"

11

வரலாற்றுத் தகவல்

தமிழர்களின் வரலாறு மிகவும் பழைமையானது. கரிகாலன் ஆண்ட காலத்தில் 6.6 ஏக்கர் நிலத்தில் அதாவது ஒரு வேலி நிலத் தில் ஆயிரம் களம் அதாவது 30,000 கிலோ நெல் விளைந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது ஒரு ஏக்கரின் விளைச்சல் 4545 கிலோ!

அந்தக் காலத்தில் பசுமைப் புரட்சி கிடையாது. செயற்கை உரம் பூச்சிக்கொல்லி மருந்து கிடையாது. இன்றைய கம்பெனி விதைகள் எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது.

இந்தத் தொகுப்பில் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள நெல் ரகங்களைக் கொண்டுதான் அந்தக் காலத்தில் விவசாயம் செய்து இருககிறார்கள்.

அந்தப் பாரம்பரிய நெல் ரகம்தான் ஏக்கருக்கு 4545 கிலோ விளைச்சலைத் தந்துள்ளது. அப்படிப்பட்ட சிறந்த நெல் ரகங்களை நாம் மீண்டும் கொண்டு வரவேண்டும். நம் சந்ததிக்கு நஞ்சில்லா உணவைத் தரவேண்டும். அதுவே இந்தத் தொகுப்பின் நோக்கம்!

எலியை ஒழிக்க பப்பாளிக்காய்

எலியைக் கட்டுப்படுத்த பப்பாளிக்காய் பயன்படும் என்ற தகவல் மா. ரேவதி அவர்கள் சொன்னபோது, எனக்கும் வியப்பாக இருந்தது. மறுநாள் அதைச் சோதிக்கும் பொருட்டு பப்பாளிக் காயைத் துண்டுத்துண்டாக வெட்டி என் வீட்டைச்சுற்றி, போட்டு வைத்தேன். . . . .

மூன்றாம் நாள் காலையில் தூங்கி எழுந்து வெளியில் வந்தேன். மாடிப்படியருகே கிடந்த பப்பாளிக்காயைச் சாப்பிட்ட எலிதுடிதுடித்துக் கொண்டிருந்தது.

ஒஹோ எலியை ஒழிக்க இதுவும் ஒரு சுலப வழி என்பதை அனுபவ ரீதியாக அறிந்துகொண்டேன். இந்தத் தகவலைப் பலரிடமும் பகிர்ந்து கொண்டேன். இன்றும் என் வயலைச் சுற்றி அடிக்கடி பப்பாளிக்காயைப் போட்டு வைப்பதை வழக்கமாக்கி விட்டேன். நீங்களும் சோதித்துப் பாருங்கள்.

எலிகளைக் கொல்ல எளிய வழி

எலிகளை அழிக்க ஜப்பானில் கடைப்பிடிக்கும் முறை ஒன்று உள்ளது. அவர்கள் எலியை உயிருடன் பிடித்து அதன் மர்ம ஸ்தானத்தை நரம்பு கொண்டு இறுகக் கட்டிவிடுவார்களாம். பிறகு அந்த எலியை வளைக்குள் விட்டு விடுவார்கள். வலிதாங்காமல் வெறிபிடித்துத் தலைதெறிக்க ஒடும் எலி, ஆத்திரத்தில் வழியில் சிக்கும் மற்ற எலிகளைக் கடித்துக் குதறிவிடுமாம். எப்படியும் ஒரு எலி 15 எலிகளுக்குக் குறையாமல் கொன்று விடுமாம், ஆதிரெங்கம் ஆக்கம் அறக்கட்டளையில் நடந்த பயிற்சியின்போது நம்மாழ்வார் சொன்ன தகவல் இது. இதை நாமும் கடைபிடித்துப் பார்த்தால் வெற்றி பெறக்கூடும்.

பூச்சிகளைத் தாக்கும் பறவைகள்

நடவு செய்த வயலில் வடிவச் சட்டங்களைப் பல இடங் களில் நட்டு வைக்கவேண்டும். பறவைகள் அதில் வந்து அமர்ந்து ஒய்வு எடுக்கும். வயலில் உள்ள பூச்சிகளைப் பிடித்துத் தின்று விடும்.

