44

 

புவிக்கோளரங்கத்தின் அச்சாணியே!

ஆணின் அடக்குமுறை மட்டைக்கு

ஆளாகும் பந்தல்ல நீ !

எழு! நீ இடியாக!

அடுக்களைக்கும் அலுவலகத்துக்கும்

பணப்பாலமாய் ஏன் மாறினாய்?

பூவின் மென்மையும் புதுமைப்பெண் சாயமும்

பூசி இங்கு அரைகுறை ஆடையுடன்

இரட்டை வண்டியாய் அரிதாரம் பூசியது

போதும்!பெண்ணே!

சாதனைகள் பல புரிய சோதனைகள் பல

கடந்தாயே!

சாதனையின் உச்சம் சோதனையின் மிச்சமாய்

வேதனையாய் மாறாதிருக்க

கல்வியென்னும் சாலையில்

கலவியெனும் களையெடுக்க

விரைந்து வருவாய்!

நல்லாசிரியராய் புறப்படுவாய்!

License

Share This Book