இரவை
போர்த்திக்கொண்டு
சூடான கதகதப்பில்
சுழல்கின்றது பூமி…………
புவியின்
சுழலச்சு சூடகும்போதெல்லாம்
நிலவு
வெள்ளொளியிட்டு குளிரூட்டியது…..
குளங்களிலல்லாம்
மண்ணுலக விண்மீன்கள்
மலர்ந்திருந்தன……………
நிலங்களிலல்லாம்
தாவர உடம்புகளில்
மெல்ல மெல்ல
கொழுந்துகள் துளிர்த்தன…………..
யாருக்குமே தெரியாமல்
மொட்டுக்களில்
இரகசிய மூலம்
முளைத்துகொண்டிருந்தன…………
இரவு பறவைகளின்
தியான பார்வைகளில்
இரைகளை கடந்து
இயற்கை நடனமிட்டிருந்தன……………..
நட்சத்திரங்களெல்லாம்
கூட்டம்கூட்டமாய்
மலையடிவாரத்திற்குள்
நுழைந்தபடியிருந்தன………………….
அங்கு
அருவிகளின் அழகிய
மெல்லிசை ஓசைகள்
குளித்துகொண்டிருந்தன……………..
ஆடைகளை களைந்துவிட்டு
தென்றல்கள்
நிர்வாணமிட்டு
அலைந்துகொண்டிருந்தன……………..
பனிக்கூட்டமெல்லாம்
படையெடுப்பு செய்து
புற்களோடும்
பூக்களோடும்
புழங்கிகொண்டிருந்தன………………..
கணக்கற்ற காதலர்கள்
காமம்சுவைத்து
கட்டிலை சினுங்கவைத்து
கரைந்து ஒன்றாய்
கிடந்தார்கள்……………..
கவனித்தேன்
கதிரவன் உலாவுவதைவிட
ஒளிந்துகொள்ளும் போதுதான்
உலகம்
உயிரோடிருந்தது…………………
===========================