சிட்டுக்குருவிகள் புழுக்களை விரும்பிச் சாப்பிடும். கரிக்குருவிகள் அந்துப் பூச்சிகளை அழித்துவிடும். இரவில் ஆந்தைகள் அமர்ந்து எலிகளைப் பிடித்து விடும்.

நமது நிலத்தில் ஒரு பகுதியில் காடுபோல் பலன்தரும் மரங்கள் செடிகொடிகள் இருப்பது இன்னும் கூடுதல் பலன்தரும். பறவைகளின் எச்சம் நிலத்தில் சேர்வதால் மண்வளம் கூடும்.

செயற்கை உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பறவை இனங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே இயற்கையின் சமநிலை பாதிக்கப்படாமல் இருக்க இயற்கைவழி வேளாண்மை அவசியம்.

வேர் கரையான்

வேப்பம்புண்ணாக்கைச் சணல் சாக்கில் கட்டி வயலில் நீர்

பாயும் தடத்தில் வைத்து விட்டால், புண்ணாக்கு கரைந்து நீரில்

கலந்து வயலில் பரவி வேர் கறையானை விரட்டும்.

அமுத கரைசல்

அப்போதைக்கே போட்ட சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், கருப்பட்டி அல்லது வெல்லம் அரை கிலோ மூன்றும் மண்பானை அல்லது பிளாஸ்டிக் குடம் சிமெண்ட் தொட்டி இவற்றில் ஏதாவது ஒன்றில் போட்டு கலந்து ஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும்.

இந்தக் கரைசலை வயலுக்கு ஒடும் நீரில் சிறிது சிறிதாக ஊற்றி, பாய்ச்ச வேண்டும். இந்த அமுதக் கரைசல் நிலம் முழுவதும் பரவி மண்ணை வளமாக்கும். இந்த அமுதக் கரைசலை மட்டுமே இயற்கை வழி வேளாண்மைக்குப் போதுமானது என்பது என் அனுபவம். அதனால்தான் சொல் கிறேன். செலவில்லாத இயற்கை விவசாயம் செய்வோம்.

எலிக்கும் வேலை கொடு

கட்டாந்தரையாய் எதற்கும் பயன்படாமல் கிடக்கும் நிலத்தை உழுவதற்கு எலிகளைப் பயன்படுத்தலாம். எலிகளை வேலை வாங்க இது ஒரு வழி. கட்டாந்தரையாய்க் கிடக்கும் பகுதியில் வைக்கோல் போர் மற்றும் இதர பொருட்களைப் போட்டு அடசலாக்கிவிட்டால் அங்கு எலிகள் குடியிருக்க வசதியாகிவிடும். எலிகள் அங்கு வசிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த நிலத்தை நன்றாகக் கிளறி மண்ணைப் பொலபொலப்பாக்கி விடும். பிறகு அந்த அடசலை அப்புறப்படுத்தி நிலப்பகுதியை விவசாயத்திற்குப் பயன்படுத்த வசதியாகிவிடும். பொதுவாக இயற்கையின் சமநிலை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண் டாலே போதும் இயற்கைச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.

 

காட்டு விலங்குகள்

காடுகளை அழித்ததால்தான் பூச்சிகள் வயலை நாடி வரத் தொடங்கிற்று. காட்டு விலங்குகளும் நாட்டிற்குள் புகுந்து நாசமாக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு பகுதியிலும் இயற் கையின் சமநிலை பாதுகாக்க தேவையான மரம், செடி, கொடிகள்

ஆடு,மாடுகள்,பறவை மற்றும் இதர ஜீவராசிகள் தேவையான அளவு இருக்க வேண்டும். இவை அதிகமானாலோ அல்லது குறைந்து போனாலோ இயற்கையில் சமநிலை பாதிக்கப்படும்.

