இக் கட்டுரைகள் 1999 – 2005 காலப்பகுதியில் எழுதப் பெற்றவை.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வாழ்வியலில்
பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும்
இன்னும் கூட சில எழுதப்படாத சட்டங்கள்
பெண்களுக்கென இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெண் இன்னும் அடக்கப் படுகிறாள்! ஒடுக்கப் படுகிறாள்!
இந்த நிலை மாற வேண்டும்.
அவள் சுயம் பேணப்பட வேண்டும்.
அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று
சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப்பட்ட
சில எழுதப்படாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும்.
அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும்.
இது பற்றியதான சிந்தனை
சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.
பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலை.
மானுடத்தின் விடுதலை.
நாளைய பெண்கள் சுயமாக வாழ
இன்றைய நாங்கள்தான் பாதையமைக்க வேண்டும்.
eBook Edition:
March 2016 © – Chandravathanaa
March 2016 © – Manaosai Verlag