிட்டா லாபம்
இயற்கை எருவே செலவு
சிக்கனமாய் நடக்கும் உழவு
நிலமும் சீரடையும்
நீரும் மிச்சப்படும்
இயற்கை விவசாயம்தான் (சந்ததிக்கு)
எஞ்சிய நம் வாழ்நாள் கொஞ்சமேனும் நலம்பெற வேண்டும். நம் வருங்காலச் சந்ததிகள் வாழ்வு வளம் பெறவேண்டும் என்ற இலட்சியம் நமக்குள்.
உருவானால் இயற்கை பற்றிச் சிந்திக்கும் ஆற்றல் இயல்பாக உருவாகிவிடும். –
இயற்கை நமக்களித்துள்ள கொடை எண்ணிலங்காது. அதை முறையாகப் பயன்படுத்த நாம் தயாரானால் வறுமை என்ற சொல்லே மறந்து போகும்.
உலகத்தில் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற இயற்கை வளங்கள் போதுமான அளவில் இருக்கின்றன. ஆனால் நமது பேராசைகளை நிறைவேற்றும் அளவிற்கு இல்லை என்று மகாத்மா காந்தி சொல்லி இருப்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மண் விவசாயிகளின் மூலதனம்.
Soil is the Capital of Farmer.
இதை நாம் மறக்கலாமா? மூலதனத்திற்கே மோசம் செய்தால் எப்படி? “ஏரினும் நன்றாகம் எருவிடுதல்; கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.” . . . . . என்றார் வள்ளுவர்.
உழவு செய்தல், மண்ணுக்கு வளம் சேர்த்தல், பயிருக்கு நீர் பாய்ச்சுதல் ஒன்றுக்கொன்று முக்கியமானது என்கிறார் வள்ளுவர்.
இயற்கை விவசாயம் செய்வதால்.
மண்வளம் கூடும். நஞ்சில்லா உணவு கிடைக்கும். நீர்த்தேவை குறையும். சுற்றுச்சூழல் மாசுபடாது. நம் சந்ததிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்பதுபோல், இராசயன உரங்களைப் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து, விவசாயம் கெட்டுப்போனதும் உணவு நஞ்சானதும் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் நமக்கு நன்றாகத் தெரிகிறது.
இருந்தும் இதற்கு மாற்று என்ன என்று சிந்திப்பதை விடுத்து, விவசாயத்தை நிறுத்தி விடுவதும் விளைநிலங் களைத் தரிசாக்குவது சரியான தீர்வாகிவிடுமா?
எதை நாம் இழக்கக்கூடாதோ அதை இழக்கத் தயாராகிவிட்டால், வாழ்க்கையே சுமையாக மாறிவிடும்.
இனியாவது நாம் சிந்திப்போம். நமக்காகச் சிந்திப்போம். நம் வருங்காலத் தலைமுறைகளுக்காகச் சிந்திப்போம்.
இயற்கை உழவன் மண்புழு
இன்று படித்த பட்டதாரிகள் பன்னாட்டு நிறுவனங்
களை நாடி ஓடுகிறார்கள். மருத்துவம் படித்தவர்கள் கிராமங்களில் பணி செய்ய மாட்டார்களாம்.
என்னய்யா மடமை இது? ஏர் பிடித்த உழவன் இவர்களுக்குச்சாறு கொடுக்க மறுத்தால் நிலைமை என்னவாகும்? யோசித்தார்களா அவர்கள்? –
ஒரு பட்டதாரியை உருவாக்க 150 உழவர்களின் ஒரு வருட உழைப்பு வீணாகிறது. ஆனால் அந்தப் படிப்பு அந்த உழவர்களுக்குப் பயன்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
காலம் மாறும்! இயற்கை நமக்கு உணவாகும். மூலிகை நமக்கு மருந்தாகும்! பட்டப் படிப்பு பதவி யாருக்குச் சோறு போடும்? படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் கருவி. உழைப்புதான் மனித உயர்வுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும்.
சொகுசு சோறு போடாது. இதை உணர்ந்தால் மனித மனம் மாசுபடாது.
மண்வாசனை
இனி நிலத்திற்கு வருவோம்!
மண் விவசாயிகளின் மூலதனம் மண்வளம் பெற மண்புழு
மழைத் தூறல் மண்ணில் விழும்போது ஒருவித வாடை வரும் அதை மண்வாசனை என்போம். ,
உண்மையில் அது மண்வாடையல்ல. மண்ணுக்கு வாசனை கிடையாது. பயிர்வளர்க்க, உயிர்வளர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆம்! மண்ணில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. அதன் வாடையைத்தான் மண்வாசனை என்று நாம் சொல்கிறோம்.