மீன மிலம்

இதை வடமொழியில் குணபசலம் என்று சொல் கிறார்கள். குணபம் என்றால் இறந்த உடலைக் குறிக்கும் சொல். ஆடு, மாடு, கோழி, மீன் இப்படி இறந்து போன ஜீவராசி களின் உடலைத் துண்டுத் துண்டாக வெட்டி எடுத்து அத்துடன் சம அளவு வீணா போன வெல்லம் கலந்து பிளாஸ்டிக் தொட்டி யில் போட்டு மூடிவைக்க வேண்டும். இந்த இரண்டு கலவையும் ஒரு மாதத்தில் கரைந்து தேன்போலாகிவிடும். இதைப் பத்து லிட்டர் நீருக்கு அரை லிட்டர் கலந்து பயிருக்குத் தெளித்தால் பயிரில் பச்சையம் கூடும். பயிர் நன்கு வளரும். பூச்சிகள் நெருங் காது. ஆடுமாடுகள் கூட வாய் வைக்காது. இந்த மீனமிலம் மட்டுமே விவசாயத்திற்குப் போதும் என்பது சில விவசாயிகளின் கருத்தாகும்.

குணபசலம்

சந்திர குப்தர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாம். இதைப் பல கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. ஆதிரெங்கம் ராஜேந்திரன் இறந்துபோன ஒர் ஆட்டை வெட்டி பெரிய பிளாஸ்டிக் கேனில் போட்டு, அதில் எருமை மாட்டு கோமியம் இன்னும் சில பொருட்களைக் கலந்து குணபலசம் தயார் செய்து வைத்திருந்தார்அந்தக் கரைசலை நான் வாங்கித் தண்ணீர் கலந்து கோடையில் பயிரிட்டிருந்த பூங்கார் நாற்றுக்கு தெளித்தேன்.

தூரத்தில் நின்ற சில மாடுகள் மோப்பம் பிடித்தபடி வேகமாக வந்து வயலுக்குள் இறங்கியது. இப்படியும் அப்படியும் முகர்ந்து பார்த்த மாடுகள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தன.

இன்னுமொரு நாள் மாலையில் கரைசலைத் தெளித்துவிட்டுப் புறப்பட்டபோது, நரிகள் ஓடிவந்து பயிருக்குள் மறைந்தன.

இந்த வாடைக்குப் பாம்புகளும் வருகை தரும் எனவே மீனமிலம் (குணபசலம்) கரைசலை மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

பட்டுப்போன செடிதுளிர் விட்ட கதை

ஒரு கருவேப்பிலைக் கன்று கோடை வெயிலில் காய்ந்து கருகிப் போய் நின்றது. மீதமிருந்த குணபசலம் கரைசலை அதன்மேல் தெளித்தேன். அந்தக் காய்ந்துபோன கருவேப்பிலைக் கன்று துளிர்விட்டு வளர்ந்து இன்று செடியாகச் செழித்து நிற்கிறது. சீர்காழி திரு நகரியில் சப்பாத்தி பூச்சித் தாக்குதலால் பருத்திச் செடிகள் நாசமாகிவிட்ட நிலையில் சப்பாத்திப் பூச்சிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை.

இதுபற்றி அறிந்த தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்க நிர்வாகி மா, ரேவதி அவர்கள் குணபசலம் கொடுத்துத் தெளித்துப் பார்க்கச் சொல்லி இருக்கிறார்.

வேண்டா வெறுப்பாக வாங்கிச் சென்ற ஒரு விவசாயி கடைசியில் இதையும் சோதித்துப் பார்த்துவிடுவோம் என்ற நினைப்பில் குணபசலம் தெளித்திருக்கிறார்.

குருத்துக்களைச் சாப்பிட்டுக் குஷியாக வாழ்ந்த சப்பாத்திப் பூச்சி குணபசலம் வாடை கண்டதும் பயிரைச் சாப்பிடாமல் பட்டினி கிடந்து இறந்து இனவிருத்தியாகாமல் போனது.

பட்டுப்போன பருத்திச் செடிகளும் பக்கவாட்டில் கிளை வெடித்து வளர்ந்து நின்றதாம்.

ஆடுமாடுகள் இந்த வாடை கண்டால் சில நாட்கள் இறை எடுக்காமல் பட்டினி கிடப்பது கண்கூடாகக் காண முடிகிறது. இதே நிலையில்தான் பூச்சிகளும் இறை எடுக்காமல் மடிகின்றன.

