தேதிவைத்து
மேளம்கொட்டி
நடந்ததென்னவோ
திருமணம்தான்!!!
அது
வாழ்கையேற்பு
விழாவல்ல………..
துறவுயேற்புவிழா!!!
துறவு வாழ்கையை
குழந்தைகளுக்குபின்
தீவிரபடுத்தினார்கள்………..
கற்களிலும்
முற்களிலும்
நடக்கும்
இவர்களின்
கால்கள் செருப்பணிந்ததில்லை………….
பகளெல்லாம்
வயல்வெளியில்
வலைந்தே கிடக்கின்றார்கள்………………….
குழந்தைகளின்
சுடுசோற்றில்
தங்களின்
பழைய சோற்றை
சூடேற்றிக்கொள்கின்றார்கள்…………….
தங்களின்
கிழிந்த ஆடையை
ஒருகையால் பிடித்துகொண்டு
மறுகையால்
தைத்துகொள்கின்றார்கள்……………..
இல்லற வாழ்கையில்
துறவியாய்
வாழ்கிறார்கள்
குழந்தைகள்,
இல்லறத்தை அனுபவிக்க………………
==============