ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று
உலகம் வகுத்து வைத்த கோட்பாடு
என்னை எப்போதும் விசனப்படுத்திக் கொண்டே இருந்தது.
சின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும்
பெண் என்ற ஒரே காரணத்தால்
வாய் மூடி மௌனியாகவே இருந்தேன்.
காலப்போக்கில்,
பெண் என்பவள் ஆண் என்பவனை விட
எதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.
பல பெண்கள்
சிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போல
தம் பலம் உணராது வாழ்வதையும்,
அடுத்தடுத்த சந்ததிக்கு அடிமைத்தனத்தைக்
காவிச் செல்வதையும் கண்டு வெகுண்டேன்.
அதன் விளைவாக
1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில்
நான் எழுதியவைகளில் இருந்து
சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறேன்.
இவை ஆண்களுக்கு எதிரானவை அல்ல.
நட்புடன்
சந்திரவதனா