குணபசலம் ஓர் உயிர்க்கொல்லி அல்ல; இதன் வாடையில் வரும் ஒவ்வாமைதான், பூச்சிகளைச் செயல் இழக்கச் செய்கிறது. பயிர் பாதுகாக்கப்படுகிறது. பயிருக்குச் சிறந்த வளர்ச்சி ஊக்கி யாகவும் குணபசலம் பயன்படுகிறது. –

வீரமுத்து என்ற ஒரு விவசாயத் தொழிலாளியிடம் குணபசலம் தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடுகளைச் சொல்லி வயலில் தெளிக்கப் பணித்தேன்.

தொடக்கத்தில் அதன் வாடை தயாரிப்பு முறையும் அவனுக்கு மனத்தளவில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது. இது ஒன்றும் விஷமல்ல கவலைப்படாமல் தெளி என்று ஊக்கப்படுத்தினேன். ஒரு சுற்று தெளிப்பதற்குள் அவனுக்குக் குமட்டல் வந்துவிட்டது.

உடனே கலவையை நான் வாங்கிக்கொண்டேன். அவன் வேகமாக ஓடிப்போய் வாய்க்காலுக்குள் அமர்ந்து குடலைச் சுருட்டிக்கொண்டு குமட்ட ஆரம்பித்தான். அவனது அந்த நிலைப்பாடு எனக்கே சற்றுப் பயத்தை உண்டுபண்ணியது.

பிறகு மெல்ல மெல்ல அவனை ஆசுவாசப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தேன். அன்று இரவு அவன் பட்டினி கிடந்தான் என்பது கூடுதல் தகவல்.

அந்தக் கூலித் தொழிலாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய குணபசலம் எனக்கு எந்த ஒவ்வாமையையும் ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் என் மனநிலை.

இயற்கைவழி வேளாண்மையை ஏற்றுக்கொண்ட என்மனம், அதற்குத் தேவையான இடுபொருளையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டதால், அந்தக் குணபசலம் எந்தத் தாக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு!

பஞ்சகாலத் தானியங்கள்

சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், சாமை, தினை, வரகு, குதிரைவாலிபோன்ற தானியங்களே மனிதனுக்குரிய சத்துள்ள

உணவாகக் கூறப்படுகிறது. அரிசி, கோதுமையைவிடத் தானியங் களில் சத்துக்கள் அதிகம்.

இன்று முழுநேர அரிசி உணவுக்கு மனிதன் பழகிவிட்டான். அதுவும் நன்றாகத் தீட்டிய கெமிக்கலைக் கலந்து பாலிஷ் செய்யப் பட்ட மல்லிகைப் பூப்போன்ற வெண்மை அரிசியே உயர்ந்த அரிசியாக, மனிதன் கருதுகிறான். நாகரிகம் என்ற பெயரால் நவ தானியங்கள் சாப்பிடுவதைக் குறைத்தான். கூழ் சாப்பிடுவதைக் கெளரவக் குறைவாகக் கருதினான். நாகரிக மோகத்தில் மோட்டா ரக அரிசிக்கும் குட்பை சொல்லிவிட்டான். ….

வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தியில் எனக்குப் பெண் பார்த்து முடிவு செய்தபோது, அங்கெல்லாம் கருப்பரிசி சோறுதான் போடுவார்கள் என்று என் நண்பர்களும் உறவினர் களும் கேலி செய்தார்கள்.

ஆனால் எனக்குத் திருமணமான 1984ஆம் ஆண்டிலே அங்குக் கார் நெல் கலாச்சாரம் மாறி, பசுமைப் புரட்சி கொடி கட்டிப் பறந்தது. மருந்துக்குக்கூட உயர்ந்த நெல் பயிரை நான் அங்குப் பார்க்கவில்லை.

1960இல் தொடங்கிய பசுமைப் புரட்சி குறுகிய காலத் திலேயே இந்திய கிராமங்களில் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து நாசமாக்கி விட்டிருந்தது.

கோபுரக் கலசங்களில் நவதானியங்கள்

நெல்லை ஓர் ஆண்டுதான் சேமிப்பாக வைக்க முடியும். நவதானியங்களை நூறு ஆண்டுகள்கூட சேமிக்கலாம் என்று சொல்வார்கள். அதனால்தான், இன்றும் கோபுரக் கலசங்களில் நவதானியங்களைப் போட்டு சேமிக்கும் முறை உள்ளது.

