46

வானம் மௌனமாக

இல்லாமல் சத்தமாக

அழுகிறது

எங்கோ தூரத்தில்

எல்லை தாண்டிய

மனிதநேயமின்மையின் வேர்கள்

முதிய வேர்களைத் தீண்டியதாலா!

முதிய மரத்தின் முகவரிகள்

வானத்தின் கண்ணீரில்

மௌனமாகக் கழுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

நாளை வரும்

வசந்தகாலக் கனிகளை

உண்ண வரும் பறவைகளுக்காக

மரம் உயிருக்கு கொடையாகிறது

வானம் மரத்திற்காக அழுகிறது

மனிதன் மட்டும் ஏன் பயனற்ற

பொருளானான் வாழ்க்கையிலே!

வேதனை கலந்த வெள்ளிக்கீறலாய்

கண்ணீர்க்கோடுகளாய்

மழை!

License

Share This Book