நெல்லுக்கு நிறைய நீர் பாய்ச்ச வேண்டும். நவதானியப் பயிர்களுக்குக் குறைந்த அளவு நீர் போதுமானது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. மீண்டும் துளிர் விடட்டும் அந்தக் கால வாழ்க்கை! –

நவதானியங்களைப் பயிரிட்டால் அவற்றைப் பல வருடங்கள் பாதுகாப்பாகச் சேமிக்கலாம் என்கின்றபோது நமக்குப் பஞ்சம் எப்படி வரும் அதனால்தான் அவற்றைப் பஞ்சகால தானியங்கள் என்று நம் முன்னோர்கள் வர்ணித்திருக்கிறார்க்ள்.

நாமோ ஒட்டுமொத்தமாக நெல்லை மட்டுமே ஏகபோக மாகப் பயிரிட்டு விளைச்சலைக் கூட்டி விலையைக் குறைக்க வைத்திருக்கிறோம். தவிடு கிலோ 5 ரூபாய் விற்கும் போது அரிசி கிலோ 1 ரூபாய்க்குப் போடுகிறது அரசு. தவிட்டுக்கு உள்ள மதிப்பு கூட அரிசிக்கு இல்லாமல் போனது. சிந்திக்கும் ஆற்றலை மனிதன் இழந்ததால் வந்த வினை இது

சோளக்கொல்லை பொம்மை

எனக்குத் திருமணமான காலத்தில் நான் மிகவும் ஒல்லி யாக இருந்தேன். அப்போது நாடகங்களில் நடித்துக் கொண் டிருந்தேன். ஒருமுறை எனது நாடக நடிப்பைப் பார்த்த எனது மைத்துணி சோளக்கெர்ல்லை பொம்மைபோல் இருந்தது என்று வருணித்தார். இப்போது சோளக்கொல்லை பொம்மையும் இல்லை. அப்படி ஒரு சொல் வழக்குமில்லை.

உலகில் வாழும் பறவை இனங்கள் பெரும்பாலும் பூச்சி களையே தங்கள் முழு உணவாகக் கொண்டவை!

ஒரு ஜோடி மைனாக்கள் ஒர் ஆண்டில் சுமார் இரண்டு இலட்சம் பூச்சிகளைத் தங்கள் இரைப்பைக்குள் நிரந்தரமாய்த் தூங்க வைக்கின்றன!

மீன்கொத்திப் பறவைகளும் வாலாட்டிகளும் கரிச்சான் குருவிகளும் பஞ்சுருட்டான்களும் பிடிப்பான் களும் ஆட்கொல்லி நஞ்சுகளால் காணாமல் போய்விட்டன!

மெளன சாட்சிகளால் நடந்து கொண்டிருக்கும் இந்த ரசாயனப் போரை வேடிக்கை பார்க்கும் நிலையில் சோளக் கொல்லை பொம்மை பற்றி சொல்லத் தோன்றவில்லை.

வயலுக்குள் வரும் பறவைகள் உட்கார்ந்து ஒய்வெடுப் பதற்கு வைக்கோலைக் கொண்டு நமது முன்னோர்கள் உருவாக்கிய பொம்மை சோளக்கொல்லை பொம்மை இன்று ஆட்கொல்லி நஞ்சுகளால் அதையும் இழந்து விட்டோம்.

ஆந்தைகளுக்கு அழகு சிம்மாசனம்

ஐம்பது வருடங்களுக்கு முன் வயலைச்சுற்றி வேலி அட்ைப்பதும் வரப்பை வெட்டி எலிகளைப் பிடிப்பதும் தான் நம் முன்னோர்கள் மேற்கொண்ட பயிர்ப் பாதுகாப்பு முறை. தோட்டத்து மூலைகளில் உடைந்த பானைகளை அடுக்கி வைத்து அழகு பார்த்ததுகூட எலிகளைப் பிடிக்க வரும் ஆந்தைகள் அமர்வதற்கான அழகு சிம்மாசனம் என்பது இப்போதுதான் எனக்கும் புரிகிறது.

ஆனாலும் நிசப்தமான அந்தக் கால இரவில் நான் கேட்ட அந்த ஆந்தைகளின் அலறல் சத்தம் இப்போது கேட்கவில்லையே!

களை கட்டுப்பாட்டில் காணம்

வேண்டாத களைச் செடிகளைச் செம்பாலான அறிவாளைக் கொண்டு வெட்டினால் அவை மறுபடியும் வளராமல் அப்படியே குட்டையாகவே இருந்துவிடுமாம். நான் ஒரு பத்திரிகையில் படித்த தகவலை இங்கே தந்திருக்கிறேன். இன்னும் இதை நான் சோதித்துப் பார்க்கவில்லை. கோரையைக் கொல்ல கொள்ளை விதை என்ற ஒரு பழமொழி உண்டு. மூன்று வருடங்கள் கொள்ளு (காணம்) தெளித்தால் வயலில் களை கட்டுப்படும் என்று பசுமை விகடனில் மண்புழு மன்னாரு சொல்லி இருந்ததைப் படித்தேன். வீட்டுத் தோட்டத்தில் சிறிது கொள்ளு தெளித்தேன். அது அடர்த்தியான கொடியாகப் படர்ந்து சூரிய ஒளி மண்ணில் படாதவாறு மறைத்துவிட்டது. அந்த இடத்தில் வேறு செடிகள் முளைக்கவில்லை. மண்புழு மன்னாரு சொல்லி இருப்பது சாத்தியமான செயல்தான். விரைவில் வயலில் இதைச் சோதித்துப் பார்க்க முயன்றுள்ளேன். நீங்களும் செய்து பாருங்கள். கொள்ளின் இன்னொரு பெயர்தான் காணம்.

கானல் நீர்

நதிநீர் இணைப்பு பிரச்சனை இன்று பிரம்மாண்ட மாகப் பேசப்படுகிறது. வேலையற்றவன் எருமையைப் பிடித்துச் சிரைத்தானாம் அதுபோலத்தான் இதுவும்!

அணைக்கட்டுகளை நவீன இந்தியாவின் கோவில் களாகப் போற்றிய ஜவகர்லால் நேரு பிற்காலத்தில் அதற்காக வருத்தமடைந்தாராம். அவரது பேரன் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி 1986இல் மாநிலப் பாசன மந்திரிகள் மாநாட்டில் பேசியதாக வந்த செய்தி. 1951ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 246 பெரிய பாசனத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் 64 திட்டங்கள்தாம் முடிக்கப்பட்டிருக்கின்றன. 181 திட்டங்கள் இன்னும் முடிந்த பாடில்லை. இந்தத் திட்டங்களால் மக்களுக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை என்று தைரியமாகச் சொல்லலாம். 16 ஆண்டுகளாகப் பணத்தை வாரி இறைத்துள்ளோம். ஆனால் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பாசன வசதி தண்ணீர் விளைச்சல் எதுவுமே கிடைக்கவில்லை. அவர்களது வாழ்க்கைத் தரம் அப்படியே இருக்கிறது என்று வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

சமீபத்தில் நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது சாத்தியமற்ற செயல் என்று இராகுல் காந்தி பேசியதும் இதன் அடிப்படையில் தான்.

கோடிக்கணக்கான மக்களைப் புலம்பெயர வழிவகுக்கும் நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமற்ற செயல்தான். ஒட்டு பெறுவதற்கான வழிமுறைகளையே குறிக்கோளாகக் கொண்ட

அரசியல்வாதிகள் கானல் நீர் போன்ற ஒரு திட்டத்தைக் காட்டி

மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை!

இயற்கையை நாம் சிதைத்தால் அது நம்மை அழிக்கும்!

வாழையடி வாழையாக, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல் கிறோம் என்று சொன்னவர்கள் இன்று பன்னாட்டு நிறுவனங் களின் கைக்கூலியாக மாறிவிட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த பாடம் மண்புழு குடியான வனின் நண்பன். அதைக்கூட நமது மறைத்து விட்டனர் அறிவியல் அறிவாளிகள்

உள்ளூர் குளத்திற்கு வரும் பாசனக் கால்வாயும் வடிகால் வழியும் தெரியாத பிள்ளைக்கு எங்கோ இருப்பதாகச் சொல்லப் படும் நைல் நதியைப் பற்றிப் பாடம் சொல்லி என்ன பயன்?

வெள்ளையர்களை விரட்டி காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாகப் பெருமைப்படுகிறோம். இன்று நாம் என்ன செய்கிறோம்?

கிராமத்தில் உள்ள நிலபுலன்களை விற்றுவிட்டு நகரத்திற்கு

வந்து காலணி வீடுகளில் அடைபட்டுக் கிடக்கிறோம்.

பசுமை விகடன்

சமீபத்தில் பசுமை விகடனில் ஒரு செய்தி. லார்டு மெக்காலே 1835ஆம் ஆண்ட பிப்ரவரி 2இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசியது.

நான் இந்தியாவின் குறுக்கு நெடுக்காகப் பயணம் செய்தபோது பிச்சைக்காரன் என ஒருவனையோ திருடன் என்று ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகையது அந்த நாட்டின் செல்வ வளமும் உயர்நியாய உணர்வுகளும், வெளிநாட்டிலிருந்து வருகின்ற எல்லாமே சிறந்தது! ஆங்கிலமாக இருக்கின்ற எல்லாமே தன்னுடையதைவிட உயர்ந்தது என்று எண்ணுகின்ற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.

இந்தியாவை அடக்கி ஆளப்படும் ஒரு நாடாக மாற்ற, அந்த நாட்டின் பழைய கல்வி முறை மற்றும் பாரம்பரியத்தை மாற்றி அமைக்க வேண்டும்

மெழுகு பிஸ்கட்

அவரது பரிந்துரைப்படி மாற்றப்பட்ட இந்திய மக்களாகிய நமது மேல்நாட்டு மோகம் இன்னும் மாறவில்லை.

வீட்டில் சுடும் முறுக்கைவிட கவர்ச்சி அட்டையில் கிடைக்கும் ரொட்டிதான் நமக்குப் புத்துணர்ச்சி தருகிறது.

எத்தனை பேர் அறிந்திருப்பார்கள். பிள்ளைக்குக் கொடுக்கும் பிஸ்கட் மெழுகினால் ஆனது என்று?

பிஸ்கட்டை எடுத்துக் கொளுத்திப் பாருங்கள் அது நின்று எரியும்!

துருவை எடுக்கப் பயன்படும் கலர்பானங்கள் உங்களுக்கு உஷ்ணம் போக்கும் குளிர்பானங்கள் ஆகிவிட்டன.

இயற்கை அளித்த இளநீரைப் பயிர்செய்ய மறந்து பகட்டான வாழ்வில் பழகிவிட்டீர்களே ஏன்?

அன்று வெள்ளையர்கள் வென்றார்கள் அதே வழியில் இன்று நம் அரசியல் ஆட்சியாளர்கள் நடைபோடுகிறார்கள்.

நாமும் அதற்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக் கிறோம். இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்றுதான்.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டம். உலகமே நிம்மதிப் பெருமூச்சு விடத் துவங்கிய நேரம் தாடைகளை வருடியபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தது ஒரு கூட்டம்.

வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள் அம்மோனி யாவைத் தயாரிக்கும் ஆலைகளின் அதிபர்கள்தான் அவர்கள்.

தொடர்ந்து சண்டை நடந்தால்தான் இந்த ஆலைகளுக்கு வேலை.

இராணுவ ஆராய்ச்சி மையங்களும் மூடுவிழா காண வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த நிலையில் வேளாண்மை ஆராய்ச்சி மையமாக அவை பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

தேவையற்றதாகிப் போன அமோனியா சில விளை நிலங்களில் கொட்டப்பட்டது. அமோனியா கொட்டப்பட்ட நிலங்களில் பயிர்கள் இயற்கைக்கு மாறாக வளர்ச்சி கண்டதைக் கூர்ந்து கவனித்த சிலர், அமோனியாவை விவசாயத்தில் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தலாம் என யோசித்ததன் விளைவே வேளாண்மை ஆராய்ச்சி மையம் உருவாகக் காரணமானது.

அமோனியா உரமானது. நெல்லும் கோதுமையும் வழக்கத் தைவிட அதிகமாக விளைந்தது.

 

உயர்ந்த நெல் ரகங்கள் அதிகக் கதிர்கள். பாரம் தாங்காமல் தண்டுகள் முறிந்து சாய்ந்தன.

விளைவு

மரபணு மாற்றம் செய்து, நெல் நாற்றின் உயரத்தைக் குறைத்தனர்.

அரசை நடத்தியவர்களையும் அரசு அதிகாரிகளையும் அறிவியல் விஞ்ஞானிகளையும் பண பலம் அழுத்தியது.

நமது பாரம்பரிய நெல் ரகங்கள் சேமித்து அழிக்கப்பட்டது. குட்டை ரகமான ஒட்டு ரகங்களை நோக்கி நமது விவசாயம் திருப்பிவிடப்பட்டது.

பண்ணைக் கழிவுகள் விலகி, இரசாயனக் கழிவுகள் கிராமத் திண்ணைகளில் வந்து இறங்கியது.

குட்டை ரக நெல் ஏராளமான தண்ணீரை விழுங்கியது. பயிர்கள் நோய் எதிர்ப்புத் திறன் இன்றிப் பூச்சி தாக்குதலைச் சந்தித்தது.

பூச்சிக்கொல்லி மருந்துகள் புகுந்தன

. குட்டை ரகமானதால் வைக்கோல் குறைந்தது.

மாடுகளுக்குத் தீவனம் பற்றாக்குறையானது.

மாடுகள் குறைந்தன.

டிராக்டர்கள் விளைநிலங்களில் புகுந்தன.

இரசாயனங்களைக் கொட்டிய்தால் மண்புழு மறைந்தது.

பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு வந்ததால் பறவை இனங்கள் அழிந்தன.

ஆழ்குழாய்க் கிணறு வெட்டி நிலத்தடி நீரை வற்றச் செய்தோம்.

பசுமைப் புரட்சியின் விளைவால் உழவர் நிலம் நிர்மூலமாக் பட்டது

விஞ்ஞானம் விளைநிலங்களைப் பாழடித்தது.

விவசாயிகளைக் கடனாளியாக்கிவிட்டது.

தாய்ப்பாலை விஷமாக்கிவிட்டது.

பிறக்கும் குழந்தையும் நோயோடு பிறக்கிறது.

குழந்தை ஊனமாகிவிடும் என்று பயந்து, பொறுப்போடு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நாம், அந்தக் குழந்தை நோயில்லா வாழ்வு பெற நஞ்சில்லா உணவைத் தரவேண்டும் என்று என்றாவது சிந்தித்துச் செயல்படுகிறோமா என்றால் இல்லை.

சிந்தித்தால் நாம் சேற்றில் இறங்கி விடுவோம். சேற்றில் இறங்கிவிட்டால் நாம் இயற்கைக்கு மாறி விடுவோம்.

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டும் காலணி வீடுகளைக் காலி

செய்துவிட்டு காணி நிலங்களைத் தேடி வருவோம்.

மரத்தடியில் மல்லாந்து படுத்தால் எல்லாச் சுகமும்

இயற்கையாக நமக்குக் கிடைக்கும்.

மனிதா மனம் மாறிவிடு மரத்தில் ஏறி விடு

ஜெண்டில்மேன் வேடம் போட்டு உடலை வருத்தியது போதும்.

காட்டானாகக் கவலை இல்லா மனிதனாக மனிதா மனம்

மாறிவிடு மரத்தில் ஏறிவிடு.

கர்நாடக மாநில பாரம்பரிய இரகங்கள்

Rain fed Paddy Varietes

  1. அனே கோம்பினா பதா
  2. கிட்டாபதா
  3. கரிமுண்டுகா
  4. புட்டாயதா
  5. கெம்ப டோடி
  6. காம கட்லே
  7. மாற பதா
  8. ஜெனு குடு

l’ang a rairi’. Guig (Dry Land Paddy)

9, பங்காரகுண்டு 10. பர்மா பிளாக்

11. பாசு மதி

12. சின்னப்பொன்னி

13. நாரி கெலா

14. கிட்ட பதா

15. கிட்டா ராஜ் கெய்யமே

16. கெளரி சன்னா

டீப்வாட்டர் பேடி (Deep Water Paddy)

17. நீரகுழி பதா

18 சன்ன வால்ய பதா

19. நீ நெட்டி பதா

20. காறிகண்டக பதா

21. காரி நெல்லு

22. காரி ஜாடு பதா

23. பிலிஜாடு பதா

24. பத்ம ரேகா

பாரம்பரிய நெல் ரகங்களில் சில.

padam